என் மலர்
உள்ளூர் செய்திகள்
- கடந்த சில மாதங்களாகவே கேரட் விலை மண்டிகளில் ரூ.100 முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
- தற்போது மேட்டுப்பாளையம் மண்டிகளில் கேரட் ரூ.15 முதல் ரூ.20 வரை மட்டுமே விற்பனையாகி வருகிறது.
கோத்தகிரி:
மலை மாவட்டமான நீலகிரியில் மலை காய்கறி பயிர்களில் கேரட் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது.
மாவட்டத்தில் பல ஏக்கர் பரப்பில் கேரட் பயிர் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கோத்தகிரி பகுதியில் கேரட் அதிகமாக பயிரிடப்படுகிறது.
இங்கு விளையும் கேரட் மேட்டுப்பாளையத்தில் உள்ள மண்டிக்கு எடுத்து செல்லப்பட்டு விற்பனை செய்து, வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
மேட்டுப்பாளையத்தில் உள்ள கேரட் மண்டிக்கு நீலகிரியில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்து அதிகளவிலான கேரட் வருகிறது. அதுவும் தினமும் ஆயிரம் டன் வரை மேட்டுப்பாளையம் மண்டிக்கு இறக்குமதி செய்யப்படுகிறது.
இதனால் கடந்த சில மாதங்களாகவே கேரட் விலை மண்டிகளில் ரூ.100 முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. பின்னர் 50 ரூபாய்க்கு விற்பனையானது.
தற்போது கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளி மாநில கேரட் வரத்து மேட்டுப்பாளையம் ஏலம் மண்டிக்கு அதிகமாக வருவதால் விலை உச்சத்தில் இருந்த கேரட் தற்போது வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
தற்போது மேட்டுப்பாளையம் மண்டிகளில் கேரட் ரூ.15 முதல் ரூ.20 வரை மட்டுமே விற்பனையாகி வருகிறது. இதனால் கேரட் பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, விலை தொடர்ந்து குறைந்து வருவதால், கேரட் உற்பத்தி செய்யும் செலவு, தோட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சம்பளம், ஏற்றுமதி, வண்டி வாடகை என உற்பத்தி செலவு கூட மிஞ்சவில்லை என்றனர்.
- திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்ளை தடுக்க மாநகர போலீசாா் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
- வாகன சோதனையின்போது வாகன ஓட்டுனர் பெயர், வாகன எண் ஆகியவை பதிவு செய்யப்படுகிறது.
திருப்பூர்:
திருப்பூரில் பனியன் சார்ந்த தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. பனியன் நிறுவனங்களில் பணியாற்ற வெளிமாவட்டம் மற்றும் வடமாநில தொழிலாளிகள் ஏராளமானோர் தங்கி பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்புத்தாண்டு கொண்டாட திருப்பூரில் தங்கி வேலை செய்யும் வெளி மாவட்ட தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர். இதனால் பல்வேறு பகுதிகளில் திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்ளை தடுக்க மாநகர போலீசாா் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் திருப்பூர் மாநகரின் முக்கிய பகுதிகளில் நேற்று போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். தொடர்ந்து வாகன சோதனையின்போது வாகன ஓட்டுனர் பெயர், வாகன எண் ஆகியவை பதிவு செய்யப்படுகிறது. அதேபோல் முறையான ஆவணங்கள் இல்லாமல் வரும் இருசக்கர வாகனம், தலைக்கவசம் இல்லாமல் வருபவர்கள் மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு அபராதம் விதித்தனர்.
- இரண்டு ரெய்டுகளுக்கே அ.தி.மு.க.வை அடமானம் வைத்துள்ளவர்கள், அடுத்து தமிழ்நாட்டை அடமானம் வைக்கப் போகிறீர்களா?
- குறைந்தபட்ச செயல்திட்டம் என்று சொல்கிறீர்களே, அதில் மாநில உரிமைகள் - மொழியுரிமை - நீட் விலக்கு - தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்டவை இடம்பெறுமா?
சென்னை:
அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை விமர்சித்து இருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக எடப்பாடி பழனிசாமியும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார்.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
நேற்று கூட்டணி அறிவித்துள்ள இரண்டு கட்சித் தலைவர்களே…
இரண்டு ரெய்டுகளுக்கே அ.தி.மு.க.வை அடமானம் வைத்துள்ளவர்கள், அடுத்து தமிழ்நாட்டை அடமானம் வைக்கப் போகிறீர்களா?
குறைந்தபட்ச செயல்திட்டம் என்று சொல்கிறீர்களே, அதில் மாநில உரிமைகள் - மொழியுரிமை - நீட் விலக்கு - தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்டவை இடம்பெறுமா?
இந்தத் துரோகக் கூட்டணியை - தோல்விக் கூட்டணியைத் தமிழ்நாட்டு மக்கள் மீண்டும் நிராகரிப்பார்கள்! என்று கூறியுள்ளார்.
- அ.தி.மு.க. ஒருபோதும் தமிழ்நாட்டை, நம் மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காது!
- காவிரி உரிமையை பெங்களூரிலும், முல்லைப் பெரியாறு அணை உரிமையை திருவனந்தபுரத்திலும் அடகு வைத்த தி.மு.க.வின் தலைவர்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தி.மு.க. தலைவரும், விடியா தி.மு.க. அரசின் முதல்வருமான மு.க.ஸ்டாலின், தினமும் என்ன பிரச்சனை வரப்போகிறது என்று தன் தூக்கம் தொலைந்துவிட்டதாக ஒருமுறை தி.மு.க. பொதுக்குழுவில் சொன்னார்.
நேற்று முன்தினம் அவருடைய அமைச்சர் பொன்முடியின் அருவருக்கத்தக்க ஆபாசப் பேச்சு அவர் தூக்கத்தை கெடுத்தது.
இன்றோ, அ.இ.அ.தி.மு.க.-வின் கூட்டணி அறிவிப்பு இடிபோல் வந்து அவருக்கு இறங்கியுள்ளது போலும்!
பீதியின் உச்சத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
தி.மு.க. செய்த வரலாற்றுப் பிழைகள் இந்த கூட்டணி மூலம் திருத்தி எழுதப்படும் என்று நேற்று நான் எனது எக்ஸ் தள பதிவு வாயிலாக தெரிவித்தேன்.
தமிழ்நாட்டு நலனுக்கான "குறைந்தபட்ச செயல் திட்டம்" இருக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களும் அறிவித்திருந்தார்.
"என்னவா இருக்கும்?" என்று இரவு முழுக்க தூக்கத்தை தொலைத்த ஸ்டாலின், காலையில் தனது மொத்த வரலாற்றுப் பிழைகளையும் வெற்று நாடகங்களையும் தொகுத்து அதனை அறிக்கையாக வெளியிட்டுவிட்டார்.
மணிப்பூர் மாநிலப் பிரச்சனைகள் பற்றி உங்களுக்கு இருக்கும் அக்கறை, துளியாவது உங்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாக பெண்கள் மீது இருந்ததா? அவர்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்த உங்களுக்கு சட்டம் ஒழுங்கு பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது?
"NEET என்றால் என்ன? அதனை இந்திய நாட்டிற்கே அறிமுகப்படுத்தியது யார்? அதனை உச்சநீதிமன்றம் வரை வாதாடி நிலைபெறச் செய்தது எந்த கூட்டணி?"- இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டு, பிறகு நீட் பற்றி பேசுங்கள்!
மு.க.ஸ்டாலின் அவர்களே- நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது!
அ.தி.மு.க. ஒருபோதும் தமிழ்நாட்டை, நம் மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காது! மாறாக, நமக்கான மாநில உரிமைகளை பெற்றுத் தரவே செய்யும்!
காவிரி உரிமையை பெங்களூரிலும், முல்லைப் பெரியாறு அணை உரிமையை திருவனந்தபுரத்திலும் அடகு வைத்த தி.மு.க.வின் தலைவர் அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம்!
தமிழ்நாடு விரோத தி.மு.க.வின் ஊழல் ஆட்சியை தோலுரித்து, மக்களின் பேராதரவோடு அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாகை சூடும்!
(பி.கு. : ரெய்டுகளுக்கு பயந்து, "தொட்டுப் பார்- சீண்டிப் பார்" வீடியோ கூட வெளியிட முடியாத அளவிற்கு தொடை நடுங்கிக் கொண்டிருப்பது யார் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்!)
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தேமுதிக-வின் கட்சி வளர்ச்சி, கட்சி பணிகளில் மட்டுமே நாங்கள் முழு மூச்சாக ஈடுபட்டு வருகிறோம்.
- பா.ஜ.க. மாநில தலைவர் மாற்றம் என்பது அக்கட்சியின் முடிவு.
சென்னை:
தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அதன் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உறுதி செய்யப்பட்டதாக டி.வி.யில் நானும் பார்த்தேன். தெரிந்துகொண்டேன். அது அந்த இரண்டு கட்சியும் சேர்ந்து எடுத்த முடிவு. அதைப்பற்றி நாங்க எந்த கருத்தும் சொல்ல முடியாது.
* தேமுதிகவை பொறுத்தவரைக்கும் ஏப்ரல் 30-ந்தேதி செயற்குழு - பொதுக்குழு நடத்த இருக்கிறோம். அதற்கான ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. அதற்காகத்தான் தேமுதிக நிர்வாகிகள் வந்துள்ளனர்.
* தேமுதிக-வின் கட்சி வளர்ச்சி, கட்சி பணிகளில் மட்டுமே நாங்கள் முழு மூச்சாக ஈடுபட்டு வருகிறோம். செயற்குழு-பொதுக்குழு நடந்துமுடிந்தவுடன் யாருக்கெல்லாம் பதவிகள் என்று அறிவிக்கப்படும். 6 மாதம் கட்சியை வலுப்படுத்தும் பணிகளை மட்டுமே மேற்கொள்ள உள்ளோம்.
* தேர்தலுக்கு இன்னும் ஒருவருட காலம் உள்ளது. அதனால் நாங்கள் இந்தமுறை மிகவும் யோசித்து, நிதானமாக தான் முடிவு எடுப்போம்.
* பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் தான் இருந்தோம்.
* கூட்டணி குறித்து யாரிடமும் எதுவும் பேசவில்லை, அதிகாரப்பூர்வமாக தெரிவிப்போம்.
* தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என்று வேண்டுகோளை வைக்கிறேன்.
* அமைச்சர் பொன்முடியின் பேச்சு கேவலமானது. அசிங்கமாக பார்க்கிறேன்.
* பா.ஜ.க. மாநில தலைவர் மாற்றம் என்பது அக்கட்சியின் முடிவு. அதில் எங்களின் கருத்து எதுவும் இல்லை. புதிய தலைவருக்கு தே.மு.திக. சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
- தி.மு.க. என்கிற தீய சக்தியை வீழ்த்துவதற்கு தேசிய ஜனநாய கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.
- 2026-ல் தி.மு.க.வை வீழ்த்துவதற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உறுதியாக உள்ளது.
சென்னை:
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அம்மாவின் தொண்டர்கள் எங்கே இருந்தாலும் ஓரணியில் திரள வேண்டும் என்று சொல்லி உள்ளேன். ஒரே கட்சியா என்று கேட்டாக்கூட இல்லை.. ஓரணியில் திரண்டு தி.மு.க. என்கிற தீய சக்தியை வீழ்த்துவதற்கு தேசிய ஜனநாய கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று சொல்லி உள்ளேன். அதுதான் இப்போது நடந்து வருகிறது.
தி.மு.க. ஆட்சி தொடரக்கூடாது, மக்கள் விரோத ஆட்சி தொடரக்கூடாது என்று நினைக்கிறார்களோ அனைவரும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று சொன்னேன். அதுதான் நடந்து இருக்கிறது.
தேசிய ஜனநாயக கூட்டணி என்பது பெரிய சமுத்திரம் மாதிரி. தமிழ்நாடு என்று வரும்போது அ.தி.மு.க. தலைமை ஏற்கணும் என்று சொல்லியிருக்காங்க. 2026-ல் தி.மு.க.வை வீழ்த்துவதற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உறுதியாக உள்ளது. நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம்.
அதிமுக தரப்பில் இருந்த யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்றார்.
- சசிகலா, ஓ.பி.எஸ்., டி.டி.வி.-க்கு வாய்ப்பில்லை என எடப்பாடி பழனிசாமி நிபந்தனை விதித்து இருப்பார்.
- அ.தி.மு.க. வாக்கு வங்கியை தங்கள் வாக்கு வங்கியாக காண்பிப்பதற்கு பா.ஜ.க. யுக்தி.
சென்னை விமான நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* பா.ஜ.க. கொடுத்த அழுத்தத்தின் விளைவாக அரை மனதுடன் அ.தி.மு.க. கூட்டணி.
* சசிகலா, ஓ.பி.எஸ்., டி.டி.வி.-க்கு வாய்ப்பில்லை என எடப்பாடி பழனிசாமி நிபந்தனை விதித்து இருப்பார்.
* சதி வலையில் அ.தி.மு.க. சிக்கிக்கொண்டிருக்கிறது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.
* அ.தி.மு.க. வாக்கு வங்கியை தங்கள் வாக்கு வங்கியாக காண்பிப்பதற்கு பா.ஜ.க. யுக்தி.
இவ்வாறு அவர் கூறினார்.
- அ.இ.அ.தி.மு.க.வைப் பகிரங்கக் கூட்டாளியாகப் பா.ஜ.க. மீண்டும் கைப்பிடித்துள்ளது ஒன்றும் ஆகப் பெரிய ஆச்சர்யமில்லை.
- மக்களுக்கு எதிரான, மக்களாட்சிக்கு எதிரான தீய சக்திகளை எதிர்த்து நின்று, களமாடி வெல்லப் போவது தமிழக வெற்றிக் கழகம் மட்டுமே என்பதை மீண்டும் இங்கே பதிவு செய்கிறேன்.
சென்னை :
வருகிற சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.- பா.ஜ.க. இணைந்து போட்டியிடுவது நேற்று உறுதியாகியுள்ளது. இதனை தொடர்ந்து அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி குறித்து அரசியல் தலைவர்கள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
அந்த வகையில், மக்கள் விரோத மறைமுகக் கூட்டுக் கணக்குகளுக்கும் மக்களால் நிராகரிக்கப்பட்ட நேரடி நிர்ப்பந்தக் கூட்டுக் கணக்குகளுக்கும் தமிழக மக்கள் 2026 சட்டமன்றத் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டி, விரட்டியடித்து தூக்கி எறியப் போவது உறுதி! என்று தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
குறைந்தபட்ச அரசியல் அறத்தைக்கூடத் தொலைத்த ஒன்றியத்தை ஆளும் பிளவுவாத பா.ஜ.க.வும், மாநிலத்தை ஆளும் ஊழல் மலிந்த அரசியல் கலாசாரத்தின் ஊற்றுக்கண் தி.மு.க.வும் வெளியில்தான் கொள்கைப் பகையாளிகள், ஆனால், நாம் ஏற்கெனவே சொன்னது போல, உள்ளுக்குள் மறைமுக உறவுக்காரர்களே.
ஊழல் நடைபெற்ற மற்ற மாநிலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன? ஊழல் மலிந்த தமிழ்நாட்டில் நடப்பது என்ன? மற்ற மாநிலங்களில் ஊழல் செய்தவர் முதலமைச்சரே ஆனாலும் தக்க சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதை இந்த நாடறியும். ஆனால் இங்கோ ஊழல் செய்தவர் மீது நடவடிக்கை பாயும் போது, உடனடியாக அவர் டெல்லிக்குப் பயணம் மேற்கொண்டால் அவர் மீதான நடவடிக்கையில் சுணக்கத்தை ஏற்படுத்தி, நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டவர் எந்த ஊழலையும் செய்யாதவர் போன்று செயல்படுவதையும் இந்த நாடறியும். இது போன்ற பல செயல்பாடுகள், பா.ஜ.க. -தி.மு.க. மறைமுகக் கூட்டு என்பதை வெட்டவெளிச்சம் ஆக்கியுள்ளன.
தி.மு.க.வை மறைமுகக் கூட்டாளியாக ஏற்கெனவே தயார் செய்துவிட்ட நிலையில், தன்னுடைய பழைய பங்காளியான அ.இ.அ.தி.மு.க.வைப் பகிரங்கக் கூட்டாளியாகப் பா.ஜ.க. மீண்டும் கைப்பிடித்துள்ளது ஒன்றும் ஆகப் பெரிய ஆச்சர்யமில்லை.
பிளவுவாத சக்திகளுக்குச் சாமரம் வீசிய காரணத்தாலேயே, ஏற்கெனவே மூன்றுமுறை தமிழ்நாட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு நிர்ப்பந்தக் கூட்டே இப்போது ஏற்பட்டுள்ளது என்பது நாம் சொல்லித்தான் மக்களுக்குத் தெரிய வேண்டும் என்பதில்லை.
2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில், நாங்கள்தான் தி.மு.க.விற்கு எதிரான ஒரே அணி' என்று பா.ஜ.க.வும். 'தாங்கள்தான் பா.ஜ.க.விற்கு எதிரான அணி' என்று தி.மு.க.வும் முழக்கமிட்டு ஒரு நாடகத்தை நடத்துவர். தமிழ்நாட்டு மக்கள் விழித்துக்கொண்டுவிட்டனர். இனி, தி.மு.க.வும் பா.ஜ.க.வும் எத்தகைய வேடங்களையும் பூண்டு, நாடகங்களை நடத்த இயலாது.
தங்களை ஏமாற்றி வந்தவர்கள் யார்? தங்களுக்கென்று உண்மையாக உழைப்பவர்கள் யார்? தங்களுடன் உண்மையான உணர்வுடன் நிற்பவர்கள் யார்? தங்கள் வீட்டுப் பிள்ளைகள் யார்? தங்களுக்கான உண்மையான மக்களாட்சியைத் தர வல்லவர்கள் யார்? என்பதை மக்கள் உணரத் தொடங்கி உள்ளனர். அதை நிரூபிக்கும் விதமாக, தங்கள் மனத்துக்குள் ஒரு தீர்க்கமான முடிவையும் ஏற்கெனவே எடுத்துவிட்டனர்.
நாம் ஏற்கெனவே நம்முடைய பொதுக்குழுவில் அறிவித்தது போலவே, 2026 தேர்தல் களமானது தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற, ஒவ்வொரு வீட்டிலும் தங்களின் பிள்ளையாகக் கருதக் கூடிய தமிழக வெற்றிக் கழகத்திற்கும், வெற்று விளம்பரம் செய்து மக்கள் விரோத ஆட்சி நடத்தும் தி.மு.க.விற்கும் இடையே தான்.
மக்களுக்கு எதிரான, மக்களாட்சிக்கு எதிரான தீய சக்திகளை எதிர்த்து நின்று, களமாடி வெல்லப் போவது தமிழக வெற்றிக் கழகம் மட்டுமே என்பதை மீண்டும் இங்கே பதிவு செய்கிறேன்.
தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், அண்ணல் அம்பேத்கர், வீரமங்கை வேலு நாச்சியார், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் என நம்முடைய கொள்கைத் தலைவர்கள் மற்றும் பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் போன்ற மாபெரும் மக்கள் செல்வாக்கு பெற்ற அரசியல் ஆளுமைகளின் ஆசியுடனும், மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கை உறுதியுடனும், வீறுநடை போடுகின்ற தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாக, தமிழகத்தில் உண்மையான ஒரு மாற்றத்தை வேண்டி விரும்பி நிற்கும் கோடிக்கணக்கான இளைஞர்களும் பெண்களும் தாய்மார்களும் மாபெரும் மக்கள் சக்தியாகத் திரண்டு நிற்கிறார்கள்.
எனவே பிளவுவாத பா.ஜ.க. மற்றும் மக்கள் விரோத தி.மு.க.வின் பகல் கனவு மற்றும் கபட நாடகமான, மறைமுகக் கூட்டுக் கணக்குகளுக்கும் மக்களால் நிராகரிக்கப்பட்ட நேரடி நிர்ப்பந்தக் கூட்டுக் கணக்குகளுக்கும் தமிழக மக்கள் 2026 சட்டமன்றத் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டி, விரட்டியடித்து தூக்கி எறியப் போவது உறுதி!
அதே நேரம் நம்மை உரிய இடத்தை நோக்கி அழைத்துச் சென்று, உயரிய மக்களாட்சி அங்கீகாரத்தை வழங்கப் போவது என்பதையும் உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.
வாகை சூடுவோம்!
இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.
- காரில் விருட்டென புறப்பட்டு சென்ற துரை வைகோவை ம.தி.மு.க. நிர்வாகிகள் பின் தொடர்ந்து சென்றனர்.
- 'தவறாக பேசி இருந்தால் மன்னிச்சிக்கோங்க' என துரை வைகோவிடம் மூத்த நிர்வாகி ஒருவர் மன்றாடினார்.
சென்னை ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் வைகோ தலைமையில் தொழிற்சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற துரை வைகோ கூட்டம் முடியும் முன்பாகவே திடீரென கோபித்துக்கொண்டு கிளம்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.
காரில் விருட்டென புறப்பட்டு சென்ற துரை வைகோவை ம.தி.மு.க. நிர்வாகிகள் பின் தொடர்ந்து சென்றனர்.
'தவறாக பேசி இருந்தால் மன்னிச்சிக்கோங்க' என துரை வைகோவிடம் மூத்த நிர்வாகி ஒருவர் மன்றாடினார்.
'அவன வெட்டிட்டு நான் ஜெயிலுக்கு போறேன்' என துரை வைகோவிடம் தொண்டர் ஒருவர் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- நயினார் நாகேந்திரன் உறுதி மொழி வாசித்து தலைவர் பதவியை ஏற்றுக் கொள்வார்.
- நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 3 ஆயிரம் பேருக்கு இரவு விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
சென்னை:
தமிழ்நாட்டில் பா.ஜ.க. உட்கட்சி தேர்தல் கடந்த 3 மாதமாக நடந்து வருகிறது. கிளைகள், மண்டல், மாவட்டம் என்று கட்சியின் பல்வேறு மாவட்டங்களிலும் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.
கடைசியாக மாநில தலைவர், தேசிய பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடத்த வேண்டி இருந்தது. இதற்கிடையில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க தலைவர் பதவியில் அண்ணாமலை நீடிப்பதை அ.தி.மு.க. தலைமை விரும்பவில்லை.
இதனால் கூட்டணியை உறுதிப்படுத்துவதற்கு முன்பு புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் பா.ஜ.க.வுக்கு ஏற்பட்டது.
நேற்று அமித்ஷா சென்னையில் இருந்த போது கட்சி தலைவருக்கான தேர்தலை மின்னல் வேகத்தில் தொடங்கினார்கள். மதியம் 2 மணி முதல் மாலை 4 மணிவரை தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் மனுதாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் கட்சி மேலிடத்தை பொறுத்தவரை நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.வை மாநில தலைவராக நியமிக்க முடிவு செய்து விட்டனர். எனவே தேர்வு ஒரு மனதாக இருக்க வேண்டும் என்ற மேலிடத்தின் விருப்பம் பற்றிய தகவல் கட்சியினருக்கு தெரிவிக்கப்பட்டது.
இதனால் தலைவர் பதவியை எதிர்பார்த்த மூத்த தலைவர்கள் உள்பட யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. நயினார் நாகேந்திரன் மட்டுமே வேட்பு மனுதாக்கல் செய்ததால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
புதிய தலைவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் நிகழ்ச்சியும், தேசிய பொதுக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்வதும் இன்று மாலை 4 மணிக்கு வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மூத்த தலைவர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 3 ஆயிரம் பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது.
மாலையில் நிகழ்ச்சி தொடங்கியதும் தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் மட்டுமே மனு செய்து இருப்பதாகவும், அவரது மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் மாநில தேர்தல் அதிகாரியான சக்கரவர்த்தி அறிவிப்பார்.
அதை தொடர்ந்து மேலிட பார்வையாளர் கிஷன் ரெட்டி முன்னிலையில் தேசிய தேர்தல் பொறுப்பாளர் தருண்சுக் தமிழக பா.ஜ.க. தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக அறிவிப்பார்.
அதை தொடர்ந்து நயினார் நாகேந்திரன் உறுதி மொழி வாசித்து தலைவர் பதவியை ஏற்றுக் கொள்வார்.
இதை அடுத்து அண்ணாமலை, மத்திய மந்திரி எல்.முருகன், தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, வி.பி.துரைசாமி, ஏ.ஜி.சம்பத் ஆகியோர் வாழ்த்தி பேசுகிறார்கள்.
இந்த நிகழ்வின் போது ஒரு பாராளுமன்ற தொகுதிக்கு ஒருவர் வீதம் 39 தேசிய பொதுக்குழு உறுப்பினர்களையும் தேர்வு செய்து அறிவிக்கிறார்கள். இவர்கள் தான் தேசிய அளவில் தேசிய தலைவரை தேர்வு செய்யும் அதிகாரம் படைத்தவர்கள்.
எனவே இந்த பதவிக்கு பல மாவட்டங்களில் கடும் போட்டி நிலவியது. அங்கே சமாதான பேச்சுவார்த்தைகள் நடத்தி போட்டியில்லாமல் தலா ஒருவர் வீதம் தேர்வு செய்துள்ளார்கள். அவர்களின் பெயர் பட்டியலும் அறிவிக்கப்படும்.
இந்த விழாவை கோலாகலமாக நடத்த பா.ஜ.க.வினர் ஏற்பாடு செய்து உள்ளார்கள். மண்டப பகுதி முழுவதும் மலர்களாலும், கட்சிக் கொடி, தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.
நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 3 ஆயிரம் பேருக்கு இரவு விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
கூட்டணி மற்றும் கட்சி தேர்தல் திருவிழா வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டு விட்டதாக பா.ஜ.க.வினர் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்கள்.
- கவர்னரே தேவையில்லை என்றார் அண்ணா. பேசினார் கலைஞர்.
- செயல்படுத்திக் காட்டி இருக்கிறார் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர் ஒருவர் பகிர்ந்த வலைதள பதிலை தனது எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-
தி.மு.க. என்றால் வரலாறு.
இந்திய அரசியல் சரித்திரத்திலேயே கவர்னர் கையொப்பம் இல்லாமலேயே மசோதாக்களை சட்டங்கள் ஆக்கியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கவர்னரே தேவையில்லை என்றார் அண்ணா. பேசினார் கலைஞர். செயல்படுத்திக் காட்டி இருக்கிறார் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ராமதாசை சமாதானப்படுத்தும் முயற்சியில் பா.ம.க. நிர்வாகிகள், குடும்பத்தினர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
- பாட்டாளி மக்கள் கட்சி மிகுந்த வலிமையாக செயல்படும்.
திண்டிவனம்:
பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் நேற்று முன்தினம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கட்சியின் நிறுவனரான நானே கட்சியின் தலைவராக செயல்படுவேன். கட்சியின் தலைவராக இருக்கும் அப்புமணி ராமதாஸ் கட்சியின் செயல் தலைவராக செயல்படுவார் என ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த தகவல் பா.ம.க.வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராமதாசை சமாதானப்படுத்தும் முயற்சியில் பா.ம.க. நிர்வாகிகள், குடும்பத்தினர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
நேற்று கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி தைலாபுரம் தோட்டத்துக்கு வந்து டாக்டர் ராமதாசை சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு கட்சியிலும் இது போன்ற ஒரு இயல்பு வரும். மாற்றங்கள் வரும். எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
இருவரும் ஒற்றுமையாக இருந்து செயல்படுவார்கள். பாட்டாளி மக்கள் கட்சி மிகுந்த வலிமையாக செயல்படும். கட்சிக்கு என்று ஒரு தனித்தன்மை உள்ளது. அதை இழக்க மாட்டோம். ஒற்றுமையாக இருக்க வேண்டிய எல்லாவற்றையும் செய்வோம்.
அது நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இதற்காக இருவரையும் சந்தித்து பேசுவேன். மிக விரைவில் நல்ல அறிவிப்பு வரும். இந்த சலசலப்பு மிக விரைவில் சரியாகும் என்றார்.
இந்த நிலையில் டாக்டர் ராமதாஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் யாரும் என்னை பார்க்க வர வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.






