என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

NDA முதலமைச்சர் வேட்பாளரை பா.ஜ.க. நாடாளுமன்ற குழு முடிவு செய்யும்- எச்.ராஜா
- பக்கத்து வீட்டு ஜன்னலை எட்டிப்பார்க்க வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமியே கூறிவிட்டார்.
- எங்கள் ஒவ்வொரு தெண்டரும் அகில இந்தியா தலைமைக்கு கட்டுப்பட்டவர்கள்.
திருச்சியில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியிருப்பதாவது:-
என்டிஏ முதல்வர் வேட்பாளர் குறித்து பாஜக நாடாளுமன்ற குழுதான் முடிவு செய்யும். தலைவர்கள் முடிவு செய்வார்கள். பக்கத்து வீட்டு ஜன்னலை எட்டிப்பார்க்க வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமியே கூறிவிட்டார். எங்கள் கூட்டணியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.
அதனால், திமுக இதுகுறித்து பேசி அசிங்கப்படாதீர்கள்.
திரும்ப திரும்ப அடுத்தவன் வீட்டு ஜன்னலில் எட்டி பார்க்காதீர்கள். அது அநாகரீகம். பக்கத்து வீட்டில் குழந்தைகள் ராத்திரியில் எப்படி வேணாலும் இருக்கும்.. அதை போய் எட்டிப் பார்ப்பீர்களா?
என்னுடைய வரம்பு மாநிலத்திற்கு உட்பட்டது. ஆனால், கூட்டணி பற்றி முடிவு செய்வது அகில இந்தியா தலைமைதான்.
கூட்டணி குறித்து பாஜகவும்- அதிமுகவும் பேசி என்ன முடிவு அறிவிச்சாலும் எனக்கு சம்மதம், எங்கள் கட்சிக்கு சம்மதம். எங்கள் ஒவ்வொரு தெண்டரும் அகில இந்தியா தலைமைக்கு கட்டுப்பட்டவர்கள்.
அமித்ஷா ஏற்கனவே சொல்லிவிட்டார். அவர் என்று வந்தார், கண்டார், வென்றார். அதனால்தான் மறுநாளே 6 மணி நேரத்தில் பதறியது தூத்துக்குடி.
இவ்வாறு அவர் கூறினார்.






