என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • செல்லூர், புதூர், கூடல்புதூர், ஆனையூர் உள்ளிட்ட பகுதிகளில், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
    • மதுரை மாநகராட்சியில் தேங்கிய மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்தி நோய் பரவாமல் காக்க வேண்டியது அரசியல் கடமையாகும்.

    சென்னை:

    மதுரையில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவும் பலத்த மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது.

    குறிப்பாக, செல்லூர், புதூர், கூடல்புதூர், ஆனையூர் உள்ளிட்ட பகுதிகளில், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால், மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நேற்று மதியம் 2½ மணி முதல் மாலை 5½ மணி வரை பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக புறநகர் பகுதிகளில் 3 மணி முதல் 3.15 மணி வரை 15 நிமிடத்தில் மட்டும் 4.5 சென்டிமீட்டர் (44.5 மில்லி மீட்டர்) மழைப்பொழிவு இருந்ததாகவும், காலை முதல் மாலை வரை 9.8 சென்டிமீட்டர் மழைப்பொழிவு பதிவானதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மதுரையில் ஓரிரு நாள் பெய்த மழைக்கே ஏன் இந்தளவு பாதிப்பு என்பதை ஆராய்ந்து மாநகராட்சி தெளிவுப்படுத்த வேண்டும்.

    மதுரை மாநகராட்சியில் தேங்கிய மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்தி நோய் பரவாமல் காக்க வேண்டியது அரசியல் கடமையாகும்.

    மதுரையில் மழை பாதிப்பு குறித்து தமிழக அரசு விளக்கம் தர வேண்டுமென தெரிவித்துள்ளார்.

    • 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
    • மழை காரணமாக தேனி, மதுரை, நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    வங்கக்கடலில் உருவான டானா புயல் நேற்று அதிகாலை ஒடிசாவில் தீவிர புயலாக கரையை கடந்தது.

    இதன் தொடர்ச்சியாக தெற்கு கேரள கடற்கரையையொட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக மேலும் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மிதமான மழையும், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இந்நிலையில் 2 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    கன்னியாகுமரி மற்றும் நெல்லையில் காலை 10 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

    மழை காரணமாக தேனி, மதுரை, நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.

    • புயல் கரையை கடந்த போது, அரபிக்கடல் பகுதியில் நிலவி வந்த கீழடுக்கு சுழற்சியில் இருந்து மேற்கு காற்றை ஈர்த்தது.
    • ஏற்கனவே பள்ளிகளுக்கு வழக்கமான வார விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    வங்கக்கடலில் உருவான டானா புயல் நேற்று அதிகாலை ஒடிசாவில் தீவிர புயலாக கரையை கடந்தது. இந்த புயல் கரையை கடந்த போது, அரபிக்கடல் பகுதியில் நிலவி வந்த கீழடுக்கு சுழற்சியில் இருந்து மேற்கு காற்றை ஈர்த்தது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் சில இடங்களில் மழைக்கான வாய்ப்பு இருந்தது. இதன் தொடர்ச்சியாக தெற்கு கேரள கடற்கரையையொட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக மேலும் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மிதமான மழையும், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இந்நிலையில் இன்று சிறப்பு வகுப்புகள் நடத்த உத்தேசித்துள்ள பள்ளிகளுக்கு மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில்,

    திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    ஏற்கனவே பள்ளிகளுக்கு வழக்கமான வார விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    இன்று சிறப்பு வகுப்புகள் ஏதேனும் நடத்த உத்தேசித்துள்ள பள்ளிகள் அவற்றை நடத்த வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

    • மதுரையில் 9.8 செ.மீ. மழை பெய்ததால் மழை நீர் தேங்கியுள்ளது.
    • மழை நீர் வடியாததால் பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.

    மதுரையில் நேற்று ஒரே நாளில் 9.8 செ.மீ. மழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக 3 மணிக்குப் பிறகு 15 நிமிடத்தில் 4.5 செ.மீட்டர் அளவிற்கு பேய் மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது. வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இதனால் மக்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    சாலைகளில் வெள்ளம் சூழ்ந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    இந்த நிலையில் மீட்பு பணிகள் துரிதமாக செயல்பட்டு வருவதாக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி தெரிவித்துள்ளார்.

    மழை வெள்ளம் குறித்து பி. மூர்த்தி கூறுகையில் "ஒருசில இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. செல்லூரை பொறுத்தவரையில் கண்மாய் நிரம்பி பந்தல்குடி கால்வாயில் தண்ணீர் அதிக அளவில் வரும் காரணத்தினால் செல்லூரில் இருந்து வைகையில் தண்ணீர் நேரடியாக செல்வதற்கான வேலை துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது.

    அதற்காக மூன்று டிரான்ஸ்பார்மர்கள் மாற்ற வேண்டிய நிலை உள்ளது. மின்சாரத்துறை அமைச்சரிடம் இது தொடர்பாக சொல்லி அந்த வேலை நடைபெற்று கொண்டிருக்கிறது. மாநகராட்சி, ஆட்சியர் மற்றும் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறைகள் துரித நடவடிக்கை எடுத்து ஓரிரு நாட்களில் அனைத்து பாதுகாப்பான ஏற்பாடு செய்யப்பட்டு வேலைகள் துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது.

    வெள்ள நீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. 2 நாட்களுக்குள் மொத்தமும் சரி செய்யப்படும். முதலமைச்சர் சொல்வதற்கு முன்பாகவே பணிகளை துவங்கிவிட்டோம்" என்றார்.

    • மதுரையில் நேற்று ஒரே நாளில் 9.8 செ.மீட்டர் மழை கொட்டித்தீர்த்தது.
    • 3 மணிக்குப் பிறகு 15 நிமிடத்தில் 4.5 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    மதுரையில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவும் பலத்த மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. குறிப்பாக, செல்லூர், புதூர், கூடல்புதூர், ஆனையூர் உள்ளிட்ட பகுதிகளில், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

    இதனால், மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நேற்று மதியம் 2½ மணி முதல் மாலை 5½ மணி வரை பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக புறநகர் பகுதிகளில் 3 மணி முதல் 3.15 மணி வரை 15 நிமிடத்தில் மட்டும் 4.5 சென்டிமீட்டர் (44.5 மில்லி மீட்டர்) மழைப்பொழிவு இருந்ததாகவும், காலை முதல் மாலை வரை 9.8 சென்டிமீட்டர் மழைப்பொழிவு பதிவானதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

    புறநகர் பகுதிகளான புதூர், சர்வேயர் காலனி, பனங்காடி, பாரத நகர்,பி.பி.குளம், முல்லை நகர் பகுதியில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. மதுரை கூடல் நகர் பொதிகை நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் மழைநீர் புகுந்ததால் அங்கிருந்த முதியோர்கள் கடும் அவதியடைந்தனர்.

    நகர் பகுதியில் காலை முதல் மதியம் 2 மணி வரை மழைக்கான எந்த அறிகுறியும் இல்லாமல் காணப்பட்ட நிலையில் சில நிமிடங்களில் வானம் மேகமூட்டமாக மாறி சாரல் மழையாக பெய்த வண்ணமாக இருந்தது.

    உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தொட்டப்பநாயக்கணூர், செட்டியபட்டி, வி.பெருமாள்பட்டி, பண்ணைப்பட்டி, அல்லிகுண்டம், வாலாந்தூர், செல்லம்பட்டி, உத்தப்பநாயக்கணூர், வெள்ளைமலைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. கனமழை காரணமாக வி.பெருமாள்பட்டி, பண்ணைப்பட்டி மற்றும் சடையாண்டிபட்டி பகுதிகளில் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர்நிலைகள் உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. கொங்கபட்டி, உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 4-வது வார்டு நீராவி மேட்டுத்தெரு பகுதிகளிலும் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் மக்கள் கடும் அவதியடைந்தனர்.

    வெள்ளிக்கிழமை அதாவது நேற்று காலை முதல் மாலை வரை 9.8 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பிற்பகல் 3 மணிக்குப் பிறகு 15 நிமிடத்தில் 4.5 செ.மீட்டர்  கொட்டித்தீர்த்துள்ளது. 

    வெள்ளம் பாதித்த பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    மதுரை கூடல் நகர் பொதிகை நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் புகுந்த மழைநீரின் நடுவே கட்டிலில் படுத்திருக்கும் மூதாட்டிகள்.

    துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காணொலி மூலம் ஆய்வு கூட்டம் நடத்தினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் துரிதமாக மேற்கொள்ளுமாறு அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    இந்த நிலையில் கனமழை காரணமாக மதுரை வடக்கு மற்றும் கிழக்கு தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    • தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நாளை மறுநாள் விக்கிரவாண்டியில் நடைபெறுகிறது.
    • விஜய் கட்சி நிர்வாகிகள் பொதுமக்களை மாநாட்டுக்கு வரும்படி கேட்டுக் கொண்டு வருகிறார்கள்.

    சென்னை:

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நாளை மறுநாள் மாலை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலை பகுதியில் நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக மாநாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

    மாநாட்டு திடலில் கிழக்கு திசை நோக்கியவாறு 60 அடி அகலத்திலும், 170 அடி நீளத்திலும், 30 அடி உயரத்திலும் மாநாட்டு மேடை பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

    கட்சியின் கொள்கை குறித்தும், தான் அறிமுகப்படுத்திய மஞ்சள், சிவப்பு நிறத்துடன் நட்சத்திரங்கள், யானை குறியீடுடன் கூடிய கொடி குறித்த விளக்கத்தையும் இந்த மாநாட்டில் விஜய் பேச உள்ளதால் பரபரப்பும், எதிர்பார்ப்பும் கூடியுள்ளது.

    இதற்கிடையே, விஜய் கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களை மாநாட்டுக்கு வரும்படி கேட்டுக் கொண்டு வருகிறார்கள். விழுப்புரம் மக்களுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகிறார்கள். இதனால் விக்கிரவாண்டி முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

    இந்நிலையில், விஜய் ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அதில், பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் இடம் பெற்றுள்ளது.

    மக்களவைத் தேர்தலுக்கு பின் புதிதாகப் பதிவுசெய்த 39 கட்சிகளின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. கிழக்கு கடற்கரை சாலை, பனையூர் முகவரியில் த.வெ.க. பதிவுசெய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியது.

    • கன்னியாகுமரி, மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
    • கனமழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது.

    தமிழகத்தில் கன்னியாகுமரி, தேனி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, கன்னியாகுமரி, மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகதேனி மாவட்டத்தில் நாளை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே அரசு பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    தேனி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது.

    • புதிய ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது.
    • புறநகர் ரெயில் சேவை ரத்து.

    சென்னை கடற்கரை மற்றும் சென்னை எழும்பூர் இடையே நான்காவது புதிய ரெயில்வே பாதை அமைக்கும் பணிகள் நடைபெறுவதை அடுத்து, சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கத்தில், 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இதே போன்று மாலை 5 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூங்கா ரயில் நிலையம் முதல் தாம்பரம் - செங்கல்பட்டு இடையே பயணியர் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிக்கப்பட்டுள்ளது.

    • மாணவர்கள் சிலர் மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    • பள்ளியில் அறிவியல் வல்லுநர்கள் ஆய்வு நடத்தினர்.

    சென்னை திருவொற்றியூர் கிராம தெரு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் திடீரென வாயு நெடி வீசியதால், மாணவ- மாணவிகள் அவசரமாக வெளியேற்றம் செய்யப்பட்டனர்.இதில், மாணவர்கள் சிலர் மயக்கம் அடைந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    மயக்கமடைந்த 3 மாணவிகளை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பிறகு, உடல்நலம் பாதிக்கப்பட்ட மேலும் 32 மாணவிகள் என மொத்தம் 35 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து பள்ளியில் அறிவியல் வல்லுநர்கள் ஆய்வு நடத்தினர்.

    இந்த நிலையில், திருவொற்றியூர் விக்டரி பள்ளிக்கு நாளை (சனிக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், போலீசார், அறிவியல் வல்லுநர்கள், தேசிய பேரிடர் மீட்பு படையினர் நேரில் ஆய்வு செய்தனர். 

    • கொடியேற்ற திருவிழாவும், அதனைத் தொடர்ந்து ஆடம்பர கூட்டு திருப்பலியும் நடந்தது.
    • இரண்டாம் நாளான நாளை (சனிக்கிழமை) நற்கருணை பெருவிழா நடைபெறுகிறது.

    சென்னை வாணுவம்பேட்டையில் உள்ள புனித யூதா ததேயு ஆலய 47-வது ஆண்டு விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

    இயேசுவின் 12 சீடர்களில் முக்கியமானவராக கருதப்பட்டவர், இயேசுவின் உருவ ஒற்றுமை கொண்டவரான புனித யூதா ததேயு. இவருக்கு சென்னை ஆதம்பாக்கத்தை அடுத்த வாணுவம்பேட்டையில் தனி திருத்தலம் அமைந்துள்ளது. அனைத்து வேண்டுதல்களும் இங்கே நிறைவேறுவதால், எல்லா மதத்தினரும் இந்த திருத்தலத்தை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.

    பிரசித்தி பெற்ற யூதா ததேயு திருத்தலத்தின் 47-வது ஆண்டு விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி இன்று மாலை கொடியேற்ற திருவிழாவும், அதனைத் தொடர்ந்து ஆடம்பர கூட்டு திருப்பலியும் நடந்தது.

    அருட்தந்தை பா.எஸ்.தாக்கியூஸ் தலைமையில் நடந்த இந்த வழிபாட்டில் பாதிரியார்கள் இம்மானுவேல், மைக்கேல் அலெக்சாண்டர், எட்வின் லாரன்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

    இரண்டாம் நாளான நாளை (சனிக்கிழமை) நற்கருணை பெருவிழா நடைபெற உள்ளது. குரோம்பேட்டை புனித அமல அன்னை ஆலயத்தின் முன்னாள் ஆயரின் பொது பதில் குரு பங்குத்தந்தை ஞா.பாக்ய ரெஜின் தலைமை தாங்குகிறார். இதில் பாதிரியார்கள் ஜேம்ஸ், இ.ஜேம்ஸ் தம்புராஜ், சி.ல.பிரதீப், அ.டேவிட் மதிவாணன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

    தொடர்ந்து, 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னை பல்கலைக்கழக பேராசிரியரும், பங்கு தந்தையுமான ஜேம்ஸ் பொன்னையா தலைமையில் பங்கு குடும்பப் பெருவிழா நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலை 6 மணிக்கு ஜெபமாலை மற்றும் புனிதரின் நவநாள் ஜெபமும், அதனைத் தொடர்ந்து ஆடம்பர திருப்பலி மற்றும் திருத்தேர் மந்திரிப்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    இந்த நிகழ்ச்சியில் புனித பத்திரிசியார் ஆலய பங்கு தந்தை கு.ரா.பால் ஜான் உள்ளிட்டோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள்.

    28-ந்தேதி திருக்கொடி இறக்கம் மற்றும் நன்றி பெருவிழா நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலை 6.30 மணிக்கு ஜெப மாலை மற்றும் புனிதரின் நவநாள் ஜெபம், இரவு 7 மணிக்கு நன்றி ஆராதனையும், அதனைத் தொடர்ந்து ஆடம்பர திருப்பலியும் நடைபெறுகிறது.

    இதில் அருட்தந்தைகள் ரவி ஜோசப், விக்டர் வினோத், பிரான்சிஸ் கிளாட்வின் உள்ளிட்டர் கலந்து கொள்கிறார்கள்.

    விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் திருத்தலத்தின் பாதிரியார்கள் அந்தோணி ராஜ், அந்தோணிசாமி மற்றும் கன்னியாஸ்திரிகள் ஆகியோர் முன்னின்று நடத்தி வருகிறார்கள்.

    • கோரிப்பாளையம், சிம்மக்கல், தல்லாகுளம், தமுக்கம், மாட்டுத்தாவணி பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
    • வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 6 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் இன்று மதுரை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. 15 நிமிடத்தில் 4.5 சென்டிமீட்டர் அளவுக்கு மழை கொட்டித்தீர்த்தது.

    இதனால் கோரிப்பாளையம், சிம்மக்கல், தல்லாகுளம், தமுக்கம், மாட்டுத்தாவணி பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை காரணமாக பல பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. 

    உசிலம்பட்டி, செல்லம்பட்டி, வாலாந்தூர், வி.பெருமாள்பட்டி, பண்ணப்பட்டி, செட்டியபட்டி, தொட்டப்பநாயக்கனூர், உத்தப்பநாயக்கணூர், வெள்ளைமலைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. வி.பெருமாள் பட்டி, பண்ணப்பட்டி, கொங்கபட்டி உள்ளிட்டப் பகுதிகளில் மழைநீர் ஊருக்குள் புகுந்து, வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    இதற்கிடையே மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    • கலைஞரால் பட்டை தீட்டப்பட்டவர் பொன்முடி. அதனால்தான் தனது செயல்பாடுகளால் மின்னுகிறார்.
    • திராவிடம் என்ற சொல்லை கேட்டாலே சிலருக்கு அச்சமாக உள்ளது.

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் பொன்முடி எழுதியுள்ள 'திராவிட இயக்கமும் கருப்பர் இயக்கமும்' நூல் வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது.

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தகத்தை வெளியிட்டார்.

    பின்னர் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:-

    கலைஞரால் பட்டை தீட்டப்பட்டவர் பொன்முடி. அதனால்தான் தனது செயல்பாடுகளால் மின்னுகிறார்.

    ஆழ்கடலில் கண்டெடுத்த நன்முத்து பென்முடி. அறிவுமுடிதான் பொன்முடி.

    திராவிடம் என்ற சொல்லை கேட்டாலே சிலருக்கு அச்சமாக உள்ளது. திராவிடம் என்பது ஆரியத்தை பதம் பார்க்கும் சொல்.

    அடிமைத்தனத்தை ஒழிப்பதற்காகவே, திராவிட இனமும், கருப்பர் இனமும் தோன்றியது.

    திராவிட நல் திருநாடு-ன்னு சொன்னா உங்க நாக்கு தீட்டாகிடுமா? இப்படி பாடினா சிலருக்கு வாயும், வயிரும் எரியும்னா திரும்பத் திரும்ப பாடுவோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×