என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ஞானசேகரன் மீது ஏற்கனவே 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- ஒருவரை சட்டவிரோதமாக அடைத்து வைத்து அல்லது தடுத்து வைத்தல்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
127(2)- ஒருவரை சட்டவிரோதமாக அடைத்து வைத்து அல்லது தடுத்து வைத்தல்.
351(3) - ஒருவருக்கு தனிப்பட்ட தகவல்களை வெளியிடுவேன் என மிரட்டுதல்.
67 மற்றும் 67 (A)- தகவல் தொழில்நுட்பத்தை தவறாக கையாளுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.
- பராமரிப்பு பணிகள் முடிந்த பிறகு, மதியம் 2 மணிக்கு முன் மின் விநியோகம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. அதன்படி, காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவேற்காடு: புளியம்பேடு மெயின் சாலை, நீதிபதிகள் காலனி, ராஜாஸ் கார்டன், நூம்பல், தேவி நகர், பாலாஜி நகர், பாக்கியாலட்சுமி நகர், பெரிய தெரு, சூசை நகர், அசோக் நந்தவனம்.
தேனாம்பேட்டை: போயஸ் கார்டன், டி.வி.சாலை, ஜெயம்மாள் சாலை, இளங்கோ சாலை, போயஸ் சாலை பகுதிகள், ராஜகிருஷ்ணா சாலை, எல்டாம்ஸ் சாலை, பெரியார் சாலை, காமராஜர் சாலை, காமராஜர் தெரு, சீதம்மாள் காலனி பகுதிகள், கே.பி. தாசன் சாலை, பாரதியார் தெரு, பக்தவத்சலம் தெரு, அப்பாதுரை தெரு, டி.டி.கே. சாலை, கதீட்ரல் சாலை, ஜே.ஜே. சாலை, பார்த்தசாரதி பேட்டை, பார்த்தசாரதி கார்டன், கே.ஆர். சாலை பகுதிகள், ஜெரோஜ் அவென்யூ, எஸ்எஸ்ஐ சாலை, எச்.டி. ராஜா தெரு, ஏ.ஆர்.கே. காலனி, அண்ணாசாலை பகுதி, வீனஸ் காலனி மற்றும் முர்ரேஸ் கேட் சாலை.
மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உன் அப்பா மயானத்துலதானே வேலை பாக்குறாரு... அங்கேயே வேலைக்குப்போ என்கிறார்கள்.
- சீனிவாசன் சாரும், மீனாட்சி மிஸ்சும் என்னை எதற்கு பள்ளிக்கு வர ? உனக்கு படிப்புலாம் ஏறாது..
கோடம்பாக்கத்தில் உள்ள பி.சி.கே.ஜி என்கிற அரசு பள்ளியில் பறை இசைத்த மாணவரை குறி வைத்து ஆசிரியர்கள் இருவர் படிக்க விடாமல் டார்ச்சர் செய்வதாக சமூக ஆர்வலர் குபேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
இதுபோல் பல மாணவர்களை இந்த கோடம்பாக்கம் அரசு பள்ளியில் இருந்து நீக்கி இருக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பாதிக்கப்பட்ட மாணவன் பேசும் வீடியோ ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில் பாதிக்கப்பட்ட மாணவன் கூறியிருப்பதாவது:-
என் பெயர் தமிழ். பி.சி.கே.ஜி அரசு பள்ளியில் படிக்கிறேன். கலைத்திருவிழா சமீபத்தில் நடந்தது. அதில் பங்கேற்று பறையிசை வாசித்தேன்.
அதன்பிறகிலிருந்து, சீனிவாசன் சாரும், மீனாட்சி மிஸ்சும் என்னை எதற்கு பள்ளிக்கு வர ? உனக்கு படிப்புலாம் ஏறாது..
நீ பறை அடிக்கத்தான் லாயக்கு.. உன் அப்பா மயானத்துலதானே வேலை பாக்குறாரு... அங்கேயே வேலைக்குப்போ என்கிறார்கள்.
பள்ளிக்கு வந்தால் வகுப்பில் அனுமதிப்பதில்லை. என் சட்டையை கழட்டி சோதனை செய்கிறார்கள். பேண்ட் பேக்கெட்டுகளில் சோதனை செய்கிறார்கள். அசிங்கமாக பேசுகிறார்கள்.
வகுப்புக்கு போனால் வர வேண்டாம்.. உனக்கு பாடம் சொல்லித்தர மாட்டேன். கீழே சென்று ஹெட் மாஸ்டரை பாருன்னு சொல்றாங்க.. கீழே போனால் வகுப்புக்கு போ.. தேர்வு வருதுன்னு சொல்றாங்க.. திரும்ப வகுப்புக்கு போனா ஏன் வந்தேன்னு கேக்குறாங்க..
படிக்க விடாமல் தொடர்ந்து டார்ச்சர் செய்றாங்க..
இவ்வாறு அந்த மாணவர் குறிப்பிட்டுள்ளார்.
- குற்றவாளி என உறுதியான பிறகே ஞானசேகரன் கைது செய்யப்பட்டார்.
- புகாரில் என்ன தெரிவிக்கப்பட்டதோ அது தான் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக, சென்னை காவல் ஆணையர் அருண் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
முதல் தகவல் அறிக்கை என்பது பாதிக்கப்பட்டவர் என்ன சொல்கிறாரோ அதை அப்படியே பதிவு செய்வது.
குற்றவாளி என உறுதியான பிறகே ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். புகாரில் என்ன தெரிவிக்கப்பட்டதோ அது தான் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டது.
இது தெரியாமல் சிலர் முதல் தகவல் அறிக்கையை இப்படி போட்டிருக்கலாம், அப்படி போட்டிருக்கலாம் என சொல்கிறார்கள்.
இதுபோன்ற வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை வெளியாக கூடாது, அது தவறு தான்.
எப்ஐஆர் வெளியானது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக எப்ஐஆர் லாக் ஆவதில் தாமதம் ஆகியுள்ளது. எப்ஐஆர் லாக் ஆவதில் தாமதம் ஏற்பட்டதால் டவுன்லோடு செய்து பரப்பி இருக்கலாம்.
இதுவரை ஞானசேகரன் மீது திருட்டு உள்ளிட்ட 20 வழக்குகள் உள்ளன. ஞானசேகரன் மீது 2019க்கு பின் எந்த வழக்கும் பதிவாகவில்லை.
இதுவரை வேறு பெண்களிடம் இருந்து புகார்கள் எதுவும் பெறப்படவில்லை. வேறு யாரேனும் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் 70 சிசிடிவி உள்ளது. அதில் 56 சிசிடிவி வேலை செய்கிறது.
பெண் புகார் கொடுத்த அடுத்த நாளே குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். இதுவரை நடைபெற்ற புலன் விசாரணையில் ஞானசேகரன் ஒருவர் மட்டுமே குற்றவாளி.
காவல்துறை நடுநிலையுடன், கட்சி வேறுபாடு கடந்து நடந்துக் கொள்ள வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.
போராட்டம் நடத்துவதற்கு என சில இடங்கள் உள்ளது. அதை மீறி போராட்டம் நடத்துபவர்கள் கைது செய்யப்படுவார்கள். அதன் அடிப்படையில் அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே காவல்துறை பாதுகாப்பு பணியில் உள்ளனர். மேலும் எவ்வாறு பாதுகாப்பை பலப்படுத்துவது என்பதை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
காவல்துறையை நம்பி மாணவி புகார் அளித்தார். அவர் நம்பிக்கையை உறுதி செய்யும் வகையில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்துள்ளது.
யார் பாதிக்கப்பட்டாலும் தைரியமாக புகார் அளிக்க முன் வர வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- குற்றவாளி ஞானசேகரனுக்கு பிணை வழங்கக்கூடாது.
- குற்ற பத்திரிகை தாக்கல் செய்து சிறையில் வைத்து விசாரிக்க வேண்டும்.
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக ஆதங்கத்துடன் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, " நாளை காலை 10 மணிக்கு என் வீட்டின் முன்பு என்னை நானே சாட்டையால் 6 முறை அடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளேன். திமுக ஆட்சியை அகற்றும் வரை காலில் செருப்பு அணிய மாட்டேன். 48 நாட்கள் விரதம் இருக்கப் போகிறேன். முருகப்பெருமானிடம் முறையிட போகிறேன்.
நாளை முதல் எனது அரசியல் வேறு மாதிரி இருக்கும். ஆரோக்கியமான அரசியல், நாகரீகமான அரசியல், விவாதம், மரியாதை எல்லாம் இருக்காது" என்றார்.
இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்தார்.
அப்போது, அண்ணாமலையின் போராட்ட அறிவிப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதுகுறித்து பதில் கூறிய திருமாவளவன் கூறியதாவது:-
அண்ணா பல்கலைக்கழக விவகாரம் வேதனைக்குரியது. ஞானசேகரன் உடனடியாக கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. குற்றவாளி கைது செய்யப்பட்டது ஆறுதல் அளிக்கிறது.
குற்றவாளிக்கு பிணை வழங்கக்கூடாது. குற்ற பத்திரிகை தாக்கல் செய்து சிறையில் வைத்து விசாரிக்க வேண்டும்.
ஞானசேகரனுக்கும், திமுகவுக்கும் தொடர்பு இருப்பதுபோல் காட்டுவது ஆதார அரசியல்.
அண்ணாமலை பரபரப்பு அரசியல் செய்ய விரும்புகிறார். அதிமுக எதிர்க்கட்சி இல்லை. பாஜக தான் எதிர்க்கட்சி என காட்ட நினைக்கிறார்.
லண்டன் போயிட்டு வந்த பிறகு அண்ணாமலை ஏன் இப்படி ஆனார் என தெரியவில்லை.
அண்ணாமலையின் போராட்ட அறிவிப்புகள் நகைப்புக்குரியவையாக மாறிவிட கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நாளை முதல், திமுக ஆட்சியை அகற்றும் வரை காலில் செருப்பு அணிய மாட்டேன்.
- 48 நாட்கள் விரதம் இருக்கப் போகிறேன். முருகப்பெருமானிடம் முறையிட போகிறேன்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மாணவி வன்கொடுமை சம்பவத்தில் சைதை திமுக பிரமுகருக்கு தொடர்பு இருக்கிறது.
மாணவி பாலியல் வழக்கில் எப்ஐஆர் எப்படி வெளியே வந்தது. பாதிக்கப்பட்ட மாணவி குற்றம் செய்தது போல எப்ஐஆர் எழுதியுள்ளார்.
எப்ஐஆரில் அதிக ஆபாச வார்த்தைகள் உள்ளன, இப்படியெல்லாம் எப்ஐஆர் போடுவார்களா ?
பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், முகவரி முழுவதையும் போலீசார் வெளியிட்டதற்கு திமுகவினர் வெட்கப்பட வேண்டும்.
பாதிக்கப்பட்ட பெண்மை அவமானப்படுத்தும் நோக்கத்தில் எப்ஐஆர் வௌியிடப்பட்டுள்ளது.
இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று ஒரு முடிவு எடுத்து இருக்கிறேன். இந்த அரசியலாகாது, மாநிலத் தலைவராக தொண்டராக ஒரு சபதம் எடுத்துள்ளேன்.
இனிமேல் ஆர்ப்பாட்டம் கிடையாது. நாளை முதல் வேறு மாதிரியாக தான் டீல் செய்வோம்.
நாளை காலை 10 மணிக்கு என் வீட்டின் முன்பு என்னை நானே சாட்டையால் 6 முறை அடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளேன்.
நாளை முதல், திமுக ஆட்சியை அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன்.
48 நாட்கள் விரதம் இருக்கப் போகிறேன். முருகப்பெருமானிடம் முறையிட போகிறேன்.
நாளை முதல் எனது அரசியல் வேறு மாதிரி இருக்கும். ஆரோக்கியமான அரசியல், நாகரீகமான அரசியல், விவாதம், மரியாதை எல்லாம் இருக்காது.
எதற்கு அரசியல் கட்சியினருக்கு மரியாதை கொடுக்க வேண்டும். இனி மரியாதையெல்லாம் கிடையாது.
சாதாரண மனிதர்களின் பிரச்சினைகளை பேச வேண்டும். அவர்கள் இல்லாமல் அரசியல் கிடையாது.
கை உடைந்தது, கால் உடைந்தது எல்லாம் ஒரு தண்டனையா ? அரசியலுக்கு வந்ததால் அடங்கி உட்கார்ந்து கொண்டிருக்கிறேன்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் சிசிடிவி வேலை செய்யவில்லை என்று கூறுகிறார்கள். நிர்பயா நிதி எங்கே சென்றது ?
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஞானசேகரன் (37) என்ற வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
- அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் படித்துவரும் என்ஜீனியரிங் மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் கொடுமை தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதலனான மாணவருடன் மாணவி அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த வாலிபர் இருவரும் நெருக்கமாக இருப்பதை வீடியோ எடுத்து மிரட்டியதுடன், காதலனை அங்கிருந்து விரட்டி விட்டு மாணவியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டான்.
இது தொடர்பாக மாணவி அளித்த புகாரின் பேரில் கோட்டூர்புரம் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பெற்றோர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக சென்னை கோட்டூரை சேர்ந்த ஞானசேகரன் (37) என்ற வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் வாலிபர் ஞானசேகரனால் மாணவி கடுமையான பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாக பரபரப்பான புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பாக போலீசார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) யில் அதிர வைக்கும் வகையில் திடுக்கிடும் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
இதற்கிடையே, அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கிண்டி பொறியியல் கல்லூரி முதல்வர் ஈஸ்வரகுமார் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான பாதுகாப்பு குறித்த புதிய வழிகாட்டி நெறிமுறைகள் குறித்த அரசாணை வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
- பொள்ளாச்சி கூட்டு பாலியல் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை.
- அரசின் செயல்பாடு, பல்கலைக்கழகங்கள், காவல்துறையின் செயல்பாடு சிறப்பாக உள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் முத்தாண்டிபட்டி, ஆச்சாம்பட்டி, புதுக்குடி உள்ளிட்ட 30 இடங்களில் ரூ.6 கோடி மதிப்பில் புதிய அங்காடி கட்டிடங்கள், பள்ளிக்கட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு கட்டிடங்களை இன்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் திறந்து வைத்தார் .
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :-
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 23-ம் தேதி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது குறித்து 25-ம் தேதி போலீஸ் நிலையத்தில் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் 3 மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டு இருக்கிறார். அனைத்து பல்கலைக்கழக கல்லூரிகளில் பாதுகாப்பு நடவடிக்கைக்காகவும், பெண் பிள்ளைகள், மாணவிகள் நலன் குறித்து குழுக்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்த மாணவி, நடைபெற்ற நிகழ்வு குறித்து உடனடியாக பாதுகாப்பு குழுவிடம் சொல்லி இருந்தால் இன்னும் துரித நடவடிக்கை எடுக்க வாய்ப்பாக இருந்திருக்கும். தனிப்பட்ட அச்ச உணர்வு, பெண்மைக்குரிய பாதுகாப்பு, மனநிலை இவைகளை மனதில் வைத்து இரண்டு தினங்கள் கழித்து கூறி இருந்தாலும் கூட குற்றவாளியை உடனே கைது செய்து இருக்கிறோம்.
குற்றவாளிக்கு விரைந்து தண்டனை பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும். மேற்கொண்டு மாணவி பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை மனதில் வைத்து அரசியல் செய்ய முற்பட்ட கட்சி தலைவர்களுக்கு தரும் விளக்கம் என்னவென்றால், கடந்த காலங்களில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு எல்லாம் மாநில அரசே துணை நின்ற சம்பவம் உண்டு.
பொள்ளாச்சி கூட்டு பாலியல் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசிய போதெல்லாம் நிராகரித்தார்கள். ஆனால் தற்பொழுது அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் 3 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்து இருக்கிறோம். கடந்த ஆட்சியில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்க அச்சப்பட்டார்கள். அது ஆளுங்கட்சியின் அழுத்தம்.
ஆனால் தற்போது பாதிக்கப்பட்ட மாணவி புகார் இரண்டு நாள் கழித்து அளித்தாலும் சுதந்திர உணர்வோடு யாருடைய தங்கு தடை இன்றி நடவடிக்கை எடுத்திருப்பதை பாராட்ட மனமில்லாமல் இதை காரணம் காட்டி அரசை குறை சொல்லும் மனநிலை தான் உள்ளது.
அரசின் செயல்பாடு, பல்கலைக்கழகங்கள், காவல்துறையின் செயல்பாடு சிறப்பாக உள்ளது.
இருந்தாலும் மாணவிகளின் நலன் காக்க பெருந்துணை புரிவோம். மூன்று மாத காலம் அமைதியாக இருந்த தமிழகத்தில் மீண்டும் தனது குணத்தை காட்ட ஆரம்பித்து விட்டார் அண்ணாமலை. தி.மு.க. ஆட்சி செயல் சிறப்பாக செயல்பட்டு கொண்டுள்ளது. தோல்வி பயத்தில் அண்ணாமலை உளறி கொண்டிருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 98 ஆவது ஆண்டு மார்கழி கச்சேரிகளின் ஒரு பகுதியாக டி.எம்.கிருஷ்ணாவின் கச்சேரி நேற்று நடைபெற்றது.
- டி.எம்.கிருஷ்ணாவின் கச்சேரியை காண ரசிகர்கள் குவிந்ததால் அரங்கம் நிறைந்தது.
இசைக்கலைஞர் டி.எம். கிருஷ்ணா சமூக கருத்துக்களையும், மதநல்லிணக்கத்தையும் வலியுறுத்தி கர்நாடக இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். கர்நாடக இசையில் பெரியார் குறித்த பாடல்களை டி.எம். கிருஷ்ணா பாடியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
கர்நாடக இசை பிராமணமயக்கப்பட்டதை கண்டித்து தொடர்ச்சியாக பேசி வரும் டி.எம். கிருஷ்ணா கர்நாடக இசையை எல்லாரும் பயிலும் வகையில் சேரிகளுக்கும் சென்று கச்சேரி நடத்தி வந்தார்.
கலைப் பன்முகத்தன்மைக்கு எதிரான சூழல் இருப்பதால் இனி மார்கழி இசைக் கச்சேரிகளில் பாட மாட்டேன் என்று சில ஆண்டுகளுக்கு முன்னதாக டி.எம்.கிருஷ்ணா அறிவித்தார். அதன்படி கடந்தாண்டு வரை மார்கழி இசைக் கச்சேரிகளில் அவர் பாடல்கள் பாடவில்லை.
இந்நிலையில் இந்தாண்டு நடைபெறும் சென்னை மார்கழி கச்சேரிகளில் பங்கேற்பேன் என்று டி.எம். கிருஷ்ணா அண்மையில் அறிவித்தார்.
அதன்படி மியூசிக் அகாடமியின் 98ஆவது ஆண்டு மார்கழி கச்சேரிகளின் ஒரு பகுதியாக டி.எம்.கிருஷ்ணாவின் கச்சேரி நேற்று நடைபெற்றது. டி.எம்.கிருஷ்ணாவின் கச்சேரியை காண ரசிகர்கள் குவிந்ததால் அரங்கம் நிறைந்தது. இதனால் அரங்கிற்கு வெளியே நின்றபடியே நிறைய ரசிகர்கள் கச்சேரியை கண்டு களித்தனர்.
மார்கழி இசைக் கச்சேரியில் டி.எம். கிருஷ்ணா பாரம்பரிய மரபுகளை உடைக்கும் விதமாக லுங்கியும் பீச் ஷர்ட் அணிந்து வந்து பங்கேற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இசை கச்சேரியில், "ராமரோ, கிறிஸ்துவோ, அல்லாவோ எல்லா இறையருளும் ஒன்றுதான் எல்லா மனிதரும் ஒன்றுதான் என்று பொருள்படும் பாடல்களை டி.எம். கிருஷ்ணா பாடினார். குறிப்பாக பெருமாள் முருகன் எழுதிய 'சுதந்திரம் வேண்டும்' பாடலை அவர் பாடியது அனைவரையும் கவர்ந்தது.
- சென்னையிலேயே இந்த நிலைமை என்றால், பிற மாவட்டங்களை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.
- காவலர் பணியிடங்களை அவ்வப்போது நிரப்பாததும்தான் என்று சொன்னால் அது மிகையாகாது.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"சமூக விரோதிகளின் புகலிடம் தமிழ்நாடு" என்ற கருத்திற்கு மாற்றுக் கருத்து இல்லை என்று சொல்லும் அளவுக்கு தி.மு.க ஆட்சியில் போதைப் பொருட்களின் நடமாட்டமும், பாலியல் வன்கொடுமைகளும், கொலைகளும், கொள்ளைகளும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. காவல் துறை என்ற ஒன்று இருக்கிறதா என்று சந்தேகப்படும் அளவுக்கும் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுப் போய்விட்டது. இதனை நிருபிக்கும் விதமாக, அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் வன்கொடுமைக் கொடூரம் நிகழ்ந்துள்ளது.
சென்னையில் உள்ள மிகப் பிரசித்திப் பெற்ற பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கிப் படித்து வரும் இரண்டாம் ஆண்டு பொறியியல் மாணவி மாலையில் அதே பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் மாணவருடன் பேசிக் கொண்டிருந்தபோது, அந்த வளாகத்திற்குள் நுழைந்த மர்ம நபர், அவர்களை கைபேசியில் வீடியோ எடுத்துவிட்டு, மாணவியின் நண்பரை தாக்கி விரட்டியடித்துவிட்டு, பின்னர் அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என்ற செய்தி போதிர்ச்சியை அளிக்கிறது.
அண்ணா பல்கலைக்கழத்திற்குள்ளேயே பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீரழிவை படம் பிடித்துக் காண்பித்துள்ளது. மருத்துவமனைகள், நீதிமன்றங்கள், அரசு அலுவலக வளாகங்கள் என தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பின்மை நிலவுகிறது.
இந்த வரிசையில் தற்போது அண்ணா பல்கலைக்கழகத்திலும் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு அளிப்பதில் தி.மு.க. அரசு மெத்தனப் போக்கை கடைபிடிப்பதே இதற்கெல்லாம் மூலக் காரணமாக விளங்குகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் பிரதான வாயிலில் மட்டும் பாதுகாப்பு போடப்பட்டு இருப்பதாகவும், நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம் வழியாகவும், தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் வழியாகவும், கோட்டூர்புரம் வாயில் வழியாகவும் பல பலர் அண்ணா பல்கலைக்கழகத்திற்குள் நுழைகின்றனர் என்றும், வெளியாட்கள் அண்ணா பல்கலைக்கழகத்திற்குள் வாகனங்களை நிறுத்துகின்றனர் என்றும், இவைதான் பாதுகாப்பின்மைக்கு முக்கியக் காரணம் என்றும், அண்ணா பல்கலைக்கழகத்தின் அனைத்து வாயில்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டால்தான் இதுபோன்ற குற்றங்கள் நிகழாது என்றும் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களும், பேராசிரியர்களும், அங்கே பணியாற்றும் பணியாளர்களும் தெரிவிக்கின்றனர்.
இதனைச் செய்ய தி.மு.க. அரசு நவறிவிட்டது. அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமைச் சம்பவத்திற்கும், குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்காத தி.மு.க அரசிற்கும் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னையிலேயே இந்த நிலைமை என்றால், பிற மாவட்டங்களை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது. இதற்குக் காரணம், தி.மு.க. அரசு காவல் துறையை சுதந்திரமாக செயல்படவிடாததும், கொலைக் குற்றங்கள், பாலியல் வன்முறைக் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விரைந்து முடித்து தண்டனைப் பெற்றுத் தராததும். காவலர் பணியிடங்களை அவ்வப்போது நிரப்பாததும்தான் என்று சொன்னால் அது மிகையாகாது.
மொத்தத்தில், தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை. மாறாக சமூக விரோதிகளின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுபோன்ற தொடர் சம்பவங்களுக்குப் பிறகாவது முதலமைச்சர் சட்டம்-ஒழுங்குப் பிரச்சனையில் தனிக் கவனம் செலுத்தி, குற்றவாளிகளை விரைந்து பிடித்து, அவர்களை சட்டத்தின்முன் நிறுத்தி, உரிய தண்டனையை விரைந்து பெற்றுக் தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
- நல்லகண்ணு பிறந்தநாள் முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- அய்யா நல்லகண்ணுவின் வாழ்க்கை அடுத்தடுத்த தலைமுறைக்கு ஒரு பாடம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 100-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
இவரது பிறந்தநாள் முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நல்லகண்ணுவின் பிறந்தநாளையொட்டி தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
இந்திய அரசியலின் முதுபெரும் தலைவர் - விடுதலைப் போராட்ட வீரர் - பொதுவுடைமை இயக்கப் போராளி அய்யா நல்லகண்ணு அவர்களின் 100 ஆவது பிறந்த நாளில் அவரை வாழ்த்தி மகிழ்கிறோம்.
நேர்மையும் - எளிமையுமே பொதுவாழ்விற்கான அடித்தளம் என்பதன் வாழும் உதாரணமாகத் திகழும் அய்யா நல்லகண்ணு அவர்களின் வாழ்க்கை அடுத்தடுத்த தலைமுறைக்கு ஒரு பாடம்.
நம் திராவிட மாடல் அரசால் "தகைசால் தமிழர்" விருது வழங்கி கெளரவிக்கப்பட்ட , அய்யாவின் சமரசமற்ற மக்கள் பணி - கொள்கை உறுதியை என்றும் போற்றுவோம்.
வாழ்க பல்லாண்டு!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பாஜகவினரை கைது செய்வதன் மூலம் நடந்த சம்பவங்களை மறைக்க தமிழக அரசு முயற்சி செய்கிறது.
- பாஜகவினரை கைது செய்வதன் மூலம் நடந்த சம்பவங்களை மறைக்க தமிழக அரசு முயற்சி செய்கிறது.
சென்னை:
மத்திய அமைச்சர் எல்.முருகன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதைக் கண்டித்தும், அதற்கான நீதி கேட்டும் போராட்டம் நடத்தச் சென்ற, தமிழக பாஜகவின் மூத்த தலைவர் முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் வள்ளுவர் கோட்டம் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட, தமிழக பா.ஜ.க.
தலைவர்கள் மற்றும் தொண்டர்களை, காவல்துறை கைது செய்திருப்பது கடுமையான கண்டனத்துக்குரியது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவியிடம் பாலியல் தாக்குதலில் ஈடுபட்டு கைதாகியுள்ள ஞானசேகரன் என்ற நபர் மீது ஏற்கெனவே வழக்குகள் இருப்பதும், அவர் திமுக-வின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் அமைச்சர் போன்றோருக்கு நெருக்கமாக இருப்பவர் என்ற தகவலும், பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருப்பதாக நாளொறுமுறை பொய்யுரைத்து வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், குற்றவாளி திமுக-வை சேர்ந்தவர் என்பதால் நடவடிக்கையில் தாமதப்படுத்துவது எப்படி தீர்வாகும். பாதிக்கப்பட்ட மாணவி குறித்த விவரங்கள் அடங்கிய முதல் தகவல் அறிக்கையை பொது வெளியில் கசிய விட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்க குற்றமாகும்.
பெண்களுக்கு எதிரான குற்றம், அதுவும் படிக்கச் செல்கின்ற கல்லூரிக்குள் அத்துமீறிய ஒரு நபரால் மாணவிகளுக்கு துன்பம் ஏற்படுவதை எண்ணி, காவல்துறையை தன்னுடைய நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்ற முதல்வர் ஸ்டாலின், தங்களையும், தங்களது போலி திராவிட மாடல் ஆட்சியையும் சுய பரிசோதனை செய்ய வேண்டிய காலமிது.
ஒரே ஒரு குற்றவாளியை மட்டும் இதுவரை கைது செய்திருக்கும் காவல்துறை இது சம்பந்தப்பட்டவர்கள் யார் யார் என்பதை தீர விசாரிக்க வேண்டும். கொடூர சம்பவம் நடக்காமல் தடுப்பது தான் அரசின் கடமை. இப்படி ஒவ்வொரு குற்றம் நடக்கும் போதும், குற்றம் செய்தவரை கைது செய்துவிட்டோம் என்று பிதற்றிக் கொண்டிருக்காமல், குற்றம் நடக்காமல் தடுக்க வேண்டிய வழிகளை, தமிழக அரசும், தமிழக அரசின் கைப்பாவையாக உள்ள காவல்துறையும் மேற்கொள்ள வேண்டும்.
பாஜகவினரை கைது செய்வதன் மூலம் நடந்த சம்பவங்களை மறைக்க தமிழக அரசு முயற்சி செய்கிறது. உண்மை நிலை என்னவென்பதை தமிழக மக்களுக்கு இந்த போலி திராவிட மாடல் அரசு சொல்ல வேண்டும்.
நீதி கிடைக்கும் வரை பாஜக பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு துணையாக நிற்கும் என்று பதிவிட்டுள்ளார்.






