search icon
என் மலர்tooltip icon

    பஞ்சாப்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பஞ்சாப்- அரியானா எல்லையில் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையிலான மோதலின்போது சுப்கரண் சிங் மரணம்.
    • அவரது மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்யும் வரை உடலை வாங்கமாட்டோம் என விவசாயிகள் அறிவித்திருந்தனர்.

    விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் "டெல்லி சலோ" என்ற பெயரில் பேரணி நடத்த முடிவு செய்தனர். இதற்காக பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலத்தில் இருந்து புறப்பட்டனர். ஆனால் அரியானா, பஞ்சாப் மாநில எல்லைகள் மூடப்பட்டு, விவசாயிகள் டெல்லி நோக்கி செல்லாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டன.

    கடந்த 21-ந்தேதி பஞ்சாப்- அரியானா எல்லை கனாரி பகுதியில் தடுப்புகளை தாண்டி விவசாயிகள் டெல்லி நோக்கி புறப்பட முயன்றனர். அப்போது பஞ்சாப் எல்லைக்குள் புகுந்து அரியானா போலீசார் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தினர். அப்போது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிகிறது.

    இதில் சுப்கரண் சிங் என்ற 21 வயது இளம் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். அதேவேளையில் 12 பாதுகாப்பு போலீசாரும் காயம் அடைந்தனர்.

    சுப்கரண் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சுப்கரண் சிங் மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும். அதுவரை அவரது உடலை அடக்கம் செய்யமாட்டோம் என அறிவித்தனர்.

    இந்த நிலையில் ஒருவாரம் கழித்து நேற்றிரவு போலீசார் கொலை வழக்கு உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அரியானாவின் சிந்து மாவட்டத்தில் உள்ள கார்கி என்ற இடத்தில் சம்பவம் நடைபெற்றதாக அவரது தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அடையாளம் தெரியாத நபருக்கு எதிராக கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    கனாரி ஜிந்து மாவட்டம் அருகில் உள்ளது. சுப்கரண் சிங் பதிண்டா பகுதியைச் சேர்ந்தவராவார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சுப்கரண் சிங் மரணம் அடைந்த நிலையில், அவரது குடும்பத்தினருக்கு பஞ்சாப் அரசு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கியது. மேலும், அவரது தங்கைக்கு அரசு வேலை வழங்கப்படும் என அறிவித்தது. இதனைத் தொடர்ந்து இன்று அவரது உடல் அடக்கம் செய்யப்படும் எனத் தெரிகிறது.

    விவசாயிகள் சங்கங்கள் டெல்லி சலோ பேரணியை தற்காலியமாக நிறுத்தி வைத்துள்ளன. ஆனால் எல்லையில் அமர்ந்துள்ளனர். இன்று அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.

    • அரியானா போலீசார் ரப்பர் குண்டுகளால் சுட்டு போராட்டக்காரர்களை கலைத்த போது பஞ்சாப்பை சேர்ந்த விவசாயி பலியானார்.
    • விவசாயி சுப்கரன் சிங் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் பஞ்சாப் முதல்-மந்திரி தெரிவித்து உள்ளார்.

    டெல்லியை நோக்கி போராட்டம் நடத்தி வரும் பஞ்சாப் விவசாயிகள் அந்த மாநில எல்லையான கனவுரி நகரில் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளனர். நேற்று முன்தினம் மீண்டும் விவசாயிகள் போராட்டத்தை தொடங்கிய போது அரியானா போலீசார் ரப்பர் குண்டுகளால் சுட்டு போராட்டக்காரர்களை கலைத்தனர். அப்போது பஞ்சாப்பை சேர்ந்த 21 வயது விவசாயி சுப்கரன் சிங் பலியானார். இதையொட்டி அரியானா போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகிறார்கள்.

    இந்தநிலையில் உயிரிழந்த விவசாயி சுப்கரன் சிங் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்குவதாக பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் அறிவித்துள்ளார். மேலும் விவசாயி சுப்கரன் சிங் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

    • அரியானா போலீசார் பஞ்சாப் எல்லைக்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
    • அரியானா முதல்வர் மீது 302 சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

    டெல்லியில் பேரணி நடத்துவதற்காக திரண்ட விவசாயிகள் பஞ்சாப், அரியானா எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து அவர்கள் முன்னேற முயன்று வருவதால் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.

    இந்த மோதலில் 21 வயது இளைஞரான சுப்கரன் சிங் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனால் இரண்டு நாட்கள் பேரணிக்கு செல்லும் திட்டத்தை விவசாயிகள் நிறுத்தி வைத்துள்ளனர்.

    இந்த நிலையில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் விவசாயிகள் மகா பஞ்சாயத்து நடைபெறும் என பாரதிய கிஷான் சிங் தலைவர் பல்பிர் சிங் ரஜேவால் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில் "அரியானா போலீசார் பஞ்சாப் மாநிலத்திற்குள் புகுந்து எங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். எங்களுடைய டிராக்டர்களை அடித்து நொறுக்கினார்கள். அரியானா முதல்வர், அரியானாவின் உள்துறை மந்திரி ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 302 பிரிவின் கீழ் (கொலை) வழக்குப்பதிவு செய்ய வேண்டும். விவசாயி மரணம் குறித்த நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். மார்ச் 14-ந்தேதி ராம் லீலா மைதானத்தில் விவசாயிகளின் மகா பஞ்சாயத்து நடைபெறும்" என்றார்.

    போராட்டம், பேரணி, கருப்பு தினம் மகா பஞ்சாயத்து என விவசாயிகள் எம்.எஸ்.பி.க்காக பல்வேறு கட்ட போராட்டங்களை அடுத்தடுத்து கையில் எடுக்க உள்ளனர்.

    • 1989-ம் ஆண்டு கவிதா சௌத்ரி எழுதி இயக்கி, நடித்த ‘உடான்' எனும் தூர்தர்ஷன் தொலைக்காட்சித் தொடர் பெரும் வரவேற்பை பெற்றது.
    • 1989-ம் ஆண்டு கவிதா சௌத்ரி எழுதி இயக்கி, நடித்த ‘உடான்' எனும் தூர்தர்ஷன் தொலைக்காட்சித் தொடர் பெரும் வரவேற்பை பெற்றது.

    பிரபல இந்தி நடிகை கவிதா சௌத்ரி மாரடைப்பால் உயிரிழந்துள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயுடன் கவிதா சௌத்ரி போராடி வந்த நிலையில், தற்போது தன் 67ஆவது வயதில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

    1989-ம் ஆண்டு கவிதா சௌத்ரி எழுதி இயக்கி, நடித்த 'உடான்' எனும் தூர்தர்ஷன் தொலைக்காட்சித் தொடர் பெரும் வரவேற்பை பெற்றது. கிரண்பேடிக்கு பிறகு இரண்டாவது பெண் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வான அவரது கஞ்சன் சௌத்ரியின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு இத்தொடர் எடுக்கப்பட்டது.

    இந்த சீரியலில், கல்யாண் சிங் எனும் கதாபாத்திரத்தில் போலீசாக நடித்த கவிதா, அக்கதாபாத்திரமாக வாழ்ந்து ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தார். மேலும் 90களின் பிரபலமான 'சர்ஃப் எக்ஸல்' விளம்பரங்களில் 'லலிதா ஜி' எனும் கதாபாத்திரத்திலும் தோன்றி, அன்றைய தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார்.

    இந்நிலையில், கவிதா நேற்று பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் உள்ள பார்வதி தேவி மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இணையத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேரணி.
    • நேற்று அரசுடன் நடைபெற்ற 6 மணி நேர பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

    விளைபொருட்களுக்கு அடிப்படை ஆதாய விலையை உறுதி செய்தல் தொடர்பான சட்டத்தை நிறைவேற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தில் டெல்லியில் இன்று பேரணி நடத்த இருப்பதாக விவசாயிகள் சங்கங்கள் அறிவித்தன.

    அதனால் டெல்லியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பஞ்சாப், அரியானா மாநில எல்லையில் இருந்து டெல்லிக்குள் விவசாயிகள் டிராக்டர்களுடன் நுழையாத வண்ணம் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

    நேற்றிரவு மத்திய அரசுக்கும், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. சுமார் 6 மணி நேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் எட்டப்படவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை 10 மணியளவில் அறிவித்தபடி பேரணி தொடங்கும் என விவசாயிகள் சங்கங்கள் தெரிவித்தன. அதனடிப்படையில் விவசாயிகள் ஷம்பு (பஞ்சாப்-அரியானா) எல்லையில் பேரணியை தொடங்கியுள்ளனர்.

    அதேபோல் பஞ்சாப் மாநிலத்தின் ஃபட்டோகார்ஹ் சாஹிப் என்ற இடத்தில் இருந்து அம்ாபலா அருகில் உள்ள ஷம்பு எல்லையை நோக்கி புறப்பட்டனர்.

    திக்ரி எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    ஷம்பு எல்லையில் போலீசார் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    • தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்துள்ளார்.
    • குடியரசுத் தலைவரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார்.

    பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

    தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்வதாக பன்வாரிலால் புரோகித் அறிவித்துள்ளார்.

    குடியரசுத் தலைவரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை பன்வாரிலால் புரோகித் வழங்கியுள்ளார்.

    நேற்று முன்தினம் மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்த நிலையில் அவர் ராஜினாமா செய்துள்ளார்.

    • அடாரி-வாகா எல்லையில் கொடியிறக்கும் நிகழ்ச்சி இன்று கோலாகலமாக நடைபெற்றது.
    • அங்கு குவிந்திருந்த ஆயிரக்கணக்கானோர் தேசியக்கொடி இறக்கும் நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.

    சண்டிகர்:

    பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் மாவட்டம் அடாரி எல்லைப்பகுதி பாகிஸ்தானின் வாகா எல்லை அருகே அமைந்துள்ளது. இருநாட்டு படையினரும் இந்த எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த எல்லைப்பகுதியில் தினமும் காலை இருநாட்டு பாதுகாப்புப் படையினரும் அவரவர் நாட்டு தேசியக்கொடியை ஏற்றுவது வழக்கம். அந்த தேசியக்கொடியை மாலையில் இறக்கும் நிகழ்வு உலக அளவில் மிகவும் பிரபலமாகும்.

    குறிப்பாக, இந்திய சுதந்திர தினம், குடியரசு தினங்களில் அடாரி-வாகா எல்லையில் ஆயிரக்கணக்கானோர் குவிந்து தேசியக்கொடி இறக்கும் நிகழ்வை கண்டுகளிப்பர்.

    இந்நிலையில், 75-வது இந்திய குடியரசுதின விழா இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அடாரி-வாகா எல்லையில் கொடியிறக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

    எல்லை பாதுகாப்புப் படைவீரர்களின் மிடுக்கான அணிவகுப்புடன் தேசிய கொடியை இறக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. வாகா எல்லையில் குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள் இந்திய தேசியக்கொடியை அசைத்தும், ஜெய்ஹிந்த் என கோஷமிட்டும் உற்சாக குரல் எழுப்பினர்.

    • மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் கட்சி தனியாக போட்டியிட தயார் என அறிவித்திருந்தது.
    • பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சியும் தனித்துப் போட்டியிட உள்ளதாக முதல் மந்திரி பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.

    சண்டிகர்:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கும் மாநில கட்சிகளுக்கும் இடையில் தொகுதி பங்கீட்டில் பிரச்சனை உருவாகியுள்ளது.

    மேற்கு வங்காளத்தில் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் தொடக்கத்தில் இருந்தே மோதல் இருந்து வருகிறது.

    இதற்கிடையே, மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் கட்சியுடன் ஆலோசனை நடத்தவில்லை. இங்கு நாங்கள் தனித்துதான் போட்டியிடுவோம் என ஏற்கனவே தெரிவித்துள்ளேன். நாங்கள் மதசார்பற்ற கட்சி. மேற்கு வங்காளத்தில் தனித்து நின்று பா.ஜ.க.வை தோற்கடிப்போம். நான் இந்தியா கூட்டணியில் ஓர் அங்கமாக உள்ளேன் என மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

    இந்நிலையில், மம்தா பானர்ஜியைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் 13 மக்களவை தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிட உள்ளது. பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என முதல் மந்திரி பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.

    • நிர்வாகம் பரம்ஜித் கவுர் விண்ணப்பத்தை நிராகரித்தது, மேலும் சிங் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
    • பயோமெட்ரிக் கருவியில் பதிந்த அவரது கைரேகைகள் உண்மையான வேட்பாளரின் கைரேகைகளுடன் பொருந்தாததால் சிக்கினார்.

    பஞ்சாப் மாநிலம் ஃபரித்கோட் பகுதியில் உள்ள ஆங்ரேஸ்சிங் என்ற நபர்,சுகாதாரப் பணியாளர்களுக்கான அரசாங்க தேர்வின் போது தனது காதலி போல் வேடம் போட்டு போலியாக நடிக்க முயன்றபோது கையும் களவுமாக பிடிபட்டார்.

    அதிகாரிகளின் அறிக்கைகளின்படி, "ஆங்ரேஸ்சிங் பெண் வேடத்தில் ஜனவரி 7 ஆம் தேதி கோட்காபுராவின் டிஏவி பப்ளிக் பள்ளியில் தேர்வு எழுத வந்துள்ளார். அதற்காக, மேக்கப், பொட்டு மற்றும் சல்வார் கமீஸ் அணிந்து போலி வாக்காளர் மற்றும் ஆதார் அட்டைகளைப் பயன்படுத்தி தேர்வு எழுத வந்தார்" என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஆவணங்கள் இருந்தபோதிலும், பயோமெட்ரிக் கருவியில் பதிந்த அவரது கைரேகைகள் உண்மையான வேட்பாளரின் கைரேகைகளுடன் பொருந்தாததால் சிங்கின் திட்டம் கண்டுபிடிக்கப்பட்டது.

    முதற்கட்ட விசாரணையில், அவர் தனது காதலி பரம்ஜித் கவுர் என்ற பெண்ணுக்காக போலி ஆவணங்களை பயன்படுத்தி தன்னை பெண்ணாக சித்தரித்து தேர்வு எழுத வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து, நிர்வாகம் பரம்ஜித் கவுர் விண்ணப்பத்தை நிராகரித்தது, மேலும் சிங் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    சிங்கின் மீது புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர் இப்போது கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் என்றும், முழுமையான விசாரணையில் அவரது செயல்களுக்கான கூடுதல் காரணத்தை கண்டறியப்படும் என்றும் எஸ்பி சிங் கூறினார்.

    • டேங்கர் லாரி தீப்பிடித்ததால், நெடுஞ்சாலையை புகைமூட்டம் சூழ்ந்தது.
    • மேம்பாலம் முழுவதும் தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் பரபரப்பு.

    பஞ்சாப்பில், மேம்பாலம் ஒன்றின் சாலை நடுவே ஏற்பட்ட விபத்தில் டேங்கர் லாரி தீப்பிடித்து எரிந்தது.

    பஞ்சாப் மாநிலம் கண்ணா பகுதியில் பேருந்து நிலையத்திற்கு அருகே உள்ள மேம்பாலம் மீது எண்ணெய் டேங்கர் லாரி சென்றுக் கொண்டிருந்தது.

    அப்போது, கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி சாலை தடுப்பு மீது மோதி கவிழ்ந்தது.

    டேங்கர் லாரி கவிழ்ந்ததில், எண்ணெய் சாலையில் கொட்டி பல மீட்டர் தூரம் கசிந்து தீ விபத்துக்குள்ளானது.

    இதில், தீ சாலை முழுவதும் பரவி, மேம்பாலம் முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்தது.

    இதனால், நெடுஞ்சாலையை புகைமூட்டம் சூழ்ந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • பகவத் மான்-க்கு சீக்கியர்களின் வரலாறு தெரியவில்லை.
    • அவரை பார்க்கும்போது, அவரது அறிக்கையை கேட்கும்போது நாங்கள் கவலையாக உணர்கிறோம்.

    சிரோமணி அகாலி தளம் தலைவர் பஞ்சாப் முதல்வர் பகவத் மான்-ஐ கடுமையாக விமர்சனம் செய்தார். பகவத் மான் குறித்து சுக்பீர் சிங் பாதல் கூறியதாவது:-

    பகவத் மான்-ஐ நான் சீக்கியராக கருதவில்லை. அவர் அணிந்துள்ள தலைப்பாகை அவரை சீக்கியராக காட்டுகிறது. அவருக்கு சீக்கியர்களின் வரலாறு தெரியவில்லை. அவரை பார்க்கும்போது, அவரது அறிக்கையை கேட்கும்போது எங்கங்கு கவலையாக உள்ளது.

    இந்தியாவில் 18 சதவீதம் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் ஒற்றுமையாக இல்லாததால் அவர்களுக்கு என தலைவர் இல்லை. நாம் இரண்டு சதவீதம்தான் உள்ளோம். என்றபோதிலும் நாம் ஸ்ரீ அகால் தக்த் சாகிப் கீழ் ஒன்றிணைந்துள்ளோம்.

    அவர்கள் (ஆம் ஆத்மி) பஞ்சாபை சுரண்டி கொண்டிருக்கிறார்கள். பஞ்சாப் மாநிலத்தின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பகவத் மான் கிடையாது.

     சீக்கியர்களை கொண்ட அனைத்து மாநிலங்களிலும் சிரோமணி அகாலி தளம் அமைப்புகளை தொடங்கும்.

    இவ்வாறு சுக்பீர் சிங் பாதல் தெரிவித்துள்ளார்.

    கடந்த ஆணடு பஞ்சாப் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம் கட்சிகள் படுதோல்வியடைந்தன. 117 இடங்களை கொண்டு பஞ்சாபில் 92 இடங்களை பிடித்து ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

    • ஆதார் அட்டை உள்ளிட்ட அரசு சான்றிதழ் சேவைகள் இனி பஞ்சாப்வாசிகளின் வீடு தேடிவர உள்ளது.
    • இத்திட்டம் தலைநகர் டெல்லியில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ளது.

    சண்டிகர்:

    அரசு சான்றிதழ் பெறவேண்டி நாடு முழுவதிலும் உள்ள பொதுமக்கள் அதன் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டி உள்ளது. இதனால் பலமணி நேரம் வீணாவதுடன், அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் தர வேண்டி இருப்பதாக புகார்கள் எழுந்தன. இந்தப் பிரச்சினைகளுக்கு முடிவு கட்ட டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அரசு ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்தியது.

    இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்திலும் ஆதார், வாக்காளர் அட்டை உள்ளிட்ட அரசு சான்றிதழ் சேவைகள் இனி பஞ்சாப்வாசிகளின் வீடு தேடிவர உள்ளது.

    லூதியானா நகரில் நாளை அறிமுகமாகும் இத்திட்டத்தை பஞ்சாப் முதல் மந்திரி பகவத் மான், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.

    இதன்படி, ஆதார், வாக்காளர் அட்டை, சாதிச் சான்றிதழ் அனைத்து வகையான அரசு சான்றிதழ்கள், மின்சாரக் கட்டணம், குடிநீர் மற்றும் வீட்டுவரி உள்பட 43 வகையான அரசு சேவைகள் செய்துதரப்படும். இத்திட்டத்தில் அரசு வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தம் தேவைகளை பொதுமக்கள் தெரிவிக்கலாம். பிறகு அவர்களுடன் பேசி நேரம் குறித்த பின் பொதுமக்கள் வீட்டிற்கு அரசு சார்பில் அலுவலர் வருவார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×