search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tourist destinations"

    • புதிய வகை உருமாறிய கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
    • கூட்டத்தில் ஆணையர் ரமேஷ் பேசுகையில் மக்கள் அனைவரும் பொதுஇடங்கள், கடற்கரை சாலை மற்றும் சுற்றுலா தலங்களில் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதிய வகை உருமாறிய கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதன் படி புதுவை மாநில அரசு நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத் சிதுகளுக்கு சில வழிகாட்டுதலை பின்பற்ற கூறியுள்ளது.

    இது குறித்த ஆலோசனைக் கூட்டம் அரியாங்குப்பம் கொம் யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் தலைமை தாங்கினார். உதவி பொறியாளர் நாகராஜன், வருவாய் ஆய்வாளர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட தனியார் தங்கும் விடுதி உரிமையாளர்கள், பொழுதுபோக்கு மற்றும் உணவக பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் ஆணையர் ரமேஷ் பேசுகையில் மக்கள் அனைவரும் பொதுஇடங்கள், கடற்கரை சாலை மற்றும் சுற்றுலா தலங்களில் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

    அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து எல்லைக்குட் பட்ட அனைத்து உணவகங்கள், மதுபான கடைகள், வணிக நிறுவனங்கள், விருந்தோம்பல் மற்றும் கேளிக்கை நிறுவனங் கள் கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண் டும்.

    முககவசம், தடுப்பூசிகள் செலுத்தியதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். வழிபாட்டு தலங்களில் முன்பு பின்பற்றிய கொரோனா தடுப்பு நடைமுறைகளை மீண்டும் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

    உலகின் மிகவும் ஆபத்தான சுற்றுலா தலங்களின் பட்டியலில் தாய்லாந்து முதலிடத்தை பிடித்துள்ளது. இதற்கு அடுத்தப்படியாக அமெரிக்கா, ஸ்பெயின், ஜெர்மனி நாடுகளும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
    பாங்காக்:

    உலகின் மிக பிரபலமான சர்வதேச நிறுவனம் ஒன்று உலகின் மிகவும் ஆபத்தான சுற்றுலா தலங்களின் பட்டியலை வெளியிட்டது.

    அந்த பட்டியலில் மிகவும் ஆபத்தான 10 சுற்றுலா தலங்கள் குறித்தும் அதிக எண்ணிக்கையிலான பயண காப்பீடு கோரும் நாடுகள் குறித்தும் தகவல் வெளியிட்டுள்ளது.

    அதில் தாய்லாந்து முதலிடம் பிடித்துள்ளது. இங்குள்ள கடற்கரைகள், கோவில்கள், சுவை மிகுந்த உணவுகள் என சுற்றுலா பயணிகளை கவரும் பல அம்சங்கள் உள்ளன. இருந்தாலும் ஆபத்தில் சிக்கும் வாய்ப்புகளும் மிக மிக அதிகம்.

    கடந்த ஓராண்டில் மட்டும் 23 சதவிகித சுற்றுலா பயணிகள் பயண காப்பீடு கோரியுள்ளனர். இங்கு செல்ல விரும்புவோர் முன்னதாக அங்குள்ள சுற்றுலா தளங்களில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் பயணத்துக்கு ஆயத்தமாவது பாதுகாப்பானது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

    தாய்லாந்துக்கு அடுத்தப்படியாக அமெரிக்கா, ஸ்பெயின், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகளும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

    இவை தவிர, சிலி, நேபாளம், பெரு, பகாமாஸ், மற்றும் பிரேசில் நாடுகளம் இந்த பட்டியலில் உள்ளன. #tamilnews
    ×