search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பஞ்சாப் மாநிலத்தின் ஒரே ஒரு ஆம் ஆத்மி எம்.பி பாஜகவில் இணைந்துள்ளார்
    X

    பஞ்சாப் மாநிலத்தின் ஒரே ஒரு ஆம் ஆத்மி எம்.பி பாஜகவில் இணைந்துள்ளார்

    • பஞ்சாப் மாநிலத்தை ஆளும் ஆம் ஆத்மி அரசு, ஜலந்தர் தொகுதியின் வளர்ச்சி திட்டங்களுக்கு எனக்கு உதவவில்லை
    • பஞ்சாப் மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாஜகவில் இணைத்துள்ளேன் என்று சுஷில் குமார் தெரிவித்துள்ளார்

    பஞ்சம் மாநிலத்தில் ஜலந்தர் தொகுதி எம்.பியான சுஷில் குமார் மற்றும் ஜலந்தர் மேற்கு தொகுதி எம்எல்ஏ ஷீதன் அங்கூரல் ஆகியோர் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.

    பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியில் இருந்த ஒரே ஒரு எம்.பி சுஷில் குமார் ரிங்கு தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    பஞ்சாப் மாநிலத்தை ஆளும் ஆம் ஆத்மி அரசு, ஜலந்தர் தொகுதியின் வளர்ச்சி திட்டங்களுக்கு எனக்கு உதவவில்லை. அதனால் தான் ஜலந்தர் மக்களுக்கு நான் கொடுத்த வாக்குறுதிகளை என்னால் நிறைவேற்ற முடியவில்லை. ஆதலால் பஞ்சாப் மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாஜகவில் இணைத்துள்ளேன் என்று சுஷில் குமார் தெரிவித்துள்ளார்.

    மீண்டும் ஜலந்தர் தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக சுஷில் குமார் அறிவிக்கப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    கடந்தாண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார் சுஷில் குமார். அதன் பின் தற்போது அவர் பாஜகவில் சேர்ந்துள்ளார்.

    Next Story
    ×