என் மலர்
நீங்கள் தேடியது "devotees dies"
- 6 பக்தர்கள் நெரிசலுக்குள் சிக்கி கோவில் வளாகத்துக்குள்ளே உயிரிழந்தனர்.
- நூற்றுக்கணக்கான பக்தர்கள் நெரிசலில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் புகழ் பெற்ற மாதா மன்சா தேவி அம்மன் ஆலயம் உள்ளது. இது வடஇந்தியாவில் உள்ள மிக முக்கியமான 7 அம்மன் ஆலயங்களில் ஒன்றாகும்.
நவராத்திரி நாட்களில் இந்த ஆலயத்தில் லட்சக்கணக்கான பெண்கள் வந்து வழிபடுவது உண்டு. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த ஆலயத்துக்கு வந்து வழிபட்டு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
தற்போது ஆடி மாதம் என்பதால் மாதா மன்சா தேவி அம்மன் ஆலயத்தில் தினமும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. இந்த பூஜையில் பங்கேற்பதற்காக இன்று அதிகாலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் அந்த ஆலய வளாகத்தில் திரண்டு இருந்தனர்.
அப்போது கூட்டத்தில் ஒரு பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பக்தர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இந்த திடீர் குழப்பத்தால் நிலைகுலைந்த பக்தர்கள் குழப்பத்தில் தவிப்புக்குள்ளானதால் அந்த பகுதியில் கடும் நெரிசல் ஏற்பட்டது.
நெரிசலில் இருந்து வெளியேறி பக்தர்கள் ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு ஓடினார்கள். இதனால் ஏராளமான பக்தர்கள் கீழே விழுந்தனர். அவர்களை மிதித்துக் கொண்டு மற்ற பக்தர்கள் ஓடினார்கள்.
கடும் நெரிசல், கூச்சல் காரணமாக சில பக்தர்கள் மயங்கி விழுந்தனர். அவர்கள் மீதும் மற்ற பக்தர்கள் மிதித்தபடி ஓடினார்கள். இதனால் 6 பக்தர்கள் நெரிசலுக்குள் சிக்கி கோவில் வளாகத்துக்குள்ளே உயிரிழந்தனர்.
நூற்றுக்கணக்கான பக்தர்கள் நெரிசலில் சிக்கி படுகாயம் அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் கோவில் வளாகத்துக்கு விரைந்து சென்றனர். பக்தர்களை அமைதிப்படுத்தி நெரிசலை சீர்படுத்தினார்கள்.
அதன் பிறகு 6 பக்தர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. படுகாயம் அடைந்த பக்தர்களும் மீட்கப்பட்டு ஆம்புலன்சுகள் மூலம் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மாதா மன்சா தேவி அம்மன் கோவிலில் திடீர் நெரிசல் ஏற்பட்டதற்கு காரணம் என்ன என்பது நீண்ட நேரம் தெரியாமல் இருந்தது. தீவிர விசாரணையில் பக்தர் ஒருவர் மீது அந்த பகுதியில் இருந்த மின் கம்பி பட்டு அந்த நபர் அலறி உள்ளார்.
மின்சாரம் தாக்குவதாக பக்தர்கள் அலறவே மற்ற பக்தர்கள் நாலாபுறமும் சிதறி ஓடி இருக்கிறார்கள். இதனால்தான் பக்தர்கள் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த மேட்டு துரைசாமிபுரத்தை சேர்ந்தவர் சிவபண்டாரம். இவரது மனைவி நல்லமுத்து(வயது65). இவரது உறவினர் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள வடக்கு காரசேரியை சேர்ந்த பேச்சிமுத்து(23). இவர்கள் தங்கள் உறவினர்களுடன் நேற்று தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு ஒரு வேனில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர்.
பின்பு இன்று அதிகாலை அவர்கள் ஊர் திரும்பினர். வேன் செங்கோட்டை அருகே கேசவபுரம் பகுதியில் வந்தபோது வேனில் இருந்தவர்கள் இயற்கை உபாதையை கழிப்பதற்காக கீழே இறங்கினர். வேனை டிரைவர் ரோட்டு ஓரமாக நிறுத்தினார். வேனில் இருந்து இறங்கிய பக்தர்கள் சாலையை கடந்து சென்றனர்.
அப்போது அந்தவழியே காய்கறி லோடு ஏற்றிக்கொண்டு ஒரு வேன் கேரளா நோக்கி சென்றது. எதிர்பாராதவிதமாக வேன் ரோட்டை கடந்த பக்தர்கள் மீது மோதியது. இதில் நல்லமுத்து, பேச்சிமுத்து உள்ளிட்டோர் பலத்த காயமடைந்தனர். இதுபற்றி போலீசுக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வழியிலேயே நல்லமுத்து பரிதாபமாக இறந்தார். பேச்சிமுத்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு பேச்சிமுத்துவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
எனினும் சிகிச்சை பலனின்றி பேச்சிமுத்து பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக புளியரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
ஆந்திர மாநிலம் சத்தியவாடி பகுதியில் இருந்து அய்யப்ப பக்தர்கள் 39 பேர் கடந்த 8-ந்தேதி ஒரு பஸ்சில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு புறப்பட்டனர்.
அவர்கள் சபரிமலையில் தரிசனம் செய்து விட்டு பின்னர் சொந்த ஊருக்கு அதே பஸ்சில் புறப்பட்டனர். அந்த பஸ் இன்று அதிகாலை விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள ஜக்காம்பேட்டை பகுதியில் வந்து கொண்டிருந்தது.
அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த தசரதய்யா (வயது 66) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

பின்னர் அவர்கள் பஸ்சின் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வழியிலேயே ராமகிருஷ்ணன் இறந்து விட்டார்.
மற்ற 38 பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர்களில் சிலர் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






