என் மலர்
நீங்கள் தேடியது "IMD Rain Warning"
- புயல் கரையை கடந்த போது, அரபிக்கடல் பகுதியில் நிலவி வந்த கீழடுக்கு சுழற்சியில் இருந்து மேற்கு காற்றை ஈர்த்தது.
- ஏற்கனவே பள்ளிகளுக்கு வழக்கமான வார விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான டானா புயல் நேற்று அதிகாலை ஒடிசாவில் தீவிர புயலாக கரையை கடந்தது. இந்த புயல் கரையை கடந்த போது, அரபிக்கடல் பகுதியில் நிலவி வந்த கீழடுக்கு சுழற்சியில் இருந்து மேற்கு காற்றை ஈர்த்தது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் சில இடங்களில் மழைக்கான வாய்ப்பு இருந்தது. இதன் தொடர்ச்சியாக தெற்கு கேரள கடற்கரையையொட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக மேலும் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மிதமான மழையும், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று சிறப்பு வகுப்புகள் நடத்த உத்தேசித்துள்ள பள்ளிகளுக்கு மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில்,
திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே பள்ளிகளுக்கு வழக்கமான வார விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இன்று சிறப்பு வகுப்புகள் ஏதேனும் நடத்த உத்தேசித்துள்ள பள்ளிகள் அவற்றை நடத்த வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
வடமேற்கு வங்கக்கடலில் வடக்கு ஆந்திரா - ஒடிசா இடையே உருவான புயல் சின்னம் நேற்று நள்ளிரவு புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘தயே’ என பெயரிடப்பட்டது.
இன்று அதிகாலை ‘தயே’ புயல் ஒடிசாவின் கோபால்பூரில் கரையை கடந்து தாக்கியது. அப்போது மணிக்கு 60 முதல் 70 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்றுடன் பேய் மழை கொட்டியது.

அங்கு தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் முன் கூட்டியே பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
புயல் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறி ராயகடா, காலஹண்டி, கோராபுட், நபரங்க்பூர், மாவட்டங்களில் பலத்த மற்றும் மிக பலத்த மழை 2 நாட்களுக்கு நீடிக்கும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சில மணி நேரங்களுக்கு தொடர்ந்து காற்றின் வேகம் 80 கி.மீ. வரை இருக்கக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.
இந்த புயலால் தெலுங்கானா, ஆந்திரா, மேற்கு வங்காளம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மராட்டியம் ஆகிய மாநிலங்களிலும் பரவலாக நல்ல மழை பெய்துள்ளது. #Daye #Rain






