என் மலர்tooltip icon

    தெலுங்கானா

    • உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • உரிமையாளர் பாலையா உட்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், பிரகாஷ் நகரை சேர்ந்தவர் பாலையா (வயது 40). இவர் கோழிக்கறி கடை நடத்தி வந்தார்.

    இவரது கடையில் இருந்து பல்வேறு முக்கிய நகரங்களுக்கு அழுகிய கோழிக்கறி விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் பெயரில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் வடக்கு மண்டல அதிரடி போலீசார் பாலையா கடைக்கு சென்றனர். அப்போது கடையில் வைக்கப்பட்டிருந்த கோழிக்கறி துர்நாற்றம் வீசியதுடன் அழுகிய நிலையில் இருந்து நச்சுத் தண்ணீர் ஒழுகியபடி இருந்தது.

    இதனைக் கண்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். கடையில் இருந்த 700 கிலோ அழுகிய கோழிக்கறிகளை பறிமுதல் செய்தனர். கடையில் இருந்த கடை உரிமையாளர் பாலையா உட்பட 15 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பாலையா ஏற்கனவே ரசூல் புராவில் அழுகிய கோழிக்கறியை விற்பனை செய்ததால் கைதானவர் என்பது தெரியவந்தது.

    ஜெயிலில் இருந்து வெளியே வந்த பாலையா தனது கடையை பிரகாஷ் நகருக்கு மாற்றியது தெரிய வந்தது.

    பிரகாஷ் நகரில் இருந்து சென்னை, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு அழுகிய நிலையில் உள்ள கோழிக்கறியை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து கிலோ ரூ.30 முதல் 50-க்கு விற்பனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

    சென்னையில் உள்ள சில மதுபான பார்கள், ஓட்டல்கள், சாலையோர கடைகள் பாஸ்ட் புட் சென்டர்களுக்கு அனுப்பி வைத்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.

    • தொடக்கம் முதலே தமிழ் தலைவாஸ் அணி சிறப்பாக ஆடியது.
    • இறுதியில், தமிழ் தலைவாஸ் அணி 44-29 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது.

    ஐதராபாத்:

    11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நேற்று தொடங்கியது. தொடக்க ஆட்டங்களில் தெலுங்கு டைட்டன்ஸ் 37-29 என்ற புள்ளிக் கணக்கில் பெங்களூரு புல்சையும், தபாங் டெல்லி 36-28 என்ற கணக்கில் மும்பை அணியையும் தோற்கடித்தன.

    இந்நிலையில், 2-வது நாளான இன்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின.

    தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய தமிழ் தலைவாஸ் அணி 44-29 என்ற புள்ளிக்கணக்கில் அபார வெற்றி பெற்றது.

    தமிழ் தலைவாஸ் அணி முதல் போட்டியில் வெற்றியுடன் தொடங்கியது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    • குளத்திற்குள் கார் மூழ்க தொடங்கியதை அடுத்து இருவரும் காரை விட்டு குளத்திற்குள் குதித்துள்ளனர்
    • இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    தெலுங்கானா மாநிலம் ஜங்கானில் குளத்தை ஒட்டிய வயல்வெளிக்கு அருகில் கார் ஓட்டுவதற்காக ஒருவர் பயிற்சியெடுத்து வந்துள்ளார். அப்போது அவருக்கு கார் ஓட்ட சொல்லிக்கொடுத்த நபர் பிரேக் போட சொல்லியுள்ளார். அப்போது பிரேக்கிற்கு பதிலா ஆக்சிலேட்டரை அந்த நபர் அழுத்தியுள்ளார்.

    இதனால் கார் பக்கத்தில் இருந்த ஒரு குளத்திற்குள் விழுந்துள்ளது. குளத்திற்குள் கார் மூழ்க தொடங்கியதை அடுத்து இருவரும் காரை விட்டு குளத்திற்குள் குதித்துள்ளனர். அப்போது அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை காப்பற்றியுள்ளனர்.

    இருவருக்குமே நீச்சல் தெரியும் என்பதாலும், குளம் ஆழமாக இல்லாததாலும் இருவரும் உயிர் பிழைத்துள்ளனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டியதாக போலீசார் அவர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • சாலையில் 65 முதியவர் ஆஞ்சநேயலு நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • இதைக்கேட்டு ஆத்திரமடைந்த அந்த நபர் பைக்கை நிறுத்தி கீழே இறங்கி முதியவரைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.

    சாலையில் வண்டியில் சென்றவரை மெதுவாக போகும்படி அறிவுறுத்திய முதியவர் அடித்துக்கொல்லப் பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள அல்வால் [Alwal] பகுதியில் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

    அன்றைய தினம் அல்வால் சாலையில் 65 முதியவர் ஆஞ்சநேயலு நடந்து சென்று கொண்டிருந்தார். முதியவர் சாலையை கடக்க முயன்றபோது அவ்வழியாக பைக் ஒன்று வேகமாகச் சென்றுள்ளது. இதனால் பைக்கில் சென்றவரை மெதுவாக செல்லும்படி முதியவர்  கூறியுள்ளார். இதைக்கேட்டு ஆத்திரமடைந்த அந்த நபர் பைக்கை நிறுத்தி கீழே இறங்கி முதியவரைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.

    அந்த பைக்கில் வந்த நபருடன் அவரது மனைவியும், மகனும் உடன் வந்துள்ளனர். முதியவரைக் கீழ் தள்ளி அடித்துக்கொண்டிருந்த தனது கணவனை சமாதானப்படுத்தி மனைவி முயன்றுள்ளார். இருப்பினும் முதியவரைத் தாக்குவதை அந்த நபர் நிறுத்தவில்லை. சுற்றி இருந்தவர்கள் அவரை தடுக்காமல் வேடிக்கை பார்த்து நின்றுள்ளனர்.

    இறுதியில் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில் முதியவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி முதியவர் உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். 

    • போலீசார் தனிப்படை அமைத்து தப்பி ஓடிய முதலைகளை தேடி வந்தனர்.
    • பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படாத வண்ணம் ஒலி பெருக்கி மூலம் போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

    பீகார் மாநிலம், சஞ்சய் காந்தி உயிரியல் பூங்காவில் இருந்து பெங்களூர் பன்னர் கட்டா பூங்காவிற்கு புலிகள், 8 முதலைகள் மற்றும் பிற அரிய வகை உயிரினங்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது.

    தெலுங்கானா மாநிலம், நிர்மல் மாவட்டம், தேசிய நெடுஞ்சாலையில் லாரி சென்று கொண்டு இருந்தது அப்போது திடீரென லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள தடுப்பில் மோதி கவிழ்ந்தது.

    அப்போது லாரியில் இருந்த 8 முதலைகளில் 2 முதலைகள் லாரியில் இருந்து வெளியேறியது. இதனைக் கண்ட லாரி டிரைவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார் போலீஸ் சூப்பிரண்டு ஜானகி சர்மிளா மற்றும் போலீசார் விபத்து நடந்த இடங்களை பார்வையிட்டனர்.

    பின்னர் போலீசார் தனிப்படை அமைத்து தப்பி ஓடிய முதலைகளை தேடி வந்தனர். தப்பி ஓடிய முதலைகளால் அப்பகுதியில் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படாத வண்ணம் ஒலி பெருக்கி மூலம் போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

    நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு லாரியில் இருந்து தப்பிய 2 முதலைகளை போலீசார் மீட்டனர். இதையடுத்து மற்றொரு லாரியை ஏற்பாடு செய்து வனவிலங்குகளை ஏற்றி போலீஸ் பாதுகாப்புடன் பெங்களூருக்கு அனுப்பி வைத்தனர்.

    • சிறுவன் நிற்க முடியாமல் கீழே சரிந்து விழுந்தான்.
    • ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநில பத்ராத்திரி கொத்த குடேம் மாவட்டத்தில் மானச விகாசா பகுதியில் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஆசிரியர் ஒருவர் பள்ளி சிறுவனை கொடூரமாக தாக்கி உள்ளார்.

    ஆசிரியர் சிறுவனை பிடித்து முதுகில் பலமாக அடித்தார். சிறுவன் வலியால் கதறி அழுதபடி அவனது முதுகை இரு கைகளையும் பின்புறமாக வைத்து தடவினான்.

    அப்போது அவனது கைகளை பிடித்து ஆசிரியர் தர தரவென இழுத்துச் சென்று மாறி மாறி தாக்கி உள்ளார். அப்போது அவருடைய பாக்கெட்டில் இருந்து செல்போன் வெளியே வந்தது.

    அதை சரி செய்து கொண்ட ஆசிரியர் மேலும் சிறுவனை 4 முறை கைகளால் அடித்தார். அப்போது சிறுவன் நிற்க முடியாமல் கீழே சரிந்து விழுந்தான்.

    சிறுவன் கையில் வைத்திருந்த ஒரு நோட்டுப் புத்தகத்தை பிடுங்கி அதை வீசி எறிந்து அந்த புத்தகத்தை எடுத்து வருமாறு கூறினார்.

    கீழே விழுந்த சிறுவன் புத்தகத்தை எடுப்பதற்காக எழுந்ததும் மீண்டும் ஆசிரியர் சிறுவனை தரையில் இழுத்து போட்டு அடித்தார்.

    ஆசிரியரின் தாக்குதலில் இருந்து மீள முடியாத சிறுவன் அழுது கொண்டே வீட்டிற்கு சென்றான். நடந்த விஷயங்களை பெற்றோர்களிடம் தெரிவித்தான்.

    எந்தவித காரணமும் இல்லாமல் ஆசிரியர் தன்னை அடித்ததாக கூறினான். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பள்ளியில் திரண்டனர். ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    அப்போது பள்ளியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் ஆசிரியர் சிறுவனை கொடூரமாக தாக்கும் காட்சிகள் இருந்தன. இதனை கண்டதும் பெற்றோர்களுக்கு கண்ணீர் பெருக்கெடுத்தது.

    இந்த வீடியோ பரவி வருகிறது. ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

    • முதலில் ஆடிய இந்தியா 297 ரன்களை குவித்தது.
    • அடுத்து ஆடிய வங்கதேசம் 164 ரன்களை மட்டுமே எடுத்தது.

    ஐதராபாத்:

    இந்தியா, வங்கதேச அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்தியா தொடக்கம் முதலே ரன் மழை பொழிந்தது. தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 4 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து ஜோடி சேர்ந்த சாம்சன், சூர்யகுமார் ஜோடி வங்கதேச பந்துவீச்சை நாலா பக்கமும் சிதறடித்தனர். இந்த ஜோடி 150 ரன்கள் பார்ட்னர்ஷிப் கடந்து அசத்தியது.

    சிக்சர் மழை பொழிந்த சஞ்சு சாம்சன் 40 பந்தில் சதம் அடித்து, 111 ரன்னில் அவுட்டானார். இன்னொரு பக்கம் அதிரடி காட்டிய சூர்யகுமார் யாதவ் 35 பந்தில் 75 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

    ரியான் பராக் 13 பந்தில் 34 ரன்னும், பாண்ட்யா 18 பந்தில் 47 ரன்கள் குவித்தும் ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 297 ரன்கள் குவித்தது டி20 கிரிக்கெட் வரலாற்றில் இது 2-வது அதிகபட்ச ஸ்கோராகும். முதல் இடத்தில 314 ரன்கள் அடித்து நேபாளம் அணி உள்ளது.

    இதையடுத்து 298 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. அந்த அணியில் ஹிருடோய் தனி ஆளாக போராடி 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். லிட்டன் தாஸ் 42 ரன்கள் சேர்த்தார்.

    இறுதியில் வங்கதேசம் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 164 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் 133 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றதுடன், டி2 தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது.

    இந்தியா சார்பில் ரவி பிஷ்னோய் 3 விக்கெட்டும், மயங்க் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • துர்கா சிலையை உடைத்ததாக நாக கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணய்யா கவுடு என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
    • விடிய விடிய யாராவது ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என ஏற்கனவே கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.

    ஐதராபாத்:

    ஐதராபாத் நம்ப பள்ளி கண்காட்சி மைதானத்தில் பிரமாண்ட துர்கா அம்மன் சிலை பிரதிஷ்டை செய்து நவராத்திரி சிறப்பு பூஜைகள் நடந்தன.

    பூஜைகள் முடிந்து விழா குழுவினர் தங்களது வீடுகளுக்கு சென்று விட்டனர். அந்த நேரத்தில் மர்மநபரால் சிலையின் சில பாகங்கள் உடைக்கப்பட்டது.

    மேலும் சிலை முன்பு போடப்பட்டிருந்த படையல் மலர் அலங்காரம் ஆகியவை சேதப்படுத்தப்பட்டிருந்தன. இதனை கண்ட விழா குழுவினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ஏராளமானோர் அங்கு திரண்டதால் பெரும் பதட்டம் நிலவியது.

    டிஜிபி அக்சன் யாதவ் தலைமையிலான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். சிலையை உடைத்தவர்களை கைது செய்ய 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் ஐதராபாத் மாநகரப் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். பல இடங்களில் வாகன சோதனையும் நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் துர்கா சிலையை உடைத்ததாக நாக கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணய்யா கவுடு என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் கைது செய்யப்பட்ட கிருஷ்ணய்யா கவுடு மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்தது.

    அவர் நள்ளிரவில் துர்கா சிலை அருகே ஏதாவது உணவு கிடைக்குமா என வந்துள்ளார். சாமி முன்பு அவருக்கு போதுமான அளவு உணவு கிடைக்காததால் ஆத்திரத்தில் சாமி சிலையை உடைத்தது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.

    விழா குழுவினர் போதிய பாதுகாப்பு வழங்கவில்லை. விடிய விடிய யாராவது ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என ஏற்கனவே கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. அதனை மீறியதாக விழாக்குழுவினர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த சம்பவத்திற்கு மத சாயம் எதுவும் பூச வேண்டாம். சமூக ஊடகங்களில் தவறான தகவல் பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். இந்த சம்பவம் நேற்று இரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிஸ்கட் ஒன்றில் மெல்லிய இரும்பு கம்பி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • பிஸ்கட்டில் இரும்பு கம்பி இருக்கும் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    தெலுங்கானா மாநிலம் கமாரெட்டி மாவட்டத்தில் வசிக்கும் அனுமன் ரெட்டி என்பவர் தனது குழந்தைகளுக்காக வாங்கி வந்த போர்பன் பிஸ்கட் ஒன்றில் மெல்லிய இரும்பு கம்பி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    ஆபத்தை உணர்ந்து பீதியடைந்த அனுமன் ரெட்டி, பிஸ்கட்டில் இரும்பு கம்பி இருப்பதை வீடியோவாக பதிவு செய்து அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    • மாநகராட்சியில் பணிபுரியும் திவ்யஜோதி சில ஒப்புதல் கையெழுத்து போடுவதற்கே லட்சக்கணக்கில் பணம் பெற்று வந்துள்ளார்
    • கணவர் வெளியிட்டுள்ள வீடியோவின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    ஐதராபாத்தில் மாநகராட்சியில் துணை செயற்பொறியாளராக பணியாற்றி வரும் தனது மனைவி திவ்ய ஜோதி, தினமும் லஞ்சம் வாங்குவதாக கணவர் ஸ்வர்ண ஸ்ரீபத் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

    மாநகராட்சியில் பணிபுரியும் திவ்யஜோதி சில ஒப்புதல் கையெழுத்து போடுவதற்கே லட்சக்கணக்கில் பணம் பெற்று வந்துள்ளார் என்றும் ரூ.20 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை கட்டு கட்டாக வாங்கிய லஞ்சப் பணத்தினை தனது மனைவி வீட்டின் பூஜை அறை, படுக்கை அறைகளில் பதுக்கி வைத்துள்ளதாகவும் கூறி கணவர் ஸ்வர்ண ஸ்ரீபத் வீடியோ வெளியிட்டுள்ளார்.

    இந்த வீடியோவின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தியன் திரைப்பட பாணியில் லஞ்சம் வாங்கிய மனைவியை கணவரே காட்டி கொடுத்த சம்பவம் ஐதராபாத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • மனைவியை காப்பாற்ற முயன்ற அவரது கணவர் பாலைய்யாவையும் தாக்கினர்.
    • தெலுங்கானாவில் சூனியம் வைத்ததாக கருதி ஒரே மாதத்தில் 3 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

    தெலுங்கானா மாநிலம், மேடக் மாவட்டம், கத்ரியலை சேர்ந்தவர் பாலையா. இவருடைய மனைவி முத்தவ்வா (வயது 45). அதே பகுதியை சேர்ந்த முரளி என்பவர் அவரது தாய்க்கு முத்தவ்வா சூனியம் வைத்ததாக கருதினார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த முரளி அவரது உறவினர்களான ராமசாமி, லட்சுமி, ராஜ லதா உள்ளிட்ட 7 பேருடன் முத்தவ்வா வீட்டிற்கு சென்றனர்.

    வீட்டில் கணவருடன் தூங்கிக் கொண்டு இருந்த முத்தவ்வாவை தரதரவென வீட்டிற்கு வெளியே இழுத்து வந்தனர்.

    பின்னர் 7 பேரும் சேர்ந்து முத்தவ்வாவை சரமாரியாக தாக்கினர். வலி தாங்க முடியாமல் அலறி துடித்த முத்தவ்வா அவர்களிடம் இருந்து தப்பி ஓடினார்.

    இருப்பினும் விடாமல் துரத்திச் சென்ற கும்பல் அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தனர்.

    மனைவியை காப்பாற்ற முயன்ற அவரது கணவர் பாலைய்யாவையும் தாக்கினர். இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முத்தவ்வா, அவரது கணவரை மீட்டு சிகிச்சைக்காக செகந்திராபாத் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முத்தவ்வா பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள 7 பேரையும் தேடி வருகின்றனர். தெலுங்கானாவில் சூனியம் வைத்ததாக கருதி ஒரே மாதத்தில் 3 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் விவசாயிகளை ஏமாற்றி வருகிறது.
    • மாநிலத்தில் கடன் தள்ளுபடிக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

    தெலுங்கானா மாநிலத்தில் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்ய வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக பிஆர்எஸ் கட்சி மூத்த தலைவர் ஹரிஷ் ராவ் கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் விவசாயிகளை ஏமாற்றி வருகிறது. பதவியேற்றதும் முதல் கையெழுத்து விவசாய கடன் தள்ளுபடிக்காக தான் இருக்கும் என முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி உறுதி அளித்தார்.

    ஆனால் அவர் அதன்படி செயல்படவில்லை. மாநிலத்தில் கடன் தள்ளுபடிக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர். 22 லட்சம் விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை.

    தெலுங்கானா மாநிலத்தில் விரைவில் விவசாயிகள் கடன் தள்ளுபடி அமல்படுத்தாவிட்டால் காங்கிரஸ் மூத்த தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி வீட்டு முன்பு பி.ஆர்.எஸ். கட்சி போராட்டம் நடத்தும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×