search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    பொள்ளாச்சி அருகே குடியிருப்புக்குள் புகுந்த மலைபாம்பு பிடிபட்டது
    X

    பொள்ளாச்சி அருகே குடியிருப்புக்குள் புகுந்த மலைபாம்பு பிடிபட்டது

    பொள்ளாச்சி அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மலைப்பாம்பை வனத்துறையினர் மீட்டு வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி அடுத்த வேட்டைக்காரன்புதூர் பிஏபி காலனி பகுதியில் 12 அடி நீள மலைப்பாம்பு புகுந்தது. பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, வனச்சரக அலுவலர் காசிலங்கம் தலைமையிலான வனத்துறையினர் சென்று மலைப்பாம்பை மீட்டு சர்க்கார்பதி வனப்பகுதியில் விடுவித்தனர்.

    அதேபோல், அம்பராம் பாளையம் அருகே குளத்தூர் பகுதியில் விவசாய தோட்டத்தில் 10 அடி நீள மலைப்பாம்பு இருந்தது. இதையும் வனத்துறையினர் மீட்டு சர்க்கார்பதி வனப் பகுதியில் விடுவித்தனர்.

    Next Story
    ×