என் மலர்
நீங்கள் தேடியது "TN Candidates"
- பக்கத்து வீட்டு ஜன்னலை எட்டிப்பார்க்க வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமியே கூறிவிட்டார்.
- எங்கள் ஒவ்வொரு தெண்டரும் அகில இந்தியா தலைமைக்கு கட்டுப்பட்டவர்கள்.
திருச்சியில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியிருப்பதாவது:-
என்டிஏ முதல்வர் வேட்பாளர் குறித்து பாஜக நாடாளுமன்ற குழுதான் முடிவு செய்யும். தலைவர்கள் முடிவு செய்வார்கள். பக்கத்து வீட்டு ஜன்னலை எட்டிப்பார்க்க வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமியே கூறிவிட்டார். எங்கள் கூட்டணியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.
அதனால், திமுக இதுகுறித்து பேசி அசிங்கப்படாதீர்கள்.
திரும்ப திரும்ப அடுத்தவன் வீட்டு ஜன்னலில் எட்டி பார்க்காதீர்கள். அது அநாகரீகம். பக்கத்து வீட்டில் குழந்தைகள் ராத்திரியில் எப்படி வேணாலும் இருக்கும்.. அதை போய் எட்டிப் பார்ப்பீர்களா?
என்னுடைய வரம்பு மாநிலத்திற்கு உட்பட்டது. ஆனால், கூட்டணி பற்றி முடிவு செய்வது அகில இந்தியா தலைமைதான்.
கூட்டணி குறித்து பாஜகவும்- அதிமுகவும் பேசி என்ன முடிவு அறிவிச்சாலும் எனக்கு சம்மதம், எங்கள் கட்சிக்கு சம்மதம். எங்கள் ஒவ்வொரு தெண்டரும் அகில இந்தியா தலைமைக்கு கட்டுப்பட்டவர்கள்.
அமித்ஷா ஏற்கனவே சொல்லிவிட்டார். அவர் என்று வந்தார், கண்டார், வென்றார். அதனால்தான் மறுநாளே 6 மணி நேரத்தில் பதறியது தூத்துக்குடி.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாட்டில் பாராளுமன்ற, சட்டசபை இடைத்தேர்தல்களில் மொத்தம் 845 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
இவர்களில் 802 வேட்பாளர்களின் வேட்புமனுக்களை ஜனநாயக சீர்திருத்தக் கழகம் ஆய்வு செய்தது. அதில் கிடைத்த தகவல்கள் நேற்று வெளியிடப்பட்டன.

தர்மபுரி பா.ம.க. வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீது 12 வழக்குகள் இருக்கின்றன. மொத்த வேட்பாளர்களில் 50 சதவீதம் பேர் பட்டப்படிப்பு படித்துள்ளனர். மொத்த வேட்பாளர்களில் பெண் வேட்பாளர்கள் வெறும் 8 சதவீதம்தான். 54 வயதுக்குட்பட்ட இளம் வாக்காளர்கள் 38 சதவீதம் பேர் உள்ளனர்.
வேட்பாளர்களில் 23 சதவீதம் பேர் அதாவது 184 பேர் கோடீசுவரர்கள். நாகர்கோவில் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார் முதல் இடத்தில் இருக்கிறார். அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.417 கோடியாகும்.
தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் இசக்கி சுப்பையா ரூ.237 கோடி சொத்துக்களுடன் 2-வது இடத்தில் இருக்கிறார். வேலூர் தொகுதியில் நிற்கும் ஏ.சி.சண்முகத்துக்கு ரூ.125 கோடியும், அரக்கோணம் தொகுதியில் போட்டியிடும் ஜெகத்ரட்சகனுக்கு ரூ.114 கோடியும், பாரிவேந்தருக்கு ரூ.97 கோடியும் சொத்துக்கள் இருக்கிறது.
சாருபாலா தொண்டமான் ரூ.92 கோடி, கார்த்தி சிதம்பரம் ரூ.79 கோடி, சி.பி.ராதாகிருஷ்ணன் ரூ.67 கோடி, பி.முருகேசன் ரூ.64 கோடி, எல்.கே.சுதீஷ் ரூ.60 கோடி சொத்துக்களுடன் உள்ளனர். துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த் ரூ.58 கோடி சொத்து வைத்துள்ளார். பொன்முடியின் மகன் கவுதம் சிகாமணி ரூ.47 கோடிக்கு சொத்துக்கள் வைத்துள்ளார்.
அ.தி.மு.க.வின் 22 வேட்பாளர்களும், பாரதிய ஜனதாவின் 5 வேட்பாளர்களும், தே.மு.தி.க.வின் 4 வேட்பாளர்களும் கோடீசுவரர்கள் ஆவார்கள். #Loksabhaelections2019






