என் மலர்tooltip icon

    இந்தியா

    உத்தரகாண்டில் திடீர் மேகவெடிப்பு: பாய்ந்து வந்த வெள்ளம்
    X

    உத்தரகாண்டில் திடீர் மேகவெடிப்பு: பாய்ந்து வந்த வெள்ளம்

    • உத்தரகாசி மாவட்டத்தின் தராலி பகுதியில் பெரும் மேகவெடிப்பு ஏற்பட்டது.
    • இதையடுத்து அங்கு திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தின் தராலி பகுதியில் பெரும் மேகவெடிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்த திடீர் வெள்ளப்பெருக்கில் குடியிருப்புகள், பொதுமக்கள் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

    தகவலறிந்து மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.

    இதுதொடர்பாக முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி, மீட்புக்குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அனைவரும் நலமுடன் இருக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×