என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பள்ளிக்கரணையில் உள்ள சென்னை மாநகராட்சி அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
- மக்களின் அடிப்படை தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றித் தர வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
அம்மா உணவகங்களை முறையாக பராமரிக்காமல் இருக்கும் தி.மு.க. அரசைக் கண்டித்து பள்ளிக்கரணையில் உள்ள சென்னை மாநகராட்சி அலுவலகம் அருகே வருகிற 7-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
மக்களின் அடிப்படை தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றித் தர வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
பள்ளிக்கரணையில் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் கந்தன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விசாரணை நடத்திய போலீசார் கொலை தொடர்பாக 2 பேரை பிடித்துள்ளனர்.
- போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெரியசாமியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சிங்கராஜ். இவரது மகன் ஆபிரகாம் (வயது 42), விவசாயி.
இவர் நேற்று இரவு வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் திடீரென்று ஆபிரகாமை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடனே ஆபிரகாமை வெட்டிய கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதைப்பார்த்த ஆபிரகாம் குடும்பத்தினர் அலறி துடித்தனர். கொலை குறித்த தகவல் அறிந்து சின்னகோவிலான்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆபிரகாம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது பெண் விவகாரம் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று விசாரணை நடந்து வருகிறது.
மேலும் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதன் மூலம் விசாரணை நடத்திய போலீசார் கொலை தொடர்பாக 2 பேரை பிடித்துள்ளனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடந்து வருகின்றனர்.
இதற்கிடையே ஆபிரகாமின் உறவினர்கள் கொலையாளிகளை கைது செய்தால் தான் உடலை வாங்குவோம் என்று கூறி வருகின்றனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- கடும் வெயிலால் பொதுமக்கள் குடை பிடித்த படியும், துணிகளால் முகத்தை மூடிய படியும் செல்கிறார்கள்.
- நீண்டதூர பயணத்தை தவிர்க்கும் மக்கள், வீட்டிலேயே முடங்குகின்றனர்.
சேலம்:
தமிழகத்தில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
சேலம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக அக்னி நட்சத்திர காலத்திற்கு இணையாக வெயிலின் தாக்கம் நிலவி வருகிறது. அதாவது ஒவ்வொரு நாளும் வெயில் சதம் அடிக்கிறது. குறிப்பாக நேற்று 102.2 டிகிரி வெயில் பதிவானது.
இன்று காலை முதல் மாவட்டம் முழுவதும் வெயில் கொளுத்துகிறது. கடும் வெயிலால் பொதுமக்கள் குடை பிடித்த படியும், துணிகளால் முகத்தை மூடிய படியும் செல்கிறார்கள்.
காலையில் இருந்தே அனல் காற்று வீசுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் அவதிக்குள்ளாகினர். வெயிலின் உஷ்ணத்தால் உடல் வெப்பநிலை அதிகரிப்பதுடன், அதிகளவில் வியர்வை வெளியேறுகிறது. இதனால் சீக்கிரத்திலேயே களைப்பும் ஏற்படுகிறது.
வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வெப்ப அலையில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள நுங்கு, இளநீர், கம்பங்கூழ், தர்பூசணி பழம், பழச்சாறு, கரும்புச்சாறு, செயற்கை குளிர்பானங்களை நாடுகின்றனர்.
மேலும் நீண்டதூர பயணத்தை தவிர்க்கும் மக்கள், வீட்டிலேயே முடங்குகின்றனர். பெரும்பாலும் மாலை நேர பயணத்தையே விரும்புகின்றனர். இரவு நேரத்தில் வீடுகளில் வெப்பத்தின் தாக்கம் நீடிக்கின்றன. இதனால் உடல் முழுவதும் வியர்வை வியர்த்து கொட்டுகிறது. தூங்க முடியாமல் அவதிபடுகின்றனர்
இதனிடையே தமிழகத்தில் இன்று காலை முதல் அடுத்த 3 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் எனவும், கடலோர பகுதிகளின் வளிமண்டல கீழடுக்கில் நிலவும் காற்று குவிதல் காரணமாக இன்று முதல் 6-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- மே 2-வது வாரத்தில் 2-வது பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது.
- வருகிற ஜூலை 15-ந் தேதி சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க வாய்ப்புகள் உள்ளது.
நாகப்பட்டினம்:
நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதனை தனியார் கப்பல் போக்குவரத்து நிறுவனமான சுபம் கப்பல் நிறுவனம் இயக்கி வருகிறது.
இந்த நிலையில், சுற்றுலாப்பயணிகளை கவரும் நோக்கில் பயண கட்டணத்தை குறைத்து அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து பயணிகள் கப்பல் நிறுவன தலைவர் சுந்தர்ராஜன் நாகையில் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 16-ந் தேதி முதல் நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு கப்பல் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. இதற்கு பயணிகளிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் கப்பல் பயணிகளுக்கு உதவிடும் வகையில் தற்போதைய கட்டணமான ரூ.8,500-ல் இருந்து ரூ. 8000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகள் தங்களது உடைமைகளாக 10 கிலோ மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில், அதனை 7 கிலோ ஹேண்ட் பேக் எடையாகவும், 15 கிலோ செக் இன் எடையாகவும் எடுத்துச் செல்ல அனுமதி வழங்க உள்ளோம்.
இது தவிர ரூ.15,000-க்கு 2 இரவுகள் பயணம் உட்பட மூன்று நாள் கொண்ட சுற்றுலா பேக்கேஜ் திட்டம், ரூ.30,000-க்கு 5 இரவுகள் 6 நாள் கொண்ட சுற்றுலா பேக்கேஜ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா பேக்கேஜ் மூலம் ராமர் பாலத்தை நேரடியாக பார்வையிடவும், அதில் நடந்து செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பேக்கேஜ் திட்டத்தில் இருவழி பயண கட்டணம், தங்கும் வசதி, போக்குவரத்து வசதியும் செய்து கொடுக்கப்படும்.
அதேபோல் நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது அதற்கான ஒப்புதல் பெறும் பணி நடைபெற்று வருகிறது. வருகிற ஜூலை 15-ந் தேதி வாக்கில் இந்த சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க வாய்ப்புகள் உள்ளது.
அதுபோல் மே 2-வது வாரத்தில் 2-வது பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது. இதில் 250 இருக்கைகளில், 220 எக்கனாமிக் இருக்கைகளும், 20 பிசினஸ் இருக்கைகளும், 10 சூட் ரூம்கள் வசதியும் இருக்கும். வடகிழக்கு பருவமழை காலகட்டங்களில் கப்பல் போக்குவரத்தை நிறுத்தி வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளோம். ஆனால் இந்த 2-வது கப்பல் போக்குவரத்தானது புயல் சின்னம் உருவாகும் காலத்தை தவிர்த்து, ஆண்டு முழுவதும் மற்ற அனைத்து நாட்களிலும் இயங்கும் வகையுடன் கூடிய தரத்தில் உருவாக்கி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் ஆய்வுக்கூட்டம் வருகிற 14, 15-ந்தேதிகளில் நடைபெறுகிறது.
- தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை:
அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் ஆய்வுக்கூட்டம் வருகிற 14, 15-ந்தேதிகளில் கீழ்கண்ட பகுதிகளுக்கு நடைபெறுகிறது.
14-ந்தேதி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கரூர், அரியலூர், புதுச்சேரி மாநிலம்.
15-ந்தேதி திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கான ஆய்வு நடக்கிறது.
இதில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் தவறாமல் கலந்து கொள்ளும்படி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.
- வருகிற 3, 4-ந்தேதிகளில் கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் ‘கோடை விழா’ தொடங்குகிறது.
- வருகிற 23, 24, 25-ந்தேதி ஆகிய 3 நாட்கள் குன்னூரில் பழக் கண்காட்சி நடக்கிறது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, மரவியல் பூங்கா, தேயிலை பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா மற்றும் கோத்தகிரி நேரு பூங்கா ஆகியவை உள்ளன. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அந்த பூங்காக்களில் பூத்துக்குலுங்கும் பல வண்ண மலர் செடிகளை பார்த்து மகிழ்ந்து செல்கின்றனர்.
ஏப்ரல்-மே மாதங்களில் கோடை சீசன் காலத்தில் மட்டும் நீலகிரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அப்போது அவர்களை மகிழ்விக்கும் வகையில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு கோடை விழா நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
அதிலும் குறிப்பாக தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் நூற்றாண்டு புகழ்பெற்ற மலர் கண்காட்சி உலக பிரசித்தி பெற்றது ஆகும்.
இந்நிலையில் இந்தாண்டு கோடை விழாவிற்காக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பூங்காக்கள் தற்போது மும்முரமாக தயாராகி வருகின்றன. மேலும் கோடை விழா நிகழ்ச்சிகள் வருகிற 3, 4-ந்தேதிகளில் கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் 'கோடை விழா' தொடங்குகிறது.
தொடர்ந்து கூடலூரில் 9,10,11-ந்தேதி ஆகிய 3 நாட்கள் வாசனை திரவிய கண்காட்சி, ஊட்டியில் 10,11,12-ந் தேதி ரோஜா கண்காட்சி ஆகியவை நடக்க உள்ளது.
மேலும் கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 127-வது மலர் கண்காட்சி வருகிற 16-ந்தேதி தொடங்கி 21-ந்தேதி வரை நடக்கிறது. தொடர்ந்து வருகிற 23, 24, 25-ந்தேதி ஆகிய 3 நாட்கள் குன்னூரில் பழக் கண்காட்சி நடக்கிறது.
குன்னூர் காட்டேரி பூங்காவில் இம்முறை முதல்முறையாக மே 30-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை 3 நாட்கள் மலைப்பயிர்கள் கண்காட்சி நடைபெறும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.
இதன் தொடர்ச்சியாக மலர் கண்காட்சி நடைபெற உள்ள ஊட்டி தாவரவியல் பூங்காவில் 200-க்கும் மேற்பட்ட ரகங்களில் சுமார் 5.5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு உள்ளன.
இதுதவிர அலங்கார மாடங்களை அலங்கரிப்பதற்காக சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொட்டிகளில் பல்வேறு வண்ண மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு உள்ளன. இவை தற்போது பூக்க தொடங்கி உள்ளன.
ஊட்டி தாவரவியல் பூங்காவில் பூத்து குலுங்கும் பல வண்ண மலர்ச்செடிகள் அங்கு வரும் சுற்றுலா பயணிகளை வசீகரிப்பதாக அமைந்து உள்ளது. இதனால் அவர்கள் பூஞ்செடிகளுக்கு முன்பு குடும்பத்தினருடன் நின்று செல்பி எடுத்து உற்சாகம் அடைந்து வருகின்றனர்.
- மழையின் தீவிரத்தை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது.
- மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் தொடர்ந்து குடிநீர் தேவைக்காக திறந்து விடப்பட்டு வருகிறது.
சேலம்:
தமிழக, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் தீவிரத்தை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1363 கனஅடியாக அதிகரித்து காணப்பட்டது.
மேலும் அணையின் நீர்மட்டம் 107.75 அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் தொடர்ந்து குடிநீர் தேவைக்காக திறந்து விடப்பட்டு வருகிறது. நீர்வரத்து கணிசமாக இருப்பதால் கோடையிலும் மேட்டூர் அணையில் 100 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
- வெள்ளி விலையும் குறைந்துள்ளது.
- ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
தங்கம் விலை கடந்த 22-ந்தேதி ஒரே நாளில் ரூ.2 ஆயிரத்து 200 உயர்ந்து, சவரன் ரூ.74 ஆயிரத்து 320 எனும் இமாலய உச்சத்தை எட்டியது. இது, நடுத்தர, ஏழை, எளிய மக்களை அதிர்ச்சி அடைய செய்தது. ஆனால், மறுநாளே அந்தர் பல்டியாக எவ்வளவு உயர்ந்ததோ அதே அளவு சரிவை சந்தித்தது.
அதாவது, கடந்த 23-ந்தேதி, சவரன் ரூ.2 ஆயிரத்து 200 குறைந்து, மீண்டும் ரூ.72 ஆயிரத்து 120-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன்பிறகு, 24-ந்தேதி ஒரு சவரன் ரூ.80 குறைந்து ரூ.72 ஆயிரத்து 40-க்கு விற்கப்பட்டது. பின்னர், 24-ந்தேதி முதல் 27-ந்தேதி வரையில் தொடர்ந்து 4 நாட்கள், தங்கம் விலை எந்தவித மாற்றங்களும் இன்றி இருந்தது. இதனை தொடர்ந்து, நேற்று தங்கம் விலை மாற்றமில்லாமல் ஒரு சவரன் ரூ.71,840-க்கும் ஒரு கிராம் ரூ.8,980-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், மாத தொடக்க நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. தங்கம் கிராமுக்கு ரூ.205 குறைந்து ஒரு கிராம் ரூ.8,775-க்கும் சவரனுக்கு ரூ.1,640 குறைந்து ஒரு சவரன் ரூ.70,200-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு இரண்டு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 109 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் குறைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
30-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,840
29-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,840
28-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,520
27-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,040
26-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,040
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
30-04-2025- ஒரு கிராம் ரூ.111
29-04-2025- ஒரு கிராம் ரூ.111
28-04-2025- ஒரு கிராம் ரூ.111
27-04-2025- ஒரு கிராம் ரூ.112
26-04-2025- ஒரு கிராம் ரூ.112
- நடிகரும், ரேசருமான அஜித் குமார் இன்று தனது 54-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
- திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னை:
நடிகரும், ரேசருமான அஜித் குமார் இன்று தனது 54-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தன் கடும் உழைப்பாலும், தன்னம்பிக்கையாலும், விடாமுயற்சியாலும், நாட்டின் முக்கியமான திரைக்கலைஞர்களில் ஒருவராக உயர்ந்து, தேசத்தின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷன் விருதையும் வென்றிருக்கும் சகோதரர் அஜித்குமார் அவர்களுக்கு, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
- உழைப்பாளர் உரிமை காப்போம் !
- மே தினத்தில் உழைப்பாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்!
மே 1 உழைப்பாளர் தினத்தையொட்டி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
ஓய்வறியா உழைப்பினை முதலீடாக்கி, உதிரத்தை உரமாக்கி, உறுதியை, ஒற்றுமையைப் படிக்கற்களாக்கி எங்கள் வலிமை என எடுத்துக் காட்டி எடுத்த பணியை முடித்துக்காட்டி உலகிற்கு அச்சாணியாகத் திகழும் தொழிலாளர்களுக்கு எந்நாளும் உறுதுணையாய் நிற்போம்!
உழைப்பாளர் உரிமை காப்போம்!
இந்த மே தினத்தில் உழைப்பாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உழைப்பாளர் தினத்தையொட்டி மே 1 விடுமுறை நாளை சட்டமாக்கியவர் கலைஞர்.
- விரைவில் மாமேதை கார்ல் மார்க்ஸ் சிலை சென்னையில் அமைக்கப்பட உள்ளது.
சென்னை:
உலக உழைப்பாளர் தினத்தையொட்டி சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் உள்ள மே தின நினைவு சின்னத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அவருடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., அமைச்சர்கள் எ.வ.வேலு, சிவசங்கர், ஆவடி நாசர், பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், சி.வி.கணேசன், ஆ.ராஜா எம்.பி.
தொ.மு.ச. பொதுச் செயலாளர் சண்முகம், தலைவர் நடராஜன், செல்வராஜ், தயாநிதிமாறன் எம்.பி., தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன், பிரபாகரராஜா எம்.எல்.ஏ.., பரந்தாமன் எம்.எல்.ஏ., மாவட்டக் கழக செயலாளர் நே.சிற்றரசு, சேப்பாக்கம் மதன்மோகன் உள்பட ஏராளமானோர் மரியாதை செலுத்தினார்கள்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
மே 1-ம் நாள் தொழிலாளர் தினமாக நாம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி கொண்டு இருக்கிறோம். குருதியை வியர்வையாக்கி உழைப்பால் உலகை உயர்த்தும் உழைப்பாளர்களுக்கு வாழ்த்துகள்.
உழைப்பாளர்களையும், உழைப்பையும் போற்றும் ஆட்சியாக திராவிட மாடல் அரசு நடைபோடுகிறது.
மே நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தி.மு.க. அரசு செயல்படுத்தி உள்ளது. 4 லட்சத்து 37 ஆயிரத்து 750 அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,200 ஓய்வூதியம் வழங்கியது தி.மு.க. அரசு.
இன்றைக்கு தமிழகத்தில் நடைபெற்று கொண்டு இருக்கிற திராவிட மாடல் ஆட்சியின் மூலமாக இந்த 4 ஆண்டு காலத்திலே எத்தனையோ திட்டங்களை எத்தனையோ சாதனைகளை, தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களை எல்லாம் நிறைவேற்றி தந்து கொண்டு இருக்கிற இந்த நேரத்திலே, குறிப்பாக தொழிலாளர்களுக்கு கடந்த 4 ஆண்டில் 28 லட்சத்து 87 ஆயிரத்து 382 அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரத்து 461 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை நாம் வழங்கி இருக்கிறோம். உழைப்பாளர்களையும், உழைப்பையும் போற்றும் ஆட்சியாக திராவிட மாடல் அரசு நடைபோடுகிறது.
ஊதியத்தோடு தொழிலாளர் நல வாரியம் என கலைஞர் செய்த சாதனைகள் ஏராளம். உழைப்பாளர்களையும், உழைப்பையும் போற்றும் ஆட்சியாக திராவிட மாடல் அரசு நடைபோடுகிறது.
உழைப்பாளர் தினத்தையொட்டி மே 1 விடுமுறை நாளை சட்டமாக்கியவர் கலைஞர்.
தொழிலாளர் நலனுக்காக திராவிட மாடல் ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. எந்த முதலீடு திட்டத்தை தொடங்கி வைத்தாலும், எவ்வளவு பேருக்கு வேலை கொடுப்பீர்கள் என்று முதல் கேள்வியை கேட்பது உண்டு.
ஆகவே வேலை தருபவர் பணியாளர்களுடன் இருக்கக்கூடிய உறவை சமரசத்தின் மூலமாக நாம் சமப்படுத்தி கொண்டு இருக்கிறோம். பிரச்சனைகளை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அப்படித்தான் இந்த அரசு செயல்பட்டு கொண்டு இருக்கிறது. இது சாமானிய மக்களுக்கான, சாமானிய ஆட்சி என்பதை யாரும் மறந்து விட வேண்டாம்.
உங்களுக்காக உழைக்கும் திராவிட மாடல் அரசுக்கு நீங்கள் என்றைக்கும் உறுதுணையாக இருந்து இந்த ஆட்சிக்கு பக்கபலமாக இருக்க வேண்டும். விரைவில் மாமேதை கார்ல் மார்க்ஸ் சிலை சென்னையில் அமைக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
- சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் உள்ள மே தின பூங்கா நினைவு சின்னத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொ.மு.க. நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர்.
உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களின் பங்களிப்புகள் மற்றும் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாகவும், தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் வாய்ப்புகளை மேம்படுத்தும் விதமாகவும் ஆண்டுதோறும் மே 1-ந்தேதியன்று சர்வதேச தொழிலாளர்கள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
மே 1 உழைப்பாளர் தினமான இன்று சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் உள்ள மே தின பூங்கா நினைவு சின்னத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
மே தின பூங்காவில் உள்ள தூணுக்கு மலர் வளையம் வைத்து முதலமைச்சர் மரியாதை செலுத்தினார்.
செஞ்சட்டை அணிந்து வந்து மே தின பூங்கா நினைவு சின்னத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செவ்வணக்கம் செலுத்தினார். அவரைத்தொடர்ந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொ.மு.க. நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர்.






