என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஆய்வு கூட்டம்- ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
- அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் ஆய்வுக்கூட்டம் வருகிற 14, 15-ந்தேதிகளில் நடைபெறுகிறது.
- தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை:
அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் ஆய்வுக்கூட்டம் வருகிற 14, 15-ந்தேதிகளில் கீழ்கண்ட பகுதிகளுக்கு நடைபெறுகிறது.
14-ந்தேதி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கரூர், அரியலூர், புதுச்சேரி மாநிலம்.
15-ந்தேதி திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கான ஆய்வு நடக்கிறது.
இதில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் தவறாமல் கலந்து கொள்ளும்படி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.






