புறநகர் ரெயில் சேவை ரத்து.. வெளியான புது அறிவிப்பு..!

புதிய ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. புறநகர் ரெயில் சேவை ரத்து.
புறநகர் ரெயில் சேவை ரத்து.. வெளியான புது அறிவிப்பு..!
Published on

சென்னை கடற்கரை மற்றும் சென்னை எழும்பூர் இடையே நான்காவது புதிய ரெயில்வே பாதை அமைக்கும் பணிகள் நடைபெறுவதை அடுத்து, சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கத்தில், 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதே போன்று மாலை 5 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூங்கா ரயில் நிலையம் முதல் தாம்பரம் - செங்கல்பட்டு இடையே பயணியர் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com