என் மலர்tooltip icon

    கேரளா

    • நேரடி தரிசனம் மூலம் பக்தர்களுக்கு முழுமையான ஐயப்ப தரிசனம் கிடைக்கும்.
    • நாளை முதல் 19-ந்தேதி வரை தினமும் பல்வேறு பூஜை, வழிபாடுகள் நடைபெறுகிறது.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி மாத பூஜைக்காக நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.

    தந்திரி கண்டரரு ராஜீவரரு, பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார்.

    தொடர்ந்து நாளை முதல் 19-ந்தேதி வரை தினமும் பல்வேறு பூஜை, வழிபாடுகள் நடைபெறுகிறது. 19-ந்தேதி இரவு அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும்.

    முன்னதாக, "பங்குனி மாத பூஜை முதல் பக்தர்கள் 18-ம் படி ஏறி கொடி மரத்தில் இருந்து நேராக, கோவிலுக்குள் நுழைந்து சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதன்காரணமாக பக்தர்கள் மேம்பாலத்தை சுற்றி வந்து தரிசனம் செய்வதற்கான நேரம் மிச்சமாகும் என திருவனந்தபுரத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

    மேலும், அவர், "பக்தர்கள் கூடுதல் நேரம் ஐயப்பனை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும். தற்போது வரை 80 சதவீதம் பக்தர்களுக்கு முழுமையான ஐயப்ப தரிசனம் கிடைப்பது இல்லை என்ற நிலை இருந்து வந்தது. நேரடி தரிசனம் மூலம் பக்தர்களுக்கு முழுமையான ஐயப்ப தரிசனம் கிடைக்கும்" என தெரிவித்தார்.

    சபரிமலையில், பங்குனி ஆராட்டு திருவிழாவையொட்டி ஏப்ரல் 1-ந்தேதி மாலையில் மீண்டும் நடை திறக்கப்படும் என்றும் 2-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் ஆராட்டு விழா தொடங்குகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், 11-ந்தேதி ஆராட்டுடன் விழா நிறைவு பெறும் என கூறப்பட்டுள்ளது.

    • தற்போது மற்றொரு மிகவும் ஆபத்தான மற்றும் நயவஞ்சக எதிரி கேரளாவிற்குள் நுழைந்துள்ளார்.
    • அவரது காரை மறித்து போராட்டம் நடத்தியதாக ஐந்து ஆர்எஸ்எஸ்-பாஜக பிரமுகர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

    கேரள மாநிலம் நெய்யாற்றிங்கரை பகுதியில் மறைந்த காந்தியவாதி பி. கோபிநாதன் நாயரின் சிலை திறப்பு விழா கடந்த புதன்கிழமை நடைபெற்றது.

    இதில் மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், கேரளாவில் ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) மற்றும் இடது ஜனநாயக முன்னணி (LDF) ஒருவருக்கொருவர் சண்டையிடுவதில் நீண்ட வரலாற்றைக் கொண்டவர்கள். ஆனால் தற்போது மற்றொரு மிகவும் ஆபத்தான மற்றும் நயவஞ்சக எதிரி கேரளாவிற்குள் நுழைந்துள்ளார்.

    அதுதான் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நாம் பாஜகவை தோற்கடிக்க முடியும், ஆனால் ஆர்எஸ்எஸ் விஷம். இது குறித்து நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனென்றால் இது நம் நாட்டின் கட்டமைப்பில் பரவினால், அனைத்தையும் அழித்துவிடும் என்று பேசினார். இந்த உரைக்கு ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

     

    துஷார் காந்தி தனது கருத்துக்களை திரும்பப்பெற வேண்டும் என்றும்  அவரை கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் அவரது காரை மறித்து போராட்டம் நடத்தியதாக ஐந்து ஆர்எஸ்எஸ்-பாஜக  பிரமுகர்கள்  நேற்று (வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் நெய்யாட்டின்கரா நகராட்சி கவுன்சிலர் மகேசன் நாயரும் அடங்குவார்.

    இந்நிலையில் துஷார் காந்திக்கு எதிரான செயல்களை கேரள முதல்வர் பினராயி விஜயன், மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகத்திற்கு எதிரான தாக்குதல் என்று கண்டித்துள்ளார்.

    காங்கிரசும் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. இதுகுறித்து நேற்று ஊடகங்களிடம் பேசிய துஷார் காந்தி, கேரளாவில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடக்கும் என்று தான் எதிர்பார்க்கவில்லை. வகுப்புவாதத்துக்கு எதிரான தனது போராட்டத்தையும் கருத்தையும் திரும்பப்பெறப்போவதில்லை என திட்டவட்டமாகத் தெரிவித்தார். 

    • அமெரிக்காவில் பிரதமர் மோடி டிரம்பை சந்தித்ததை பாராட்டி அறிக்கை வெளியிட்டார்.
    • சசி தரூரின் செயல்கள் காங்கிரஸ் கட்சியை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் மக்களவை தொகுதியில் இருந்து 4 முறை தொடர்ந்து எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர் காங்கிரசை சேர்ந்த சசிதரூர்.

    மன்மோகன் சிங் ஆட்சியில் மத்திய மந்திரியாக பதவி வகித்த சசி தரூர், ஐ.நா.சபையில் உயர் பதவி வகித்தவர்.

    அமெரிக்காவில் பிரதமர் மோடி-டொனால்டு டிரம்ப் சந்திப்பை பாராட்டி அறிக்கை வெளியிட்டது. இடதுசாரி ஆட்சியில் கேரளா முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், முதல் மந்திரி பினராயி விஜயன் பொருளாதாரத்தை சிறப்பாக கையாளுவதாகவும் புகழ்ந்து தள்ளியது என இவரது செயல்கள் காங்கிரஸ் கட்சியின் மேலிடத்தை கடுப்பாக்கியது.

    மேலும், பிப்ரவரி 25-ம் தேதி மத்திய மந்திரி பியூஷ் கோயலுடன் செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியது காங்கிரஸ் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியது. சசி தரூர் இதற்கெல்லாம் உரிய விளக்கத்தை அளித்துவந்தார்.

    இந்நிலையில், கேரள கம்யூனிஸ் கட்சியின் முதல் மந்திரி பினராயி உடன் செல்பி எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது.

    கேரள கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அளித்த விருந்தில் முதல் மந்திரி பினராயி விஜயன் கலந்துகொண்டார். விருந்து நிகழ்ச்சியின்போது சசிதரூர் பினராயைச் சந்தித்து செல்பி எடுத்துக் கொண்டார். இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியது காங்கிரஸ் மேலிடத்துக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துயுள்ளது.

    • இருவரும் ஒன்றாக ரீல்ஸ் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.
    • ரீல்ஸ் வீடியோ எடுப்பதற்காக தனது வீட்டின் அருகிலேயே மற்றொரு வீட்டை வாடகைக்கு எடுத்து வைத்திருந்தார்.

    திருவனந்தபுரம்:

    'இன்ஸ்டாகிராம்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கணக்கு வைத்திருப்பவர்களில் ஏராளமானோர் வித்தியாசமான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அதன் மூலம் பலர் பிரபலமாகி விடுகிறார்கள்.

    அப்படி பிரபலமான ஒரு வாலிபர், தன்னுடன் ரீல்ஸ் வீடியோ எடுத்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கேரளாவில் அரங்கேறி உள்ளது. அந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஹபீஸ் சஜீவ். இவர் இன்ஸ்டாகிராமில் ஏராளமான வீடியோக்களை பதிவிட்டிருக்கிறார். இதன் மூலம் கேரளாவில் பிரபலமான நபராக அவர் மாறினார். இந்தநிலையில் அவருக்கு ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டது.

    அந்த பெண் ஹபீஸ் சஜீவுடன் நட்பாக பழகினார். இதனைத்தொடர்ந்து இருவரும் ஒன்றாக ரீல்ஸ் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இதன் காரணமாக அவர்களுக்குள் நெருக்கம் அதிகமானது. ஹபீஸ் சஜீவ் ரீல்ஸ் வீடியோ எடுப்பதற்காக தனது வீட்டின் அருகிலேயே மற்றொரு வீட்டை வாடகைக்கு எடுத்து வைத்திருந்தார்.

    அங்கு வைத்து தான் 'ரீல்ஸ்' வீடியோ எடுப்பாராம், அந்த வீட்டுக்கு இளம்பெண்னை வரவழைத்த ஹபீஸ் சஜீவ் 'ரீல்ஸ்' வீடியோ எடுத்துள்ளார். அந்த வீட்டில் வைத்து இளம்பெண்ணை ஹபீஸ் சஜீவ் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

    திருமணம் செய்வதாக கூறி அவர் பல முறை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் ஹபீஸ் சஜீவ் அந்த இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண், திருமணம் செய்வதாக கூறி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஹபீஸ் சஜீவ் மீது ஆலப்புழா தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். பின்பு ஹபீஸ் சஜீவை கைது செய்தனர். அவர் மீது பி.என்.எஸ். சட்டப்பிரிவு 69 (துணிச்சலான வழிகளை பயன்படுத்தி உடலுறவு கொள்ளுதல்), 74 (பெண்ணின் அடக்கத்தை அவமதிக்கும் நோக்கத்துடன் பெண்ணை தாக்குதல் அல்லது குற்றவியல் பலத்தை பயன்படுத்துதல் )ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

    ரீல்ஸ் வீடியோ எடுக்க பயன்படுத்திய பெண்ணை வாலிபர் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் ஆலப்புழாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இணையத்தை தணிக்கை செய்வது சாத்தியமில்லை.
    • பெற்றோரின் கவலைகள் தீர்க்கப்பட வேண்டும்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் காசர் கோடு பைவளிக்கே பகுதியை சேர்ந்த 15வயது சிறுமி, கடந்த மாதம் வீட்டிலிருந்து திடீரென மாயமானார். அவர் அதே பகுதியை சேர்ந்த 42 வயது மதிக்கத்தக்க ஆட்டோ டிரைவர் ஒருவருடன் சென்றிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து அவர்களது பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். ஆனால் 25 நாட்களுக்கு மேல் ஆகியும் தங்களது மகளைப்பற்றி எந்த தகவலும் தெரியாததால், மாணவியின் பெற்றோர் கோர்ட்டில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, மாயமான சிறுமியை கண்டுபிடிக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

    அதன்பேரில் சிறுமியை தேடும் பணியை போலீசார் தீவிரப்படுத்தினர். மாயமான இருவரின் செல்போன் சிக்னல்களை வைத்து போலீசார் தேடினர்.

    மேலும் அவர்கள் வீடு இருந்த பகுதியை ஒட்டியிருக்கும் வனப்பகுதியில் டிரோன்களை பயன்படுத்தி தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது.

    அப்போது அந்த மாணவி, ஆட்டோ டிரைவருடன் காட்டுப்பகுதியில் தூக்கில் பிணமாக தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. சிறுமி மாயமான விவகாரத்தில் போலீசார் உடனடியாக விசாரணையை தொடங்கவில்லை என்ற குற்றச்சாட்டு கூறப்பட்டது.

    இந்தநிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கேரள ஐகோர்ட்டு, போலீசாருக்கு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. நீதிபதிகள் தேவன் ராமச்சந்திரன் மற்றும் சினேகலதா ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் பிறப்பித்துள்ள உத்தரவு விவரம் வருமாறு:-

    மைனர் பெண் மற்றும் பெண் காணாமல் போனதாக புகார் வந்தவுடன் போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்க வேண்டும். புகாரின் செல்லுபடி தன்மையை முதல் கட்டத்தில் ஆராய வேண்டிய அவசியமில்லை. மைனர் குழந்தைகள் காணாமல் போனதாக கேள்விப்படும் போது, விசாரணை அதிகாரியின் மனதில் போக்சோ பிரிவு இருக்க வேண்டும்.

    பைவளிக்கேயில் காணாமல் போன சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் விசாரணையை தவறாக கூற முடியாது. அந்த சம்பவத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விளக்கும் ஒரு குறிப்பாணையை காவல்துறை சமர்ப்பிக்க வேண்டும்.

    அருகில் தூங்கிக் கொண்டிருந்த ஒரு குழந்தை 30-வது நாளில் இறந்து கிடந்த சம்பவத்தில் பெற்றோருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி தாங்க முடியாதது. அது அந்த குழந்தையின் பெற்றோருக்கு வாழ்நாள் முழுவதும் நீடிக்கும். விசாரணை பொருத்தமானதல்ல என்ற பெற்றோரின் கவலைகள் தீர்க்கப்பட வேண்டும்.

    'கோவிட்' காலத்திற்கு பிறகு உலகம் நிறைய மாறி விட்டது. குழந்தைகள் பல தாக்கங்களுக்கு ஆளாகின்றனர். சமூக ஊடகங்கள் மற்றும் சினிமாவை கட்டுப்படுத்துவது மட்டும் போதாது. இணையத்தை தணிக்கை செய்வது சாத்தியமில்லை.

    இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    • கொல்லத்தில் உள்ள ஒரு சி.எஸ்.ஐ. தேவாலயத்தின் அருகே கல்லறை தோட்டம் உள்ளது.
    • கொல்லம் கிழக்கு போலீசார் சம்பவ இடம் வந்து சூட்கேசை கைப்பற்றி சோதனை செய்தனர்.

    கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள ஒரு சி.எஸ்.ஐ. தேவாலயத்தின் அருகே கல்லறை தோட்டம் உள்ளது. இங்குள்ள குழாயை சீர் செய்யும் பணிக்கு இன்று காலை தொழிலாளர்கள் சென்றனர். அப்போது அங்கு ஒரு சூட்கேஸ் கேட்பாரற்ற நிலையில் கிடந்துள்ளது.

    அதனை பார்த்த தொழிலாளர்கள், இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். கொல்லம் கிழக்கு போலீசார் சம்பவ இடம் வந்து சூட்கேசை கைப்பற்றி சோதனை செய்தனர். இதில் பிளாஸ்டிக்கால் சுற்றப்பட்ட மனித எலும்புக் கூடு பெட்டியில் இருப்பது தெரியவந்தது. அது யாருடையது என்பது தெரியவில்லை.

    அதேநேரம் அது 2 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்து உள்ளது. அதனை தடயவியல் பகுப்பாய்வுக்கு அனுப்பிய போலீசார், அப்பகுதியில் மாயமானவர்கள் குறித்த புகார்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தற்போது வரை 80 சதவீதம் பக்தர்களுக்கு முழுமையான ஐயப்ப தரிசனம் கிடைப்பது இல்லை என்ற நிலை இருந்து வந்தது.
    • மே மாதம் சர்வதேச ஐயப்ப சங்கமம் பம்பையில் 2 நாட்கள் நடைபெறும்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி மாத பூஜைக்காக நடை வருகிற 14-ந்தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரரு, பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார்.

    தொடர்ந்து 15-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை தினமும் பல்வேறு பூஜை, வழிபாடுகள் நடைபெறுகிறது. 19-ந்தேதி இரவு அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும்.

    இந்தநிலையில் திருவனந்தபுரத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பங்குனி மாத பூஜை முதல் பக்தர்கள் 18-ம் படி ஏறி கொடி மரத்தில் இருந்து நேராக, கோவிலுக்குள் நுழைந்து சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதன்காரணமாக பக்தர்கள் மேம்பாலத்தை சுற்றி வந்து தரிசனம் செய்வதற்கான நேரம் மிச்சமாகும்.

    மேலும் பக்தர்கள் கூடுதல் நேரம் ஐயப்பனை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும். தற்போது வரை 80 சதவீதம் பக்தர்களுக்கு முழுமையான ஐயப்ப தரிசனம் கிடைப்பது இல்லை என்ற நிலை இருந்து வந்தது. நேரடி தரிசனம் மூலம் பக்தர்களுக்கு முழுமையான ஐயப்ப தரிசனம் கிடைக்கும்.

    திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் 70-வது ஆண்டை முன்னிட்டு ஐயப்பன் உருவம் பதித்த தங்க டாலர்கள் சன்னிதானத்தில் பூஜை செய்து விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 1 முதல் 8 கிராம் அளவிலான தங்க டாலர்கள் ஏப்ரல் மாதம் விஷூ பண்டிகையையொட்டி விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 1-ந்தேதி முதல் இதற்கான முன்பதிவு சபரிமலை நிர்வாக அதிகாரி தலைமையில் நடைபெறும்.

    மே மாதம் சர்வதேச ஐயப்ப சங்கமம் பம்பையில் 2 நாட்கள் நடைபெறும். இதில் 50-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஐயப்ப பக்தர்கள் பங்கேற்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.

    திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சபரிமலை உள்பட 1,250-க்கும் மேற்பட்ட கோவில்களில் வழிபாட்டு கட்டணங்களை 30 சதவீதம் உயர்த்த கேரள ஐகோா்ட்டு அனுமதியுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 2016-ம் ஆண்டுக்கு பின் வழிபாட்டு கட்டணங்கள் உயர்த்தப்படாமல் இருந்து வந்த நிலையில், 9 ஆண்டுகளுக்கு பிறகு கட்டணங்களை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    கோவில் விழாக்களில் அனைத்து நாட்களிலும் சாமி ஊர்வலத்திற்கு யானைகளை பயன்படுத்தும் நிலை இருந்து வருகிறது. இதில் பள்ளிவேட்டை, ஆராட்டு உள்பட முக்கிய நிகழ்ச்சிகளில் மட்டும் சாமி ஊர்வலத்திற்கு யானைகளை பயன்படுத்த தேவஸ்தானம் ஆலோசனை செய்து வருகிறது. விரைவில் இதுதொடர்பாக முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது உறுப்பினர் அஜிகுமார் உடன் இருந்தார்.

    சபரிமலையில், பங்குனி ஆராட்டு திருவிழாவையொட்டி ஏப்ரல் 1-ந்தேதி மாலையில் மீண்டும் நடை திறக்கப்படும். 2-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் ஆராட்டு விழா தொடங்குகிறது. 11-ந்தேதி ஆராட்டுடன் விழா நிறைவு பெறும்.

    • இதையடுத்து மாணவியை கண்டுபிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ள கோர்ட்டு உத்தரவிட்டது.
    • ட்ரோன்கள் மூலமாகவும் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கர்நாடகா மாநிலம் பைவளிகே பகுதியை சேர்ந்தவர் பிரதீப் (வயது42). ஆட்டோ டிரைவரான இவருக்கு திருமணமாகவில்லை. இவரது பக்கத்து வீட்டில் 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் இருந்திருக்கிறார்.

    பக்கத்து வீட்டுக்காரர் என்ற முறையில் மாணவியின் வீட்டுக்கு பிரதீப் அடிக்கடி சென்றிருக்கிறார். மேலும் மாணவியிடம் சகஜமாக பேசி பழகி வந்திருக்கிறார். சகோதர பாசம் என்ற அடிப்படையில் அவர் பழகியதால், அவர்களின் பழக்கத்தை யாரும் சந்தேகப்படவில்லை.

    இந்தநிலையில் கடந்த மாதம்(பிப்ரவரி) 12-ந்தேதி வீட்டில் இருந்த மாணவி திடீரென மாயமானார். இதையடுத்து அவரது பெற்றோர் அவளது செல்போனை தொடர்பு கொண்டனர். முதலில் அழைப்பு சென்ற நிலையில், சிறிது நேரத்திற்கு பிறகு செல்போன் சுவிட்ச் ஆப் என்று வந்துவிட்டது.

    மாணவி மாயமாகியிருந்த அதே வேளையில், பக்கத்து வீட்டில் வசித்து வந்த ஆட்டோ டிரைவரான பிரதீப்பையும் காணவில்லை. இந்தநிலையில் மாணவி, தனது உறவினர் ஒருவரின் செல்போனுக்கு ஆட்டோ டிரைவர் நெருக்கமாக இருக்கும் 50-க்கும் மேற்பட்ட புகைப்படங்களை அனுப்பினார்.

    இதனால் மாணவி ஆட்டோ டிரைவருடன் சென்றிருப்பதை மாணவியின் குடும்பத்தினர், அறிந்தனர். அவர்கள் வீடு இருக்கக்கூடிய பகுதி கேரள மாநிலத்தை ஒட்டிய பகுதி என்பதால், மாணவி மாயமானது குறித்து கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள கும்பலே போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மாணவி மற்றும் பிரதீப்பை தேடினர். ஆனால் அவர்கள் மாயமாகி பல நாட்கள் ஆகியும் போலீசார் கண்டுபிடிக்காததால், மாணவியின் குடும்பத்தினர் கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர்.

    இதையடுத்து மாணவியை கண்டுபிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ள கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் மாணவியை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டனர். மாணவி இருக்கும் இடத்தை கண்டறிய இருவரின் செல்போனை கண்காணித்தபடி இருந்தனர்.

    அதில் அவர்களின் வீட்டிற்கு சற்று தொலைவில் உள்ள வனப்பகுதியை காண்பித்தது. இதையடுத்து வனப்பகுதிக்குள் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. ட்ரோன்கள் மூலமாகவும் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது வனப்பகுதியில் உள்ள ஒரு மரத்தில் மாணவி மற்றும் ஆட்டோ டிரைவர் ஆகிய இருவரும் தூக்கில் பிணமாக தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து கேரள போலீசார் அந்த இடத்துக்கு சென்று இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் இருவரும் தற்கொலை செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால் சம்பவ இடத்தில் தற்கொலை செய்துகொண்டதற்கான கடிதம் எதுவும் சிக்கவில்லை.

    இருவரின் செல்போன்கள், கத்தி, சாக்லேட் ஆகியவையே கிடந்தன. மேலும் உடல் அழுகிய நிலையிலும் இல்லை. போலீசார் தீவிரமாக தேடுவதை அறிந்து இருவரும் தூக்குப்போட்டு உயிரை மாய்த்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாயமான 25 நாட்களுக்கு பிறகு 10-ம் வகுப்பு மாணவி, ஆட்டோ டிரைவருடன் காட்டுப்பகுதியில் தூக்கில் பிணமாக தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அதிக எடை குறைப்புக்கான டயட்டை அவர் பின்பற்றி வந்த நிலையில், அவரது உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டது.
    • ஸ்ரீநந்தாவின் வயிறு மற்றும் உணவுக்குழாய் சுருங்கிவிட்டதை மருத்துவர்கள் கண்டுபிடித்து சிகிச்சை அளித்தனர்.

    திருவனந்தபுரம்:

    'யூ-டியூப்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஏராளமான வீடியோக்கள் பதிவிடப்படுகின்றன. அவற்றில் உடல் ஆரோக்கியம் தொடர்பான வீடியோக்கள் அதிகமாக இருக்கும். அவற்றை பின்பற்றி நடந்தால் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கிறது.

    அதே நேரத்தில் சில ஆதாரமற்ற வீடியோக்களை பார்ப்பவர்கள், அதனை பின்பற்றி நடக்கும் போது பிரச்சனைகளையும் சந்திக்கிறார்கள். உடல் ஆரோக்கியம், நோய் பாதிப்பு உள்ளிட்ட விஷயங்களை மருத்துவர்கள் ஆலோசனை இல்லாமல் செய்வது சில நேரங்களில் நமது உயிருக்கே ஆபத்தான விஷயமாக மாறிவிடுகிறது.

    அப்படித்தான் கேரளாவில் ஒரு சம்பவம் தற்போது நடந்திருக்கிறது. உடல் எடையை குறைப்பதற்காக 'யூ-டியூப்' வீடியோவை பார்த்து உணவு கட்டுப்பாட்டை கடைபிடித்த கல்லூரி மாணவி ஒருவர், உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார்.

    கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கூத்து பரம்பா பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதரன். இவரது மனைவி ஸ்ரீஜா. இவர்களது மகன் யதுவந்த், மகள் ஸ்ரீநந்தா (வயது18). மட்டனூரில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாமாண்டு இளங்கலை படித்து வந்த ஸ்ரீநந்தா, தனது உடல் எடை அதிகமாக இருப்பதாக எண்ணினார்.

    இதனால் தனது உடல் எடையை குறைக்க திட்டமிட்டார். இதற்காக அவர் உடல் எடை குறைப்பு தொடர்பான வீடியோக்களை யூ-டியூப்பில் பார்த்துள்ளார். அந்த வீடியோக்களில் வருவது போன்று உணவை குறைத்து சாப்பிட்டபடி இருந்திருக்கிறார்.

    அதிக எடை குறைப்புக்கான டயட்டை அவர் பின்பற்றி வந்த நிலையில், அவரது உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரை அவரது குடும்பத்தினர் தலச்சேரி கூட்டுறவு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

    ஆகவே அவர் கோழிக்கோடு மருத்துவக்கல்லுரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். உடல் எடையை குறைப்பதற்காக உணவு சாப்பிடுவதை குறைத்ததன் காரணமாக ஸ்ரீநந்தாவின் வயிறு மற்றும் உணவுக்குழாய் சுருங்கிவிட்டதை மருத்துவர்கள் கண்டுபிடித்து சிகிச்சை அளித்தனர்.

    இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி மாணவி ஸ்ரீநந்தா பரிதாபமாக இறந்தார். இதனால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். மகளை இழந்த பெற்றோர் கதறி துடித்தனர்.

    மாணவி இறந்தது குறித்து அவருக்கு சிகிச்சையளித்த தலச்சேரி கூட்டுறவு மருத்துவமனையின் டாகடர் நாகேஷ்பிரபு கூறியிருப்பதாவது:-

    உணவுக்கோளாறு காரணமாக வரக்கூடிய அனோரெக்சியா நெர்வோ சாவால் மாணவி பாதிக்கப்பட்டிருந்தார். உடல் எடையை அதிகமாக குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் பசியுடனே இருந்திருக்கிறார். தண்ணீர் உணவையே அதிகமாக சாப்பிட்டுள்ளார்.

    இந்த உணவு முறையை 6 மாதங்களாக பின்பற்றியுள்ளார். மாணவி ஸ்ரீநந்தா விஷயத்தில் அவரது உடில் சோடியம் மற்றும் சர்க்கரை அளவுகள் குறைந்தது. அதனை சரிசெய்த பிறகும் அவற்றின் அளவு குறைந்த படியே இருந்தது.

    அனோரெக்சியா நெர்வோசா மேற்கத்திய நாடுகளில் பொதுவானது. ஆனால் கேரளாவில் மிகவும் அரிதானது. அனோரெக்சியா நெர்வோசா பாதிப்புக்கு உள்ளாகுபவர்கள் காலப்போக்கில் தங்களின் பசி உணர்வை இழக்கிறார்கள். இது அனைத்து வயது மற்றும் உடல்வகையினரையும் பாதிக்கும்.

    சரியான நேரத்தில் சிகிச்சை பெற்றால் குணமடைதல் சாத்தியமாகும். இருப்பினும் இத்தகைய கோளாறுகள் ஒரே நாள் இரவில் குணமாகாது. ஒருவர் பாதிக்கப்பட்ட காலத்தின் தீவிரம் மற்றும் நீளத்தை பொறுத்து குணமடைய நீண்ட காலம் ஆகலாம்.

    அனோரெக்சியா நெர்வோசா என்பது முற்றிலும் ஒரு உணவு கோளாறும் இல்லை. இது ஒரு உளவியல் நிலையாகும். எனவே மாணவி ஸ்ரீநந்தா நீண்ட காலத்துக்கு முன்பே மனநல சிகிச்சை எடுத்திருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

    • மீண்டும் பயன்படுத்த முடியாத பிளாஸ்டிக்கை ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • ரெயில்வே தண்டவாளங்களை சுத்தமாக வைத்திருப்பது ரெயில்வேயின் பொறுப்பு.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் திருமண விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை பயன்படுத்த வேண்டாம் என்று கேரள ஐகோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது.

    பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்பான வழக்குகளில் கேரள ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்ச் கூறியிருப்பதாவது:-

    திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை பயன்படுத்த வேண்டாம். அதற்கு பதிலாக கண்ணாடி தண்ணீர் பாட்டில்களை மாற்றி பயன்படுத்தலாம். மீண்டும் பயன்படுத்த முடியாத பிளாஸ்டிக்கை ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் நிகழ்வுகளுக்கு பிளாஸ்டிக் பயன்படுத்த உரிமம் பெறுவது கட்டாயமாகும்.

    ரெயில்வே தண்டவாளங்களை சுத்தமாக வைத்திருப்பது ரெயில்வேயின் பொறுப்பு. அவற்றில் கழிவுகள் கொட்டப்படுவதை அனுமதிக்கக்கூடாது. ரெயில் தண்டவாளங்களில் இருந்து கழிவுகளை முழுமையாக அகற்றுவதை ரெயில்வே துறை உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு கேரள ஐகோர்ட்டு கூறியிருக்கிறது.

    இந்த விவகாரத்தில் கேரள அரசு ஐகோர்ட்டில் கொடுத்துள்ள விளக்கத்தில், "நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பிளாஸ்டிக் பயன்படுத்து வதற்கான உரிமங்களை வழங்கும் பொறுப்பு உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சிகளில் அரை லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் பயன்படுத்த தடை செய்யப் பட்டுள்ளது. மலைப்பாங்கான பகுதிகளில் பிளாஸ்டிக் தடை பரிசீலனையில் உள்ளது" என்று தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • லாட்டரி சீட்டுகள் மூலம் கேரள அரசுக்கு ரூ.11,518.68 கோடி வரி வருவாய் கிடைத்துள்ளது.
    • கேரளா மாநில பொருளாதாரத்தில் லாட்டரி சீட்டு விற்பனை முக்கிய பங்கு வகிக்கிறது.

    கேரளாவில் கடந்த 4 ஆண்டுகளில் சுமார் ரூ.41,000 கோடிக்கு லாட்டரி சீட்டுகள் விற்பனை நடந்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.

    கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி கூட்டணி அரசு இரண்டாவது முறையாக பொறுப்பேற்றது முதல் தற்போது வரை சுமார் ரூ.41,000 கோடிக்கு லாட்டரி விற்கப்பட்டுள்ளது.

    2021 ஏப்ரல் முதல் 2024 டிசம்பர் 31 வரையிலான காலகட்டங்களில் ரூ.41,138.45 கோடிக்கு விற்பனையான லாட்டரி சீட்டுகள் மூலம் அரசுக்கு ரூ.11,518.68 கோடி வரி வருவாய் ஆகவும், ரூ.2,781.54 கோடி லாபமாகவும் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கேரளா அரசு தற்போது 7 வாராந்திர லாட்டரிகளையும், ஆண்டுதோறும் ஆறு பம்பர் லாட்டரிகளையும் வெளியிட்டு வருகிறது. மொத்தம் 38,577 அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் லாட்டரி சீட்டுகளை விற்கிறார்கள், கேரளா மாநில பொருளாதாரத்தில் லாட்டரி சீட்டு விற்பனை முக்கிய பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பெண்கள் சிறைச்சாலையின் அலுவலக கட்டிடத்திற்கு மேலே 25 மீட்டர் உயரத்தில் இந்த டிரோன் பறந்துள்ளது.
    • டிரோன் பறந்த நாளில் அந்த பகுதியில் திருமணமோ வேறு எந்த விழாவோ நடைபெறவில்லை.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணூரில் மத்திய சிறை உள்ளது. இதன் அருகே மாவட்ட சிறை மற்றும் ஒரு சிறப்பு துணை சிறைச்சாலை உள்ளது. இவற்றுக்கு பின்னால் பெரிய சுவர்களை கொண்ட பெண்கள் சிறையும் உள்ளது.

    இங்கு சம்பவத்தன்று இரவு ஒரு டிரோன் 2 முறை பறந்து சுற்றி வந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உயர் பாதுகாப்பு கொண்ட பெண்கள் சிறைச்சாலையின் அலுவலக கட்டிடத்திற்கு மேலே 25 மீட்டர் உயரத்தில் இந்த டிரோன் பறந்துள்ளது.

    முதலில் சிறை ஊழியர்கள் இதனை சாதாரணமாகத்தான் கருதினர். ஆனால், 2 முறை அந்த கட்டிடத்தை சுற்றி வந்த டிரோன், சிவப்பு மற்றும் பச்சை விளக்குகளை ஒளிரச் செய்து விட்டு மறைந்தது தான் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக சிறை ஊழியர்கள், கண்காணிப்பாளருக்கு தகவல் கொடுத்தனர். அவர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் மற்றும் விழாக்களின்போது டிரோன் பறக்க விட்டு படம் எடுப்பது வழக்கம்.

    பெண்கள் சிறைச்சாலையின் மேலே டிரோன் பறந்த நாளில் அந்த பகுதியில் திருமணமோ வேறு எந்த விழாவோ நடைபெறவில்லை. எனவே டிரோன் பறந்தது ஏன்? அதனை பறக்க விட்டது யார்? என்பது மர்மமாக உள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×