search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tunnel collapsed"

    • எலி வளை சுரங்கத்தொழிலாளர்களும் போற்றுதலுக்குரியவர்கள்.
    • மீட்கப்பட்டவர்களின் குடும்பத்தினரோடு எனது மகிழ்வைப் பகிர்ந்துகொள்கிறேன்.

    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    உத்தரகாசியில் சுரங்கத்தொழிலாளர்கள் நாற்பத்தொரு பேரும் தீங்கில்லாமல் மீட்கப்பட்டது பெரிய ஆறுதலைத் தருகிறது.

    கடுமையான சவால்கள், பின்னடைவுகள் ஏற்பட்டபோதும் சளைக்காமல் தீரத்துடன் போராடி உயிர்களைக் காத்த மீட்புக் குழுவினரும், அவர்களுக்கு உதவிய எலி வளை சுரங்கத்தொழிலாளர்களும் போற்றுதலுக்குரியவர்கள். சுரங்கத்தில் மாட்டிக்கொண்ட தொழிலாளர்களும் மனத்திடத்தோடு காத்திருந்தது பாராட்டத்தக்கது.

    17 நாட்கள் தொடர்ந்த இந்தப் போராட்டத்தில் உயிர்களைக் காக்கும் முயற்சியில் ஈடுபட்ட அத்தனை பேருக்கும் என் மனமார்ந்த பாராட்டு. மீட்கப்பட்டவர்களின் குடும்பத்தினரோடு எனது மகிழ்வைப் பகிர்ந்துகொள்கிறேன் என கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மீட்கப்பட்ட தொழிலாளர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
    • தொழிலாளர்கள் மருத்துவ பரிசோதனைக்காக சினூக் ஹெலிகாப்டர் மூலம் ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    உத்தரகாண்ட்:

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா மலைப்பகுதியில் உள்ள சுரங்கப்பாதையில் 41 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்க 17 நாளாக நடந்த மீட்புப் பணி நேற்று முடிவடைந்தது.

    ஒவ்வொரு தொழிலாளராக பத்திரமாக மீட்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து அவர்களது உறவினர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மீட்கப்பட்ட தொழிலாளர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    தற்காலிக மருத்துவ முகாமில் 41 தொழிலாளர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், எய்ம்ஸில் அடுத்தகட்ட மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

    இதையடுத்து தொழிலாளர்கள் மருத்துவ பரிசோதனைக்காக இந்திய விமானப்படையின் சினூக் ஹெலிகாப்டர் மூலம் ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    • சுரங்கத்தில் தீபாவளியன்று ஏற்பட்ட விபத்தில் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்
    • 17 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு நேற்று 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    சென்னை:

    புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    உத்தரகாண்ட் மாநிலம் சில்க்யாரா சுரங்கத்தில் தீபாவளியன்று ஏற்பட்ட விபத்தில் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் குடும்பத்தில் உள்ளவர்கள் மிகவும் துயர்த்திற்குள்ளான நிலையில் உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர்சிங் தாமி அறிவுரையின்படி பிரதமர் மோடி உதவியுடன் மழை, குளிர் சூழ்நிலையையும் பொருட்படுத்தாமல் செயல்பட்ட பேரிடர் குழுவின் உதவியுடன் 17 நாட்கள் போராடி தொழிலாளர்களை பத்திரமாக மீட்டுள்ளனர்.

    17 நாட்கள் போராடிய 41 தொழிலாளர்களின் உயிரை பத்திரமாக மீட்டு அவர்களின் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியும், தொழிலாளர்களுக்கு மறுவாழ்வும் கொடுத்த உத்தர காண்ட் மாநில முதல்-மந்திரி புஷ்கர்சிங் தாமி, பிரதமர் மோடி ஆகிேயாருக்கு புதிய நீதிக்கட்சியின் சார்பில் நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
    • அவர்களுடன் பிரதமர் மோடி டெலிபோன் மூலம் பேசி வாழ்த்து தெரிவித்தார்.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாசி மாநிலத்தில் அமைக்கப்பட்டு வந்த சில்க்யாரா சுரங்கப்பாதையில் திடீரென விபத்து (நிலச்சரிவு) ஏற்பட்டு 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணி கடந்த 17 நாட்களாக நடைபெற்றது. இறுதியில் நேற்றிரவு அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    உடல் பரிசோதனைக்காக 41 தொழிலாளர்களும் சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பிரதமர் மோடி டெலிபோன் மூலம் மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன் பேசினார்.

    அப்போது ஒரு தொழிலாளர் "நீங்கள் பிரதமராக இருக்கும்போது, வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் காப்பாற்றப்பட்டனர். அப்படியிருக்கும்போது, நாங்கள் உள்நாட்டில்தான் சிக்கியிருந்தோம். நாங்கள் அதைப்பற்றி கவலைப்படவே இல்லை" என அரசு மீது வைத்திருந்த நம்பிக்கையை பிரதமர் மோடியுடன் தெரிவித்தார்.

    பின்னர் பிரதமர் மோடி தொழிலாளர்களிடம் கூறியதாவது:-

    17 நாட்கள் என்பது குறைந்த நேரம் கிடையாது. ஒருவருக்கு ஒருவர் தைரியத்தை வெளிக்காட்டியிருப்பீர்கள். என்னுடைய பிரதமர் அலுவலக அதிகாரிகள் அங்கு இருந்தனர். அவர்களிடம் இருந்து தகவலை பெற்ற போதிலும், கவலை மட்டும் குறையவில்லை.

    அதிக நாட்கள் அபாயத்தை சந்தித்த பிறகு, பாதுகாப்பாக மீட்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். இந்த எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது. இதை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. ஒருவேளை மோசமான நிலை ஏற்பட்டிருந்தால், அதை நாங்கள் எப்பது எடுத்துக் கொண்டிருப்போம் என்று சொல்ல முடியவில்லை. கடவுள் ஆசியால் நீங்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளீர்கள்.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

    அப்போது பிரதமர் மோடியிடம் பேசிய மற்றொரு தொழிலாளர் "நாங்கள் சசோதரர்கள் போன்று ஒன்றாக இருந்தோம். இரவு சாப்பிட்ட பிறகு சுரங்கத்திற்குள் உலா வந்தோம். காலையில் எழுந்து நடக்க வேண்டும். யோகா செய்ய வேண்டும் என சொல்வேன். உத்தரகாண்ட் மாநில அரசு குறிப்பாக முதலமைச்சர், வி.கே. சிங் ஆகியோருக்கு நன்றி சொல்ல விரும்புகிறோம்" என்றார்.

    • எனது தந்தை பத்திரமாக மீட்கப்பட்டதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.
    • தொழிலாளர்களில் ஒருவரான தீரன் நாயக்கின் தாய் கூறுகையில், சுரங்கப்பாதையில் இருந்து எனது மகனையும் மற்ற தொழிலாளர்களையும் பத்திரமாக மீட்ட இந்திய அரசுக்கு நன்றி என்றார்.

    உத்தரகாசி:

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசி மாவட்டத்தில் சில்க்யாரா மலைப்பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும்போது 41 தொழிலாளர்கள் சிக்கினர். அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டனர்.

    17 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு நேற்று 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    மீட்புப் பணியில் ஈடுபட்ட தேசிய மீட்பு படையின் அதிகாரி டாக்டர் ஷைலேஷ் குமார் சவுத்ரி தொழிலாளர்களுடன் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார்.

    தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தங்களின் ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கு ஒருவரையொருவர் வாழ்த்தி கேக் துண்டுகளை பகிர்ந்து கொண்டனர்.

    இதுகுறித்து ஷைலேஷ் குமார் சவுத்ரி கூறுகையில் "தொழிலாளர்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டதால் அனைவரையும் நான் வாழ்த்த விரும்புகிறேன். எனது பிறந்தநாளைக் கொண்டாடும் போதெல்லாம், இந்த காட்சியையும் இந்த மீட்பு நடவடிக்கையையும் நான் நினைவில் கொள்வேன்" என்றார்.

    மீட்கப்பட்ட தொழிலாளர்களின் உறவினர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அவர்கள் கூறியதாவது:-

    41 தொழிலாளர்களில் ஒருவரான உத்தரபிரதேசத்தை சேர்ந்த ராம் மிலனின் மகன் சந்தீப் குமார் கூறுகையில், "எனது தந்தை பத்திரமாக மீட்கப்பட்டதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். எனது தந்தையை அழைத்து வருவதற்காக எனது உறவினர்கள் உத்தரகாண்ட் சென்றுள்ளனர். மீட்புப் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்" என்றார்.

    உத்தரப்பிரதேச மாநிலம் ஷிரவஸ்தி பகுதியை சேர்ந்த தொழிலாளி சந்தோஷ் குமார் என்பவரின் தாய் கூறுகையில், "சந்தோஷிடம் போனில் பேசினோம், தற்போது மருத்துவ மனையில் இருக்கிறார். இன்று தான் தீபாவளி கொண்டாடினோம். மத்திய அரசுக்கும், மீட்பு பணியாளர்களுக்கும் நன்றி" என்றார்.

    தொழிலாளிகளில் ஒருவரான பீகார் மாநிலம் சாப்ரா பகுதியைச் சேர்ந்த சோனுவின் தாயார் கூறுகையில், "நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அரசு மற்றும் மீட்புக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி. நான் 2 நாட்களில் வீட்டுக்கு திரும்பி வருவேன் என்று என் மகன் தெரிவித்தார்" என்றார்.

    உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியை சேர்ந்த தொழிலாளி மஞ்சித்தின் தந்தை கூறுகையில், "எனது மகன் பத்திரமாக மீட்கப்பட்டதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். சுரங்கப்பாதையில் சிக்கிய அனைவரையும் பத்திரமாக மீட்ட இந்திய அரசுக்கு நன்றி" என்றார்.

    ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் பகுதியை சேர்ந்த தொழிலாளர்களில் ஒருவரான தீரன் நாயக்கின் தாய் கூறுகையில், சுரங்கப்பாதையில் இருந்து எனது மகனையும் மற்ற தொழிலாளர்களையும் பத்திரமாக மீட்ட இந்திய அரசுக்கு நன்றி என்றார்.

    அசாம் மாநிலம் கோக்ரஜார் பகுதியை சேர்ந்த தொழிலாளி ராம் பிரசாத் நர்சாரியின் தந்தை கூறுகையில், "சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த அனைவரையும் பத்திரமாக மீட்ட இந்திய அரசுக்கும், அசாம் அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதைக் கேட்டு நான் நிம்மதி அடைந்தேன்" என்றார்.

    • டெல்லி, ஜான்சி உள்ளிட்ட இடங்களில் இருந்து 12 ‘எலி வளை சுரங்கத் தொழிலாளர்கள்’ அழைத்துவரப்பட்டனர்.
    • ‘எலி வளை சுரங்கம் அமைப்பது சட்டவிரோதமாக இருக்கலாம். ஆனால் அந்த தொழிலாளர்களின் அனுபவமும், திறமையும்தான் கடைசியில் கைகொடுத்தன’.

    உத்தர்காசி:

    நிலக்கரி சுரங்கங்கள் போன்றவற்றில் சட்டவிரோதமாக சிறிய சுரங்கங்கள் அமைத்து, அவற்றின் மூலம் நிலக்கரி திருடுவது சிலரின் வழக்கம்.

    சில அடிகள் முதல் பல அடிகள் வரை நீளும் இந்த குறுகிய, ஆபத்தான சுரங்கங்களில் ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே நுழைய முடியும். இந்த சுரங்கங்கள் 'எலி வளை சுரங்கங்கள்' என்றும், அவ்வாறு சுரங்கம் தோண்டுவோர் 'எலிவளை சுரங்கத் தொழிலாளர்கள்' என்றும் அழைக்கப்படுகின்றனர்.

    இது சட்டத்தை மீறிய செயல் என்பதால், பிடிபட்டால் சிறை நிச்சயம். அத்துடன் சமயங்களில் இந்த எலி வளை சுரங்கங்களில் திடீரென தண்ணீர் புகுவது, இடிந்து விழுவது போன்றவற்றால் தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டு பலியாகும் பரிதாபமும் நடக்கும்.

    ஆனால் இந்த 'எலி வளை சுரங்கத் தொழிலாளர்கள்' தான் உத்தரகாண்ட் சுரங்கப்பாதை இறுதிக்கட்ட மீட்பு பணியை வெற்றிகரமாக நிறைவேற்றினர்.

    இந்தப் பணியை மேற்கொள்ள இவர்கள்தான் சரியானவர்கள் என்று சுரங்கப்பாதை கட்டுமான பணியை மேற்கொண்ட நவயுகா என்ஜினீயரிங் நிறுவனம் முடிவு செய்தது.

    அதையடுத்து டெல்லி, ஜான்சி உள்ளிட்ட இடங்களில் இருந்து 12 'எலி வளை சுரங்கத் தொழிலாளர்கள்' அழைத்துவரப்பட்டனர். அவர்கள் குழாய்களுக்கு சென்று, 10 மீட்டர் இடிபாடுகளுக்குள் 24 மணி நேரத்துக்குள் துளையை ஏற்படுத்திவிட்டனர். இது மீட்பு படையினர் எதிர்பார்த்ததையும் விடவும் மிகவும் குறைவான நேரம் ஆகும். அத்துடன் இந்த தொழிலாளர்கள் பயன்படுத்தியது மண்வெட்டி, சிறிய கருவிகள் போன்ற எளிய சாதனங்கள்தான்.

    'எலி வளை சுரங்கம் அமைப்பது சட்டவிரோதமாக இருக்கலாம். ஆனால் அந்த தொழிலாளர்களின் அனுபவமும், திறமையும்தான் கடைசியில் கைகொடுத்தன' என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பினரான ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி சையத் அடா ஹஸ்னைன் பாராட்டு தெரிவித்தார்.

    ஆக, சட்டவிரோத செயலை செய்பவர்களாக கருதப்படும் 'எலி வளை சுரங்கத் தொழிலாளர்கள்' உத்தரகாண்ட் சுரங்கப்பாதை மீட்பு பணியின் மூலம் ஒரே நாளில் 'ஹீரோக்கள்' ஆகிவிட்டனர்.

    • 17 நாட்களுக்குப் பிறகு 41 தொழிலாளர்கள் நேற்றிரவு பத்திரமாக மீட்கப்பட்டனர்.
    • கடைசி 12 மீட்டர் தூரம் கைகளால் தோண்டப்பட்டு மீட்புக்குழுவினர் தொழிலாளர்களை சென்றடைந்தனர்.

    உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளர்கள், நிலச்சரிவு காரணமாக சிக்கிக்கொண்டனர். சுமார் 17 நாட்களுக்குப் பிறகு அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். 41 தொழிலாளர்களும் ஆரோக்கியத்துடன் உள்ளனர்.

    இருந்தபோதிலும், மருத்துவ பரிசோதனைக்காக சுகாதார மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களை பிரதமர் பிரமர் மோடி டெலிபோன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.

    மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களில் சுபோத் குமார் வர்மா என்ற இளைஞரும் ஒருவர். அவர் சுரங்கபாதைக்குள் சிக்கியது குறித்து கூறுகையில் "முதல் 24 மணி நேரம் மிகக் கடுமையாக இருந்தது. அதன்பின் குழாய் மூலம் எங்களுக்கு உணவு வழங்கப்பட்டது, தற்போது நான் முற்றிலும் நலமாக இருக்கும். எனது உடல் ஆரோக்கியமும் நன்றாக இருக்கிறது.

    எங்கள் 41 பேரையும் பத்திரமாக மீட்க முயற்சி மேற்கொண்ட மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

    இதற்கிடையே மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் பண உதவி நிதி வழங்கப்படும். சில்க்யாரா சுரங்கப்பாதை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என உத்தரகாண்ட் மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

    • மீட்கப்பட்ட தொழிலாளர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
    • துணிச்சல் மிக்க 41 தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு வலிமையும் உறுதியும் கிடைக்க வாழ்த்துகிறேன்.

    சென்னை:

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா மலைப்பகுதியில் உள்ள சுரங்கப்பாதையில் 41 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்க 17 நாளாக நடந்த மீட்புப் பணி நேற்று முடிவடைந்தது.

    ஒவ்வொரு தொழிலாளராக பத்திரமாக மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட தொழிலாளர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்நிலையில், உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில்,

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசி மாவட்டத்தின் சுரங்கப்பாதை சரிவில் சிக்கிய 41 தொழிலாளர்களும் 17 நாட்களுக்கு பிறகு வெற்றிகரமாக மீட்கப்பட்டது நிம்மதி அளிக்கிறது.

    மீட்புப் பணியில் அயராது உழைத்த துணிச்சலான மீட்புக் குழுக்கள் மற்றும் எலிவளை சுரங்கத் தொழிலாளர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

    துணிச்சல் மிக்க 41 தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு வலிமையும் உறுதியும் கிடைக்க வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • இறுதிக்கட்ட துளையிடும் பணியில் எலி வளை தொழிலாளர்கள் பயன்படுத்தப்பட்டனர்.
    • சுமார் 20 மணி நேரத்திற்குள் 12 மீட்டர் தூரம் வரை துளையிட்டு மீட்புப்பணிக்கு விரைவாக முடிவடைய உதவி செய்தனர்.

    உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதையில் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீடக அதிநவீன கருவிகள் வரவழைக்கப்பட்டன.

    கிடைமட்டமாக சுமார் 57 மீட்டர் தூரம் துளையிட்டு இடிபாடுகளை வெளியேற்ற வேண்டியிருந்தது. நவீன கருவிகளால் சுமார் 46 மீட்டர் தூரம் வரைதான் துளையிட முடிந்தது. அதன்பின், 12 மீட்டர் தூரம் வரை துளையிட வேண்டிய நிலையில் சிக்கல் ஏற்பட்டது.

    அப்போதுதான் எலி வளை சுரங்க தொழிலாளரக்ள் (Rat-Hole Miners) வரவழைக்கப்பட்டனர். இவர்கள் ஒரு நாளைக்கு சுமார் 3 மீட்டர் தூரம் வரை தோண்டுவார்கள். இதனால் மூன்று நாட்களுக்கு மேல் ஆகலாம் என நினைத்திருந்தனர்.

    எலி வளை சுரங்க தொழிலாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, இடத்தை பார்த்ததும் எளிதாக தோண்டிவிடலாம் எனத் தெரிவித்து நேற்று முன்தினம் தங்களது பணியை தொடங்கினர். ஒருவர் உள்ளே சென்று இடிபாடுகளை மண்வெட்டி மற்றும் கைகளால் எடுத்து வெளியே அனுப்ப வேண்டும். வெளியில் இருப்பவர்கள் அதை இழுப்பு கையிறு மூலம் வெளியே கொண்டு வருவார்கள். இவ்வாறு அவர்கள் இடிபாடுகளை வெளியே கொண்டு வந்தனர். சுமார் 18 மணி நேரத்திற்குள் 12 மீட்டர் தூரம் வரை தோண்டி அசத்தினார்கள்.

    சிறப்பாக தோண்டி சிக்கியிருந்த தொழிலாளர்களை அடைந்தனர். எலி வளை தொழிலாளர்கள் சுரங்கத்தில் சிக்கியிருந்த தொழிலாளர்களை அடைந்ததும், ஆனந்தத்தில் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

    இந்த பணியில் ஈடுபட்டிருந்த மீட்புக்குழு அதிகாரி ஒருவர் "எலி வளை தொழிலாளர்களின் செயல் எதிர்பார்ப்பை மீறிய செயலாகும். 18 மணி நேரத்தில் இரண்டு அல்லது மூன்று மீட்டர் வரை தோண்டுவார்கள் என நினைத்தேன். ஆனால் அவர்கள் 10 மீட்டர் வரை தோண்டினர்." என்றார்.

    யார் இந்த எலி வளை தோண்டும் தொழிலாளர்கள் (Rat-Hole Miners)

    வடகிழக்கு மாநிலங்களில் நிலக்கரி சுரங்கம் அதிகமாக இருக்கும். மேல்மட்டத்தில் குறுகிய விட்டம் கொண்ட அளவில் குழி தோண்டுவார்கள். ஒருவர் உள்ளே சென்று மண்ணை வெளியே எடுத்து அனுப்ப, வெளியே இருப்பர்கள் அதை அப்புறப்படுத்துவார்கள்.

    நிலக்கரி இருக்கும் இடத்தை அடைந்ததும், உள்ளே பக்கவாட்டில் குடைந்து குழியை விரிவுப்படுத்துவார்கள். அதன்பின் நிலக்கரியை வெட்டுவார்கள். அவ்வாறு வெட்டும் நிலக்கரியை இந்த குழி வழியாக வெளியே அனுப்புவார்கள். அந்த குழி வழியாக நிலக்கரியை வெளியே எடுக்கப்பட்டு வாகனம் மூலம் கொண்டு செல்லப்படும்.

    இவ்வாறு குறுகிய குழி 800 மி.மீ. விட்டத்தை விட சிறியதாக இருப்பதால் எலி வளை போன்று காணப்படும். இதனால் எலி வளை சுரங்கம் தோண்டும் தொழிலாளர்கள் என அழைக்கப்பட்டனர்.

    இது மிகவும் ஆபத்தானது. ஒருவேளை நிலச்சரிவு ஏற்பட்டாலோ, மழை பெய்தாலோ சுரங்கத்தில் இருக்கும் தொழிலாளர்களை மீட்பது மிகவும் கடினம். அவர்களது உடலைக்கூட மீட்க முடியாது. இவ்வாறு சில துயர சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. மேலும், இதில் சிறுவர்களும் பயன்படுத்தப்படுவார்கள். இதனால், எலி வளை சுரங்கத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    தடைவிதிக்கப்பட்ட தொழிலாளர்களை கொண்டு ஒரு மிகப்பெரிய மீட்பு பணி வெற்றி அடைந்துள்ளது. தடை செய்யப்பட்டது என்றாலும், அவர்களது அனுபவம், திறன் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
    • மீட்புப் படைகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    புதுடெல்லி:

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா மலைப்பகுதியில் உள்ள சுரங்கப்பாதையில் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். 17 நாளாக நடந்த மீட்புப் பணி இன்று முடிவடைந்தது.

    ஒவ்வொரு தொழிலாளராக பத்திரமாக மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட தொழிலாளர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்நிலையில், உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட செய்தியில், உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த தொழிலாளர்கள் அனைவரும் மீட்கப்பட்டதை அறிந்து நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன். 17 நாட்கள் அவர்கள் கடின உழைப்பு, மீட்பு முயற்சி தடைகளை சந்தித்தது, மனித சகிப்புத்தன்மைக்கு சான்றாக உள்ளது. அவர்களின் மன உறுதிக்கு தேசம் வணக்கம் செலுத்துகிறது. வரலாற்றில் மிகவும் கடினமான மீட்புப் பணிகளில் ஒன்றைச் செய்ய நம்பமுடியாத மன உறுதியுடன் செயல்பட்ட அணிகள் மற்றும் அனைத்து நிபுணர்களையும் வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.



     


    இதேபோல் பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட செய்தியில், உத்தரகாசியில் நமது தொழிலாளர் சகோதரர்களின் மீட்புப் பணியின் வெற்றி அனைவரையும் உணர்ச்சிவசப்பட வைக்கிறது. சுரங்கப்பாதையில் சிக்கிய நண்பர்களுக்கு நான் சொல்ல விரும்புவது, உங்கள் தைரியமும் பொறுமையும் அனைவரையும் ஊக்குவிக்கிறது. நீங்கள் அனைவரும் நலமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வாழ்த்துகிறேன். நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, இந்த நண்பர்கள் இப்போது தங்கள் அன்புக்குரியவர்களைச் சந்திப்பார்கள் என்பது மிகவும் திருப்திகரமான விஷயம். இந்த சவாலான நேரத்தில் இந்தக் குடும்பங்கள் அனைத்தும் காட்டிய பொறுமையும் தைரியமும் போதுமான அளவு பாராட்டமுடியாது. மீட்பு நடவடிக்கையில் தொடர்புடைய அனைத்து மக்களையும் நான் வணங்குகிறேன். அவர்களின் துணிச்சலும் உறுதியும் நமது தொழிலாளர் சகோதரர்களுக்கு புது வாழ்வு அளித்துள்ளது. இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள ஒவ்வொருவரும் மனிதநேயம் மற்றும் குழுப்பணிக்கு ஓர் அற்புதமான உதாரணத்தை அமைத்துள்ளனர் என பதிவிட்டுள்ளார்.

    • மீட்கப்பட்டவர்களிடம் முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி கலந்துரையாடினார்.
    • தொழிலாளர்கள் மீட்கப்பட்டதும் அப்பகுதி மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

    உத்தரகாசி:

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா மலைப்பகுதியில் 4.50 கிலோமீட்டர் தூரத்துக்கு மலைக்கு கீழ் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்துவந்தது.

    கடந்த 12-ம் தேதி நடந்த சுரங்கப்பாதை விபத்தில் தொழிலாளர்கள் 41 பேர் சிக்கிக் கொண்டனர். தொடர்ந்து இன்று 17-வது நாளாக மீட்புப் பணி நடைபெற்றது. இன்று மாலை தொழிலாளர்களை மீட்க துளையிடும் பணி நிறைவடைந்தது. இதனால் அவர்களது உறவினர்கள் சுரங்கத்தில் குவிந்தனர்.

    இதற்கிடையே, ஒவ்வொரு தொழிலாளராக பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட உள்ளது. மீட்கப்பட்ட தொழிலாளர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    மீட்புப் பணிகளை முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி நேரில் சென்று பார்வையிட்டார். மீட்கப்பட்டவர்களிடம் முதல் மந்திரி கலந்துரையாடினார்.

    இந்நிலையில், சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மீட்கப்பட்ட தொழிலாளர்களை மத்திய மந்திரி வி.கே.சிங் வரவேற்றார்.

    தொழிலாளர்கள் மீட்கப்பட்டதும் அப்பகுதி மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

    • மீட்புப் பணிகளை முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி நேரில் சென்று பார்வையிட்டார்.
    • மீட்கப்பட்டவர்களிடம் மாநில முதல் மந்திரி கலந்துரையாடினார்.

    உத்தரகாசி:

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா மலைப்பகுதியில் 4.50 கிலோமீட்டர் தூரத்துக்கு மலைக்கு கீழ் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்துவந்தது.

    கடந்த 12-ம் தேதி நடந்த சுரங்கப்பாதை விபத்தில் தொழிலாளர்கள் 41 பேர் சிக்கிக் கொண்டனர். தொடர்ந்து இன்று 17-வது நாளாக மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.

    தொழிலாளர்களை மீட்க துளையிடும் பணி நிறைவடைந்தது. தொழிலாளர்களை மீட்க தயார் நிலையில், ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவ குழுவினர் உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, தொழிலாளர்களின் உறவினர்கள் சுரங்கத்தில் குவிந்தனர்.

    இதற்கிடையே, முதல் கட்டமாக 5 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட உள்ளது. மற்றவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். மீட்கப்பட்ட தொழிலாளர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்நிலையில், மீட்புப் பணிகளை முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி நேரில் சென்று பார்வையிட்டார். மீட்கப்பட்டவர்களிடம் முதல் மந்திரி கலந்துரையாடினார்.

    ×