என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மன்மோகன் சிங், ஈவிகேஎஸ் இளங்கோவன் என 2 பெரிய தலைவர்களை அடுத்தடுத்து நாம் இழந்துள்ளோம்.
- 10 ஆண்டு கால மன்மோகன் சிங் அமைச்சரவையில் 21 தமிழர்கள் அமைச்சர்களாக இருந்தனர்.
சென்னை:
சென்னை காமராஜர் அரங்கத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஈவிகேஎஸ் இளங்கோவன் திருவுருவ படங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதன்பின்னர் அவர் பேசியதாவது:-
* நெருக்கடியான காலத்தில் நிதி அமைச்சராக பொறுப்பேற்று சரித்திரத்தில் இடம்பிடித்தார் மன்மோகன் சிங். அவரது அமைச்சரவையில் இடம்பெற்று இருந்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
* தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய தூணாக இருந்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
* மன்மோகன் சிங், ஈவிகேஎஸ் இளங்கோவன் என 2 பெரிய தலைவர்களை அடுத்தடுத்து நாம் இழந்துள்ளோம். இருவரின் மறைவு காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல நம் அனைவருக்கும் இழப்பு தான்.
* 10 ஆண்டு காலம் பிரதமர் பொறுப்பில் இருந்து ஆட்சியை நடத்தி காட்டியவர் மன்மோகன்சிங்.
* 10 ஆண்டு கால மன்மோகன் சிங் அமைச்சரவையில் 21 தமிழர்கள் அமைச்சர்களாக இருந்தனர். மிக மிக முக்கியமான அமைச்சரவை பொறுப்புகள் தமிழர்களுக்கு வழங்கப்பட்டது.
* 2004-ல் பிரதமர் நாற்காலி தேடிவந்து சேர்ந்த போதும் அதை மறுத்து மன்மோகன் சிங்குக்கு அளித்தவர் சோனியாகாந்தி.
* வலிமை வாய்ந்த அரசியல் தலைவராக மாற வேண்டும் என்ற எண்ணம் இல்லாத மன்மோகன் சிங் 2 முறை பிரதமரானார்.
* 100 நாள் வேலை, உணவு பாதுகாப்பு சட்டம், லோக்பால் சட்டங்களை மன்மோகன் சிங் கொண்டுவந்தார். சென்னையில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை கொண்டுவந்தார்.
* தாம்பரம் தேசிய சித்த மருத்துவ மையம், திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் மன்மோகன் காலத்தில் கொண்டு வரப்பட்டவை.
* தமிழ்நாட்டின் கனவுகளை மதிக்கக் கூடிய தலைவராக மன்மோகன் சிங் இருந்தார்.
* ஈவிகேஎஸ் இளங்கோவன் என்னை எப்போது சந்தித்தாலும் உடல்நலம் குறித்து விசாரிப்பார் என்றார்.
- கவர்னர் உரை புறக்கணிப்புக்கு கண்டனம்.
- திரளான தி.மு.க.வினர் கவர்னருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை:
இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில் உரையாற்றுவதற்காக கவர்னர் ஆர்.என்.ரவி வந்தார்.
அப்போது தேசிய கீதத்தை முதலில் பாட வில்லை என்று குற்றம்சாட்டி சட்டசபையில் இருந்து வெளியேறினார். மேலும் கவர்னர் மாளிகை சார்பில் வெளியிடப்பட்ட சமூக வலைதள பதிவில் சட்டசபை நடவடிக்கைகள் அவசர காலத்தை நினைவூட்டுவதாகவும் விமர்சித்து இருந்தார். இதற்கு தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் கவர்னரை கண்டித்தும் கவர்னரை திரும்ப பெற வலியுறுத்தியும் இன்று (17-ந்தேதி) அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
சென்னை
அதன்படி ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் சின்னமலையில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது கவர்னருக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
மாவட்ட துணைச் செயலாளர் இ.கருணாநிதி எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர செயலாளர் தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ. வரவேற்று பேசினார். இதில் சுப.வீரபாண்டியன் கண்டன உரை நிகழ்த்தினார்.
ஆர்ப்பாட்டத்தில் செங்கல்பட்டு எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன், அவைத் தலைவர் துரை சாமி, முன்னாள் எம்.எல்.ஏ. து.மூர்த்தி, பொருளாளர் விஸ்வநாதன், படப்பை மனோகரன், பொதுக்குழு உறுப்பினர் மு.ரஞ்சன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், வட்ட கழக நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் காஞ்சிபுரம் பஸ் நிலையம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சுந்தர் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
இதில் காஞ்சிபுரம் எம்.பி. செல்வம், சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ. மற்றும் காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், செய்யூர், மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் கவர்னருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
திருவள்ளூர் தெற்கு மாவட்ட தி.மு..க. சார்பில் திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே அவைத்தலைவர் திராவிட பக்தன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் நகர் மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், மாவட்ட துணை செயலாளர் டாக்டர் குமரன், முன்னாள் நகரமன்ற தலைவர் பாண்டியன், நகர செயலாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், ராஜேந்திரன், பூண்டி அன்பரசு, இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மோதிலால், திலீபன் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திரளான தி.மு.க.வினர் கவர்னருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
- நாட்டின் அரசியலமைப்பை, நாட்டு மக்களை காப்பாற்றும் எங்களுக்கு பாடம் கற்றுத்தரும் நிலையில் நீங்கள் இல்லை.
- ஆளுநர் அரசியல் பேச வேண்டிய தேவையோ அவசியமோ இல்லை.
தமிழ்நாட்டையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்தும், ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தியும் இன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது.
சென்னை சைதாப்பேட்டையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் கனிமொழி, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது எம்.பி. கனிமொழி கூறியதாவது:
* சட்டசபையில் உரையாற்றாமல் சென்றதை குழந்தை போல் காரணம் சொல்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
* தமிழக சட்டசபையில் 3-வது முறையாக உரையாற்றாமல் ஹாட் ட்ரிக் அடித்துள்ளார் ஆளுநர்.
* வீட்டிலிருந்து விடுமுறை கடிதம் எழுதுங்கள். அதை முதல்வர் அனுமதிப்பார்.
* உங்களுக்கும் விடுதலைக்கும் என்ன சம்பந்தம்.
* நாட்டின் அரசியலமைப்பை, நாட்டு மக்களை காப்பாற்றும் எங்களுக்கு பாடம் கற்றுத்தரும் நிலையில் நீங்கள் இல்லை.
* தமிழகத்தில் ஆர்.என்.ரவி ஆளுநராக இருந்தால் பா.ஜ.க.வின் ஓட்டு சதவீதம் கண்டிப்பாக சரியும்.
* கடைசியில் தமிழகத்தில் பா.ஜ.க. ஒரு ஓட்டு கூட வாங்க முடியாத நிலை வரும் என்பதால் தான் ஆளுநரை திரும்ப பெற கூறுகிறோம்.
* தமிழ்நாட்டிற்கு நீங்கள் வேண்டாம் என உங்களின் நலனுக்காகவே சொல்கிறோம்.
* ஆளுநர் அரசியல் பேச வேண்டிய தேவையோ அவசியமோ இல்லை.
* நாவை அடக்குங்கள், உங்கள் நடத்தையை சரி செய்து கொள்ளுங்கள்.
* தமிழகத்தை மதிக்காவிடில் ஓடஓட விரட்டப்படுவீர்கள். அந்த நாள் வெகுவிரைவில் உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.
- தேனி மாவட்டத்தில் அனுமதியில்லாமல் மதுபான விற்பனை நடைபெற்று வருகிறது.
- கஞ்சா பதுக்கி வைத்து விற்கப்படுகிறது.
கூடலூர்:
கூடலூர் அருகே ஒரு வீட்டிலேயே சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக உத்தமபாளையம் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் சூரிய திலகராணிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து உத்தமபாளையம் டி.எஸ்.பி. செங்குட்டு வேலவன் தலைமையில் போலீசார் கருநாக்கமுத்தன்பட்டியில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமாக ஒரு வீட்டில் இருந்து அதிக நபர்கள் வந்த வண்ணம் இருந்ததால் 2வது வார்டு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ராஜா (வயது 55) என்பவரது வீட்டிற்குள் புகுந்து சோதனை நடத்தினர்.
அப்போது ராஜா தனது வீட்டிலேயே சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ராஜாவை கைது செய்த போலீசார் அவர் விற்பனைக்காக குடத்தில் வைத்திருந்த 20 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கூடலூர் அருகில் உள்ள குள்ளப்ப கவுண்டன்பட்டியில் தோட்டத்தில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் 100 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
தற்போது மீண்டும் மக்கள் வசிக்கும் பகுதியிலேயே சாராயம் விற்பனை செய்யப்பட்டு வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தேனி மாவட்டத்தில் அனுமதியில்லாமல் மதுபான விற்பனை தாராளமாக நடைபெற்று வருகிறது. மேலும் வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா பதுக்கி வைத்து விற்கப்படுகிறது. இதனிடையே சாராயம் விற்பனையும் அதிகரித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- நிர்வாகிகளும், தொண்டர்களும் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும்.
- கட்சியின் கொள்கைகள் குறித்தும் மட்டுமே பேச வேண்டும்.
சென்னை:
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கட்சி வளர்ச்சி மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
வருகிற 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இதைத்தொடர்ந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்களின் அரசியல் பணிகள் பற்றி கட்சி தலைவர் விஜய் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது.
கூட்டத்தில் கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி என்.ஆனந்த் பங்கேற்று தொண்டர்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார்.
மக்கள் பணிகளிலும் கட்சி பணிகளிலும் நிர்வாகிகளும், தொண்டர்களும் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும். அனைவரும் ஒன்றுபட்டு உழைத்து வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களை அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து கட்சி தலைவர் விஜய்யை முதல் வராக்குவதே நமது லட்சியம் என தொண்டர்கள் மத்தியில் புஸ்சி ஆனந்த் பேசினார்.
இந்த நிலையில் விஜய் அறிவுறுத்தலின் பேரில் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் கட்சி நிர்வாகிகளுக்கு புதிய உத்தரவு பிறப்பித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
உத்தரவில் தங்கள் மாவட்டங்களில் தாங்களும், தங்களுக்குக் கீழ் உள்ள கழக நிர்வாகிகள் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளிலும், கழக நிர்வாகிகள் மேடையில் மைக்கில் பேசும் போது நம் கட்சியின் வளர்ச்சி குறித்தும், தங்கள் தொகுதி வளர்ச்சி குறித்தும், தங்கள் தொகுதியில் உள்ள பிரச்சனைகள் மற்றும் நம் கட்சியின் கொள்கைகள் குறித்தும் மட்டுமே பேச வேண்டும்.
எக்காரணத்தை கொண்டும் அரசியல் பேசுகிறோம் என்ற எண்ணத்தில் மேடையிலும் பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும் மற்றவர்களை சுட்டிக்காட்டி அரசியல் பேசுவதையோ அல்லது மற்றவர்களை தாக்குவதை போல பேசுவதையோ தவிர்க்க வேண்டும்.
நம் கழக நிர்வாகிகள், தோழர்கள் எந்த மேடையில் பேசினாலும் அது மக்களின் பிரச்சினைகள் மற்றும் நமது நாட்டின் வளர்ச்சிக்காக மட்டுமே பேச வேண்டும் என்று தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.!
இவ்வாறு நிர்வாகி களுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
- அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் யார் அந்த சார் என்ற பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர்.
- நேற்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் இன்றைய சட்டசபை நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.
சென்னை:
தமிழக சட்டசபை கூட்டம் நேற்று தொடங்கிய போது அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தங்களது சட்டையில் "யார் அந்த சார்?" என்ற பேட்ஜ் அணிந்து இருந்தனர். அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் 23-ந்தேதி மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைதான ஞானசேகரன் தவிர மேலும் ஒருவருக்கு தொடர்பு இருப்பதை சுட்டிக்காட்டும் வகையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் "யார் அந்த சார்" பேட்ஜை அணிந்து இருந்தனர்.
இன்று (செவ்வாய்க்கிழமை) தமிழக சட்டசபையின் 2-வது நாள் கூட்டம் நடந்த போதும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் யார் அந்த சார் என்ற பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர். இதுபற்றி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூறுகையில், "அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் யாரையோ காப்பாற்ற முயற்சி செய்கிறார்கள். அதை நாட்டு மக்களுக்கு சுட்டிகாட்டவே நாங்கள் இந்த பேட்ஜ் அணிந்து வருகிறோம்" என்றனர்.
இந்த நிலையில், இன்று நடைபெற்ற தமிழக சட்டசபையின் 2-வது நாள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை. நேற்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் இன்றைய சட்டசபை நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.
எடப்பாடி பழனிசாமி கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வருவதாகவும், அதன் காரணமாகவே அவர் சட்டசபை நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்றும் அ.தி.மு.க.வினர் தெரிவித்துள்ளனர்.
- நுரையீரலை பாதிக்கும் புது வகையான வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
- ஓசூரில், எந்த பாதிப்பும் கண்டறியப்பட வில்லை.
ஓசூர்:
சீனாவில் கண்டறியப்பட்டுள்ள எச்.எம்.பி.வி. என்ற நுரையீரலை பாதிக்கும் புது வகையான வைரஸ் தொற்று, கர்நாடகா மாநிலம், பெங்களூருவை சேர்ந்த, 8 மாதம், 3 மாத குழந்தை என இருவருக்கு இருப்பது நேற்று கண்டறியப்பட்டுள்ளது.
அந்த குழந்தைகளுக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. எச்.எம்.பி.வி., வைரஸ் தொற்று, ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடிய வாய்ப்பு உள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூருக்கு மிக அருகாமையிலுள்ள, தமிழக எல்லையான ஓசூரை சேர்ந்த மக்கள் பல ஆயிரம் பேர், பல்வேறு தேவைகளுக்காக தினமும் பெங்களூரு சென்று வருகின்றனர்.
இந்நிலையில், பெங்களூருவில் எச்.எம்.பி.வி., வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளதால், தமிழக எல்லையை உஷார்படுத்தி, ஓசூர் மாநகராட்சி நிர்வாகம், நோய் தொற்று தடுப்பு பணிகளை மேற்கொள்ள கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து, ஓசூர், மாநகர நல அலுவலர் அஜிதா கூறுகையில், ஓசூரில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்படுபவர்கள் மற்றும் காய்ச்சலுக்கு வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்வோர் குறித்த விபரங்கள் பெறப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை ஓசூரில், எந்த பாதிப்பும் கண்டறியப்பட வில்லை என்றார்.
- நீர் இருப்பு 89.09 டி.எம்.சி.யாக உள்ளது.
- அணைக்கு வினாடிக்கு 748 கன அடி வீதம் நீர் வந்து கொண்டிருக்கிறது.
சேலம்:
காவிரி டெல்டா பாசன பகுதிகளில் மழை பெய்து வந்ததால் கடந்த 31-ந்தேதி மேட்டூர் அணை ஒரே ஆண்டில் 3-வது முறையாக தனது முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணைக்கு வருகின்ற தண்ணீரை விட, கூடுதலாக அணையில் இருந்து தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வந்தது.
கடந்த 3-ந்தேதி முதல் அணையிலிருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 12,000 கன அடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 300 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வந்தது. நீர்வரத்தை விட தினமும் கூடுதலாக நீர் திறந்து விடப்பட்டதால் மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து கொண்டே வந்தது.
நேற்று காலை 117.87 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 117.21 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 89.09 டி.எம்.சி.யாக உள்ளது.
இந்த நிலையில் அணையின் நீர் இருப்பை கருத்தில் கொண்டு பொதுப்பணி மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் டெல்டா பாசனத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவை குறைக்க முடிவு செய்தனர். அதன்படி இன்று காலை முதல் நீரின் அளவை குறைத்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விட்டுள்ளனர். வழக்கம்போல் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 300 கன அடி வீதம் நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வினாடிக்கு 748 கன அடி வீதம் நீர் வந்து கொண்டிருக்கிறது.
- திருப்பத்தூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவக் கல்லூரியாக தரம் உயர்த்தப்படுவதற்கு தகுதியுடைய மருத்துவமனை.
- அரசு மருத்துவமனைகளைத் தேடி வரும் மக்களுக்கு தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
திருப்பத்தூரில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் சில நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தை, மருத்துவம் அளிப்பதற்கும், கண்காணிக்கவும் போதிய மருத்துவர்கள் இல்லாததால் உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது. குழந்தையை இழந்து வாடும் பெற்றோர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
திருப்பத்தூரை அடுத்த பெரிய முக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த திவ்யதர்ஷினி என்ற ஒன்றரை வயது குழந்தை கடுமையான காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டுள்ளது. அக்குழந்தையின் இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது கண்டறியப்பட்டதை அடுத்து, அவசர சிகிச்சைப் பிரிவில் மருத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அக்குழந்தையை கவனிக்க அவசர சிகிச்சைப் பிரிவில் போதிய மருத்துவர்கள் இல்லாத நிலையில் செவிலியர்கள் மட்டுமே மருத்துவம் அளித்து வந்துள்ளனர். போதிய கவனிப்பும், ஆய்வும் இல்லாத நிலையில் பாக்டீரியா தாக்குதலால் குழந்தை இறந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்திருக்கிறது.
திருப்பத்தூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவக் கல்லூரியாக தரம் உயர்த்தப்படுவதற்கு தகுதியுடைய மருத்துவமனை ஆகும். அப்படியானால் அங்கு எவ்வளவு மருத்துவர்கள் பணியாற்ற வேண்டும், எத்தகைய கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது எளிய மனிதர்களுக்கும் கூட தெரியும். ஆனால், தேவையான எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு மருத்துவர்கள் கூட இல்லை என்று கூறப்படுகிறது. இன்னும் கேட்டால் அந்த மருத்துவமனையில் தாம் ஒரு மருத்துவர் மட்டுமே இருப்பதாக அந்தக் குழந்தைக்கு மருத்துவம் அளித்த மருத்துவர் பெற்றோரிடம் கூறியிருக்கிறார். இது குறித்து தமிழக அரசு தான் விளக்கமளிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் 5 ஆயிரத்திற்கும் கூடுதலான மருத்துவர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கமே குற்றஞ்சாட்டி, போராட்டமும் நடத்தியுள்ளது. அரசு மருத்துவர் காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கத் தவறியதன் விளைவாகத் தான் அப்பாவி ஏழைக் குழந்தை உயிரிழக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஓர் அரசு அதிக கவனம் செலுத்த வேண்டிய 3 முதன்மைத் துறைகளில் மருத்துவத்துறையும் ஒன்று. அத்துறையில் அரசு காட்டும் அக்கறை இது தானா? குழந்தையின் இறப்புக்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் மருத்துவம் பயனளிக்காமல் ஒரு குழந்தை கூட இறக்கக்கூடாது என்று கலைஞர் காலத்திலிருந்தே முதலமைச்சராக இருப்பவர்கள் பெருமிதம் தெரிவித்து வருகின்றனர். ஆனால், களத்தில் தான் நிலைமை வேறாக இருக்கிறது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மருத்துவத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் மிக வேகமாக சீரழிந்து கொண்டிருக்கின்றன. இதற்காக தமிழக அரசு வெட்கப்பட வேண்டும். இனியாவது அரசு மருத்துவமனைகளில் போதிய எண்ணிக்கையில் மருத்துவர்களை நியமித்து அரசு மருத்துவமனைகளைத் தேடி வரும் மக்களுக்கு தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
- இந்தக் குழு விண்ணப்பங்களை பரிசீலித்து, தகுதியான 3 பேரின் பெயர்களை கவர்னருக்கு பரிந்துரைக்கும்.
- துணைவேந்தர் நியமனத்தில், யுஜிசியின் விதிகளை பின்பற்ற வேண்டும் என்பது கட்டாயம்.
பல்கலைக்கழகங்களில் துணை வேந்தரை நியமிப்பது தொடர்பாக தமிழக அரசுக்கும், கவர்னர் ஆர்.என்.ரவிக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது.
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுவில், பல்கலைக்கழக செனட் உறுப்பினர்கள், தமிழக அரசின் பிரதிநிதி ஒருவர் மற்றும் கவர்னர் தரப்பில் ஒருவர் இடம்பெறுவர். இந்தக் குழு விண்ணப்பங்களை பரிசீலித்து, தகுதியான 3 பேரின் பெயர்களை கவர்னருக்கு பரிந்துரைக்கும். அதில் ஒருவரை கவர்னர் நியமிப்பது வழக்கம். இந்தச் சூழலில், துணைவேந்தர் தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) பிரதிநிதி ஒருவரை சேர்க்க வேண்டும் என்று கவர்னர் ரவி ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தார்.
ஆனால், துணைவேந்தர் நியமனத்தில், யுஜிசியின் விதிகளை பின்பற்ற வேண்டும் என்பது கட்டாயம். தேடுதல் குழுவில் யுஜிசியின் பிரதிநிதி ஒருவர் சேர்க்கப்பட வேண்டும் என்பது கட்டாயமில்லை என்று தமிழக அரசு தெரிவித்தது.
இந்த நிலையில், பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன தேடுதல் குழுவை வேந்தரான கவர்னரே முடிவு செய்வார் என்று யுஜிசி வெளியிட்டுள்ள புதிய விதிகளின் வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த புதிய விதியில், தலைவராக கவர்னர் பரிந்துரைப்பவரும், உறுப்பினராக யுஜிசி பரிந்துரைப்பவரும் இருப்பார்கள். மற்றொரு உறுப்பினராக பல்கலைக்கழக உறுப்பினர் பரிந்துரைப்பவர் இருப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
இதனால் இந்த புதிய விதிமுறையால் மாநில அரசு பரிந்துரைக்கும் உறுப்பினர் இனி இடம்பெற முடியாது என்பது உறுதியாகி உள்ளது.
- சிறு குழந்தைகளை கூட்டங்களுக்குள் கொண்டு செல்வதையும் தவிர்க்க வேண்டும்.
- முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும்.
சென்னை:
புதிதாக பரவி வரும் எச்.எம்.பி.வி. வைரஸ் தொற்றும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக சுகா தாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
இந்த வைரஸ் புதியதல்ல. ஏற்கனவே நம்மோடு இருப்பதுதான். கடந்த 2001-ல இந்தியாவில் கண்டு பிடிக்கப்பட்டது. ஆனால் அதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பே உலகில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
இந்த தொற்று ஏற்பட்டால் அதிகபட்சம் 5 நாட்களுக்குள் குணமாகி விடும். தமிழகத்தில் பாதிக் கப்பட்ட 2 குழந்தைகளுக்கும் எந்த ஆபத்தும் இல்லை நலமாக இருக்கிறார்கள். பொதுவாகவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு இந்த தொற்று ஏற்பட்டால் நுரையீரல் பாதிக்கும்.
வைரஸ் தொற்றுக்களை நினைத்து பீதி அடைய தேவையில்லை. இனி நாம் வைரஸ்களோடு வாழ பழகி கொள்ள வேண்டும் என்று விஞ்ஞானி சவுமியா சாமிநாதன் குறிப்பிட்டதைபோல் நாம்தான் பாதுகாப்பு வழிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் மக்கள் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். சிறு குழந்தைகளை கூட்டங்களுக்குள் கொண்டு செல்வதையும் தவிர்க்க வேண்டும்.
கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவி விட்டு சாப்பிடுவது, வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பும் போது கைகளை சுத்தம் செய்வது போன்ற பழக்கங்களை கடைபிடிக்க வேண்டும். பொதுவாகவே மார்க்கெட் பகுதி, மக்கள் கூடும் இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும்.
இந்த வைரசை பற்றி பீதி அடைய வேண்டாம். விழிப்புணர்வும், வழிமுறைகளை கடைபிடிப்பதும் அவசியம். பொது சுகாதாரத்துறை சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஏராளமானவர்கள் கும்பமேளாவில் கலந்து கொள்ள செல்வார்கள்.
- கட்டணத்திற்கு ஏற்ப ரெயில் பயண வகுப்பு, தங்குமிடம், உள்ளூர் போக்குவரத்து வசதி ஆகியவை வழங்கப்படுகிறது.
நெல்லை:
உத்தரபிரதேசம் மாநிலம் காசியில் வருகிற 13-ந்தேதி முதல் பிப்ரவரி 26-ந்தேதி வரை 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் கும்பமேளா நடைபெற இருக்கிறது.
இந்த விழாவில் காசி கங்கை நதியில் புனித நீராட பொதுமக்கள் விரும்புவார்கள். அவ்வாறு நீராடினால் புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதனால் ஏராளமானவர்கள் கும்பமேளாவில் கலந்து கொள்ள செல்வார்கள்.
இந்த பயணிகளின் வசதிக்காக நெல்லையில் இருந்து தென்காசி, ராஜபாளையம், மதுரை, திருச்சி, தஞ்சாவூர் வழியாக காசிக்கு சுற்றுலா ரெயில் இயக்க இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி சிறப்பு சுற்றுலா ரெயில் நெல்லையில் இருந்து அடுத்த மாதம் 5-ந்தேதி அன்று அதிகாலை 1 மணிக்கு புறப்பட்டு மதுரை வந்து, மதுரையில் இருந்து அதே நாளில் காலை 6 மணிக்கு காசிக்கு புறப்படுகிறது.
இந்த ரெயில் பிப்ரவரி 7-ந்தேதி மதியம் 12.30 மணிக்கு காசி பனாரஸ் சென்றடைகிறது. அன்று மாலை கங்கா ஆரத்தி பார்த்து மறுநாள் முழுவதும் பிராக்யாராஜ் பகுதியில் சுற்றுலா செல்லுதல், பிப்ரவரி 9-ந்தேதி காசி விஸ்வநாதர், விசாலாட்சி, காலபைரவர், சாரநாத் கோவில்களுக்கு சுற்றுலா செல்லுதல், 10-ந்தேதி அயோத்தியா சரயு நதி மற்றும் ராம ஜென்ம பூமி கோவிலில் வழிபாடு செய்து அன்று இரவு நெல்லைக்கு புறப்படும்படி சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த சுற்றுலா ரெயில் பிப்ரவரி 13-ந்தேதி அதிகாலை 2.50 மணிக்கு மதுரை வந்து, காலை 7.30 மணிக்கு நெல்லை வந்தடைகிறது. இந்த ரெயில் தென்காசி, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர் போன்ற ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த சுற்றுலாவுக்கு ரெயில் பயண கட்டணம், தங்குமிடம், பயண வழிகாட்டி, பாதுகாப்பு அலுவலர், தென்னிந்திய உணவு வகைகள், உள்ளூர் சுற்றுலா போக்குவரத்து உட்பட குறைந்த கட்டணமாக நபர் ஒருவருக்கு ரூ.26 ஆயிரத்து 850 வசூலிக்கப்படுகிறது. குளிர்சாதன ரெயில் பெட்டி பயணம் மற்றும் உயர் சிறப்பு வசதிகளுக்கு கட்டணமாக நபர் ஒருவருக்கு ரூ.38 ஆயிரத்து 470 மற்றும் ரூ.47 ஆயிரத்து 900 வசூலிக்கப்படுகிறது. கட்டணத்திற்கு ஏற்ப ரெயில் பயண வகுப்பு, தங்குமிடம், உள்ளூர் போக்குவரத்து வசதி ஆகியவை வழங்கப்படுகிறது.






