என் மலர்
பஞ்சாப்
- பஞ்சாப்பில் பெய்து வரும் கனமழையால் இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
- சுமார் 2.5 லட்சம் பேர் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
சண்டிகர்:
வட மாநிலங்களில் பருவ மழை கொட்டி வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 2.5 லட்சம் பேர் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். கனமழை காரணமாக பெரும்பாலான இடங்கள் வெள்ளக்காடாக மாறிவிட்டன.
சட்லஜ், பியாஸ் உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. வெள்ளம் காரணமாக கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கனமழை எதிரொலியால் செப்டம்பர் 7 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப்பில் ஏற்பட்ட மோசமான வெள்ளப் பேரழிவுகளில் இதுவும் ஒன்று என மாநில அரசு தெரிவித்துள்ளது.
- அனைத்து அரசியல் கட்சிகள், மாநில அரசுகள் மற்றும் குறிப்பாக மத்திய அரசு பஞ்சாபிற்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார்.
- 37 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சாப் இவ்வளவு பயங்கரமான பேரழிவைச் சந்தித்துள்ளது.
கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பஞ்சாப் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.
இந்நிலையில் நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகள், மாநில அரசுகள் மற்றும் குறிப்பாக மத்திய அரசு பஞ்சாபிற்கு உதவுமாறு ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள அவர், "இன்று பஞ்சாப் எதிர்கொள்ளும் பேரழிவு சாதாரண வெள்ளம் அல்ல, 37 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சாப் இவ்வளவு பயங்கரமான பேரழிவைச் சந்தித்துள்ளது.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன, இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட நமது சகோதர சகோதரிகள் ஒரே அடியில் வீடற்றவர்களாகிவிட்டனர். அவர்களின் வாழ்நாள் முழுவதும் சம்பாத்தியமும் கனவுகளும் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
நாட்டிற்கு ஏற்பட்ட எந்தவொரு பேரிடரையும் பஞ்சாப் எப்போதும் எதிர்த்து நிற்கிறது. இன்று, பஞ்சாப் நெருக்கடியில் உள்ளது. இந்த கடினமான நேரத்தில் பஞ்சாப் மக்களுக்கு சாத்தியமான அனைத்து வழிகளிலும் உதவுமாறு எனது நாட்டு மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.
ஆம் ஆத்மி கட்சியின் அனைத்து எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஒரு மாத சம்பளத்தை பஞ்சாப் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்குகிறார்கள். இந்த பயங்கரமான துயரத்திலிருந்து பஞ்சாபைக் காப்பாற்ற நாம் அனைவரும் ஒன்றிணைவோம்." என்று அழைப்பு விடுத்துள்ளார்.
- படகு மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள நிலைமையை நேரில் ஆய்வு செய்தார்.
- உணர்ச்சிவசப்பட்ட பகவந்த் மான் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.
கனமழை மற்றும் வெள்ளத்தால் பஞ்சாப் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. பல்வேறு கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.
இந்நிலையில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் செவ்வாய்க்கிழமை ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள கட்டி ராஜோ கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார்.
படகு மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள நிலைமையை நேரில் ஆய்வு செய்தார்.
இதன்போது உள்ளூர் கிராம மக்களைச் சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
இதன்போது ஒரு வயதான பெண்மணி தனது துயரத்தைப் பகிர்ந்து கையெடுத்து வணங்கிறார். அப்போது உணர்ச்சிவசப்பட்ட பகவந்த் மான் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வெள்ளத்தால் ஏற்பட்ட இழப்பு குறித்து ஆராய்ந்து பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் அரசாங்கம் முழு இழப்பீடு வழங்கும் என்று பகவந்த் மான் உறுதியளித்தார்.
- பலாத்கார வழக்கில் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. ஹர்மீத் சிங் கைது செய்யப்பட்டார்.
- செல்லும் வழியில் ஹர்மீத் சிங் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.
சண்டிகர்:
பஞ்சாபில் முதல் மந்திரி பகவந்த் சிங் மான் தலைமையில் ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அக்கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஹர்மித் சிங் பதன்மஜ்ரா. கடந்த சட்டசபை தேர்தலில் சானோர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இவர்மீது ஜிரக்பூரை சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் ஹர்மீத் சிங்கை கைதுசெய்தனர்.
இந்நிலையில், காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஹர்மீத் சிங்கும், அவரது உதவியாளர்களும் போலீசாரை நோக்கி சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.
போலீசார் கஸ்டடியில் இருந்து ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. ஹர்மித் சிங் தப்பி ஓடியது பஞ்சாபில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தலைமறைவாகி இருக்கும் எம்.எல்.ஏ ஹர்மீத் சிங்கை தேடும் பணியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
- தொழிலாளர்களுக்கு மூச்சுத் திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டது.
- வெளியேற முடியாமல் பலர் ஆலையின் உள்ளேயே சிக்கிக்கொண்டனர்.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் சர்ஜிக்கல் காம்ப்ளக்ஸ் பகுதியில் உள்ள ஒரு பால் உற்பத்தி ஆலையில் நேற்று மாலை அம்மோனியா வாயு கசிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆலையில் வாயு கசிந்ததை அடுத்து, அங்கிருந்த தொழிலாளர்களுக்கு மூச்சுத் திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டது. இதனால் வெளியேற முடியாமல் பலர் ஆலையின் உள்ளேயே சிக்கிக்கொண்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், சிக்கியிருந்த தொழிலாளர்களை மீட்க ஆலையின் சுவரை உடைத்து உள்ளே சென்றனர்.
அங்கிருந்து சுமார் 30 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். காயமடைந்த சிலருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
தற்போது, ஆலையின் நிலைமை முழுமையாகக் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், மேலும் கசிவு ஏற்படாமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- எல்பிஜி எரிவாயு டேங்கர் லாரி மற்றொரு லாரி மீது மோதியது.
- இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
பஞ்சாபில் மாநிலம் ஹோசியார்பூர் மாவட்டம் மண்டியாலாவில் நேற்று இரவு, ஒரு எல்பிஜி எரிவாயு டேங்கர் லாரி மற்றொரு லாரி மீது மோதியது.
இதன் விளைவாக, எரிவாயு டேங்கர் வெடித்து பெரிய தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் இன்றுடன் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் காயமடைந்த பதினைந்து பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- நாட்டின் 79வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலின் போது மூடப்பட்ட அட்டாரி - வாகா எல்லை மீண்டும் திறக்கப்பட்டது.
நாட்டின் 79வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பஞ்சாபில் அமைந்துள்ள பாகிஸ்தான் எல்லையான அட்டாரி-வாகா எல்லையில் கொடியிறக்கும் நிகழ்ச்சி மாலை துவங்கியது.
இந்த கொடியிறக்க நிகழ்ச்சியில் எல்லை பாதுகாப்பு படை வீரர் மிடுக்கான அணிவகுப்பு நடத்தினர். மேலும் பைக் சாகச நிகழ்ச்சி, பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் அரங்கேறின. ஆயிரக்கணக்கான மக்கள் வந்தே மாதரம், ஜெயஹிந்த் முழக்கமிட தேசியக்கொடி இறக்குதல் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலின் போது மூடப்பட்ட அட்டாரி - வாகா எல்லை மீண்டும் திறக்கப்பட்ட இந்நிலையில் இன்றைய நிகழ்வு மேலும் முக்கியத்துவம் பெற்றது.
- அழகு சாதனம் பொருட்கள் விற்பனை செய்யும் இணைய தளம் சொந்தமானது எனத் தெரிவித்துள்ளார்.
- சரியான விவரங்கள் அளிக்கப்படவில்லை. மோசடி வழக்கில் உள்ள மற்றொருவருடன் தொடர்புகள் இருந்தது கண்டுபிடிப்பு.
பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை, சந்தீபா விர்க் என்ற இன்ஸ்டா பிரபலத்தை கைது செய்துள்ளனர். 12 லட்சம் பின்தொடர்பவர்களை (Followers) வைத்திருக்கும் சந்தீபா விர்க் 40 கோடி ரூபாய் அளவில் பண மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.
அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டின்படி மோசடி உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் மொகாலியில் உள்ள காவல்நிலையத்தில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டள்ளது. சந்தீபா விர்க் மோசடி வழியில் அசையா சொத்துகளை வாங்கியதாகவும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை அமலாக்கத்துறை டெல்லி மற்றும் மும்பையில் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் பணமோசடி வழக்கு தொடர்பாக சோதனை நடத்தியது, அப்போது இவர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
FDA அங்கீகாரம் பெற்ற அழக சாதன பொருட்களை விற்பனை செய்வதாக கூறும் hyboocare.com இணைய தளம் தனக்கு சொந்தமானது எனக் கூறிக்கொண்டு வந்துள்ளார். எனினும், அதில் தெரிவிக்கப்பட்ட பொருட்கள் தயாரிப்பில் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், இணைய தளம் பயனாளர்களுக்கு குறைபாடு உள்ளதாகவும், பணம் செலுத்தும் கேட்-வே அடிக்கடி பிரச்சினையை மேற்கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் தொடர்பு எண் செயல்பாட்டில் இல்லை. நிறுவனம் குறித்து வெளிப்படைத்தன்மையான விவரங்கள் இல்லாமல் இருந்துள்ளது. நிதி மோசடி செய்வதற்காக உண்மையில்லாத வணிக செயல்பாட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது.
இதுபோக, தற்போது செயல்படாத ரிலையன்ஸ் கேப்பிட்டல் லிமிடெட் நிறுவுனத்தின் முன்னாள் டைரக்டர் அங்காரை நடராஜன் சேதுராமனுடன் தொடர்புகள் இருந்ததாக அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
சேதராமனின் வீட்டில் நடைபெற்ற சோதனையின்போது, தனிப்பட்ட ஆதாயத்திற்கான நிதியை மாற்றியது, சட்டவிரோத வேலையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அங்காரை நடராஜன் சேதுராமன் 40 கோடி ரூபாயை தனிநபர் ஆதாயத்திற்காக நிதியை பயன்படுத்தியதாக நிறுவனம் குற்றம்சட்டியிருந்தது.
- இந்த வீடியோவை அவரது மனைவி யூடியூபில் வெளியிட்டார்.
- இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
பஞ்சாப் மாநிலத்தில் அலுவலகத்தில் மனைவியுடன் நடனமாடிய கல்வித்துறை அதிகாரியின் வீடியோ இணையத்தில் வைரலானது.
தேவி பிரசாத் என்ற கல்வித்துறை அதிகாரி தனது மனைவியுடன் அலுவலகத்தில் ஜாலியாக நடனம் ஆடி அதை வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோவை அவரது மனைவி யூடியூபில் வெளியிட்டார். இதனையடுத்து இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து கல்வித்துறை அதிகாரி தேவி பிரசாத் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்த விவகாரம் குறித்து பேசிய தேவி பிரசாத், "வீடியோ எடுக்கப்பட்ட நாளில் தனது அலுவலகத்தில் தேர்தல் பணியில் இருந்தேன். அன்று எங்கள் திருமண நாள் என்பதால் என் மனைவி என்னுடன் அலுவலகத்திற்கு வந்திருந்தார். இந்த வீடியோ வேடிக்கைக்காக மட்டுமே எடுக்கப்பட்டது" என்று தெரிவித்தார்.
- இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் போதைப்பொருள், ஆயுதங்கள் கடத்தப்படுகிறது.
- இதை கண்காணிக்க டிரோன் எதிர்ப்பு சிஸ்டத்தை பஞ்சாப் அரசு தொடங்கியுள்ளது.
இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் 553 கி.மீ. தூரம் பஞ்சாப் மாநிலத்தில் உள்ளது. இந்த எல்லை வழியாக ஆயுதங்கள், போதைப்பொருட்கள் அதிக அளவில் கடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக டிரோன் மூலம் போதைப்பொருட்கள் கடத்தப்படுகிறது.
பாகிஸ்தானில் இருந்து பறக்கவிடப்படும் டிரோன், இந்திய எல்லைக்குள் போதைப்பொருட்களை போட்டுவிடும். அதை ஏஜென்ட்கள் எடுத்து மற்ற இடத்திற்கு கடத்துவது வழக்கமாகி வருகிறது.
இதை தடுக்க பஞ்சாப் மாநில அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் டிரோன் எதிர்ப்பு சிஸ்டத்தை (Baaz Akh) பஞ்சாப் அரசு தொடங்கியுள்ளது.
எல்லை பாதுகாப்பு படையு ஒத்துழைப்புடன் இந்த சிஸ்டம் செயல்படும். பாகிஸ்தான் எல்லையில் இருந்து டிரோன்கள் பறந்து வந்தாலு, இந்த சிஸ்டம் அவற்றை தாக்கி அழிக்கும்.
இந்த சிஸ்டத்தை பஞ்சாப் மாநில முதல்வர் பகவத் மான் சிங் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
- இது தண்டனை அல்ல. மரபுகள் மற்றும் மதிப்புகளை பாதுகாப்பதற்கான ஒரு தடுப்பு நடவடிக்கை.
- நாங்கள் காதல் திருமணத்தையோ, சட்டங்களையோ எதிர்க்கவில்லை.
சண்டிகர்:
பஞசாப் மாநிலம் சண்டிகரில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் மனக்பூர் ஷெரீப் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஏராளமானவர்கள் வசித்து வருகின்றனர். சமீபத்தில் இந்த கிராமத்தை சேர்ந்த ஒரு காதல் ஜோடி முறை தவறி திருமணம் செய்து கொண்டதாக எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து இனி பெற்றோர் சம்மதம் இல்லாமல் காதல் ஜோடியினர் திருமணம் செய்ய தடை விதித்து கிராம கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி பெற்றோர் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்யும் ஜோடி அந்த கிராமத்திலோ அல்லது அருகில் உள்ள பகுதிகளிலோ வசிக்க முடியாது.
அவர்களுக்கு யாராவது அடைக்கலம் கொடுத்தால் அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கிராம தலைவர் தல்வீர் சிங் கூறும்போது, இது தண்டனை அல்ல. மரபுகள் மற்றும் மதிப்புகளை பாதுகாப்பதற்கான ஒரு தடுப்பு நடவடிக்கை ஆகும். நாங்கள் காதல் திருமணத்தையோ, சட்டங்களையோ எதிர்க்கவில்லை, ஆனால் எங்கள் கிராமத்தில் நாங்கள் அனுமதிக்க முடியாது என்று கூறினார்.
கிராம கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
- ஓடும் காரில் மர்ம நபர்கள் சிறுமியை பாலியல் சித்ரவதை செய்தனர்.
- சண்டிகரில் உள்ள ஒரு ஒதுக்குபுறமான இடத்துக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர்.
பஞ்சாப் மாநிலம் மொகாலி ஜிராஜ்பூரில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் 16 வயது சிறுமி வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று இரவு இவர் வேலை முடிந்து சண்டிகர்- அம்பாலா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மால் அருகே ஆட்டோவுக்காக காத்து இருந்தார்.
அப்போது காரில் வந்த மர்ம நபர்கள் அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக காருக்குள் ஏற்றி கடத்தி சென்றனர். பின்னர் ஓடும் காரில் மர்ம நபர்கள் சிறுமியை பாலியல் சித்ரவதை செய்தனர்.
பின்னர், சண்டிகரில் உள்ள ஒரு ஒதுக்குபுறமான இடத்துக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர் கடத்தப்பட்ட இடத்திலேயே அந்த சிறுமியை விட்டு சென்றனர்.
இது குறித்து சிறுமியின் தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






