search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கல்லூரிகள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

    கல்லூரிகளில் உள்ள வகுப்பறைகள், ஆய்வகங்கள் உள்ளிட்டவற்றை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யவேண்டும் என கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் செப்டம்பர் 1-ந்தேதி முதல் கல்லூரிகளை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து கல்லூரிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கல்லூரி கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.

    அதன் விவரம்:-

    * கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளே தொடரும்.

    * மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் இரண்டு தவணை தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயம்.

    * மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்லூரிகளுக்கு வருகை தர அவசியமில்லை.

    தடுப்பூசி


    * தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு அந்தந்த கல்லூரிகளிலேயே தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

    * நோய்த்தொற்று உள்ள மாணவர்களை கண்டறிந்தால், அவருடன் தொடர்புடைய அனைவருக்கும் RT-PCR சோதனை எடுக்க வேண்டும்.

    * கல்லூரிகளில் உள்ள வகுப்பறைகள், ஆய்வகங்கள் உள்ளிட்டவற்றை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யவேண்டும்.


    Next Story
    ×