என் மலர்tooltip icon

    பஞ்சாப்

    • கடந்த 12 வருடங்களாக இந்த துபாய் லாட்டரி டிக்கெட்டுக்களை பாயல் வாங்கி வந்துள்ளார்.
    • ஒவ்வொரு முறையும் துபாய் விமான நிலையத்தில் இந்த லாட்டரி டிக்கெட்டுக்களை அவர் வாங்கியுள்ளார்.

    மே 3 அன்று பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பாயல் (42) என்ற பெண் ஆன்லைனில் துபாய் லாட்டரி டிக்கெட் வாங்கியுள்ளார். அந்த லாட்டரி டிக்கெட்டிற்கு மே 16 அன்று இந்திய மதிப்பில் 8.3 கோடி ரூபாய் பரிசுத் தொகை விழுந்துள்ளது.

    கடந்த ஏப்ரல் 20 அன்று தனது 16 ஆவது திருமண நாளை கொண்டாடிய பாயல் அதனை ஓட்டி கணவனிடம் இருந்து பரிசாக வாங்கிய பணத்தில் இந்த லாட்டரி டிக்கெட்டை வாங்கியுள்ளார்.

    இதன் மூலம் 1 மில்லியன் டாலர் பணத்தை லாட்டரி டிக்கெட்டில் வென்ற 229 ஆவது இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

    கடந்த 12 வருடங்களாக இந்த துபாய் லாட்டரி டிக்கெட்டுக்களை பாயல் வாங்கி வந்துள்ளார். ஒவ்வொரு முறையும் துபாய் விமான நிலையத்தில் இந்த லாட்டரி டிக்கெட்டுக்களை அவர் வாங்கியுள்ளார். ஆனால் இந்த முறை அவர் ஆன்லைனில் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கியுள்ளார். ஆனலைனில் லாட்டரி டிக்கெட் வாங்கிய சமயத்தில் அவருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

    "இந்த பரிசு பணத்தை எனது குழந்தைகளின் எதிர் காலத்திற்கும் ஆஸ்திரேலியாவில் உள்ள தம்பிக்கு உதவுவதற்கும், பஞ்சாபி மக்களுக்கு தொண்டு செய்வதற்கும் பயன்படுத்த போகிறேன்" என்று பாயல் தெரிவித்துள்ளார். இந்த தம்பதிக்கு 14 வயதில் இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர்.

    1999 ஆம் ஆண்டு இந்த துபாய் லாட்டரி அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் 5000 டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும். அதில் ஒரு டிக்கெட்டிற்கு 1 மில்லியன் டாலர் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. இந்த துபாய் லாட்டரி டிக்கெட்டை இந்தியர்கள் தான் அதிக அளவில் வாங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வீடியோவில், இருவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும் காட்சிகளை பார்த்த பயனர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.
    • 7 அடி, 1 அங்குலம் கொண்ட கிரேட் காளி, 2 அடி ¾ அங்குலம் கொண்ட ஜோதி ஆம்கேவை ஒற்றை கையால் தூக்கிய காட்சிகளை பயனர்கள் ரசித்தனர்.

    இந்தியாவை சேர்ந்த பிரபல மல்யுத்த வீரரான தி கிரேட் காளி, உலகிலேயே மிகவும் குள்ளமான பெண் என பெயர் பெற்ற ஜோதி ஆம்கேவை சந்தித்து பேசிய காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.

    பஞ்சாபை சேர்ந்த கிரேட் காளி 2006-ம் ஆண்டு மல்யுத்த போட்டிகளில் பங்கேற்று சாம்பியன் பட்டங்களை பெற்று பிரபலம் ஆனவர். தற்போது போட்டிகளில் பங்கேற்பதை குறைத்து கொண்டு நடிப்பில் கவனம் செலுத்தி வரும் அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

    அந்த வகையில் அவர் மிகவும் குள்ளமான பெண்ணான ஜோதி ஆம்கேவை சந்தித்த காட்சிகளை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், இருவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும் காட்சிகளை பார்த்த பயனர்கள் ஆச்சரியம் அடைந்தனர். 7 அடி, 1 அங்குலம் கொண்ட கிரேட் காளி, 2 அடி ¾ அங்குலம் கொண்ட ஜோதி ஆம்கேவை ஒற்றை கையால் தூக்கிய காட்சிகளை பயனர்கள் ரசித்தனர்.

    வீடியோ முழுவதும் ஜோதி ஆம்கே சிரித்துக் கொண்டே இருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி கோடிக்கணக்கான பயனர்களின் பார்வையையும், 20 லட்சத்திற்கும் அதிகமானவரின் விருப்பங்களையும் குவித்து வருகிறது.

    • முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் 7 விக்கெட்டுக்கு 192 ரன்கள் எடுத்தது.
    • சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி 78 ரன்கள் குவித்தார்.

    சண்டிகர்:

    ஐ.பி.எல். தொடரின் 33வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் 7 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்துள்ளது. சூர்யகுமார் யாதவ் அதிகபட்சமாக 78 ரன்கள் எடுத்தார். ரோகித் சர்மா 25 பந்தில் 3 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இந்நிலையில், இந்தப் போட்டியில் 3 சிக்சர் அடித்ததன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிக சிக்சர்கள் அடித்த பொல்லார்ட் சாதனையை முறியடித்துள்ளார்.

    ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 224 சிக்சர்கள் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பஞ்சாப் அணி 4 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.
    • மும்பை அணி 2 போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.

    சண்டிகர்:

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 33-வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    பஞ்சாப் கிங்ஸ் ஆறு போட்டிகளில் இரண்டு வெற்றி, நான்கு தோல்விகளைச் சந்தித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை விளையாடிய ஆறு போட்டிகளில் 2 வெற்றி, 4 தோல்விகளைச் சந்தித்துள்ளது.

    இரு அணிகளும் புள்ளிப்பட்டியலில் பின்தங்கியுள்ள நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்குகின்றன.

    • அமிர்தசரஸ் நகரில் தனியார் வங்கி ஒன்று உள்ளது.
    • மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் துப்பாக்கியுடன் வங்கிக்குள் நுழைந்தனர்.

    அமிர்தசரஸ்:

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் தனியார் வங்கி ஒன்று உள்ளது. நேற்று காலை இந்த வங்கி வழக்கம் போல் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் துப்பாக்கியுடன் வங்கிக்குள் நுழைந்தனர். அவர்கள் துப்பாக்கியை காட்டி வங்கி ஊழியர்களை மிரட்டி ரூ.12 லட்சத்தை கொள்ளையடித்து அங்கிருந்து தப்பி சென்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • போலீசார் சம்பந்தப்பட்ட பேக்கரியில் இருந்து கேக்கின் மாதிரிகளை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.
    • முடிவு விபரம் வந்த பிறகே நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

    சண்டிகர்:

    பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா பகுதியை சேர்ந்தவர் 10 வயது சிறுமி மான்வி. கடந்த 24-ந்தேதி மான்வியின் 10-வது பிறந்த நாளை குடும்பத்தினர் கொண்டாடினர்.

    அதற்காக சிறுமி தனது தந்தையிடம் கேக் கேட்டுள்ளார். அவர் பாட்டியாலாவில் உள்ள ஒரு பேக்கரியில் ஆன்லைன் மூலமாக கேக்கை ஆர்டர் செய்துள்ளார்.

    அதன்படி வினியோகிக்கப்பட்ட கேக்கை குடும்பத்தினர் முன்பு வெட்டி பிறந்த நாளை கொண்டாடி உள்ளனர். அப்போது ஒவ்வொருவருக்கும் மான்வி கேக் ஊட்டி உள்ளார்.

    பின்னர் அவரும் கேக் சாப்பிட்டுள்ளார். சிறிது நேரத்தில் மான்விக்கு தண்ணீர் தாகம் ஏற்பட்டு உள்ளது. உடனே அவரது தொண்டையும் வறண்டு போனதாக கூறியதோடு, அவர் மாறி மாறி வாந்தி எடுத்துள்ளார். அவரது குடும்பத்தினருக்கும் இது போன்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதனால் சிறுமி மான்வியை அப்பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மான்வி பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஆன்லைனில் ஆர்டர் செய்த கேக் கெட்டு போனதாலும், அதை சாப்பிட்டதுமே சிறுமி உயிரிழப்புக்கு காரணம் என அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர்.

    அதைத்தொடர்ந்து போலீசார் சம்பந்தப்பட்ட பேக்கரியில் இருந்து கேக்கின் மாதிரிகளை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர். அதன் முடிவு விபரம் வந்த பிறகே நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

    • பஞ்சாப் மாநிலத்தை ஆளும் ஆம் ஆத்மி அரசு, ஜலந்தர் தொகுதியின் வளர்ச்சி திட்டங்களுக்கு எனக்கு உதவவில்லை
    • பஞ்சாப் மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாஜகவில் இணைத்துள்ளேன் என்று சுஷில் குமார் தெரிவித்துள்ளார்

    பஞ்சம் மாநிலத்தில் ஜலந்தர் தொகுதி எம்.பியான சுஷில் குமார் மற்றும் ஜலந்தர் மேற்கு தொகுதி எம்எல்ஏ ஷீதன் அங்கூரல் ஆகியோர் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.

    பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியில் இருந்த ஒரே ஒரு எம்.பி சுஷில் குமார் ரிங்கு தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    பஞ்சாப் மாநிலத்தை ஆளும் ஆம் ஆத்மி அரசு, ஜலந்தர் தொகுதியின் வளர்ச்சி திட்டங்களுக்கு எனக்கு உதவவில்லை. அதனால் தான் ஜலந்தர் மக்களுக்கு நான் கொடுத்த வாக்குறுதிகளை என்னால் நிறைவேற்ற முடியவில்லை. ஆதலால் பஞ்சாப் மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாஜகவில் இணைத்துள்ளேன் என்று சுஷில் குமார் தெரிவித்துள்ளார்.

    மீண்டும் ஜலந்தர் தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக சுஷில் குமார் அறிவிக்கப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    கடந்தாண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார் சுஷில் குமார். அதன் பின் தற்போது அவர் பாஜகவில் சேர்ந்துள்ளார்.

    • பா.ஜனதாவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கால் சிரோமணி அகாலிதளம் தலைவர் சுக்பிர் சிங் பாதல் தொடர்ந்து நழுவி வந்தார்.
    • மக்களின் கருத்துகள், கட்சி தொண்டர்கள் மற்றும் தலைவர்களின் கருத்துகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

    சண்டிகார்:

    பஞ்சாப்பை சேர்ந்த முக்கிய அரசியல் கட்சியான சிரோமணி அகாலிதளம், பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் நீண்ட காலமாக அங்கம் வகித்து வந்த கட்சிகளில் முக்கியமானது.

    இந்த கட்சி கடந்த 1996-ம் ஆண்டு முதல் பா.ஜனதா கூட்டணி சார்பில் பல்வேறு தேர்தல்களை சந்தித்தது. கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலும் பஞ்சாப்பில் இந்த இரு கட்சிகளும் தலா 2 இடங்களை வென்றிருந்தன.

    ஆனால் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை சிரோமணி அகாலிதளம் கடுமையாக எதிர்த்தது. அத்துடன் பா.ஜனதாவுடனான உறவையும் கடந்த 2020-ம் ஆண்டு முறித்துக்கொண்டது.

    எனினும் வருகிற மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட இரு கட்சிகளும் விரும்பின. அதன்படி இரு கட்சிகளும் கடந்த சில நாட்களாக கூட்டணி பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டிருந்தன.

    இந்த பேச்சுவார்த்தையை பா.ஜனதா மூத்த தலைவரும், உள்துறை மந்திரியுமான அமித்ஷாவும் உறுதி செய்திருந்தார். தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த அனைத்து கட்சிகளும் இணைய வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் என்று அவர் கூறியிருந்தார்.

    அதேநேரம் பா.ஜனதாவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கால் சிரோமணி அகாலிதளம் தலைவர் சுக்பிர் சிங் பாதல் தொடர்ந்து நழுவி வந்தார்.

    இந்த நிலையில் இரு கட்சிகளுடனான கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அங்கு பா.ஜனதா தனித்து போட்டியிடுவதாக அறிவித்து உள்ளது.

    இதை கட்சியின் மாநில தலைவர் சுனில் ஜாக்கர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு உள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் பஞ்சாப்பில் பா.ஜனதா தனித்து போட்டியிடுகிறது.

    மக்களின் கருத்துகள், கட்சி தொண்டர்கள் மற்றும் தலைவர்களின் கருத்துகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. பஞ்சாப்பின் எதிர்காலம், இளைஞர்கள், விவசாயிகள், வர்த்தகர்கள், தொழிலாளர்கள் மற்றும் அடித்தட்டு மக்களின் நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.

    பஞ்சாப் மக்கள் ஜூன் 1-ந் தேதி அதிக எண்ணிக்கையில் பா.ஜனதாவுக்கு வாக்களிப்பதன் மூலம் கட்சியை மேலும் வலுப்படுத்துவார்கள்.

    பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் பஞ்சாப்புக்கு பா.ஜனதா ஆற்றிய பணிகள் யாருக்கும் மறைக்கப்படவில்லை.

    இவ்வாறு சுனில் ஜாக்கர் கூறியுள்ளார்.

    பா.ஜனதா தனித்து போட்டியிடுவதன் மூலம் பஞ்சாப்பில் 4 முனை போட்டி உறுதியாகி இருக்கிறது.

    அந்தவகையில் மாநிலத்தை ஆளும் ஆம் ஆத்மி, காங்கிரஸ், சிரோமணி அகாலிதளம் மற்றும் பா.ஜனதா கட்சிகள் தனித்தனியாக தேர்தலை சந்திக்கின்றன.

    • கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை விசாரிக்க 6 நாள் காவலுக்கு சிறப்பு சி.பி.ஐ. கோர்ட் அனுமதி.
    • கெஜ்ரிவால் 28-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் விசாரணை நடத்தப்பட உள்ளது.

    டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று இரவு கைது செய்தனர். பின்னர், அவரை அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து, கெஜ்ரிவாலை டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் அமலாக்கத்துறையினர் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா முன் விசாரணைக்கு வந்தது.

    அப்போது கெஜ்ரிவாலை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

    கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை விசாரிக்க 6 நாள் காவலுக்கு சிறப்பு சி.பி.ஐ. கோர்ட் அனுமதி அளித்தது. இதன்மூலம் அவரிடம் 28-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் விசாரணை நடத்தப்பட உள்ளது.

    இந்நிலையில், அமலாக்கத்துறை காவலில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலை செய்யப்பட்டு நாட்டில் புரட்சியை ஏற்படுத்துவார் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பகவந்த் மான் கூறியதாவது:-

    நாட்டில் சர்வாதிகாரத்தை கொண்டு வர பாஜக விரும்புகிறது. எதிர்க்கட்சி தலைவர்களை சிறைக்கு அனுப்புவது சுதந்திரம் அல்ல. ஒன்றுபடுவோம் அல்லது நாடு நாசமாகிவிடும். கெஜ்ரிவால் பெரிய புரட்சியை கொண்டு வருவார்.

    டெல்லி அரசு சட்டப்படி செயல்படும்.

    அரசியல் பழிவாங்கலின் கீழ் சிறைக்கு அனுப்பப்பட்ட முதல்வர் பதவி விலக வேண்டும் என்று எந்த சட்டமும் கூறவில்லை. அவர் அமலாக்கத்துறை காவலில் இருக்கிறார், அவர் குற்றவாளி என நிரூபிக்கப்படவில்லை. ஒவ்வொரு வேட்பாளரும் கெஜ்ரிவாலாக இருப்பார். ஒவ்வொரு தொண்டரும் கெஜ்ரிவாலாக இருப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விஷ சாராயம் விற்பனை செய்யப்பட்ட கிராமங்களில் போலீசார் அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
    • இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    சண்டிகர்:

    பஞ்சாப் மாநிலத்தின் சங்ரூர் மாவட்டத்தில் உள்ள குஜ்ரான் மற்றும் அதை சுற்றியுள்ள பல கிராமங்களில் கடந்த 20-ந் தேதி சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட சாராயத்தை வாங்கி குடித்த பலர் அடுத்தடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்டனர்.

    இதையடுத்து அவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். அன்று இரவே சிகிச்சை பலனின்றி 5 பேர் இறந்தனர். அதை தொடர்ந்து 21-ந் தேதி காலையில் மேலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது.

    இது சங்ரூர் மாவட்டம் முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, விஷ சாராயம் விற்பனை செய்யப்பட்ட கிராமங்களில் போலீசார் அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் சாராயம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இந்த நிலையில் விஷ சாராயம் குடித்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 6 பேர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலை இறந்தனர். இதனால் விஷ சாராயத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதனிடையே விஷ சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்த விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் சிரோமணி அகாலி தளம் கட்சிகள் ஆம் ஆத்மி தலைமையிலான அரசைக் கண்டித்துள்ளன.

    • ஒரே மகனான சித்து மூஸ்வாலாவின் திடீர் மரணம் அவர்களை வெகுவாக பாதித்தது.
    • செயற்கை கருவுறுதல் முறையில் அவர் கருவுற்றிருக்கிறார்.

    புகழ்பெற்ற பஞ்சாப் பாடகரும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான சித்து மூஸ் வாலா, அங்குள்ள மன்சா மாவட்டத்தில் 2022-ம் ஆண்டு மே 29-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். கனடாவைச் சேர்ந்த கூலிப்படைத் தலைவர் கோல்டி பிரார் இந்த கொலை சம்பவத்துக்கு பொறுப்பேற்றாா். இச்சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    58 வயதான சரண் சிங்கின் ஒரே மகனான சித்து மூஸ்வாலாவின் திடீர் மரணம் அவர்களை வெகுவாக பாதித்தது. ஆதலால் தனது மகனின் நினைவாக ஒரு குழந்தை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் செயற்கை கருவுறுதல் முறையில் அவர் கருவுற்றிருக்கிறார் என்று கூறப்பட்டது.

    மேலும் அவர் மார்ச் மாதம் அவர் குழந்தையை பெற்றெடுப்பார் எனவும் கூறப்பட்டது.

    இந்நிலையில், பாடகர் சித்து மூஸ் வாலாவிவன் பெற்றோருக்கு 2வதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.  

    • நான் பாஜகவில் இணைந்ததில் மகிழ்ச்சியடைகிறேன் என்று பாஜகவில் சேர்ந்த ப்ரினீத் கவுர் தெரிவித்துள்ளார்.
    • கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் எம்.பி ப்ரினீத் கவுர் காங்கிரஸ் கட்சியால் இடைநீக்கம் செய்யப்பட்டார்

    பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கின் மனைவி ப்ரினீத் கவுர் பாஜகவில் இணைந்துள்ளார்.

    பாட்டியாலா தொகுதி காங்கிரஸ் எம்.பியான ப்ரினீத் கவுர், மீண்டும் இதே தொகுதியில் பாஜக சார்பில் நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

    பிரதமர் மோடி நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றுள்ளார். நான் பாஜகவில் இணைந்ததில் மகிழ்ச்சியடைகிறேன் என்று பாஜகவில் சேர்ந்த ப்ரினீத் கவுர் தெரிவித்துள்ளார்.

    கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் எம்.பி ப்ரினீத் கவுர் காங்கிரஸ் கட்சியால் இடைநீக்கம் செய்யப்பட்டார். கட்சி விரோத நடவடிக்கைகள் மற்றும் பாஜகவுக்கு உதவியதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்திருந்தது. இந்நிலையில் அவர் பாஜகவில் சேர்ந்துள்ளார்.

    அமரீந்தர் சிங் 2002 முதல் 2007 வரை பஞ்சாப் முதலமைச்சராக இருந்தவர். இவர் மீண்டும் 2-ம் முறையாக 2017 -ம் ஆண்டு மீண்டும் பஞ்சாப் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2021-ல் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அமரீந்தர் சிங் தனது முதலமைச்சர் ராஜினாமா செய்தார். பின்னர் அவர் காங்கிரசில் இருந்து விலகி பஞ்சாப் லோக் காங்கிரஸ் எனும் கட்சியை தொடங்கினார். அதன் பிறகு 2022 செப்டம்பரில் அவரது கட்சியை பாஜகவுடன் இணைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×