search icon
என் மலர்tooltip icon

    உத்தரகாண்ட்

    • அமலாக்கத்துறை அதிகாரிகள் உத்தரகாண்ட், டெல்லி, சண்டிகர் மாநிலங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
    • 2022-ம் ஆண்டு உத்தரகாண்ட் சட்டமன்ற தேர்தலின்போது பா.ஜனதா கட்சியில் இருந்து ராவத் விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

    பண மோசடி வழக்கில் உத்தரகாண்ட் மாநிலத்தின் முன்னாள் மந்திரியும், காங்கிரஸ் கட்சி தலைவருமான ஹரக் சிங் ராவத் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    அமலாக்கத்துறை அதிகாரிகள் உத்தரகாண்ட், டெல்லி, சண்டிகர் மாநிலங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

    2022-ம் ஆண்டு உத்தரகாண்ட் சட்டமன்ற தேர்தலின்போது பா.ஜனதா கட்சியில் இருந்து ராவத் விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

    உத்தரகாண்ட் மாநிலத்தின் கார்பெட் புலிகள் சரணாலயத்தின் நடந்ததாக கூறப்படும் சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பாக இந்த விசாரணை நடத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

    அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் மற்றும் ஆம் ஆத்மி கட்சியுடன் தொடர்புடையவர்கள் இடங்களில் சோதனை நடத்தியது. மேற்கு வங்காளத்திலும் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

    • பொது சிவில் சட்டம் அமலாகும் என தேர்தல் அறிக்கையில் பா.ஜ.க. வாக்குறுதி அளித்தது
    • பொது சிவில் சட்டம் தொடர்பாக அரசு 5-பேர் கொண்ட குழுவை அமைத்தது

    இன்று உத்தரகாண்ட் மாநில சட்டசபையில் பொது சிவில் சட்ட (Uniform Civil Code) மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

    இது சட்டமாக மாறும் போது இந்தியாவிலேயே பொது சிவில் சட்டத்தை முதலில் அமல்படுத்திய மாநிலம் எனும் பெயர் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு கிடைக்கும்.

    சட்டசபை தேர்தலுக்கு முன் தனது தேர்தல் அறிக்கையில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    தொடர்ந்து ஆட்சிக்கு வந்ததும் இதன் சாத்தியக்கூறுகள் மற்றும் சாதக-பாதகங்கள் மற்றும் சட்ட நுணுக்கங்கள் குறித்து ஆராய 5 பேர் கொண்ட குழுவை பா.ஜ.க. அரசு அமைத்தது.

    இக்குழு அறித்த அறிக்கையின் பேரில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி அரசு நேற்று இதற்கு ஒப்புதல் வழங்கியது.

    இன்று இச்சட்ட மசோதாவை தாக்கல் செய்ய கூட்டப்பட்ட சிறப்பு கூட்டத்தொடரில் முதலமைச்சர் தாமி மசோதாவை தாக்கல் செய்தார். அப்போது ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் "ஜெய் ஸ்ரீராம்" என உற்சாகமாக கோஷம் போட்டனர்.

    குடிமக்களுக்கான தனிநபர் சட்டம் மதம் மற்றும் பாலினம் கடந்து ஒரே தளத்தில் அமையும் வகையில் இருக்க அமைக்கப்பட்டுள்ள இந்த மசோதாவின்படி சொத்துக்களில் ஆண் மற்றும் பெண்ணுக்கு சம உரிமை, தத்து எடுக்கும் குழந்தைக்கும் சொத்துக்களில் சம உரிமை, பலதார திருமண தடை, குழந்தை திருமண தடை, ஒரே திருமண வயது உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் இடம் பெறுகின்றன.

    மசோதா தாக்கலான நிலையில் அவை நடவடிக்கைகள் பிற்பகல் 02:00 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


    • உத்தரகாண்ட் சட்டசபை கூட்டத்தொடர் டேராடூனில் நாளை தொடங்குகிறது.
    • சட்டசபை வளாகத்தைச் சுற்றி 144 தடை உத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்தது.

    டேராடூன்:

    உத்தரகாண்ட் சட்டசபை கூட்டத்தொடர் டேராடூனில் நாளை தொடங்குகிறது. இதையொட்டி சட்டப்பேரவை வளாகத்தைச் சுற்றி 300 மீட்டர் சுற்றளவில் 144 தடை உத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ளது.

    சட்டசபை கூட்டத்தொடரின் போது, குறிப்பிட்ட பகுதியில் அமைப்புகள் மற்றும் சமூகங்களின் ஆர்ப்பாட்டம் போன்ற நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படும் என டேராடூன் மாவட்ட நீதிபதி சோனிகா தெரிவித்தார்.

    பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து விவாதிக்க உள்ளதால், இந்த சட்டசபை கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

    நேற்று முதல் மந்திரி புஷ்கர்சிங் தாமி தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தினார். அதில் பொது சிவில் சட்ட வரைவு அறிக்கை குறித்து விவாதித்தார். இதில் வரைவு அறிக்கை அமைச்சரவை ஒப்புதலை பெற்றது. அதன்பிறகு அரசு நாளை மறுநாள் (6-ம் தேதி) சட்டசபையில் பொது சிவில் சட்ட மசோதாவை சமர்ப்பிக்க உள்ளது.

    முன்னதாக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான பொது சிவில் சட்ட வரைவு குழு வரைவை கடந்த வெள்ளிக்கிழமை முதல் மந்திரி புஷ்கர்சிங் தாமியிடம் சமர்ப்பித்தது.

    இதுதொடர்பாக, முதல் மந்திரி புஷ்கர்சிங் தாமி கூறுகையில், சட்டசபை கூட்டத்தொடருக்கு முன் உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என மக்களுக்கு உறுதியளித்தோம். பொது சிவில் சட்ட வெளியீடு பா.ஜ.க.வால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம். மாநிலமக்களுக்கு இது ஒரு முக்கியமான நாள் என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கங்கையில் நீராடினால் புற்றுநோய் குணமாகும் என பெற்றோர்கள் நம்பிக்கை.
    • குளிர்ந்த நீரில் நீண்ட நேரம் மூழ்கடித்ததால் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    டெல்லியை சேர்ந்த சிறுவன் ஒருவன் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளான். அவனது பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்திற்கு மேல், ரத்த புற்றுநோயின் தாக்கம் அதிகமானதால் காப்பாற்ற முடியாது என மருத்துவர்கள் கைவிரித்துள்ளனர்.

    இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் பெற்றோர் கவலையில் இருந்துள்ளனர். தெய்வ வழிபாட்டில் அதிக நம்பிக்கை கொண்ட அந்த சிறுவனின் பெற்றொர், புனித நதியாக கருதப்படும் கங்கையில் நீராடினால் ரத்த புற்றுநோய் சரியாகிவிடும் என நினைத்தனர்.

    இதனால் டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் சென்றனர். அவர்களுடன் அந்த சிறுவனின் அத்தையும் சென்றுள்ளார். டேராடூன் சென்ற அவர்கள் நேற்று காலை கங்கை நதியில் இறங்கி, அந்த சிறுவனை அவனது அத்தை நீரில் மூழ்கடித்துள்ளார்.

    தற்போது வடமாநிலங்களில் கடுங்குளர் நிலவி வருகிறது. மேலும், ரத்த புற்றுநோயால் சிறுவன் மெலிந்து காணப்பட்டுள்ளான். இதனால் கடுங்குளிரை தாக்குப்பிடிக்க முடியாமல் சிறுவன் திணறியுள்ளான். அவனை நீரில் மூழ்கடித்தபோது, அவனது பெற்றோர் பிரார்த்தனை செய்துள்ளனர். இதை அருகில் உள்ளவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்ததுடன், அந்த சிறுவனை தண்ணீரில் இருந்து வெளியே எடுக்க முயற்சி செய்துள்ளனர்.

    அப்போது அந்த சிறுவனின் அத்தை, அவர்களுடன் சண்டையிட்டுள்ளார். இருந்தபோதிலும் அருகில் உள்ளவர்கள் அந்த சிறுவனை நீரில் இருந்து வெளியில் தூக்கியுள்ளனர். கரைக்கு கொண்டு வந்தபோது அந்த சிறுவன் உயிரிழந்துள்ளான்.

    மேலும், சிறுவனின் உடலை வைத்து அவனது அத்தை, உயிருடன் திரும்பிவிடுவான் என வழிபாடு செய்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

    ஒருபக்கம் ரத்த புற்றுநோய் காரணமாக மருத்துவர்கள் கைவிரித்த நிலையில், மறுபக்கம் அதீத தெய்வ நம்பிக்கையின் மூலம் ஐந்து வயது சிறுவனின் உயர் பறிபோகியுள்ளது.

    உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஏற்பாடு செய்திருந்த உத்தராயணி கவுதிக் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதில் ஏதேனும் ஒரு மாநிலம் முதலிடம் பெறப்போகிறது என்றால் அது உத்தரகாண்டாக தான் இருக்கும் என நான் நினைக்கிறேன் என்றார்.

    2022ம் ஆண்டு நடைபெற்ற மாநில சட்டமன்ற தேர்தலின்போது பாஜக அளித்த முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று பொது சிவில் சட்டம். உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு, தனது தலைமையிலான முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே பொது சிவில் சட்டம் உருவாக்க ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன பிரகாஷ் தேசாய் தலைமையிலான ஒரு குழுவை அமைத்து ஒப்புதல் அளித்தார்.

    கடந்த 5 ஆண்டுகளில் உத்தரகாண்ட் மாநிலம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் இடையேயான உறவுகளைப் பற்றி குறிப்பிட்ட அவர், ஆந்திராவில் இருந்து தெலங்கானா பிரிக்கப்பட்ட பிறகு இரு மாநிலங்களுக்கும் இடையே தீர்க்கப்படாத பல பிரச்னைகள் இருந்து வருகிறது. ஆனால் உத்தரபிரதேசம் பிரிக்கப்பட்ட பிறகு, இதுபோன்ற பிரச்னைகள் நடக்கவில்லை என்றார்.

    உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் இடையேயான உறவு வலுவாக உள்ளதாக தெரிவித்த அமைச்சர் ராஜ்நாத் சிங், இரு மாநிலங்களிலும் வசிக்கும் மக்களுக்கு இடையில் எந்த கருத்து வேறுபாடும் இல்லாமல் உறவுகள் வலுபெற்று வருகிறது என்றார்.

    • ஆளில்லா விமானங்கள், 10 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்ட கருவிகளை பயன்படுத்த முடிவு.
    • உத்தரவை கலால் ஆணையர் ஹரி சந்திர செம்வால் பிறப்பித்தார்.

    உத்தரப் பிரதேசம் மாநிலம், அயோத்தியில் உள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. அரசியல் பிரபலங்கள், திரைப் பிரபலங்கள் உள்பட ஏராளமானோருக்கு அழைப்பிதழும் வழங்கப்பட்டு வருகிறது.

    விழாவை முன்னிட்டு, உத்தரப் பிரதேச அரசால் ஆளில்லா விமானங்கள், 10 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்ட கருவிகளை பயன்படுத்த பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    ஒரு சில மாநிலங்களில் 22ம் தேதி அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

    இதற்கான உத்தரவை கலால் ஆணையர் ஹரி சந்திர செம்வால் நேற்று பிறப்பித்தார்.

    மேலும், இந்த அறிவிப்பால் மாநிலத்தில் மதுபான உரிமம் வைத்திருப்பவர்களுக்கு இழப்பீடு அல்லது உரிமைகோரல்கள் எதுவும் கிடைக்காது என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • கேட்டை தள்ளியவாறு உள்ளே வந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
    • வனத்துறையினர் விரைந்து வந்து புலிகள் காப்பத்திற்கு திரும்பி செல்ல முயற்சி மேற்கொண்டனர்.

    உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் உள்ள ரோஷனாபாத்தில் மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிமன்றம் உள்ளது. இந்த நீதிமன்றம் முக்கிய சாலைப் பகுதியில் அமைந்துள்ளது. நேற்று திடீரென இந்த சாலையில் பெரிய தந்தங்களை கொண்ட யானை ஒன்று ஒய்யாரமாக நடந்து சென்றது.

    நீதிமன்ற வளாக கேட்டை கடந்த சென்ற யானை திடீரென என்ன நினைத்ததோ தெரியவில்லை. சட்டென்று திரும்பி கேட்டை தள்ளிக்கொண்டு உள்ளே வந்தது. அருகில் உள்ள சுவரையும் இடித்துத் தள்ளியது.

    இதனால் நீதிமன்ற வளாகத்தில் இருந்து அதிகாரிகள் செய்வதறியாமல் அச்சத்தில் உறைந்தனர். ஆனால் உள்ள வந்த யானை உடனடியாக வந்த வழியாக திரும்பி சென்றது. இதனால் அதிகாரிகள் நம்மதி பெருமூச்சு விட்டனர்.

    இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நீதிமன்றம் அமைந்துள்ள பகுதிக்கு அருகில் புலிகள் காப்பகம் உள்ளது. அங்கிருந்து யானை வெளியில் வந்திருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    உடடினடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, துப்பாக்கி சுட்டு யானையை புலிகள் காப்பகத்திற்குள் செல்ல முயற்சி மேற்கொண்டனர் என நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

    • இந்திய மக்களை பரபரப்பாக பேசவைத்த விபத்தாக உத்தரகாண்ட் சுரங்க விபத்து மாறிவிட்டது.
    • நவம்பர் 28-ம் தேதி இரவில் 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்கள்


    உத்தரகாண்ட் மாநிலம் சில்க்யாராவில் சுரங்க வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. நவம்பர் 12-ம் தேதி தீபாவளி அன்று சுரங்கத்தின் பாறைகள் இடிந்து விழுந்தது. அங்கு பணியிலிருந்த 41 தொழிலாளர்கள் சுரங்கத்தில் சிக்கினர்.

    மீட்புப் பணிகளில் சிக்கல்


    மீட்புப் பணி தொடர்ந்து தடங்கல்களையும், பிரச்சனைகளையும் சந்தித்தது. எலி வளை தொழிலாளர்கள் எனப்படும் குறுகிய சுரங்கங்களை உருவாக்கும் அனுபவம் வாய்ந்தவர்கள் இதில் இறக்கப்பட்டனர். இந்த முறையே வெற்றிக்கு வித்திட்டது.

    17 நாளுக்கு பிறகு சுதந்திர காற்றை சுவாசித்த தொழிலாளர்கள்


    நவம்பர் 28-ம் தேதி இரவில் 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். விபத்து பகுதியில் முகாமிட்டிருந்த முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி, மத்திய மந்திரி வி.கே.சிங் ஆகியோர் அன்போடு நலம் விசாரித்தனர்.

    • புலியும் சாலையை விரைவாக கடந்து சென்றதால் நபர் சற்று நிம்மதியுடன் மீண்டும் நடந்து சென்றார்.
    • வன அதிகாரி பர்வீன் கஸ்வான் பதிவிட்டுள்ள வீடியோவை 5 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜிம்கார்பெட் புலிகள் சரணாலயம் நாட்டின் முதல் தேசிய பூங்கா ஆகும். இங்கு புலிகள் மட்டுமல்லாது மான்கள், யானைகள், கரடி போன்ற ஏராளமான உயிரினங்கள் இருக்கின்றன.

    இந்நிலையில் இந்த பூங்காவுக்கு அருகே வெறிச்சோடிய சாலையில் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் புலி நேருக்கு நேராக நடந்து வருவதை பார்த்த அவர் ஓட்டம் பிடித்து தப்பித்துள்ளார். அதே நேரம் புலியும் சாலையை விரைவாக கடந்து சென்றதால் அந்த நபர் சற்று நிம்மதியுடன் மீண்டும் நடந்து சென்றார்.

    இதுதொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி வைரலாகின. வன அதிகாரி பர்வீன் கஸ்வான் பதிவிட்டுள்ள இந்த வீடியோவை 5 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

    • 21-ம் நூற்றாண்டில் மூன்றாவது தசாப்தம் உத்தரகாண்ட்-க்கு சொந்தமானது என்ற எனது கணிப்பு நனவாகும்.
    • வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நம்முடைய பொருளாதாரம் குறித்த நம்பிக்கை வளர்ந்துள்ளது.

    ளஉத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் வன ஆராய்ச்சி இன்ஸ்டிடியூட்டில் இரண்டு நாள் உலக முதலீட்டார்கள் மாநாட்டை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி இன்றும், நாளையும் இந்த மாநாடு நடைபெற இருக்கிறது.

    இந்த மாநாட்டை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று காலை உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் வந்தார். ரோடு ஷோ நடத்திய அவருக்கு மக்கள் சாலையோரம் நீண்ட வரிசையில் நின்று வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் மாநாடு நடைபெறும் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சி மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதன்பின் மாநாட்டை தொடங்கி வைத்தார்.

    மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி "21-ம் நூற்றாண்டில் மூன்றாவது தசாப்தம் உத்தரகாண்ட்-க்கு சொந்தமானது என்ற எனது கணிப்பு நனவாகும். வெளிநாட்டு முதலீட்டாளர்கள், கட்டுப்பாட்டாளர்களிடம் நம்முடைய பொருளாதாரம் குறித்த நம்பிக்கை வளர்ந்துள்ளது. உத்தரகாண்ட் தெய்வீகத்தையும், வளர்ச்சியையும் இணைக்கிறது. தெய்வீக பூமியான உத்தரகாண்ட் நிச்சயம் உங்களுக்கான ஏராளமான வாய்ப்புகளை உருவாக்கும்.

    வளர்ச்சி மற்றும் பாரம்பரியம் என்ற மந்திரத்துடன் இந்தியா முன்னேறி வருவதுற்கு இன்று உத்தரகாண்ட் சிறந்த எடுத்துக்காட்டு" என்றார்.

    • 17 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்
    • புவியியல் சூழல் மிகவும் சவாலாக இருந்ததாக ஐரோப்பிய நிறுவனம் தெரிவித்தது

    பெரும் மழை, கடும் பனி, மலைச்சரிவு, வெள்ளம் உள்ளிட்ட அனைத்துவிதமான பருவகால மாற்றங்களிலும் சீராக பக்தர்கள் பயணிக்கும் வகையில் கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதர்நாத் மற்றும் பத்ரிநாத் எனப்படும் நான்கு இந்து மத புனித தலங்களை இணைக்கும் வகையில் "சார் தாம்" (Char Dham) சாலைகள் அமைக்கும் திட்டத்தில் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

    மலைமாநிலம் என அழைக்கப்படும் உத்தரகாண்ட்டில், உத்தரகாசி மாவட்டத்தில் அமைக்கப்படும் சாலை பணிகளின் தொடர்ச்சியாக எண்-134 தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா வளைவு - பார்கோட் பகுதியில் ஒரு சுரங்கம் அமைக்கப்பட்டு வந்தது.

    கடந்த நவம்பர் 12 அன்று காலை 05:30 மணியளவில் இதன் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் சுரங்க நுழைவாயிலில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ளே பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். 17 நாட்களுக்கு பிறகு பெரும் போராட்டத்திற்கு பிறகு அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    இந்நிலையில், இந்த சுரங்கம் இடிந்து விழுவது இது முதல் முறை அல்ல என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    "இரு புறம் எதிரெதிர் திசையில் மக்கள் பயணிக்க கூடிய வகையில் அமைக்கப்பட்ட சுமார் 4.5 கிலோமீட்டர் தூரம் உள்ள இந்த சுரங்க பாதையில் இது போன்ற நிகழ்வுகள் சுமார் 20 முறை ஏற்பட்டுள்ளது. சுரங்கங்கள் அமைக்கும் பணியில் இடிந்து விழும் நிகழ்வு வழக்கமான ஒன்றுதான். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இம்முறை 41 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். 'கேவிட்டி' என அழைக்கப்படும் இத்தகைய இடிந்து விழும் நிகழ்வுகள், சில்க்யாரா பகுதியை விட பார்கோட் பகுதியில் அதிகம் நடந்தன" என பொதுத்துறை நிறுவனமான தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவன (NHIDCL) இயக்குனர் தெரிவித்துள்ளார்.

    இந்த சாலை பணிகளுக்கான ஒப்பந்தத்தை நவயுகா எஞ்சினியரிங் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி எனும் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்நிறுவனத்திற்கு செயல்திட்ட வடிவமைப்பை வழங்கும் பணியை ஐரோப்பிய நிறுவனமான பெர்னார்ட் க்ரூப் (Bernard Gruppe) முன்னெடுத்தது. முன்னர், இந்நிறுவனம், சுரங்கம் அமைக்கும் இடங்களின் புவியியல் சூழல், ஆவணங்களில் கொடுக்கப்பட்டிருந்ததை காட்டிலும் பெரும் சவாலாக இருந்தது என குறிப்பிட்டிருந்தது.

    ஆனால், மலைப்பகுதியில் சுரங்க சாலைகள் அமைக்கும் பணி மிகவும் சிக்கலானது என ஒப்பு கொள்ளும் கட்டிட வல்லுனர்கள், கான்க்ரீட் சாலைகளும் சுரங்கமும் கட்டுவது நிறைவடைந்தால், அதன் பிறகு அது இடிந்து விழும் சாத்தியம் மிக குறைவு என கூறுகின்றனர்.

    • தொழிலாளர்கள் அனைவரும் முழு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
    • தொழிலாளர்கள் ரத்த பரிசோதனை, எக்ஸ்ரே மற்றும் ஈசிஜி அறிக்கைகள் இயல்பாக உள்ளன.

    ரிஷிகேஷ்:

    உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் உள்ள சில்க்யாரா அருகே சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடந்து வந்த நிலையில், கடந்த 12-ந் தேதி அங்கு திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது சுரங்கப்பாதைக்குள் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளர்கள் உள்ளே சிக்கினர்.

    அதனை தொடர்ந்து பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நடந்த மீட்பு பணிகள் கடந்த செவ்வாய்க்கிழமை 17-வது நாளில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. தொழிலாளர்கள் 41 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    சுரங்கப்பாதையில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த மருத்துவக்குழு, மீட்கப்பட்ட தொழிலாளா்களுக்கு முதற்கட்ட மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டது.

    இதைத் தொடா்ந்து, சில்க்யாரா சுரங்கப்பாதை பகுதியில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஆம்புலன்சுகள் மூலம் அவா்கள் அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் 41 தொழிலாளர்களும் விமானப்படையின் சினுக் ரக ஹெலிகாப்டர் மூலம் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு தொழிலாளர்கள் அனைவரும் முழு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

    இந்த நிலையில் தொழிலாளர்களுக்கான மருத்துவ பரிசோதனைகள் நிறைவடைந்ததையடுத்து அவர்கள் 41 பேரும் எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் இருந்து நேற்று வீடு திரும்பினர்.

    முன்னதாக தொழிலாளர்களின் உடல்நிலை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எய்ம்ஸ் டாக்டர் ரவிகாந்த் "தொழிலாளர்கள் முழுமையாக பரிசோதிக்கப்பட்டனர். அவர்களின் ரத்த பரிசோதனை, எக்ஸ்ரே மற்றும் ஈசிஜி அறிக்கைகள் இயல்பாக உள்ளன. அவர்கள் உடல் ரீதியாக இயல்பானவர்கள். மருத்துவ ரீதியாக நிலையானவர்கள். அவர்கள் வீடு திரும்புவதற்கு நாங்கள் அனுமதி அளித்துள்ளோம்" என்றார். 

    ×