search icon
என் மலர்tooltip icon

    உத்தரகாண்ட்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பல்வேறு மாநிலங்களில் பிரதமர் மோடி ரோடு ஷோ, பேரணி மற்றும் பிரசாரங்கள் செய்து வருகிறார்.
    • முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி பிரதமர் மோடிக்கு உடுக்கை ஒன்றை பரிசாக அளித்தார்.

    டேராடூன்:

    பாராளுமன்ற தேர்தலுக்காக பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

    பல்வேறு மாநிலங்களில் ரோடு ஷோ, பேரணி மற்றும் பிரசாரங்கள் செய்தும் வருகிறார்.

    இதற்கிடையே, உத்தரகாண்ட் மாநிலத்தின் கர்வால் பகுதியில் உள்ள ஹரித்வார், தெஹ்ரி கர்வால் மற்றும் பவுரி கர்வால் ஆகிய 3 மக்களவை தொகுதிகளில் ரிஷிகேஷில் நடைபெறும் தேர்தல் பேரணியில் பிரதமர் மோடி உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், ரிஷிகேஷில் நடைபெற்ற பேரணி நடைபெறும் இடத்துக்கு பிரதமர் மோடி இன்று சென்றார். அங்கு அவருக்கு முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி உடுக்கை ஒன்றை பரிசாக அளித்தார்.

    பரிசைப் பெற்றுக் கொண்ட பிரதமர் மோடி, அந்த உடுக்கையை அடித்து மகிழ்ந்தார். அதன்பின் பேரணியில் உரையாற்றினார்.

    ஏப்ரல் 2-ம் தேதி உதம் சிங் நகர் மாவட்டத்தில் உள்ள ருத்ராபூரில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் மோடி பேசினார். தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு உத்தரகாண்டில் அவர் நடத்தும் இரண்டாவது பேரணி இது என்பது குறிப்பிடத்தக்கது.

    • உத்தரகாண்டில் பா.ஜ.க. ஏற்பாடு செய்திருந்த ரோடு ஷோவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
    • அப்போது பேசிய அவர், ஊழல்வாதிகள் என்னை மிரட்டுவதோடு, அவதூறும் செய்கின்றனர் என்றார்.

    ருத்ராபூர்:

    உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராபூரில் பாஜக ஏற்பாடு செய்திருந்த வாகனப் பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

    அதன்பின் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

    எனது 3வது ஆட்சி காலத்தில் ஊழல்வாதிகள் மீது இன்னும் வலுவான தாக்குதல் நடைபெறும்.

    ஊழல் செய்தவர்கள் சிறைக்கு செல்ல வேண்டாமா?

    ஊழல்வாதிகள் என்னை மிரட்டுவதோடு, அவதூறும் செய்கின்றனர்

    கேளிக்கைகளில் ஈடுபடுவதற்காக மோடி பிறக்கவில்லை, மக்களுக்காக பணியாற்றவே பிறந்துள்ளேன் என தெரிவித்தார்.

    • அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் நடைபெற்றது.
    • தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பகவான் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அதன்பின் பொதுமக்கள் பகவான் ராமரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அயோத்தி சென்று ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    பொதுமக்கள் சாமி தரிசனம் செய்வதற்கு வசதியா அரசியல் கட்சி தலைவர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.-க்கள் காத்திருக்கவும் என பா.ஜனதா கேட்டுக்கொண்டது.

    அதனால் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், அம்மாநில மந்திரிகள், சட்டமன்ற உறுப்பினர்களுடன் கடந்த சில நாட்களுக்கு முன் அயோத்தி சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    இந்த நிலையில் இன்று உத்தரகாண்ட் மாநில முதல்வர புஷ்கர் சிங் தாமி தனது மந்திரிசபை மந்திரிகளுடன் அயோத்தி சென்று சாமி தரிசனம் செய்கிறார். இதற்காக இன்று உத்தரகாண்டில் இருந்து விமானம் மூலம் அயோத்தி புறப்பட்டனர். அப்போது ஜெய் சிய ராம் என முழங்கினர்.

    • நீதிமன்றத்தின் உத்தரவுப்படி கட்டங்களை இடிக்க சென்றபோது அதிகாரிகள் மீது தாக்குதல்.
    • வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. 50 போலீசார் காயம் அடைந்துள்ளனர்.

    உத்தரகாண்ட் மாநிலம் ஹர்த்வானியில் உள்ள வான்புல்புரா பகுதியில் மதராசா மற்றும் அதையொட்டி கட்டப்பட்ட மசூதி ஆகியவை முறைகேடாக கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் நீதிமன்றம் உத்தரவுப்படி நகராட்சி அதிகாரிகள் அந்த கட்டடத்தை இடிக்க முடிவு செய்தனர். கட்டடங்களை இடிப்பதற்காக அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் சம்பவ இடத்திற்கு சென்றனர். அவர்கள் புல்டோசர் மூலம் இடிக்க முயன்றபோது, அங்குள்ளவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருந்தபோதிலும் அதிகாரிகள் இடிக்கும் பணியை தொடங்கியது. இதனால் வன்முறை வெடித்தது.

    இந்த வன்முறையில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 250 பேர் காயம் அடைந்துள்ளனர். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இணைய தள சேவை முடக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    நீதிமன்றத்தின் உத்தரவுபடி அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் ஹல்த்வானியின் வான்புல்புரா பகுதியில் கட்டடத்தை இடிக்க முயன்றபோது, பதற்றம் நிலவியது. அங்கு கூடியிருந்தவர்கள் போலீசார், அதிகாரிகள், நகராட்சி ஊழியர்கள் மீது கல்வீசு தாக்குதல் நடத்தியுள்ளனர். போலீசார் கண்ணீர் புகைக்குண்டு வீசியுள்ளனர். இந்த சம்பவத்தில் 50 போலீசார், பல அதிகாரிகள் காயம் அடைந்துள்ளனர்.

    இருந்தபோதிலும் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு முறைகேடாக கட்டப்பட்ட மதராசா மற்றும் மசூதி இடிக்கப்பட்டுள்ளது. இதனால் பெண்கள் உள்பட அங்கு வசித்து வந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் அமைத்திருந்த தடுப்பை இடித்து தள்ளியதுடன் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்பின் சூழ்நிலை அத்துமீறி வன்முறையாக வெடித்துள்ளது. வன்முறையில் 20-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள், பேருந்து ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக நேற்று உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், நீதிமன்றம் தடை ஏதும் விதிக்கவில்லை. இது தொடர்பாக வருகிற 14-ந்தேதி விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்தது.

    • இந்தியாவில் முதன்முறையாக உத்தரகாண்ட் மாநில சட்டமன்றத்தில் நேற்று பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
    • 37 உறவு முறைகளில் திருமணம் செய்து கொள்ள தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் குற்றவியல் சட்டங்கள் மற்றும் தண்டனை சட்டங்கள் அனைத்து மதத்தினருக்கும் பொதுவாக உள்ளது. ஆனால், தனி நபர் சார்ந்த சிவில் சட்டங்கள் பல்வேறு மதத்தினருக்கும் தனித்தனியாக உள்ளது.

    அனைத்து மதத்தினருக்கும் பொதுவான ஒரு சிவில் சட்டத்தை கொண்டு வருவதாக பா.ஜ.க. பல வருடங்களாக கூறி வருகிறது. நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் (Uniform Civil Code) அமல்படுத்தும் முயற்சியில் ஆளும் பா.ஜ.க. கருத்து கேட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

    இந்த நிலையில் இந்தியாவில் முதன்முறையாக உத்தரகாண்ட் மாநில சட்டமன்றத்தில் நேற்று பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் அத்தை/மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், தடைவிதிக்கப்பட்ட உறவின்முறை வருமாறு:-

    1. தாய்

    2. வளர்ப்புத்தாய்

    3. தாயாரின் தாய்

    4. வளர்ப்பு பாட்டி

    5. பூட்டி

    6. வளர்ப்பு பாட்டியின் தாயார்

    7. அம்மாவுடைய அப்பாவின் தாயார்

    8. தந்தையின் தாயார்

    9. அப்பா, அம்மா வழி பாட்டி

    10. அப்பா, அப்பா வழி பாட்டி

    11. மகள்

    12. மகனின் விதவை மனைவி

    13. மகளின் மகள் (பேத்தி)

    14. மகளுடைய மகனின் விதவை மனைவி

    15. மகனின் மகள்

    16. மகனுடைய மகனின் விதவை மனைவி

    17. மகளுடைய மகளின் மகள்

    18. மகளுடைய மகளின் மகனுடைய விதவை மனைவி

    19. மகளுடைய மகனின் மகள்

    20. மகளுடைய மகனின் மகனுடைய விதவை மனைவி

    21. மகளுடைய மகளின் மகள்

    22. மகனுடைய மகளின் மகனுடைய விதவை மனைவி

    23. மகளுடைய மகனின் மகள்

    24. சகோதரி

    25. சகோதரியின் மகள்

    26. சசோதரனின் மகள்

    27. அம்மாவின் சகோதரி

    28. அப்பாவின் சகோதரி

    29. அப்பாவின் சகோதரர் மகள்

    30. தந்தையின் சகோதரியின் மகள்

    31. தாயாரின் சகோதரியின் மகள்

    32. தாயாரின் சகோதரியின் மகள்

    (Widow- விதவை, என்பது விவாகரத்து செய்யப்பட்ட மனைவியையும் உள்ளடக்கும்)

    • 2022 தேர்தலில் பொது சிவில் சட்டம் தொடர்பாக வாக்குறுதி அளித்தது பா.ஜ.க.
    • கவர்னரின் ஒப்புதல் கிடைத்ததும் இந்த மசோதா சட்டமாகி விடும்

    இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் குற்றவியல் சட்டங்கள் மற்றும் தண்டனை சட்டங்கள் அனைத்து மதத்தினருக்கும் பொதுவாக உள்ளது. ஆனால், தனி நபர் சார்ந்த சிவில் சட்டங்கள் பல்வேறு மதத்தினருக்கும் தனித்தனியாக உள்ளது.

    அனைத்து மதத்தினருக்கும் பொதுவான ஒரு சிவில் சட்டத்தை கொண்டு வருவதாக பா.ஜ.க. பல வருடங்களாக கூறி வருகிறது.

    நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் (Uniform Civil Code) அமல்படுத்தும் முயற்சியில் ஆளும் பா.ஜ.க. கருத்து கேட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

    இப்பின்னணியில், 2022ல் உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலின் போது பா.ஜ.க., அதன் தேர்தல் அறிக்கையில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி வழங்கியிருந்தது. அப்போதைய தேர்தலில் பா.ஜ.க. வென்றது.

    தொடர்ந்து, 2022ல் உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, பொது சிவில் சட்ட முன்வடிவை உருவாக்க ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் 5 பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்தார்.

    இக்குழு நீண்ட ஆய்வுகளுக்கு பிறகு உருவாக்கிய ஒரு சட்ட வடிவை அரசிடம் வழங்கியது.

    இந்நிலையில், நேற்று கூட்டப்பட்ட 4-நாள் சிறப்பு கூட்டத்தொடரில், உத்தரகாண்ட் மாநில சட்டசபையில் பொது சிவில் சட்ட மசோதாவை முதல்வர் புஷ்கர் சிங் தாமி தாக்கல் செய்தார்.

    இன்று, இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

    இனி கவர்னரின் பார்வைக்கு அனுப்பப்பட்டு அவரது ஒப்புதல் கிடைத்ததும் சட்டமாகி விடும்.

    மசோதா வெற்றிகரமாக சட்டசபையில் நிறைவேறியதை பா.ஜ.க.வினர் சட்டசபைக்கு வெளியே கொண்டாடி வருகின்றனர்.

    சிவில் விஷயங்களில் மதங்களுக்கு ஏற்ப தனிச்சட்டங்கள் இல்லாமல், அனைத்து இந்தியர்களுக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை கொண்டதுதான் பொது சிவில் சட்டம்.

    பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றிய முதல் மாநிலமாக உத்தரகாண்ட் மாநிலம் ஆனது.

    இதனால், வரும் ஏப்ரல்-மே மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலிலும் நாடு முழுவதும் பா.ஜ.க. அணியினருக்கும், காங்கிரஸை உள்ளடக்கிய எதிர் அணியினருக்கும், இரு அணிகளிலும் சேராத கட்சிகளுக்கும், பொது சிவில் சட்டம் ஒரு விவாத பொருளாக மாறப் போவது உறுதி என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

    • அமலாக்கத்துறை அதிகாரிகள் உத்தரகாண்ட், டெல்லி, சண்டிகர் மாநிலங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
    • 2022-ம் ஆண்டு உத்தரகாண்ட் சட்டமன்ற தேர்தலின்போது பா.ஜனதா கட்சியில் இருந்து ராவத் விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

    பண மோசடி வழக்கில் உத்தரகாண்ட் மாநிலத்தின் முன்னாள் மந்திரியும், காங்கிரஸ் கட்சி தலைவருமான ஹரக் சிங் ராவத் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    அமலாக்கத்துறை அதிகாரிகள் உத்தரகாண்ட், டெல்லி, சண்டிகர் மாநிலங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

    2022-ம் ஆண்டு உத்தரகாண்ட் சட்டமன்ற தேர்தலின்போது பா.ஜனதா கட்சியில் இருந்து ராவத் விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

    உத்தரகாண்ட் மாநிலத்தின் கார்பெட் புலிகள் சரணாலயத்தின் நடந்ததாக கூறப்படும் சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பாக இந்த விசாரணை நடத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

    அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் மற்றும் ஆம் ஆத்மி கட்சியுடன் தொடர்புடையவர்கள் இடங்களில் சோதனை நடத்தியது. மேற்கு வங்காளத்திலும் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

    • பொது சிவில் சட்டம் அமலாகும் என தேர்தல் அறிக்கையில் பா.ஜ.க. வாக்குறுதி அளித்தது
    • பொது சிவில் சட்டம் தொடர்பாக அரசு 5-பேர் கொண்ட குழுவை அமைத்தது

    இன்று உத்தரகாண்ட் மாநில சட்டசபையில் பொது சிவில் சட்ட (Uniform Civil Code) மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

    இது சட்டமாக மாறும் போது இந்தியாவிலேயே பொது சிவில் சட்டத்தை முதலில் அமல்படுத்திய மாநிலம் எனும் பெயர் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு கிடைக்கும்.

    சட்டசபை தேர்தலுக்கு முன் தனது தேர்தல் அறிக்கையில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    தொடர்ந்து ஆட்சிக்கு வந்ததும் இதன் சாத்தியக்கூறுகள் மற்றும் சாதக-பாதகங்கள் மற்றும் சட்ட நுணுக்கங்கள் குறித்து ஆராய 5 பேர் கொண்ட குழுவை பா.ஜ.க. அரசு அமைத்தது.

    இக்குழு அறித்த அறிக்கையின் பேரில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி அரசு நேற்று இதற்கு ஒப்புதல் வழங்கியது.

    இன்று இச்சட்ட மசோதாவை தாக்கல் செய்ய கூட்டப்பட்ட சிறப்பு கூட்டத்தொடரில் முதலமைச்சர் தாமி மசோதாவை தாக்கல் செய்தார். அப்போது ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் "ஜெய் ஸ்ரீராம்" என உற்சாகமாக கோஷம் போட்டனர்.

    குடிமக்களுக்கான தனிநபர் சட்டம் மதம் மற்றும் பாலினம் கடந்து ஒரே தளத்தில் அமையும் வகையில் இருக்க அமைக்கப்பட்டுள்ள இந்த மசோதாவின்படி சொத்துக்களில் ஆண் மற்றும் பெண்ணுக்கு சம உரிமை, தத்து எடுக்கும் குழந்தைக்கும் சொத்துக்களில் சம உரிமை, பலதார திருமண தடை, குழந்தை திருமண தடை, ஒரே திருமண வயது உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் இடம் பெறுகின்றன.

    மசோதா தாக்கலான நிலையில் அவை நடவடிக்கைகள் பிற்பகல் 02:00 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


    • உத்தரகாண்ட் சட்டசபை கூட்டத்தொடர் டேராடூனில் நாளை தொடங்குகிறது.
    • சட்டசபை வளாகத்தைச் சுற்றி 144 தடை உத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்தது.

    டேராடூன்:

    உத்தரகாண்ட் சட்டசபை கூட்டத்தொடர் டேராடூனில் நாளை தொடங்குகிறது. இதையொட்டி சட்டப்பேரவை வளாகத்தைச் சுற்றி 300 மீட்டர் சுற்றளவில் 144 தடை உத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ளது.

    சட்டசபை கூட்டத்தொடரின் போது, குறிப்பிட்ட பகுதியில் அமைப்புகள் மற்றும் சமூகங்களின் ஆர்ப்பாட்டம் போன்ற நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படும் என டேராடூன் மாவட்ட நீதிபதி சோனிகா தெரிவித்தார்.

    பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து விவாதிக்க உள்ளதால், இந்த சட்டசபை கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

    நேற்று முதல் மந்திரி புஷ்கர்சிங் தாமி தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தினார். அதில் பொது சிவில் சட்ட வரைவு அறிக்கை குறித்து விவாதித்தார். இதில் வரைவு அறிக்கை அமைச்சரவை ஒப்புதலை பெற்றது. அதன்பிறகு அரசு நாளை மறுநாள் (6-ம் தேதி) சட்டசபையில் பொது சிவில் சட்ட மசோதாவை சமர்ப்பிக்க உள்ளது.

    முன்னதாக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான பொது சிவில் சட்ட வரைவு குழு வரைவை கடந்த வெள்ளிக்கிழமை முதல் மந்திரி புஷ்கர்சிங் தாமியிடம் சமர்ப்பித்தது.

    இதுதொடர்பாக, முதல் மந்திரி புஷ்கர்சிங் தாமி கூறுகையில், சட்டசபை கூட்டத்தொடருக்கு முன் உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என மக்களுக்கு உறுதியளித்தோம். பொது சிவில் சட்ட வெளியீடு பா.ஜ.க.வால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம். மாநிலமக்களுக்கு இது ஒரு முக்கியமான நாள் என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கங்கையில் நீராடினால் புற்றுநோய் குணமாகும் என பெற்றோர்கள் நம்பிக்கை.
    • குளிர்ந்த நீரில் நீண்ட நேரம் மூழ்கடித்ததால் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    டெல்லியை சேர்ந்த சிறுவன் ஒருவன் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளான். அவனது பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்திற்கு மேல், ரத்த புற்றுநோயின் தாக்கம் அதிகமானதால் காப்பாற்ற முடியாது என மருத்துவர்கள் கைவிரித்துள்ளனர்.

    இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் பெற்றோர் கவலையில் இருந்துள்ளனர். தெய்வ வழிபாட்டில் அதிக நம்பிக்கை கொண்ட அந்த சிறுவனின் பெற்றொர், புனித நதியாக கருதப்படும் கங்கையில் நீராடினால் ரத்த புற்றுநோய் சரியாகிவிடும் என நினைத்தனர்.

    இதனால் டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் சென்றனர். அவர்களுடன் அந்த சிறுவனின் அத்தையும் சென்றுள்ளார். டேராடூன் சென்ற அவர்கள் நேற்று காலை கங்கை நதியில் இறங்கி, அந்த சிறுவனை அவனது அத்தை நீரில் மூழ்கடித்துள்ளார்.

    தற்போது வடமாநிலங்களில் கடுங்குளர் நிலவி வருகிறது. மேலும், ரத்த புற்றுநோயால் சிறுவன் மெலிந்து காணப்பட்டுள்ளான். இதனால் கடுங்குளிரை தாக்குப்பிடிக்க முடியாமல் சிறுவன் திணறியுள்ளான். அவனை நீரில் மூழ்கடித்தபோது, அவனது பெற்றோர் பிரார்த்தனை செய்துள்ளனர். இதை அருகில் உள்ளவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்ததுடன், அந்த சிறுவனை தண்ணீரில் இருந்து வெளியே எடுக்க முயற்சி செய்துள்ளனர்.

    அப்போது அந்த சிறுவனின் அத்தை, அவர்களுடன் சண்டையிட்டுள்ளார். இருந்தபோதிலும் அருகில் உள்ளவர்கள் அந்த சிறுவனை நீரில் இருந்து வெளியில் தூக்கியுள்ளனர். கரைக்கு கொண்டு வந்தபோது அந்த சிறுவன் உயிரிழந்துள்ளான்.

    மேலும், சிறுவனின் உடலை வைத்து அவனது அத்தை, உயிருடன் திரும்பிவிடுவான் என வழிபாடு செய்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

    ஒருபக்கம் ரத்த புற்றுநோய் காரணமாக மருத்துவர்கள் கைவிரித்த நிலையில், மறுபக்கம் அதீத தெய்வ நம்பிக்கையின் மூலம் ஐந்து வயது சிறுவனின் உயர் பறிபோகியுள்ளது.

    உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஏற்பாடு செய்திருந்த உத்தராயணி கவுதிக் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதில் ஏதேனும் ஒரு மாநிலம் முதலிடம் பெறப்போகிறது என்றால் அது உத்தரகாண்டாக தான் இருக்கும் என நான் நினைக்கிறேன் என்றார்.

    2022ம் ஆண்டு நடைபெற்ற மாநில சட்டமன்ற தேர்தலின்போது பாஜக அளித்த முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று பொது சிவில் சட்டம். உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு, தனது தலைமையிலான முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே பொது சிவில் சட்டம் உருவாக்க ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன பிரகாஷ் தேசாய் தலைமையிலான ஒரு குழுவை அமைத்து ஒப்புதல் அளித்தார்.

    கடந்த 5 ஆண்டுகளில் உத்தரகாண்ட் மாநிலம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் இடையேயான உறவுகளைப் பற்றி குறிப்பிட்ட அவர், ஆந்திராவில் இருந்து தெலங்கானா பிரிக்கப்பட்ட பிறகு இரு மாநிலங்களுக்கும் இடையே தீர்க்கப்படாத பல பிரச்னைகள் இருந்து வருகிறது. ஆனால் உத்தரபிரதேசம் பிரிக்கப்பட்ட பிறகு, இதுபோன்ற பிரச்னைகள் நடக்கவில்லை என்றார்.

    உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் இடையேயான உறவு வலுவாக உள்ளதாக தெரிவித்த அமைச்சர் ராஜ்நாத் சிங், இரு மாநிலங்களிலும் வசிக்கும் மக்களுக்கு இடையில் எந்த கருத்து வேறுபாடும் இல்லாமல் உறவுகள் வலுபெற்று வருகிறது என்றார்.

    • ஆளில்லா விமானங்கள், 10 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்ட கருவிகளை பயன்படுத்த முடிவு.
    • உத்தரவை கலால் ஆணையர் ஹரி சந்திர செம்வால் பிறப்பித்தார்.

    உத்தரப் பிரதேசம் மாநிலம், அயோத்தியில் உள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. அரசியல் பிரபலங்கள், திரைப் பிரபலங்கள் உள்பட ஏராளமானோருக்கு அழைப்பிதழும் வழங்கப்பட்டு வருகிறது.

    விழாவை முன்னிட்டு, உத்தரப் பிரதேச அரசால் ஆளில்லா விமானங்கள், 10 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்ட கருவிகளை பயன்படுத்த பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    ஒரு சில மாநிலங்களில் 22ம் தேதி அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

    இதற்கான உத்தரவை கலால் ஆணையர் ஹரி சந்திர செம்வால் நேற்று பிறப்பித்தார்.

    மேலும், இந்த அறிவிப்பால் மாநிலத்தில் மதுபான உரிமம் வைத்திருப்பவர்களுக்கு இழப்பீடு அல்லது உரிமைகோரல்கள் எதுவும் கிடைக்காது என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×