என் மலர்
உள்ளூர் செய்திகள்
- நேற்று மதியம் 2 மணிக்கு தொடங்கிய சோதனை நள்ளிரவு 1.20 மணிக்கு நிறைவடைந்தது.
- கதிர் ஆனந்த் நடத்தும் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தினர். அவரது மகன் கதிர் ஆனந்த்-க்கு சொந்தமான இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அமைச்சர் துரைமுருகனுக்கு சொந்தமான 5 இடங்களில் சோதனை நடைபெற்றது.
அமைச்சர் துரைமுருகன் வீடு மற்றும் கல்லூரி கதவுகள் மூடப்பட்டன. 2 இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அமைச்சர் துரைமுருகனுக்கு நெருக்கமான தி.மு.க. நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான காட்பாடி க்கு அடுத்த பள்ளி குப்பம் வீட்டிலும் அமலாக்க துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
மேலும் இவரது உறவினருக்கு சொந்தமான சிமெண்டு குடோன் பகுதிகளிலும் அமலாக்க துறையினர் அதிரடி சோதனை செய்தனர். இந்த இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்நிலையில் வேலூரில் அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்துள்ளது. நேற்று மதியம் 2 மணிக்கு தொடங்கிய சோதனை நள்ளிரவு 1.20 மணிக்கு நிறைவடைந்தது.
ஏதும் முக்கிய ஆவணங்களோ பணமோ சிக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. துரைமுருகன் வீட்டில் இரண்டு அறைக் கதவை உடைத்து சோதனை நடைபெற்றுள்ளது.
சாவி இல்லாததால் உடைப்பு கடப்பாரை, உளியால் உடைத்து அதிகாரிகள் சோதனை செய்ததாகக் கூறப்படுகிறது. கதிர் ஆனந்த் நடத்தும் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக நேற்று அமைச்சர் துரைமுருகன் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் 2 பெண்கள் அடங்கிய 10 பேர் கொண்ட குழுவினர் வீட்டின் தாழ்வார பகுதியில் 7 மணி நேரம் வரை காத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- சென்னையில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.
- நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு.
சென்னையில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தில்லை கங்கா நகர்: தில்லை கங்கா நகர், நங்கநல்லூர் பகுதி, பழவந்தாங்கல், ஜீவன்நகர், சஞ்சய் காந்தி நகர், வேளச்சேரி, ஆதம்பாக்கம், ஆண்டாள் நகர், வாணுவம்பேட்டை, பிருந்தாவன் நகர், மகாலட்சுமி நகர், சாந்தி நகர், புழுதிவாக்கம், உள்ளகரம் பகுதி, ஏஜிஎஸ் காலனி (வேளச்சேரி மேற்கு), இபி காலனி, மோகனபுரி, ஆதம்பாக்கம் புதிய காலனி.
ஏலியம்பேடு: டவுன் பொன்னேரி, வேலோடை, வைரவன் குப்பம், எலியம்பேடு பெரிய காவனம், மஹிந்திரா சிட்டி, கிருஷ்ணாபுரம் பகுதி மற்றும் கனகம்பாக்கம்.
எழில் நகர்: மேட்டுக்குப்பம் விபிஜி அவென்யூ, ராயல் அவென்யூ, அன்னை அவென்யூ, நேரு நகர், பாம்பன் பாபா நகர், சந்திரசேகர் நகர், ஸ்ரீனிவாசா நகர், குமரகுரு அவென்யூ.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- செப்டிக் டேங்கின் தருப்பிடித்த இரும்பு மூடியின் மீடி நின்றபோது சிறுமி விழுந்து விபத்து.
- குழந்தையின் சடல்ததை கைப்பற்றியதுடன், பள்ளி முதல்வர் உள்பட 3 பேர் கைது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியின் கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து யுகேஜி படித்து வந்த 5 வயது சிறி உயிரிழந்துள்ளது.
செப்டிக் டேங்கின் தருப்பிடித்த இரும்பு மூடியின் மீடி நின்றபோது இந்த விபத்து நடந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
குழந்தையின் சடல்ததை கைப்பற்றியதுடன், பள்ளி முதல்வர் உள்பட 3 பேர் கைது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், குழந்தையின் இறப்பிற்கு பள்ளியே முழு பொறுப்பேற்க வேண்டும்" என்று காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை காட்டமாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் எல்.கே.ஜி படித்து வந்த மூன்றரை வயது சிறுமி லியா லட்சுமி கழிவுநீர் தொட்டி விழுந்து உயிரிழந்துள்ள செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
எல்.கே.ஜி படிக்கும் குழந்தையை கவனமாக பார்த்துக் கொள்வது தனியார் பள்ளியின் கடமையாகும். குழந்தையின் இறப்பிற்கு தனியார் பள்ளி முழு பொறுப்பேற்க வேண்டும்.
மாவட்ட நிர்வாகம் விரும்பதகாத சம்பவம் ஏற்படுத்திய பள்ளியின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தையின் பெற்றோருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறேன். குழந்தையை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறப்பிட்டுள்ளார்.
- தனியார் பள்ளியின் கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த குழந்தையின் பெற்றோருக்கு இரங்கல்.
- பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சம் நிவாரணமாக வழங்க உத்தரவு.
விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியின் கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த குழந்தையின் பெற்றோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும், பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சம் நிவாரணமாக வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், விக்கிரவாண்டி மேற்கு கிராமத்தைச் சேர்ந்த குழந்தை லியா லக்ஷ்மி (வயது 5) த/பெ.பழனிவேல் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் பயின்றுவந்த நிலையில் இன்று (03.01.2025) பிற்பகல் பள்ளியிலிருந்த கழிவு நீர்த் தொட்டியில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து உயிரிழந்த துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த குழந்தை லியா லக்ஷமியின் பெற்றோருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த குழந்தையின் பெற்றோருக்கு மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தனியார் பள்ளியில் UKG படித்து வந்த சிறுமி லியா லெட்சுமி கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழப்பு.
- பள்ளி நிர்வாகம் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவிப்பதாக உறவினர் குற்றச்சாட்டு.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் UKG படித்து வந்த சிறுமி லியா லெட்சுமி கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை கழிவுர் நீர் தொட்டியில் விழுந்தது தொடர்பாக தங்களிடம் பள்ளி நிர்வாகம் உடனடியாக தகவல் தெரிவிக்கவில்லை. 3 மணிக்கு பிறகுதான் தகவல் தெரிவித்ததாக பெற்றோர் பள்ளி நிர்வாகம் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.
குழந்தை மதியம் 2 மணிக்குப் பிறகே ரெஸ்ட் ரூம் செல்வதற்காக வகுப்பறையை விட்டு வெளியே சென்றதாக பள்ளி நிர்வாகம் கூறுகிறது. ஆனால் சிறுமியை தூக்கிச் செல்லும் சிசிடிவி காட்சியில் 1.50 எனக் காட்டுகிறது.
இவ்வாறு பள்ளி நிர்வாகம் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவிப்பதாக உறவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் செயின்ட் மேரீஸ் பள்ளி முதல்வர் டொமினிக் மேரி, யுகேஜி வகுப்பு ஆசிரியை ஏஞ்சல், தாளாளர் எமால்டா ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிறுமி லியா லெட்சுமி கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- பள்ளி நிர்வாகம் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவிப்பதாக உறவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் UKG படித்து வந்த சிறுமி லியா லெட்சுமி கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை கழிவுர் நீர் தொட்டியில் விழுந்தது தொடர்பான தங்களிடம் பள்ளி நிர்வாகம் உடனடியாக தகவல் தெரிவிக்கவில்லை. 3 மணிக்கு பிறகுதான் தகவல் தெரிவித்ததாக பெற்றோர் பள்ளி நிர்வாகம் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.
குழந்தை மதியம் 2 மணிக்குப் பிறகே ரெஸ்ட் ரூம் செல்வதற்காக வகுப்பறையை விட்டு வெளியே சென்றதாக பள்ளி நிர்வாகம் கூறுகிறது. ஆனால் சிறுமியை தூக்கிச் செல்லும் சிசிடிவி காட்சியில் 1.50 எனக் காட்டுகிறது.
இவ்வாறு பள்ளி நிர்வாகம் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவிப்பதாக உறவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும்படி தனியார் பள்ளிகள் இயக்குனர் முத்து பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
- குழந்தை மதியம் 2 மணிக்குப் பிறகே ரெஸ்ட் ரூம் செல்வதற்காக வகுப்பறையை விட்டு வெளியே சென்றதாக பள்ளி நிர்வாகம் கூறுகிறது.
- ஆனால் சிறுமியை தூக்கிச் செல்லும் சிசிடிவி காட்சியில் 1.50 எனக் காட்டுகிறது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் UKG படித்து வந்த சிறுமி லியா லெட்சுமி கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை கழிவுர் நீர் தொட்டியில் விழுந்தது தொடர்பான தங்களிடம் பள்ளி நிர்வாகம் உடனடியாக தகவல் தெரிவிக்கவில்லை. 3 மணிக்கு பிறகுதான் தகவல் தெரிவித்ததாக பெற்றோர் பள்ளி நிர்வாகம் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.
லஞ்ச் முடிந்து 2 மணிக்கு தேர்வு தொடங்கியது. சிறுமி மதியம் 2 மணிக்கு ரெஸ்ட் ரூம் செல்ல வேண்டும் எனக் கூறி வக்குப்பறையில் இருந்த வெளியேறினார். 2.05 வரை சிறுமி திரும்பாததால் ஆசிரியர் ரெஸ்ட் ரூம் சென்று பார்த்தபோது சிறுமி அங்கு இல்லாததால் தேட ஆரம்பித்தார்கள்.
எல்லா வகுப்பறையிலும் பார்த்தோம். எங்கேயும் இல்லை. பின்னர் கழிவுநீர் தொட்டி அருகே சென்று பார்க்கும்போது, கம்பி வலை எடுக்கப்பட்டிருந்தது. உடனே கழிவுநீர் தொட்டியை பார்க்கும்போது உள்ளே சிறுமியின் செருப்பு கிடந்தது. இதனைத் தொடர்ந்து கழிவுநீர் தொட்டியில் பார்க்கும்போது குழந்தை உள்ளே விழுந்தது தெரியவந்து மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம் என தலைமை ஆசிரியர் கூறுகிறார்.
மதியம் 2 மணிக்குப் பிறகே ரெஸ்ட் ரூம் செல்வதற்காக வகுப்பறையை விட்டு வெளியே சென்றதாக தலைமை ஆசிரியர் கூறிய நிலையில், சிறுமியை ஒருவர் தூக்கிக் கொண்டு அங்கும் இங்கும் செல்லும் சிசிடிவி காட்சியில் 1.50 எனக் காட்டுகிறது.
ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் சிசிடிவி-யில் 2.40 மணி எனக் காட்டுகிறது. குழந்தையை கழிவுநீர் தொட்டியில் இருந்து தூக்கிய பிறகு சுமார் ஒரு மணி நேரம் தாமதம் ஏன்? என்ற கேள்வி எழும்புகிறது.
மேலும், கழிவு நீர் மேடான பகுதியில் உள்ளது. UKG சிறுமியால் மேடான பகுதியில் ஏற முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது?
அத்துடன் சிறுமியின் ஆடை நணையாமல் இருந்துள்ளது. கழிவுநீர் தொட்டியில் விழுந்தால் எப்படி ஆடை நணையாமல் இருக்கும். மேலும், கழிவுகள் ஆடையில் ஒட்டாமல் இருக்குமா?. ஆடையில் கழிவு ஒட்டியதற்கான அடையாளம் இல்லை.
குழந்தையை தூக்கிச் செல்லும் நபர் எந்தவித பதற்றமின்றி சாதாரணமாக தூக்கிச் செல்கிறார். குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் காட்சி மட்டுமே சிசிடிவி காட்சியில் இடம் பெற்றுள்ளது.
தலைமை ஆசியர் கூறியதற்கும் சிசிடிவி காட்சியில் தெரியும் நேரத்திற்கும் மாறுபாடு உள்ளது. சிறுமி உயிரிழப்பு தொடர்பாக பள்ளி நிர்வாகம் முன்னுக்கு பின் முரண் தகவலை தெரிவிப்பதாகவும், சிறுமி உயிரிழப்பு தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்புவதாகவும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
- தனியார் பள்ளியின் கழிவுநீர்த் தொட்டியில் 3 வயது குழந்தை விழுந்து உயிரிழப்பு.
- பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக செய்யப்படுவதை பள்ளிக் கல்வித்துறை உறுதி செய்யவேண்டும்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியின் கழிவுநீர்த் தொட்டியில் 3 வயது குழந்தை விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பள்ளியில் குழந்தை உயிரிழந்த சம்பவத்திற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து ராமதாஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள புனித மேரி தனியார் பள்ளியில் மூடி உடைந்ததால், திறந்த நிலையில் கிடந்த கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து மூன்றரை வயது குழந்தை உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. குழந்தையை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கழிவுநீர்த் தொட்டியின் இரும்பு மூடி, பல மாதங்களாகவே துருப்பிடித்து உடைந்த நிலையில் கிடப்பதாக பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குழந்தைகள் பயிலும் பள்ளிகளில் உரியப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா? என்பதை தனியார் பள்ளிகள் இயக்ககமும், பிற அரசு அமைப்புகளும் ஆய்வு செய்து உறுதி செய்திருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு அமைப்புகள் அவற்றின் கடமையை செய்யத் தவறியதன் விளைவாகவே மூன்றரை வயது குழந்தை உயிரிழக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.
தங்களின் வளாகத்திலேயே அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் சரியாக செய்யத் தவறிய தனியார் பள்ளிகள் தான், அரசுப் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு நிதி வழங்கப் போவதாக கூறுகின்றன. அதையும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அகமகிழ்ந்து வரவேற்கிறார். அரசுப் பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகளிடம் இருந்து ஏதேனும் உதவி கிடைக்குமா என்று ஏங்குவதைவிடுத்து, தனியார் பள்ளிகளில் குழந்தைகளை பலி வாங்காத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக செய்யப்படுவதை பள்ளிக் கல்வித்துறை உறுதி செய்யவேண்டும்.
மூன்றரை வயது குழந்தையின் உயிரிழப்புக் காரணமான தனியார் பள்ளி நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த குழந்தையின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- 5ம் தேதி அன்று மட்டும் தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம்.
- மாரத்தான் பங்கேற்பாளர்கள் முழுமையாக இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
சென்னையில் வரும் 5ம் தேதி நடைபெற இருக்கும் மாரத்தான் ஓட்டத்தை முன்னிட்டு சிறப்பு மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிர்வாகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னை மாரத்தான் ஓட்டம் வருகின்ற 5.1.2025(ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறுகிறது. மாரத்தான் பங்கேற்பாளர்கள் பயன்பெறும் வகையில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், Fresh Works Chennai Marathon உடன் இணைந்து, அவர்களுக்கு இடையூறு அற்ற எளிமையான பயணத்தை வழங்குவதற்காக, மெட்ரோ ரெயில் சேவைகள், வருகின்ற 05.01.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று அதிகாலை 3.00 மணி முதல் 5.00 மணி வரை 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். அதன் பிறகு ஞாயிற்றுக்கிழமை நேர அட்டவணையின்படி மெட்ரோ ரெயில் சேவைகள் இயக்கப்படும்.
மாரத்தான் பங்கேற்பாளர்கள் ஸ்பான்சர் செய்யப்பட்ட மராத்தான் QR குறியீடு பதியப்பட்ட சிறப்பு பயணசீட்டை பயன்படுத்தி 05.01.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மட்டும் தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம்.
வாகன நிறுத்துமிடத்தில் இந்த QR / Bib குறியீட்டை பயன்படுத்தி பங்கேற்பாளர்களுக்கு அன்று மட்டும் தங்களது வாகனங்களை இலவசமாக நிறுத்திக்கொள்ளலாம்.
மாரத்தான் பங்கேற்பாளர்கள் முழுமையாக இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- பொங்கல் பண்டிகை விடுமுறையை ஒட்டி இயக்கப்படும் சிறப்பு ரெயில் குறித்து அறிவிப்பு.
- ஜன் சதாப்தி சிறப்பு அதி விரைவு ரயில் இயக்கப்படுகிறது.
பொங்கல் பண்டிகை விடுமுறையை ஒட்டி, தாம்பரம் - திருச்சி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரெயில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
பொங்கல் பண்டிகை விடுமுறையை ஒட்டி, தாம்பரம் - திருச்சி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
அதன்படி, ஜனவரி 4, 5, 10, 11, 12, 13, 17, 18, 19ஆம் தேதிகளில் தாம்பரத்தில் இருந்து மாலை 3.30 மணிக்கு ஜன் சதாப்தி சிறப்பு அதி விரைவு ரயில் இயக்கம்; மறு மார்க்கத்தில் திருச்சியில் இருந்து 4, 5, 10, 11, 12, 13, 17, 18, 19 ஆம் தேதிகளில் மாலை 5.35 மணிக்கு சிறப்பு ரயில் தாம்பரத்திற்கு இயக்கப்படுகிறது.
ரெயில் எண். 06190/06191 திருச்சிராப்பள்ளி – தாம்பரம் – திருச்சிராப்பள்ளி ஜன் சதாப்தி அதிவிரைவு சிறப்பு ரயில்களின் நேரம் மற்றும் நிறுத்தங்கள் விவரம் பின்வருமாறு.
திருச்சியில் இருந்து மாலை 5.35 க்கு புறப்படும் இந்த ரயில் திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், திரிபாதிரிப்புலியூர், பண்ருட்டி, விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு வழியாக இரவு 12.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும். அதேபோல் தாம்பரத்திலிருந்து காலை 11.35 மணிக்கு புறப்பட்டு மாலை 3.30 மணிக்கு திருச்சி சென்றடையும்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- பலிக்கு காரணமான அலட்சிய அலுவர்களை கைது செய்யக்கோரியும் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுப்பட்டுள்ளனர்
- அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் உள்ள கழிவுநீர் தொட்டியில் விழுந்து மூன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விக்கிரவாண்டி பகுதியில் உள்ள செயிண்ட் மேரீஸ் என்ற தனியார் பள்ளியில் சிறுமி லியா லெட்சுமி UKG படித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி கழிவுநீர் தொட்டியில் விழுந்து பரிதாபமாக பலியாகினார்.
குழந்தை பலியான சம்பவத்தால் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் குழந்தை பலிக்கு நீதி கேட்டும் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
மேலும் பலிக்கு காரணமான அலட்சிய அலுவர்களை கைது செய்யக்கோரியும் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
- முக்கிய ஆவணங்கனை அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
- பூஞ்சோலை சீனிவாசனின் சிமெண்ட் குடோனில் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
வேலூரில் உள்ள அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையை அடுத்து அவரது வீட்டிற்கு பத்துக்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அமைச்சர் துரைமுருகன் வீடு, அவருக்கு நெருக்கமான பூஞ்சோலை சீனிவாசனின் இல்லத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வந்தனர்
இந்நிலையில், வேலூர் மாவட்டம் பள்ளிக்குப்பத்தில் திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் நடந்து வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றுள்ளது.
இதில், முக்கிய ஆவணங்கனை அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
பூஞ்சோலை சீனிவாசனின் சிமெண்ட் குடோனில் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
திமுக எம்பி கதிர் ஆனந்தின் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.






