என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உத்தரகாண்ட் முதல்வர்"

    • உத்தரகாண்டில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய நான்கு கோவில்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.
    • குளிர் காலத்தில் பாதைகள் பனியால் மூடப்பட்டிருக்கும் என்பதால் பாத யாத்திரை செல்ல தடை விதிக்கப்படும்.

    உத்தரகாண்டில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய நான்கு கோவில்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. குளிர் காலத்தில் இந்த கோவில்கள் மூடப்பட்டிருக்கும்.

    கோடை காலத்தில் மட்டுமே 4 கோவில்களும் திறக்கப்படும். இந்த கோவில்களுக்கு பக்தர்கள் செல்லும் யாத்திரை, 'சார்தாம்' யாத்திரை என அழைக்கப்படுகிறது.

    ஆண்டுதோறும் 6 மாதங்கள் மட்டுமே பக்தர்கள் இந்த கோவில்களுக்குச் சென்று சிவபெருமானை தரிசிக்க முடியும். குளிர் காலத்தில் பாதைகள் பனியால் மூடப்பட்டிருக்கும் என்பதால் பாத யாத்திரை செல்ல தடை விதிக்கப்படும்.

    அதன்படி இந்த ஆண்டு அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு ஏப். 30-ந்தேதி 'சார்தாம்' யாத்திரை தொடங்கியது. நேற்று கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி கோவில்களின் நடைகள் திறக்கப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இந்த நிலையில் கேதார்நாத் கோவில் நடை இன்று காலை 7 மணிக்கு திறக்கப்பட்டது. உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

    இந்த நிகழ்ச்சியின்போது இந்திய ராணுவத்தின் கர்வால் ரைபிள்ஸின் இசைக்குழு பக்தி பாடல்களை இசைத்தது.

    கேதார்நாத் கோவிலில் திறக்கப்பட்டதையடுத்து தரிசனம் செய்ய காத்திருந்த பக்தர்கள் மீது ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன.

    • உத்தரகாண்ட் சுரங்கத்தில் 13 நாட்களாக சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்க அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.
    • மீட்பு பணிகள் குறித்து உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தர்காஷி என்ற இடத்தில் சுரங்கம் தோண்டும் பணியில் 41 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் சுரங்கத்தின் ஒரு பகுதி மூடியது. இதனால் 41 தொழிலாளர்களும் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்டனர். உத்தரகாண்ட் சுரங்கத்தில் 13 நாட்களாக சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்க அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.

    சுரங்கத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களுக்கு தப்பிக்கும் பாதையைத் தயார் செய்வதற்காக அமெரிக்க ஆகர் இயந்திரம் மூலம் துளையிடும் பணி தொடங்கப்பட்டது.

    துளையிடும் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, உள்ளே சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் முயற்சியில் நேற்று பின்னடைவு ஏற்பட்டது.

    தொழில்நுட்பம் கோளாறு காரணமாக துளையிடும் பணி நேற்று மீண்டும் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டது.

    இந்நிலையில், மீட்பு பணிகள் குறித்து உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர், இதுகுறித்து முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, "உத்தரகாண்டில் மீட்பு பணியின்போது சிக்கி உள்ள இயந்திரத்தின் பாகங்களை விரைவாக அகற்ற வேண்டும்.

    ஆகர் இயந்திர பாகங்களை அகற்ற தேவையான இயந்திரங்கள், தொழில் நுட்பங்களை விரைந்து வாங்குமாறு" அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    • இந்து சமூகத்தை அவமதிப்பதில் அவர் பெருமிதம் கொள்கிறார்.
    • ஹரித்துவாரில் ஆண்டுதோறும் முக்கிய கூட்டம் நடத்துகிறோம்.

    பாராளுமன்றத்தில் நேற்று நடந்த விவாதத்தின்போது ராகுல் காந்தி பேசியது குறித்து உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி கூறுகையில்,

    ஒட்டுமொத்த இந்து சமூகத்தையும் வன்முறையாளர்கள் என்று ராகுல் காந்தி அழைத்த விதம் மிகவும் கண்டிக்கத்தக்கது. எப்போதும் இந்து சமூகத்தை அவமதிப்பதில் அவர் பெருமிதம் கொள்கிறார். ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவர் என்ற கண்ணியமான பதவி வகிக்கிறார். கடவுள் அவருக்கு ஞானத்தை தரட்டும்.

    கன்வர் யாத்திரைக்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. ஹரித்துவாரில் ஆண்டுதோறும் முக்கிய கூட்டம் நடத்துகிறோம். இந்த ஆண்டும் கூட்டம் நடத்துவோம்.

    கடந்த ஆண்டு 4 கோடிக்கும் அதிக சிவ பக்தர்கள் இங்கு வந்தனர். இந்த ஆண்டு வரவிருக்கும் அனைவரையும் வரவேற்க நல்ல ஏற்பாடுகளை செய்ய உள்ளோம் என்று அவர் கூறினார்.

    ×