என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • கொளத்தூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
    • அப்போது, மக்களுக்கு பணியாற்றவே 7-வது முறை ஆட்சிக்கு வருவோம் என தெரிவித்தார்.

    சென்னை:

    கொளத்தூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:

    என்னையும், உங்களையும் எப்படி பிரிக்க முடியாதோ, அதேபோல் தி.மு.க.வையும் பொங்கலையும் பிரிக்க முடியாது. உணர்வோடும் உற்சாகமாகவும் கொண்டாடக் கூடிய பண்டிகை தான் இந்த பொங்கல்.

    நம்முடைய ஆட்சி மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கும், அதற்கு நீங்கள் அனைவரும் உறுதுணையாக இருக்கவேண்டும். இருப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

    அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் நான் சட்டமன்றத்திலேயே கூறி இருக்கிறேன். ஏற்கனவே 5 முறை கருணாநிதி தலைமையில் ஆட்சிக்கு வந்துவிட்டோம். 6-வது முறை என் தலைமையில் ஆட்சிக்கு வந்திருக்கிறோம். 7-வது முறையும் ஆட்சிக்கு நாம்தான் வருவோம் என்று சொல்லி இருக்கிறேன்.

    உறுதியாக சொல்கிறேன்... மக்களுக்கு பணியாற்றவே, தொண்டாற்றவே 7-வது முறை ஆட்சிக்கு ஆட்சிக்கு வருவோம் என்று கூறுகிறேன் என தெரிவித்தார்.

    • பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    • பொதுமக்களின் வசதிக்காக சில கேஷ் கவுண்டர்கள் திறக்கப்படும்.

    சென்னை:

    வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    பொங்கல் விடுமுறையின் போது பார்வையாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் சுவாரஸ்ய அனுபவத்தை உறுதி செய்வதற்காக, உயிரியல் பூங்கா நிர்வாகம் மற்ற துறைகளுடன் ஒருங்கிணைந்து பல சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூங்கா (செவ்வாய்கிழமை) செயல்படும். 14.01.2025 பார்வையாளர்கள் ஆன்லைன் தளங்கள் (UPI, WhatsApp) மற்றும் டிக்கெட் கவுன்டர்கள் மூலம் டிக்கெட்டுகளை வாங்கலாம். மேலும் பொதுமக்களின் வசதிக்காக சில கேஷ் கவுண்டர்கள் திறக்கப்படும்.

    உயிரியல் பூங்காவிற்குள் இரு சக்கர வாகனங்களுக்கும், 500 மீட்டர் தொலைவில் கேளம்பாக்கம் சாலையில் ஆட்டோ, கார், வேன், கனரக வாகனங்கள் நிறுத்துவதற்கும் பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    வாகன நிறுத்துமிடத்திலிருந்து நுழைவாயிலுக்கு பார்வையாளர்களை ஏற்றிச் செல்ல இலவச வாகன வசதி சேவை செய்யப்பட்டுள்ளது.

    ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோரின் தொடர்பு எண்ணைக் குறிப்பிடும் கை வளையம் வழங்கப்படும்.

    பார்வையாளர்கள் பிளாஸ்டிக் நிரம்பிய உணவுப் பொருட்களையோ பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களையோ கொண்டு வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மதுபானம் மற்றும் ஆயுதங்கள் போன்ற பொருட்கள் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளன. இந்த பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட பூங்கா நிர்வாகம் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறது என தெரிவித்துள்ளது.

    • 20 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 5746 ஏக்கர் பரப்பளவில் புதிய விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
    • விமான நிலையம் அறிவிப்பு வெளியான நாள் முதல் ஏகனாபுரம் கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 20 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 5746 ஏக்கர் பரப்பளவில் புதிய விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

    இதற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். விமான நிலையம் அறிவிப்பு வெளியான நாள் முதல் ஏகனாபுரம் கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்நிலையில், பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் கிராம மக்களை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் விரைவில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராடி வரும் மக்களை தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சந்திக்க அனுமதி கோரி காவல்துறையிடம் தவெக நிர்வாகிகள் மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

    அதன்படி, வரும் ஜனவரி 19, 20 ஆகிய தேதிகளில் சந்திக்க அனுமதி அளிக்க வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    அரசியல் கட்சி அறிவித்த பிறகு, விஜய் முதல்முறையாக களத்திற்கு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தேர்தல் பணிக்குழு அமைத்து காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
    • திமுக வேட்பாளர் வெற்றிக்காக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தல் பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - தேர்தல் பணிக்குழு அமைத்து காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    05.02-2025 அன்று நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் திரு வி.சி. சந்திரகுமார் அவர்களி வெற்றிக்காக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில் கீழ்கண்ட தேர்தல் பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

    கே.வி.தங்கபாலு, க. திருநாவுக்கரசர், எம். கிருஷ்ணசாமி, கே.எஸ்.அழகிரி, எஸ் ராஜேஷ்குமார் எம்எல்ஏ, செல்வி எஸ். ஜோதிமணி, எம்.பி., டாக்டர் எம்.கே.விஷ்ணுபிரசாத் எம்.பி., கார்தி ப சிதம்பரம், எம்.பி., கே. கோபிநாத் எம்.பி., விஜய் வசந்த், எம்.பி., டாக்டர் சி.ராபர் ப்ரூஸ் எம்.பி., சரிகாந்த் செந்தில், எம்.பி., செல்வி சுதா ராமகிருஷ்ணன், எம்.பி., கே.ஆர். ராமசாமி, ரூபி ஆர். மனோகரன், எம்.எல்.ஏ., ஏ.ஆர்.முனிரத்தினம், எம்.எல்.ஏ., ஜெ.ஜி. பிரின்ஸ் எம்எல்ஏ, ஜெ.எம்.எச். ஹசன் பௌலானா, எம்.எல்.ஏ., எஸ். ராஜ்குமார். எம்.எல்.ஏ., ஆர்.கணேஷ், எம்.எல்.ஏ., எஸ். பழனிநாடார், எம்.எல்.ஏ., ஆர். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., துரை சந்திரசேகர், எம்.எல்.ஏ., எஸ். அமிர்தராஜ், எம்எல்ஏ., நியமிக்கப்பட்டுள்ளனர்.

    எஸ்.தி. ராமச்சந்திரன், எம்.எல்.ஏ., தாரகை சுத்பர்ட், எம்.எல்.ஏ., எஸ். மாங்குடி, எம்.எல்ஏ., ஆர். கருமாணிக்கம், எம்.எல்.ஏ., ஏ.எம்.எஸ்.ஜி. அசோகார், எம்.எல்.ஏ., டி. திருச்செல்வன், எம்.பி. சரவணன், மக்கள் ஜி. ராஜன், ஆர்.எம்.பழனிசாமி, சஞ்சய் சம்பத் எல்.முத்துக்குமார், பி.என்.நல்லுசாமி, ஈ.ஆர். ராஜேந்திரன், வி.எஸ், காளிழுத்து, வெளில் பிரசாத், சாரதா தேவி, சித்ரா விஸ்வநாதன், கே.பி. முத்துக்குமார், ஆர். சிவகுமார், ராஜேஷ் ராஜப்பா, கே.பி.உதயகுமரன், ஞானதிபன், கே.ஏ. கானப்ரியா உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • கொளத்தூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
    • சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார்.

    சென்னை கொளத்தூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

    சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார்.

    பின்னர், நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    என்னையும், கௌத்தூர் தொகுதியையும் பிரிக்க முடியாது. அதுபோல திமுகவையும், பொங்கலையும் பிரிக்க முடியாது.

    பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட 17-ம் தேதியும் விடுமுறை அறிவித்தோம்.

    பொங்கல்தான் தமிழர்களுக்கான பண்டிகை என்றும் பெரியார் கூறினார். பொங்கல் பரிசாக திருக்குறளை தருகிறேன் எனக்கூறியவர் பெரியார். தமிழுக்காகவும், தமிழ் சமூகத்திற்காகவும் கடைசிவரை பாடுபட்டவர் பெரியார். பெண்களின் உரிமை உள்ளிட்டவற்றுக்காக பெரியார் தொடர்ந்து போராடி வந்தார். இன்று யார் யாரோ பெரியார் குறித்து பேசி வருகின்றனர். பெரியார் குறித்து அவதூறாக பேசுவோர் பற்றி பேசி, அவர்களை அடையாளம் காட்ட விரும்பவில்லை.

    மகளிர் உரிமைத்தொகை, பெண்கள் இலவச பயணம் போன்ற திட்டங்களால் பெண்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர். தேர்தல் வாக்குறுதிகளில் சிலவற்றை இன்னும் நிறைவேற்றவில்லை. அதை ஒப்புக்கொள்கிறேன். நிறைவேற்றாத ஒன்று, இரண்டு வாக்குறுதிகளையும் விரைவில் நிறைவேற்றுவோம். அதில் பின்வாங்க மாட்டோம்.

    பதவி சுகத்திற்காக இல்லாமல், மக்கள் பணியாற்றவே முதல்வராகியுள்ளேன். தமிழ்நாட்டிற்கும், தமிழ் சமூகத்திற்கும் என் உடலில் உயிர் இருக்கும் வரை உழைப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னை பெருநகர காவல் துறை விரிவான தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    • குழந்தைகள் காணாமல் போனால் உடனடியாக மீட்பதற்கு காவல் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

    சென்னை பெருநகர காவல் ஆணையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

    சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில், பொதுமக்கள் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் காணும் பொங்கலை கொண்டாடுவதற்கு 16,000 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் மூலம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    16.01.2025 அன்று காணும் பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் குடும்பத்தாருடன் மெரினா கடற்கரை உள்ளிட்ட இதர பொழுது போக்கு இடங்களுக்கு அதிகளவில் வருவதால், எவ்வித அசம்பாவிதமும் நிகழா வண்ணம் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணும் பொங்கலை கொண்டாடுவதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின் பேரில், விரிவான பாதுகாப்பு ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின் பேரில் 16,000 காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் சுமார் 1,500 ஊர்க்காவல் படையினரும் மூலம் காணும் பொங்கல் கொண்டாட்டத்தின்போது பாதுகாப்பு அளிக்க சென்னை பெருநகர காவல் துறை விரிவான தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    1. மெரினா கடற்கரை (உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை) சென்னையில் காணும் பொங்கலை முன்னிட்டு உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரை 3 தற்காலிக காவல் கட்டுப்பாட்டறைகள் (Temporary Mnl Control room) அமைக்கப்பட்டும், உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையிலுள்ள 7 சர்வீஸ் சாலைகளின் நுழைவு வாயில்களில் காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டும். அவசர மருத்துவ உதவிக்காக மருத்துவக் குழுவினருடன் 8 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் மீட்புப் பணிக்காக தீயணைப்பு வீரர்கள் அடங்கிய 2 தீயணைப்பு வாகணங்கள் ஆகியவை தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படும். இவை தவிர மீட்புப் பணிக்காக மோட்டார் படகுகள் மற்றும் சுமார் 200க்கும் மேற்பட்ட நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படுவார்கள்.

    2. கடற்கரை மணற்பரப்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள்: உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையில் உள்ள மணற்பரப்பில் 13 தற்காலிக காவல் கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு உயர் கோபுரத்திலும் 3 பேர் கொண்ட காவல் குழுவினர் பணியமர்த்தப்படுவர். அவர்களுக்கு வான்தந்தி கருவி (Walky Talky), மெகா போன். பைனாகுலர் ஆகியவை வழங்கப்பட்டு, வாட்சப் குழு (WhatsApp Group) அமைக்கப்பட்டும், பைனாகுலர் மூலம் காவலர்கள் கண்காணித்து மெகா போன் மூலம் பொதுமக்களுக்கு அறிவுரைகள் வழங்கியும், கட்டுப்பாட்டறைக்கு வான் தந்தி கருவி மூலமும், வாட்சப் குழுவிலும் உடனுக்குடன் தகவல்களை வழங்குவார்கள். மேலும், 12 முக்கிய இடங்களில் கூடுதலாக 13 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, தற்காலிக கட்டுப்பாட்டறையில் உள்ள அகன்ற திரைகளில் கண்காணிக்கும் பணி மேற்கொள்ளப்படும்.

    காணும் பொங்கலன்று பொதுமக்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், கடற்கரையோரம் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். மேலும், குதிரைப்படையினர் மற்றும் மணற்பரப்பில் செல்லக்கூடிய 3 All Terran Vehicle மூலம் கடற்கரை மணற்பரப்பில் காவல் ஆளினர்களால் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு திருட்டு மற்றும் குற்ற சம்பவங்கள் நடை பெறாமல் கண்காணிக்கப்படுவர்.

    சென்னை பெருநகர காவல் மற்றும் கடலோர காவல் குழுமத்தின் கடற்கரை உயிர் காக்கும் பிரிவின் (Anti Drowning team) 85 காவல் ஆளிநர்கள் கடற்கரை ஒட்டிய பகுதிகளில் பொதுமக்கள் கடலில் இறங்காத வண்ணம் தீவிரமாக கண்காணிக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

    3. பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை: பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் 1 தற்காலிக காவல் கட்டுப்பாட்டறை. 3 தற்காலிக காவல் கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, காவல் ஆளிநர்களால் பைனாகுலர் மூலம் கண்காணிக்கப்படுவதுடன், ஒலிபெருக்கி மூலம் அறிவுரைகள் வழங்கப்படும். மேலும், குதிரைப்படை மற்றும் சுற்றுக் காவல் ரோந்து ஊகணங்கள் மூலம் ரோந்து வரப்பட்டு, கண்காணிக்கப்படுவதுடன். ஒலிபெருக்கி மூலம் அவ்வப்போது பாதுகாப்பு குறித்த அறிவுரைகளும் வழங்கப்படும். 2 ஆம்புலன்ஸ் வாகனங்கள். தீயணைப்பு வாகனம். அப்பகுதியை சேர்ந்த நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் மற்றும் மோட்டார் படகுகள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படும்.

    4.முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள்:

    (I) குழந்தைகள் காணாமல் போனால் உடனடியாக மீட்பதற்கு காவல் அடையாள அட்டை:

    கடற்கரைக்கு பெற்றோருடன் வரும் குழந்தைகள் கூட்ட நெரிசலில் காணாமல் போனால் அவர்களை உடனடியாக மீட்பதற்காக சென்னை பெருநகா காவல் மூலம் தயாரிக்கப்பட்ட கைகளில் கட்டப்படும் பேண்ட், அடையாள அட்டைகள் காவல் உதவி மையங்கள் மற்றும் தற்காலிக காவல் கட்டுப்பாட்டறைகளில் வைக்கப்பட்டுள்ளது. இந்த அடையாள அட்டைகள் குழந்தைகளுடன் வரும் பெற்றோர்களிடம் விபரங்கள் பெறப்பட்டு, அடையாள அட்டையில் குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர், முகவரி மற்றும் ஆகியவற்றை எழுதி, குழந்தைகளின் கைகளில் கட்டி அனுப்பி வைக்கப்படுவர். ஆகவே குழந்தைகளுடன் வரும் பெற்றோர் மேற்கூறிய காவல் உதவி மையங்களில் (Wrist ID Band) அடையாள அட்டையை பெற்றுக்கொண்டு கடற்கரைக்குள் செல்லுமாறு அறிவுறுத்தப்படுவர்.

    (II)டிரோன் கேமராக்கள்:

    மெரினா கடற்கரை மணற்பரப்புகளில் 4 டிரோன் கேமராக்கள் (Drone Camera) மற்றும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை மணற்பரப்புகளில் 4 டிரோன் கேமராக்கள் என மொத்தம் 8 டிரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்படும். மேலும், அதிக திறன் கொண்ட டிரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு அவைகள் மூலம் கடலோர மணற்பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை வாசகங்கள் ஒலிபரப்பப்படும்.

    5. இதர பாதுகாப்பு ஏற்பாடுகள்:

    காணும் பொங்கலை முன்னிட்டு, பொதுமக்கள் அதிகளவு கூடும் மற்ற முக்கிய இடங்களான கிண்டி சிறுவர் பூங்கா, தீவுத்திடலில் உள்ள தமிழக அரசு சுற்றுலா பொருட்காட்சி, செம்மொழி பூங்கா உள்ளிட்ட கேளிக்கை பூங்காக்கள் (Amusement Park) மற்றும் இதர இடங்களிலும் தற்காலிக காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியுடனும் காணும் பொங்கலை கொண்டாட சிறப்பான முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், வணிக வளாகங்கள் (Malls) மற்றும் திரையரங்குகள் கொண்ட வணிக வளாகங்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னை பெருநகர காவல் துறை சார்பில் முக்கியமான இடங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களில் சிறப்பு வாகன தணிக்கை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, குடிபோதையில் வாகனம் ஓட்டி வருபவர்கள் மற்றும் போக்குவரத்து விதிறேல்களில் ஈடுபடுவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    6. சென்னை பெருநகர போக்குவரத்து காவல்:

    காணும் பொங்கலன்று சாலை பாதுகாப்பு குழுக்கள் இருசக்கர வாகனத்தில் ரோந்து சென்று பொதுமக்களுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வாகன ஒட்டிகளுக்கு உரிய அறிவுரைகள் மற்றும் தேவையான உதவிகளையும் வழங்குவார்கள். இது மட்டுமின்றி கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை. துரைப்பாக்கம், மதுரவாயல் பைபாஸ் சாலை, GST ரோடு மற்றும் இதர சாலைகளில் இருசக்கர வாகன பந்தயம் (Blice Race) தடுப்பு நடவடிக்கையாக கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டு பைக் சாகசங்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து முக்கிய சாலைகள் மற்றும் சந்திப்புகளில் போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் மூலம் போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும். சென்னை பெருநகர காவல்துறையின் அறிவுரைகள் மற்றும் கட்டுப்பாடுகளை கடைபிடித்து பொதுமக்கள் மகிழ்ச்சியான பொங்கலை கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஜெயபாண்டியன் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.
    • சிறப்பு எஸ்.ஐ. ஜெயபாண்டியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்

    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் 10 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயபாண்டியன், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

    கார்த்திகை தீபத்தின் போது திருப்பரங்குன்றம் கிரிவலப்பாதையில் பாதுகாப்பு பணியில் இருந்த ஜெயபாண்டியன், அங்கு கழிவறைக்குச் சென்ற 10 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்

    இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில், சிறார் நலன் பாதுகாப்பு அமைப்பினர் மற்றும் மகளிர் போலீசார் சிறுமியிடம் நடந்தவை குறித்து கேட்டறிந்தனர். இதனை தொடர்ந்து ஜெயபாண்டியன் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.

    இதனிடையே காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயபாண்டியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.  

    • முதலமைச்சர் உத்தரவின் பேரில் 21,904 சிறப்பு பேருந்துகள் தமிழ்நாடு முழுவதும் இயக்கப்பட்டு வருகின்றன.
    • சென்னையின் நான்கு பேருந்து முனையங்களில் இருந்து தமிழ்நாட்டின் பிற பகுதிக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதிலும் 44,580 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படஉள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

    தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பெருவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டு பொது மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சிரமமின்றி பயணிக்க முதலமைச்சர் உத்தரவின் பேரில் 21,904 சிறப்பு பேருந்துகள் தமிழ்நாடு முழுவதும் இயக்கப்பட்டு வருகின்றன.

    அதேபோல பொங்கலை கொண்டாடி விட்டு திரும்பும் மக்களின் வசதிக்காக 22,676 பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. ஆக மொத்தம் இந்த பொங்கல் பாண்டிகையை முன்னிட்டு பொது மக்கள் வசதிக்காக 44,580 பேருந்துகள் இயக்கபட உள்ளன.

    ஜனவரி 10 முதல் 13-ஆம் தேதி வரை சென்னையிலிருந்து வெளி ஊர்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக வழக்கமாக தினமும் இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 5,736 சிறப்புப் பேருந்துகள் இயக்கபடுகின்றன.

    நான்கு நாட்களும் சேர்த்து 14,104 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதேபோல பிற ஊர்களிலிருந்து ஜனவரி 10 முதல் 13 ஆம் தேதி வரை 7,800 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 21,904 பேருந்துகள் பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தால் இயக்கப்பட முடிவு செய்து இயக்கபட்டு வருகின்றன.

    பொங்கல் பண்டிகையை கொண்டாடி முடித்துவிட்டு பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு திரும்பும் பயணிகளின் வசதிக்காக ஜன. 15 முதல் 19-ஆம் தேதி வரை, தினமும் இயக்கக்கூடிய 10,460 பேருந்துகளுடன் கூடுதலாக 5,290 சிறப்புப் பேருந்துகளும், ஏனைய பிற ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 6,926 என மொத்தம் 22,676 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. இதன்படி, பொங்கலுக்கு மொத்தம் 44,580 பேருந்துகளை இயக்க முதலமைச்சர் உத்தரவின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    பொது மக்கள் வசதிக்காக சென்னையின் நான்கு பேருந்து முனையங்களில் இருந்து தமிழ்நாட்டின் பிற பகுதிக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

    1. கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், கிளாம்பாக்கம் மஃப்சல் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர், கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

    2. கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், கிளாம்பாக்கம் மாநகர் பேருந்து நிலையத்தில் இருந்து வந்தவாசி, போளூர் மற்றும் திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன..

    3. கோயம்பேடு பேருந்து நிலையம்த்தில் இருந்து கிழக்கு கடற்கரை (இசிஆர்) சாலை வழியாக காஞ்சிபுரம், வேலூர், பெங்களூரு மற்றும் திருத்தணி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

    4. மாதவரம் புதிய பேருந்து நிலையம்த்தில் இருந்து பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திர மாநிலம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதோடு சென்னை மாநகரின் பல்வேறு பகுதியிலிருந்து கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் பேருந்து நிலையங்களுக்கு பயணிகள் செல்வதற்காக ஜன. 10 முதல் 13-ஆம் தேதி வரை கூடுதலாக 320 இணைப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

    பயணிகள் சிரமமின்றி முன் பதிவு செய்யும் வகையில் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் 7 முன்பதிவு மையங்களும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 2 முன்பதிவு மையங்கள் என மொத்தம் 9 முன்பதிவு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த மையங்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும். மேலும், டிஎன்எஸ்டிசி செயலி மூலமும் www.tnstc.in எனும் இணையதளம் மூலமாகவும் பயணச்சீட்டை முன்பதிவு செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    முதல்-அமைச்சரின் உத்தரவுப்படி தமிழ்நாட்டு மக்கள் சிறப்பான முறையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ, எந்தவித இடையூறும் இன்றி பயணிக்கும் வகையில் சிறப்பான முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆலோசனை கூட்டத்தின் முடிவில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியில்லை என தெரிவித்தது.
    • விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியா ? புறக்கணிப்பா ? என்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    ஆலோசனை கூட்டத்தின் முடிவில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியில்லை என தெரிவித்தது.

    அதன்படி, வரும் பிப்ரவரி மாதம் 5ம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    ஏற்கனவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

    " ஏற்கனவே நடந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது. பணம், மது, தங்கக்காசு, சொலுசு, குக்கர் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

    அராஜகங்கள், வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டு, மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விட மாட்டார்கள். மேலும், சட்டம்றற- ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டுள்ளதால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்கிறோம்" என கூறப்பட்டது.

    இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சியான தேமுதிகவும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

    அதில், " ஜனநாயகத்திற்கு விரோதமாக நடக்கும் இடைத்தேர்தலில் நம்பிக்கை இல்லாததால் தேமுதிக புறக்கணிப்பதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

    • கூட்டத்தில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியா ? புறக்கணிப்பா ? என்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
    • விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலும் புறக்கணிப்பு.

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியா ? புறக்கணிப்பா ? என்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, செய்தியாளர்கள் சந்திப்பில், "நீட் தேர்வு விவகாரத்தில் முதலமைச்சர் கையை விரித்து விட்டார். மத்திய அரசு தான் நீட் தேர்வை ரத்து செய்யமுடியும் என்று முதலமைச்சர் தற்போது கூறுகிறார். நீட் தேர்வு ரத்து என்று கூறி மாணவர்கள், பெற்றோர்களை திமுக அரசு ஏமாற்றி விட்டது" என்றார்.

    மேலும், தந்தை பெரியாருக்கு எதிராக பேசிய சீமானுக்கு கண்டனம் தெரிவித்தார். திமுக ஆட்சி மீடு குற்றச்சாட்டுகளை இபிஎஸ் அடுக்கினார்.

    இந்நிலையில், ஆலோசனை கூட்டத்தின் முடிவில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியில்லை என தெரிவித்துள்ளது.

    அதன்படி, வரும் பிப்ரவரி மாதம் 5ம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    ஏற்கனவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

    " ஏற்கனவே நடந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது.

    பணம், மது, தங்கக்காசு, சொலுசு, குக்கர் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

    அராஜகங்கள், வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டு, மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விட மாட்டார்கள்.

    மேலும், சட்டம்றற- ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டுள்ளதால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்கிறோம்" என கூறப்பட்டுள்ளது.

    • பெரியார் வாழ்ந்த காலத்தில் பாமர மக்களுக்கு அவரால் ஏற்பட்ட நன்மைகள் ஏராளம்.
    • அந்த காலகட்டத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் பெரியாரால் ஏற்றம் பெற்றனர்.

    தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், பெரியார் குறித்து சீமான் அநாகரீகமாக பேசியது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில் அளித்த அவர், "இது வருத்தத்திற்கு உரியது. ஒரு இறந்த பெருந்தலைவரை பற்றி அவதூறாக பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் வாழ்ந்த காலத்தில் பாமர மக்களுக்கு அவரால் ஏற்பட்ட நன்மைகள் ஏராளம்.

    அந்த காலகட்டத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் பெரியாரால் ஏற்றம் பெற்றனர். அதை எல்லாம் நாம் மறந்து விட கூடாது. யாராக இருந்ததாலும் பெரியாரை அவதூறாக பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு பேசுவது சரியல்ல" என்று தெரிவித்தார்.

    • எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
    • அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை சுட்டிக் காட்டி பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியா ? புறக்கணிப்பா ? என்பது குறித்து முடிவு எடுக்கப்படுகிறது.

    முன்னதாக, செய்தியாளர்கள் சந்திப்பில், "நீட் தேர்வு விவகாரத்தில் முதலமைச்சர் கையை விரித்து விட்டார். மத்திய அரசு தான் நீட் தேர்வை ரத்து செய்யமுடியும் என்று முதலமைச்சர் தற்போது கூறுகிறார். நீட் தேர்வு ரத்து என்று கூறி மாணவர்கள், பெற்றோர்களை திமுக அரசு ஏமாற்றி விட்டது" என்றார்.

    மேலும், தந்தை பெரியாருக்கு எதிராக பேசிய சீமானுக்கு கண்டனம் தெரிவித்தார். திமுக ஆட்சி மீடு குற்றச்சாட்டுகளை இபிஎஸ் அடுக்கினார்.

    பின்னர், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியாக, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை சுட்டிக் காட்டி, அதிமுக தலைமை அலுவலகத்தில் பெண்களுக்கு எடப்பாடி பழனிசாமி பெப்பர் ஸ்பிரே விநியோகித்தார்.

    மேலும், அன்பு சகோதரிகளுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் என்ற பெயரில் பெப்பர் ஸ்டிரோ மற்றும் எஸ்ஓஎஸ் உபகரணத்தையும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

    ×