என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    திராவிட மாடல் அரசுக்கு பக்கபலமாக இருங்கள் - மு.க.ஸ்டாலின்
    X

    திராவிட மாடல் அரசுக்கு பக்கபலமாக இருங்கள் - மு.க.ஸ்டாலின்

    • உழைப்பாளர் தினத்தையொட்டி மே 1 விடுமுறை நாளை சட்டமாக்கியவர் கலைஞர்.
    • விரைவில் மாமேதை கார்ல் மார்க்ஸ் சிலை சென்னையில் அமைக்கப்பட உள்ளது.

    சென்னை:

    உலக உழைப்பாளர் தினத்தையொட்டி சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் உள்ள மே தின நினைவு சின்னத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

    அவருடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., அமைச்சர்கள் எ.வ.வேலு, சிவசங்கர், ஆவடி நாசர், பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், சி.வி.கணேசன், ஆ.ராஜா எம்.பி.

    தொ.மு.ச. பொதுச் செயலாளர் சண்முகம், தலைவர் நடராஜன், செல்வராஜ், தயாநிதிமாறன் எம்.பி., தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன், பிரபாகரராஜா எம்.எல்.ஏ.., பரந்தாமன் எம்.எல்.ஏ., மாவட்டக் கழக செயலாளர் நே.சிற்றரசு, சேப்பாக்கம் மதன்மோகன் உள்பட ஏராளமானோர் மரியாதை செலுத்தினார்கள்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

    மே 1-ம் நாள் தொழிலாளர் தினமாக நாம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி கொண்டு இருக்கிறோம். குருதியை வியர்வையாக்கி உழைப்பால் உலகை உயர்த்தும் உழைப்பாளர்களுக்கு வாழ்த்துகள்.

    உழைப்பாளர்களையும், உழைப்பையும் போற்றும் ஆட்சியாக திராவிட மாடல் அரசு நடைபோடுகிறது.

    மே நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தி.மு.க. அரசு செயல்படுத்தி உள்ளது. 4 லட்சத்து 37 ஆயிரத்து 750 அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,200 ஓய்வூதியம் வழங்கியது தி.மு.க. அரசு.

    இன்றைக்கு தமிழகத்தில் நடைபெற்று கொண்டு இருக்கிற திராவிட மாடல் ஆட்சியின் மூலமாக இந்த 4 ஆண்டு காலத்திலே எத்தனையோ திட்டங்களை எத்தனையோ சாதனைகளை, தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களை எல்லாம் நிறைவேற்றி தந்து கொண்டு இருக்கிற இந்த நேரத்திலே, குறிப்பாக தொழிலாளர்களுக்கு கடந்த 4 ஆண்டில் 28 லட்சத்து 87 ஆயிரத்து 382 அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரத்து 461 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை நாம் வழங்கி இருக்கிறோம். உழைப்பாளர்களையும், உழைப்பையும் போற்றும் ஆட்சியாக திராவிட மாடல் அரசு நடைபோடுகிறது.

    ஊதியத்தோடு தொழிலாளர் நல வாரியம் என கலைஞர் செய்த சாதனைகள் ஏராளம். உழைப்பாளர்களையும், உழைப்பையும் போற்றும் ஆட்சியாக திராவிட மாடல் அரசு நடைபோடுகிறது.

    உழைப்பாளர் தினத்தையொட்டி மே 1 விடுமுறை நாளை சட்டமாக்கியவர் கலைஞர்.

    தொழிலாளர் நலனுக்காக திராவிட மாடல் ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. எந்த முதலீடு திட்டத்தை தொடங்கி வைத்தாலும், எவ்வளவு பேருக்கு வேலை கொடுப்பீர்கள் என்று முதல் கேள்வியை கேட்பது உண்டு.

    ஆகவே வேலை தருபவர் பணியாளர்களுடன் இருக்கக்கூடிய உறவை சமரசத்தின் மூலமாக நாம் சமப்படுத்தி கொண்டு இருக்கிறோம். பிரச்சனைகளை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அப்படித்தான் இந்த அரசு செயல்பட்டு கொண்டு இருக்கிறது. இது சாமானிய மக்களுக்கான, சாமானிய ஆட்சி என்பதை யாரும் மறந்து விட வேண்டாம்.

    உங்களுக்காக உழைக்கும் திராவிட மாடல் அரசுக்கு நீங்கள் என்றைக்கும் உறுதுணையாக இருந்து இந்த ஆட்சிக்கு பக்கபலமாக இருக்க வேண்டும். விரைவில் மாமேதை கார்ல் மார்க்ஸ் சிலை சென்னையில் அமைக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×