search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Discussion meeting"

    • அன்புமணி ராமதாஸ் பங்கேற்பு
    • அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு

    கலவை:

    ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, ஆற்காடு சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி களப்பணியாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி இந்த கலந்துரையாடல் கூட்டம் வருகிற 25-ந் தேதி சனிக்கிழமை, மாலை 2 மணிக்கு ராணிப்பேட்டையில் இருந்து அம்மூர் சாலையில் உள்ள முத்துக்கடை எஸ்.கே. மஹாலில் நடக்கிறது. கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு, வாக்குச்சாவடி களப்பணியாளர்கள், கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகள், சார்பு அமைப்பு நிர்வாகிகள், மூத்த நிர்வாகிகள், முன்னாள் நிர்வாகிகள் ஆகியோருடன் கலந்துரையாடுகிறார்.

    பின்னர் அவர் கூட்டத்தின் நோக்கம் குறித்தும், பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் திட்டங்கள் குறித்தும், வருகிற நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும், கட்சியை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஆகியவைகள் குறித்தும் விளக்கி பேசுகிறார்.

    ராணிப்பேட்டையில் நடைபெறும் கலந்துரையாடல் சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொள்ளும், கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்க்கு சிறப்பான முறையில் வரவேற்கும் வகையில் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி, கிளை நிர்வாகிகள், வன்னியர் சங்கம், இளைஞர் சங்கம், மாணவர் சங்கம், மகளிர் சங்கம், பாட்டாளி இளம்பெண்கள் சங்கம், அன்புமணி தம்பிகள் படை, அன்புமணி தங்கைகள் படை, பாட்டாளி சமூக ஊடகப்பேரவை, பசுமைத் தாயகம், தேர்தல் பணி குழு, தமிழ்நாடு உழவர் பேரியக்கம், சிறுபான்மை பிரிவு, கொள்கை விளக்க அணி, பாட்டாளி தொழிற்சங்கம், கலை இலக்கிய அணி, சமூக முன்னேற்ற சங்கம், வக்கீல் சமூக நீதிப்பேரவை ஆகிய சார்பு அமைப்பு நிர்வாகிகள், முன்னாள் நிர்வாகிகள், மூத்த முன்னோடிகள் மற்றும் நலம் விரும்பிகள் அனைவரும் தவறாது கலந்துரையாடல் சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

    • கூட்டத்தை மாவட்ட முதன்மை நீதிபதி சீனிவாசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
    • வக்கீல் அருணாசலம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.

    நெல்லை:

    தமிழ்நாடு சமரச மையத்தின் உத்தரவின் பேரில் நெல்லை அனைத்து நீதிபதிகள், வக்கீல்கள் மற்றும் மீடியேட்டர்களுக்கு இடையிலான முத்தரப்பு கலந்துரையாடல் கூட்டம் நெல்லை மாவட்ட சமரச மையம் மூலமாக அரசு சட்டக்கல்லூரியில் நடந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி சீனிவாசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்து சமரச மையத்தின் செயல்பாடுகள் குறித்தும், சமரசமையத்தில் முடித்து வைக்கப்பட்ட வழக்குகளின் புள்ளி விவரங்கள் குறித்தும் பேசினார். இதில் சென்னை உயர்நீதிமன்ற சமரச மையத்தின் மூத்த பயிற்சியாளர் வக்கீல் அருணாசலம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.

    கூட்டத்தில் நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி சமீனா, நெல்லை வக்கீல் சங்க தலைவர் ராஜேஷ்வரன், செயலாளர் காமராஜ் மற்றும் தென்காசி, சங்கரன்கோவில், அம்பை, வள்ளியூர், நாங்குநேரி, சிவகிரி, ஆலங்குளம், செங்கோட்டை, ராதாபுரம் ஆகிய 9 தாலுகாவின் வக்கீல் சங்க தலைவர் மற்றும் செயலாளர்கள், வக்கீல்கள் உள்பட 300 பேர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நெல்லைமாவட்ட சட்டப்பணி ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான இசக்கியப்பன் செய்திருந்தார்.

    • புதிய பஸ் நிலைய திறப்பு விழாவிற்கு மு.க.ஸ்டாலின் வருகை
    • உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம்

    வேலூர்:

    வேலூரில் வருகிற 21-ந் தேதி புதிய பஸ் நிலைய திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது.

    இதில் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதனையொட்டி உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான கலந்துரையாடல் கூட்டம் அரியூர் தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடந்தது.

    இதில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசியதாவது;-

    உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற ஒரு சிலரை நான் நேரில் வாழ்த்தியிருக்கிறேன்.தற்போது ஒட்டுமொத்தமாக அனைவரையும் பார்க்க வேண்டும்.வாழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கூட்டத்தை கூட்டி இருக்கிறேன்.

    உள்ளாட்சி தேர்தலில் எதிரிகள் கழகத் துரோகிகளை சமாளித்து வெற்றி பெற்றிருக்கிறீர்கள். இது சாதாரணமானது அல்ல‌.நீங்கள் வெற்றி பெற்ற பகுதி வளர்ச்சியடைய வேண்டும். அதற்கான செயலில் ஈடுபட வேண்டும்.

    தமிழக அளவில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கான பெரிய மாநாட்டை நாமக்கல்லில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்த உள்ளார்.இதில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

    கடந்த 10 ஆண்டு ஆட்சியில்ரூ.7 லட்சம் கோடி கடன் வைத்து விட்டு சென்று விட்டார்கள். இந்த கடன் சுமையுடன் ஆட்சி பீடத்தில் மு க ஸ்டாலின் அமர்ந்திருக்கிறார். நிதி கஷ்டத்தை மக்களிடத்தில் கூற முடியாது.

    நிதியை சமாளிப்பது எப்படி என்று கருணா நிதியின் மகனுக்கு தெரியும். பல்வேறு இடங்களில் மனு கொடுத்த மக்கள் எதுவும் நிறைவேறாமல் முதல்அமைச்சர் வருகையின்போதாவது விமர்சனம் கிடைக்குமா என்ற நோக்கத்தில் மனு கொடுத்திருக்கிறார்கள். இதில் அதிக அளவில் மனுக்களுக்கு தீர்வு காண வேண்டும் என கலெக்டரை கேட்டுக்கொள்கிறேன்.

    56 ஆண்டுகள் சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தவர் கருணாநிதி. அதற்கு அடுத்தபடியாக 53 ஆண்டுகள் நான் சட்டசபையிலேயே இருக்கிறேன். நிதியில் கரை கண்டவர் கருணாநிதி. அவரது மகன் கூர்ந்த மதி நுட்பத்தால் ஆட்சி தாக்குப் பிடித்துக் கொண்டிருக்கிறது.

    கொரோனா வந்தது. ஊசி போடுவதற்கு அதிக செலவாகிவிட்டது. வெள்ளம் வந்து எல்லாத்தையும் அடித்துச் சென்றுவிட்டது. தற்போதும் வெள்ள நிவாரண நிதி வழங்கி கொண்டிருக்கிறோம்.

    ஆட்சியில் நிதிநிலையில் சரியாக நடத்திக் கொண்டிருப்பவர் மு.க. ஸ்டாலின்.

    திராவிடர் கழகம் மற்றும் திமுகவிற்கு உயிரோட்டம் கொடுத்தது வேலூர் மாவட்டம்தான்.

    நிதி ஆதாரம் இருந்தால் 95 சதவீத மனுக்களுக்கு நலத்திட்ட உதவி கொடுக்க முடியும்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை யின்போது வழிநெடுகிலும் நின்று அவரை பிரமாண்டமாக வரவேற்க வேண்டும்.எந்த காரணத்தைக் கொண்டும் கொடி பேனர்கள் தோரணங்கள் கட்டக்கூடாது. மலர்களை தூவி கோஷத்துடன் வரவேற்க வேண்டும்.

    தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்குவதற்கும் மற்றும் கூட்டுறவு திருத்த மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை.சூசகமாக சொல்கிறேன். விரைவில் நல்ல முடிவு வரும். இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், கதிர் ஆனந்த் எம்.பி, எம்எல்ஏக்கள் நந்தகுமார், கார்த்திகேயன், ஈஸ்வரப்பன், மேயர் சுஜாதா ஆனந்தகுமார், துணை மேயர் சுனில்குமார், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×