என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • இந்தப் போட்டியில் பங்கேற்கும் 24 அணிகள் 6 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
    • பி பிரிவில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா, பாகிஸ்தானும் இடம்பெற்றுள்ளன.

    சென்னை:

    14-வது ஜூனியர் (21 வயதுக்கு உட்பட்டோர்) உலகக் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை மற்றும் மதுரையில் வரும் நவம்பர் 28-ம் தேதி முதல் டிசம்பர் 10-ம் தேதி வரை நடக்கிறது.

    இந்தப் போட்டியில் பங்கேற்கும் 24 அணிகள் 6 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை எந்தெந்த பிரிவில் இடம்பெற வேண்டும் என்பதை குலுக்கல் மூலம் நேற்று சர்வதேச ஹாக்கி சம்மேளனம் முடிவு செய்தது.

    'ஏ' பிரிவு: நடப்பு சாம்பியன் ஜெர்மனி, தென் ஆப்பிரிக்கா, கனடா, அயர்லாந்து

    'பி' பிரிவு: முன்னாள் சாம்பியன்களான இந்தியா, பாகிஸ்தான், சிலி, சுவிட்சர்லாந்து

    'சி' பிரிவு: முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினா, நியூசிலாந்து, ஜப்பான், சீனா

    'டி' பிரிவு: ஸ்பெயின், பெல்ஜியம், எகிப்து, நமீபியா

    'இ' பிரிவு: நெதர்லாந்து, மலேசியா, இங்கிலாந்து, ஆஸ்திரியா

    'எப்' பிரிவில் பிரான்ஸ், ஆஸ்திரேலியா, தென்கொரியா, வங்காளதேச அணிகளும் இடம்பிடித்துள்ளன.

    • மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது.
    • இந்தத் திட்டத்தில் சுமார் 1 கோடியே 14 லட்சம் பெண்கள் உரிமைத்தொகை பெற்று வருகின்றனர்

    சென்னை:

    தமிழகத்தில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந்தேதி அண்ணா பிறந்தநாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    தற்போதைய நிலையில் சுமார் 1 கோடியே 14 லட்சம் பெண்கள் மாதந்தோறும் கலைஞர் உரிமைத்தொகை பெற்று வருகின்றனர்.

    விடுபட்ட பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்படும் என கடந்த சட்டசபை கூட்டத் தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

    இந்நிலையில், மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்காக மேலும் 3 தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து ,அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளுடன் அரசாணை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, காலமுறை ஊதியம் பெற்று, தற்போது ஓய்வூதியம் பெறுவோர் குடும்பங்களில் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

    அரசுத்துறைகளில் மானியம் பெற்று 4 சக்கர வாகனம் வைத்திருப்போர் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களும் தகுதியானவர்கள்.

    விதவை ஓய்வூதியம் பெறுவோர் குடும்பங்களில் ஓய்வூதியதாரர் அல்லாத பெண்களும் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது.

    • முதலில் ஆடிய கோவை அணி 203 ரன்களைக் குவித்தது.
    • அடுத்து ஆடிய சேலம் 135 ரன்களை மட்டுமே எடுத்து தோற்றது.

    திண்டுக்கல்:

    நடப்பு டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 4வது கட்ட போட்டிகள் திண்டுக்கல்லில் நடைபெறுகிறது.

    இந்நிலையில், இன்றைய 26-வது லீக் போட்டியில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ், கோவை கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சேலம் பந்துவீச்சை தேர்வு செய்தது. மழை காரணமாக ஆட்டத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

    அதன்படி, முதலில் ஆடிய கோவை கிங்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 203 ரன்களைக் குவித்தது. பாலசுப்ரமணியம் சச்சின் அபாரமாக ஆடி சதமடித்து 116 ரன்னில் அவுட்டானார். அதிரடியாக ஆடிய ஷாருக் கான் 14 பந்தில் 45 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் அணி களமிறங்கியது. அபிஷேக் 32 ரன்னும், லோகேஷ்வர் 29 ரன்னும், நிதிஷ் ராஜகோபால் 22 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். தேவ் ராகுல் 18 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இறுதியில், சேலம் அணி 135 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 68 ரன்கள் வித்தியாசத்தில் கோவை அணி அபார வெற்றி பெற்றது.

    கோவை அணி சார்பில் வித்யுத் 5 விக்கெட்டும், திவாகர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

    திண்டுக்கல்:

    நடப்பு டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் முதல் மூன்று கட்ட லீக் போட்டிகள் கோவை, சேலம், நெல்லையில் நடந்து முடிந்தது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (12 புள்ளி), திருப்பூர் தமிழன்ஸ் (8 புள்ளி), நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ் (8 புள்ளி) ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

    இந்நிலையில், கடைசி சுற்று போட்டிகள் திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று நடக்கிறது.

    இன்றைய 26-வது லீக் போட்டியில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ், கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சேலம் பந்துவீச்சை தேர்வு செய்தது. மழை காரணமாக ஆட்டத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

    அதன்படி, கோவை கிங்ஸ் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சித்தார்த் டக் அவுட்டானார். சுரேஷ் லோகேஷ்வர் 3 ரன்னில் வெளியேறினார். விஷால் வைத்யா 29 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    பாலசுப்ரமணியம் சச்சின் அபாரமாக ஆடி சதமடித்து 116 ரன்னில் அவுட்டானார்.

    ஆட்டத்தின் 18வது ஓவரில் ஷாருக் கான் ஹாட்ரிக் சிக்சர் உள்பட 28 ரன்கள் எடுத்தார். அவர் 14 பந்தில் 45 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில், கோவை கிங்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 203 ரன்களைக் குவித்தது.

    இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் அணி களமிறங்குகிறது.

    • சமூக ஊடகப் பக்கங்களில் ‘ஓரணியில் தமிழ்நாடு' லோகோவை முகப்புப் படமாக(DP) திமுகவினர் வைக்க வேண்டும்.
    • ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு என்பது திமுகவுக்கான உறுப்பினர் சேர்க்கைக்காக மட்டுமல்ல.

    திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    நம் மண், மொழி, மானத்தைக் காப்பாற்ற ஒன்றிணைந்து நிற்போம். நம்மை அடக்க நினைத்தால் ஒன்றிணைந்து எதிர்ப்போம். இது தமிழர்களின் தனிக் குணம்.

    சமூக ஊடகப் பக்கங்களில் 'ஓரணியில் தமிழ்நாடு' லோகோவை முகப்புப் படமாக(DP) திமுகவினர் வைக்க வேண்டும்.

    ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு என்பது திமுகவுக்கான உறுப்பினர் சேர்க்கைக்காக மட்டுமல்ல.

    தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க அனைவரையும் திரட்டுவதற்கான முயற்சி. ஊதினால் அணைய நாம் என்ன தீக்குச்சியா? நாம் உதயசூரியன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 1.5 புள்ளிகளை பெற்று பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
    • பிரக்ஞானந்தாவிற்கு 17லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

    உஸ்பெகிஸ்தானின் தாஷ்கென்ட் நகரில் மாஸ்டர்ஸ் கோப்பை செஸ் தொடர் நடைபெற்றது. இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உட்பட உலகின் 10 முன்னணி வீரர்கள் பங்கேற்றனர்.

    இந்த தொடரில் 10 சுற்றுகளின் முடிவில் மூன்று வீரர்கள் 5.5 புள்ளிகளை பெற்றதால் சாம்பியனை தீர்மானிக்க டைபிரேக்கர் ஆட்டம் நடத்தப்பட்டது. இரண்டு சுற்றுகளாக நடைபெற்ற டைபிரேக்கரில் 1.5 புள்ளிகளை பெற்று பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவிற்கு 17லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

    இந்த வெற்றியின் மூலம் இந்திய செஸ் வீரர்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளதோடு, சர்வதேச செஸ் தரவரிசையில் 5வது இடத்தில் உள்ள குகேஷை பின்னுக்கு தள்ளி 4-வது இடத்திற்கு பிரக்ஞானந்தா முன்னேறியுள்ளார்.

    இந்நிலையில், செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவரது எக்ஸ் தள பக்கத்தில், " UzChess Cup Masters 2025 ஐ வென்று, இந்தியாவின் முதல் தரவரிசையில் கிளாசிக்கல் வீரராகவும், சர்வதேச செஸ் தரவரிசையில் நம்பர் 4 வீரராகவும் உயர்ந்ததற்கு பிரக்யானந்தாவுக்கு வாழ்த்துகள்.

    ஃபார்மில் ஒரு சாம்பியன், செக்மேட்-ப்ரூஃப் கைகளில் ஒரு எதிர்காலம்" என குறிப்பிட்டுள்ளார்.

    • கடந்த 2 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
    • அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி கடந்த 21ம் தேதி காலமானார்.

    வால்பாறை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி உடல்நலக்குறைவால் காலமானார்.

    60 வயதான அமுல் கந்தசாமி உடல்நலக்குறைவு காரணமாக கோவையில் உள்ள மருத்துவமனையில் கடந்த 2 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

    கோவை மாவட்டம் வால்பாறை தொகுதி அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி கடந்த 21ம் தேதி காலமானார்.

    இந்நிலையில், அமுல் கந்தசாமி மறைவைத் தொடர்ந்து வால்பாறை தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது.

    • இந்தியா முழுவதும் இந்த போதைப் பொருள் கலாச்சசாரம் உள்ளது.
    • போதைப் பொருள் பயன்படுத்திய இருவரை கைது செய்தீர்கள். சரி விற்றவன் எங்கே?

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    நடிகர்கள் ஸ்ரீகாந்தும், கிருஷ்ணாவும் போதைப் பொருளை பயன்படுத்தினார்கள் என்கிறார்கள். இவர்கள் இருவரை தவிர வேறு யாரும் பயன்படுத்தவில்லையா? இந்தியா முழுவதும் இந்த போதைப் பொருள் கலாச்சசாரம் உள்ளது.

    மும்பையில் அதானியின் துறைமுகத்தில் ரூ.20 லட்சம் கோடிக்கு மேல் மதிப்புள்ள போதைப் பொருள் கப்பலில் வந்தது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.

    அந்த கப்பலை திருப்பி அனுப்பினீர்களா? போதைப் பொருளை என்ன செய்தீர்? என்று நான் ஒருவன் தான் கேள்வி கேட்டேன்.

    போதைப் பொருள் பயன்படுத்திய இருவரை கைது செய்தீர்கள். சரி விற்றவன் எங்கே?

    காட்டுக்குள் சந்தனக் கடத்தல் வீரப்பன், யானை தந்தம் கடத்தல், கடத்தல்காரர்கள் என்று கூறுவீர்கள். விற்றவன் காட்டுக்குள் இருந்தான். வாங்கினவன் எங்கு இருந்தான்? அவர்களில் எத்தனை பேரை கைது செய்தீர்கள்?

    கிருஷ்ணாவும், ஸ்ரீகாந்தும்தான் குற்றவாளிகளா? அப்பாவிகள். ஸ்ரீகாந்துக்கு போதைப் பொருள் விற்றவன் அதிமுக நிர்வாகி என்பதால் இதை திருப்புகிறீர்கள். அப்போ, திமுகவிற்கும், போதைப் பொருளுக்கும் எந்த சம்மந்தமும் இல்லையா?

    நீ குற்றவாளி யார் என்று பார்? போதைப் பொருள் எப்படி புழங்குகிறது. அதன் வேரை வெட்டு. இளையும், கிளையையும் வெட்டுகிறீர்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மாநிலம் முழுவதும் இருந்து 650 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
    • தெற்கு ரெயில்வே விளையாட்டு அதிகாரி வி.தேவராஜன் ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர்.

    தமிழ்நாடு குத்துச்சண்டை சங்கம் சார்பில் மாநில அளவிலான அழைப்பு குத்துச்சண்டை போட்டி சென்னை கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு குத்துச்சண்டை அகாடமியில் நேற்று தொடங்கியது.

    5 பிரிவுகளில் நடைபெறும் இந்த போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 650 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டன் வி.பாஸ்கரன், உலகக் கோப்பை குத்துச்சண்டையில் வெண்கலப்பதக்கம் வென்றரும், தெற்கு ரெயில்வே விளையாட்டு அதிகாரியுமான வி.தேவராஜன் ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர்.

    ஆண்களுக்கான சப்-ஜூனியர் பிரிவின் கால் இறுதியில் ரித்விக் (வி.எஸ்.பி.சி.), ரிதிஷ் (ராவணன்), மோனிஷ் (கே.எஸ்.பி.சி.), பிரதீஷ் (எலைட்) ஆகியோர் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு தகுதி பெற்றனர். நாளை வரை இந்தப் போட்டி நடக்கிறது.

    • இளைஞர் மீது அண்ணா பல்கலை. மாணவி கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • போலீசார் சம்பந்தப்பட்ட இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அண்ணா பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து மாணவியை தாக்கிய புகாரில் முன்னாள் காதலனை காவல்துறை கைது செய்துள்ளது.

    நடத்தை சரியில்லாததால் மாணவி காதலை துண்டித்த ஆத்திரத்தில் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து பெண்ணை காதலன் தாக்கியுள்ளார்.

    மேலும், நெருக்கமாக இருந்த புகைப்படங்களைக் காட்டி மிரட்டுவதாக முன்னாள் காதலரான பொறியியல் பட்டதாரி இளைஞர் மீது அண்ணா பல்கலை. மாணவி கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் சம்பந்தப்பட்ட இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பக்கத்து வீட்டு ஜன்னலை எட்டிப்பார்க்க வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமியே கூறிவிட்டார்.
    • எங்கள் ஒவ்வொரு தெண்டரும் அகில இந்தியா தலைமைக்கு கட்டுப்பட்டவர்கள்.

    திருச்சியில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியிருப்பதாவது:-

    என்டிஏ முதல்வர் வேட்பாளர் குறித்து பாஜக நாடாளுமன்ற குழுதான் முடிவு செய்யும். தலைவர்கள் முடிவு செய்வார்கள். பக்கத்து வீட்டு ஜன்னலை எட்டிப்பார்க்க வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமியே கூறிவிட்டார். எங்கள் கூட்டணியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.

    அதனால், திமுக இதுகுறித்து பேசி அசிங்கப்படாதீர்கள்.

    திரும்ப திரும்ப அடுத்தவன் வீட்டு ஜன்னலில் எட்டி பார்க்காதீர்கள். அது அநாகரீகம். பக்கத்து வீட்டில் குழந்தைகள் ராத்திரியில் எப்படி வேணாலும் இருக்கும்.. அதை போய் எட்டிப் பார்ப்பீர்களா?

    என்னுடைய வரம்பு மாநிலத்திற்கு உட்பட்டது. ஆனால், கூட்டணி பற்றி முடிவு செய்வது அகில இந்தியா தலைமைதான்.

    கூட்டணி குறித்து பாஜகவும்- அதிமுகவும் பேசி என்ன முடிவு அறிவிச்சாலும் எனக்கு சம்மதம், எங்கள் கட்சிக்கு சம்மதம். எங்கள் ஒவ்வொரு தெண்டரும் அகில இந்தியா தலைமைக்கு கட்டுப்பட்டவர்கள்.

    அமித்ஷா ஏற்கனவே சொல்லிவிட்டார். அவர் என்று வந்தார், கண்டார், வென்றார். அதனால்தான் மறுநாளே 6 மணி நேரத்தில் பதறியது தூத்துக்குடி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் வெளி மாநிலங்களுக்கும் அதிக அளவில் மாம்பழங்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
    • சேலம் மாவட்டத்தில் மாம்பழ விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டு மாம்பழங்கள் தேக்கம் அடைந்துள்ளது.

    சேலம்:

    சேலம் என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது மாம்பழங்கள் தான். அந்த வகையில் தித்திக்கும் சுவை உடைய சேலம் மாம்பழங்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும், உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகிறது. உலகம் முழுவதும் உள்ள மக்கள் சேலம் மாம்பழத்தை ருசித்து வருகிறார்கள்.

    இத்தகைய சுவை வாய்ந்த சேலம் மாம்பழங்கள் சேலம் அயோத்தியாபட்டினம் குப்பனூர், வலசையூர், காரிப்பட்டி, வாழப்பாடி, ஆத்தூர், வனவாசி, ஜலகண்டாபுரம், எடப்பாடி, நங்கவள்ளி, பனமரத்துப்பட்டி, மல்லூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் சேலம் மார்க்கெட்டுகளுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. குறிப்பாக சேலம் குண்டு, சேலம் பெங்களூரா, அல்போன்சா இமாம் பசந்த், பங்கணப்பள்ளி, மல்கோவா செந்தூரா, குதாதத், கிளி மூக்கு உள்பட பல்வேறு ரக மாம்பழங்கள் அதிக அளவில் சேலத்தில் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன.

    விரைவில் சீசன் முடியும் தருவாயில் தற்போது சேலம் மார்க்கெட்டுகளுக்கு தினசரி 500 டன்னுக்கும் அதிகமாக மாம்பழங்கள் விற்பனைக்கு வந்து கொண்டிருக்கின்றன. இந்த மாம்பழங்கள் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்பட பல்வேறு வெளிநாடுகளுக்கும், அரபு நாடுகளுக்கும் அதிக அளவில் ஆன்லைன் மூலம் ஆர்டர்கள் பெற்று அனுப்பி வைக்கப்படுகிறது. இது தவிர நேரடி விற்பனை மற்றும் பார்சல் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் வெளி மாநிலங்களுக்கும் அதிக அளவில் மாம்பழங்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    நடப்பாண்டில் வழக்கத்தை விட அதிகமான விளைச்சல் காணப்பட்டதால் சேலம் மார்க்கெட்டுகளில் மாம்பழங்கள் அதிக அளவில் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் சாலை ஓரங்களிலும் எங்கு பார்த்தாலும் மாம்பழங்கள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது. தள்ளுவண்டிகளிலும் வைத்து வியாபாரிகள் தெரு தெருவாக விற்பனை செய்து வருகிறார்கள். சூப்பர் மார்க்கெட்டுகள் மளிகை கடைகள் என எங்கு பார்த்தாலும் மாம்பழங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் கோடை காலங்களில் அதிக அளவில் வெயிலின் தாக்கம் இருக்கும் அந்த நேரத்தில் மாம்பழம் விற்பனை சூடு பிடிக்கும். பொதுமக்கள் மாம்பழங்களை வாங்கி ருசிப்பார்கள்.

    ஆனால் நடப்பாண்டில் வழக்கத்திற்கு மாறாக கோடை காலம் தொடங்கியதில் இருந்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக விட்டு விட்டு மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சீதோசன நிலவி வருகிறது. இதனால் மாம்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பதால் பொதுமக்கள் குறைந்த அளவே மாம்பழங்களை வாங்கி செல்கிறார்கள்.

    இதனால் அதிக அளவில் விளைச்சல் ஆன நிலையில் குறைந்த அளவிலே விற்பனையாவதால் சேலம் மாவட்டத்தில் மாம்பழ விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டு மாம்பழங்கள் தேக்கம் அடைந்துள்ளது. இதனால் அதன் விலையும் கணிசமாக குறைந்து உள்ளது. குறிப்பாக கிளி மூக்கு மாம்பழங்கள் 100 ரூபாய்க்கு 5 கிலோ வரை கிடைக்கும் வகையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனாலும் அதையும் வாங்க ஆட்கள் இல்லாததால் சாலையோரம் ஆங்காங்கே அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே விவசாயிகளிடம் வியாபாரிகள் 1 கிலோ 5 ரூபாய்க்கு கொள்முதல் செய்வதாக கூறப்படுவதால் மாம்பழ விவசாயிகள் பெரும்இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தாங்கள் செலவு செய்த பணம் கூட கிடைக்கவில்லை என்றும் வரும் காலங்களில் மாம்பழ விவசாயிகளுக்கு போதுமான விலை கிடைக்கும் வகையில் மாம்பழ கூழ் தொழிற்சாலை அமைக்க வேண்டும். அரசே மாம்பழத்திற்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    இதுகுறித்து சேலத்தை சேர்ந்த மாம்பழ வியாபாரி ஒருவர் கூறுகையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாம்பழ விளைச்சல் பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில் அதனால் சேலத்தில் அதிக அளவில் மாம்பழங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. ஆனால் கோடை காலம் தொடங்கியதிலிருந்து மழை பெய்ததால் விற்பனை கணிசமாக சரிந்துள்ளது. இதனால் போதுமான விலை கிடைக்காததால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அரசு இழப்பீடு வழங்கி மாம்பழ விவசாயிகள் மற்றும் வியாபாரிகளை காப்பாற்ற வேண்டும், என்று கோரிக்கை விடுத்தார். 

    ×