என் மலர்
ஜார்கண்ட்
- பாதுகாப்பு படையினரின் அதிரடி வேட்டையில் 27 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
- பப்பு லோஹாரா தலைக்கு ரூ.10 லட்சம் பிரபாத் கஞ்சு தலைக்கு ரூ.5 லட்சம் பரிசு தொகை அறிவிக்கப்பட்டது.
மாவோயிஸ்டுகளை கூண்டோடு ஒழித்துக் கட்ட நாடு முழுவதும் மத்திய பாதுகாப்பு படையினர் அதிரடி வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மண்டலத்தில் பாதுகாப்பு படையினரின் அதிரடி வேட்டையில் 27 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் முக்கிய தலைவர் பசவராஜ் கொல்லப்பட்டார்.
70 வயதான பசவ ராஜு, இந்தியாவின் மிகவும் தேடப்படும் மாவோயிஸ்டு தலைவர்களில் ஒருவராக இருந்தார். அவரது தலைக்கு ரூ. 10 கோடி வரை பரிசு அறிவிக்கப்பட்டது.
இவரைப் போலவே ஜன்முக்தி பரிஷத் என்ற மாவோயிஸ்டு இயக்கத்தின் முக்கிய தலைவர்களான பப்பு லோஹாரா மற்றும் பிரபாத் கஞ்சு ஆகியோரை பாதுகாப்பு படையினர் தேடி வந்தனர்.
பப்பு லோஹாரா தலைக்கு ரூ.10 லட்சம் பிரபாத் கஞ்சு தலைக்கு ரூ.5 லட்சம் பரிசு தொகை அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலம் லதேகர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளை இன்று அதிகாலை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அவர்கள் மீது கடுமையான துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
இந்த மோதலில் மாவோயிஸ்டு முக்கிய தலைவர்களான பப்பு லோஹாரா மற்றும் பிரபாத் கஞ்சு இருவரும் சுட்டு கொல்லப்பட்டனர்.
இந்த மோதலின் போது மாவோயிஸ்டு ஒருவரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து அந்த பகுதியில் மாவோயிஸ்டுகள் வேட்டை நடந்து வருகிறது.
- "கொலை வழக்கில் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் ஒருவர் கூட பாஜகவின் தலைவராக முடியும்" என விமர்சித்தார்.
- ஏற்கனவே பலமுறை சம்மன் அனுப்பியும் ராகுல் காந்தி ஆஜராகவில்லை.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் வயநாடு காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்திக்கு எதிராக ஜார்க்கண்டில் உள்ள சாய்பாசா எம்.பி-எம்.எல்.ஏ நீதிமன்றம் ஜாமினில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்துள்ளது.
ஜூன் 26 ஆம் தேதி ராகுல் காந்தி நேரில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி ராகுல் காந்தியின் வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.
2018 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, அப்போதைய பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை குறித்து தெரிவித்த கருத்துக்களுக்கு பாஜகவில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.
அதாவது 2003 குஜராத் கலவரத்தின் பின்னணியில், "கொலை வழக்கில் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் ஒருவர் கூட பாஜகவின் தலைவராக முடியும்" என்று ராகுல் கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
எனவே ராகுல் காந்தி மீது பாஜக தலைவர் பிரதாப் கட்டியார் தாக்கல் செய்த மனு விசாரகிக்கப்பட்டு வந்தது. ஏற்கனவே பலமுறை சம்மன் அனுப்பியும் ராகுல் காந்தி ஆஜராகவில்லை.
இந்நிலையில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரிய ராகுலின் மனுவையும் சாய்பாசா நீதிமன்றம் நிராகரித்தது. மேலும் ஜாமினில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்து, ஜூன் 26 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டது.
- பொகாரோ மாவட்டத்தில் மின்னல் தாக்கி 2 பேர் பலியாகினர்.
- நீரில் மூழ்கி 5 பேர் உயிரிழந்தனர் என தகவல் வெளியானது.
ராஞ்சி:
ஜார்க்கண்ட் மாநிலத்தின் பொகாரோ மாவட்டத்தில் கனமழை மற்றும் பலமான காற்றுடன் கூடிய மின்னல் தாக்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்புக்கு உள்ளானது.
மாவட்டத்தின் இரு பகுதிகளில் பெய்த கனமழையின் போது நீரில் மூழ்கி 5 பேரும், 2 பேர் மின்னல் தாக்கியும் உயிரிழந்தனர்.
சந்தன்கியாரி பகுதியில் உள்ள கம்ஹாரியா கிராமத்தில் உள்ள ஒரு குளத்தில் குளித்தபோது ஒரு பெண் மற்றும் அவரது 2 மகள்கள் உள்பட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மின்னல் தாக்கி ஒரு விவசாயி மற்றும் 7 வயது சிறுமி உயிரிழந்தனர். மழை தொடர்பான இறப்புகளில் 7 பேர் பலியாகினர் என அம்மாநில போலீசார் தெரிவித்தனர்.
- மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் நக்சலைட்டுகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
- அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நக்சலைட்டுகளை முற்றிலும் ஒழித்து விடுவோம்
ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டத்தின் லால்பானியாவில் உள்ள லுகு மலைப் பகுதிகளில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து இன்று அதிகாலை 5.30 மணியளவில் நக்சலைட்டுகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் துப்பாக்கியால் சுட்டனர் இதனால் பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் 8 நக்சலைட்டுகளை மத்திய பாதுகாப்பு படையி னர் சுட்டு கொன்றனர், பாதுகாப்புப் படையினருக்கு எந்த காயமும் ஏற்பட வில்லை.
சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் நக்சலைட்டுகளின் தலைவன் ஒருவனும் அடங்கும். அவனது தலைக்கு அரசு ரூ.1 கோடி அறிவித்து இருந்தது. என்கவுண்டர் நடந்த இடத்தில் இருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து நக்சலைட்டுகளை தேடும் பணி நடைபெற்று வருகின்றன.
சமீபகாலமாக, சத்தீஸ்கர், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை பாதுகாப்புப் படையினர் தீவிரப்படுத்தி உள்ளது.
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நக்சலைட்டுகளை முற்றிலும் ஒழித்து விடுவோம் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சமீபத்தில் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி 56 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
- ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராக பதவியேற்றார்.
கடந்தாண்டு இறுதியில் நடைபெற்ற ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி 56 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அதில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மட்டும் 34 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பொறுப்பேற்றார்.
இந்நிலையில், அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி இன்று ராஞ்சியில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை சந்தித்து பேசினார்.
ஜார்க்கண்டில் முதலீடு செய்வது தொடர்பாக இருவரும் விவாதித்தனர் என்று கூறப்படுகிறது.\
- இந்த முடிவு எடுக்கப்பட்டு ஒரு வருடம் ஒரு மாதம் கடந்துவிட்டது.
- ஜார்க்கண்ட் வருவாய், நில சீர்திருத்தங்கள் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் தீபக் பிருவா தெரிவித்தார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் அடுத்த நிதியாண்டில் சாதி கணக்கெடுப்பை நடத்தப்படும் என்று முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு அறிவித்துள்ளது.
ஜார்க்கண்ட் வருவாய், நில சீர்திருத்தங்கள் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் தீபக் பிருவா இன்று சட்டமன்றத்தில் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

இன்று பட்ஜெட் கூட்டத்தின்போது சட்டமன்றத்தில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் பிரதீப் யாதவ், கடந்த வருடம் பிப்ரவரியில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவு எடுக்கப்பட்டு ஒரு வருடம் ஒரு மாதம் கடந்துவிட்டது. இதுவரை அதில் என்ன பணிகள் செய்யப்பட்டுள்ளன என அரசு விளக்க வேண்டும்.
தெலுங்கானா மாநிலம் நம்மை விட தாமதமாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடிவு செய்தது, அதன் அறிக்கையும் கடந்த பிப்ரவரியில் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது என தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த பேசிய அமைச்சர் தீபக் பிருவா, சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கு எங்கள் அரசு முழுமையாக உறுதிபூண்டுள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் பணி மத்திய அரசின் பொறுப்பு. ஆனால் அடுத்த நிதியாண்டில், எங்கள் அரசு சாதி கணக்கெடுப்பு பணியைத் தொடங்கும்.
இதற்கான பொறுப்பு எந்த நிறுவனத்திற்கு வழங்கப்படுவது என்பதை முடிவு செய்வதற்கான செயல்முறை நடந்து வருகிறது. சாதிவாரி கணக்கெடுப்புக்குத் தேவைப்படும் மொத்த ஆட்களின் எண்ணிக்கை, பணியின் அளவுகள் மற்றும் நிதி அம்சத்தை உறுதி செய்வதற்கான பொறுப்பு மாநில பணியாளர் மற்றும் நிர்வாகத் துறையிடம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 4ஆம் தேதி ஒரு நிறுவனத்தை பணியமர்த்த இந்த துறை மூலம் ஒரு அறிவிப்பை வெளியிட்டதாக பிருவா கூறினார்.
- அமன் சாவை போலீஸ் வாகனத்தில் ஏற்றி ராஞ்சிக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர்.
- போலீஸ்காரர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
ராஞ்சி:
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிரபல ரவுடி அமன் சாவ். இவர் மீது கொலை, கொள்ளை உள்பட 150-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அதில் ஒரு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு அண்டை மாநிலமான சத்தீஷ்காரின் தலைநகர் ராய்ப்பூரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அமன் சாவ் மீது தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) தொடர்ந்த வழக்கு ஒன்றில் விசாரணை நடத்துவதற்காக அவரை ராய்ப்பூரில் இருந்து ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள சிறைக்கு மாற்ற கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.
அதன்படி ஜார்கண்ட் போலீசார் ராய்ப்பூர் சென்று, அமன் சாவை போலீஸ் வாகனத்தில் ஏற்றி ராஞ்சிக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர்.
ராஞ்சியில் இருந்து 180 கி.மீ. தொலைவில் உள்ள பலாமு மாவட்டத்தின் செயின்பூர் நகருக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது, அமன் சாவின் கூட்டாளிகள் அவரை தப்ப வைப்பதற்காக போலீஸ் வாகனம் மீது திடீர் தாக்குதல் நடத்தினர்.
அமன் சாவின் கூட்டாளிகள் வீசிய குண்டு போலீஸ் வாகனத்தின் முன்பு விழுந்து வெடித்தது. இதனால் போலீசார் வாகனத்தை நிறுத்தினர்.
அதை தொடர்ந்து அவர்கள் போலீஸ் வாகனம் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதனால் ஏற்பட்ட பதற்றத்தை பயன்படுத்தி அமன் சாவ், போலீஸ்காரர் ஒருவரின் துப்பாக்கியை பறித்து போலீசாரை நோக்கி சரமாரியாக சுட்டார். இதில் போலீஸ்காரர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
இதையடுத்து தற்காப்புக்காக போலீசார் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டனர். இதில் அமன் சாவ் உடலில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார். அதை தொடர்ந்து அமன் சாவின் கூட்டாளிகள் அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடினர்.
காயம் அடைந்த போலீஸ்காரர் சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
- இதுதான் ஜனநாயகமா, இது நியாயமா?" என்று பேசியிருந்தார்.
- நாட்டின் மிகவும் புகழ்பெற்ற நிறுவனமான இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (IIT) பிம்பத்தை கெடுக்கும் முயற்சி என்று சாட்டியுள்ளது.
ராகுல் காந்திக்கு நெருக்கமான காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா. தான் ஐஐடி ராஞ்சி மாணவர்களுடன் ஆன்லைன் கலந்துரையாடலில் இருந்தபோது ஹேக்கிங் மூலம் யாரோ ஆபாசப் படத்தை ஒளிபரப்பினர் என்ற குற்றச்சாட்டை சாம் பிட்ரோடா முன்வைத்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, "பிப்ரவரி 22 அன்று, 'இந்தக் கொந்தளிப்பான காலங்களில் காந்தியின் பொருத்தம்' என்ற தலைப்பில் (ஜார்கண்ட் மாநிலம்) ராஞ்சி IIT- யை சேர்ந்த பல நூறு மாணவர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன்.
யாரோ ஒருவர் ஹேக் செய்து ஆபாசப் படங்களை காட்டத் தொடங்கினார். இதனால் மீட்டிங் பாதியில் நின்றது. இதுதான் ஜனநாயகமா, இது நியாயமா?" என்று பேசியிருந்தார்.
இந்நிலையில் சாம் பிட்ரோடாவின் கருத்துக்களை மத்திய கல்வி அமைச்சகம் மறுத்துள்ளது. ராஞ்சியில் ஐஐடி இல்லை, எனவே இந்த குற்றச்சாட்டு அடிப்படையற்றது.
ராஞ்சியில் ஒரு இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (IIIT) உள்ளது. ஆனால் சாம் பிட்ரோடாவை எந்த மாநாட்டு-கருத்தரங்கிற்கும் நேரில் அல்லது ஆன்லைன் விரிவுரை வழங்க அழைக்கவில்லை என்பதையும் அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
நாட்டின் மிகவும் புகழ்பெற்ற நிறுவனமான இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (IIT) பிம்பத்தை கெடுக்க முயன்ற ராகுல் காந்தியின் நெருங்கிய உதவியாளர் சாம் பிட்ரோடா அதற்கு பொறுப்பற்ற வேண்டும் என்றும் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- தும்ரானில் உள்ள இந்துஸ்தான் சவுக்கில் கலவரமானது வெடித்துள்ளது.
- ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு கொடி மற்றும் ஒலிபெருக்கியை நிறுவ முயன்றதாகக் கூறப்படுகிறது.
ஜார்க்கண்டில் மகா சிவராத்திரி விழாவுக்கான அலங்கார பணிகளை மேற்கொள்வதில் இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டு கலவரம் வெடித்துள்ளது.
இன்று மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படும் நிலையில் ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் இச்சாக் காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட தும்ரானில் உள்ள இந்துஸ்தான் சவுக்கில் கலவரமானது வெடித்துள்ளது.
மகா சிவராத்திரி விழா கொண்டாட்டங்களுக்கு ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு கொடி மற்றும் ஒலிபெருக்கியை நிறுவ முயன்றதாகக் கூறப்படுகிறது.
ஆனால் மற்றொரு சமூகத்தினர் அதை எதிர்த்ததால் இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது.
இது கலவரமாக மாறி கடைகளுக்கு தீ வைப்பு மற்றும் கல் வீச்சு சம்பவங்களும் நடந்தன. இரண்டு மோட்டார் சைக்கிள்கள், ஒரு கார், டெம்போ மற்றும் பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. ஒரு கடையையும் போராட்டக்காரர்கள் தீவைத்து எரித்தனர்.
தகவல் கிடைத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாக ஐபிஎஸ் ஸ்ருதி அகர்வால் தெரிவித்தார். மக்கள் அமைதியைக் காக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். மக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று அறிவுரை கூறினார்.
உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் 3 நதிகள் சங்கமிக்கும் 'திரிவேணி சங்கமம்' என்ற இடத்தில் ஜனவரி 13-ந்தேதி கோலாகலமாகத் தொடங்கியது. மகா சிவராத்திரி நாளான வருகிற 26-ந்தேதி வரை 45 நாட்களுக்கு இந்த நிகழ்வு நடைபெறுகிறது.
இந்த நிகழ்வில் உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் பங்கேற்பதால் 45ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியிலும், தேசிய, மாநில மீட்பு படையினரும் களத்தில் உள்ளனர். இதுவரை 56 கோடிக்கும் அதிகமான மக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.
இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் உடல்நிலை சரியில்லாத தாயை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு மகன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கும்பமேளா பயணம் மேற்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டிற்குள் 2 நாட்களாக பசியில் வாடிய மூதாட்டி (68) பிளாஸ்டிக் கவர்களை சாப்பிட முற்பட்ட போது அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- ராஞ்சியில் உள்ள தியோரி மா கோவிலில் எம்.எஸ்.டோனி பிரார்த்தனை செய்தார்.
- எம்.எஸ்.டோனி ஐ.பி.எல். தொடரில் விளையாட உள்ளது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்தது.
ராஞ்சி:
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி. இவர் தற்போது ஐ.பி.எல். தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் எம்.எஸ்.டோனி 2025 ஐ.பி.எல். தொடருக்கான பயிற்சியை துவங்கியுள்ளார்
கடந்த ஆண்டு இறுதியில் நடந்த ஐ.பி.எல். மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எம்.எஸ். தோனியை அன்கேப்டு வீரராக தக்கவைத்துக் கொள்ள முடிவு செய்தது. இதன்மூலம் எம்.எஸ்.டோனி ஐ.பி.எல். 2025 தொடரில் விளையாடுவது உறுதியானது. இது அவரது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்தது.
ஐ.பி.எல் தொடருக்காக ஒவ்வொரு வீரரும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனான டோனி பேட்டிங் மட்டுமின்றி உடற்பயிற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலுள்ள தியோரி மா கோயிலுக்கு எம்.எஸ்.டோனி சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்தார். இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. அங்கு வந்த பலரும் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.
- மாணவிகள் சிலர், தங்களது தோழிகளின் சட்டைகளில் பெயர் மற்றும் சில வாசகங்களை எழுதினர்.
- ஆத்திரம் அடைந்த மாணவிகளின் பெற்றோர், பள்ளிக்கு திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஞ்சி:
ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் திக்வாடியில் உள்ள பிரபல பள்ளிக்கூடத்தில் ஏராளமான மாணவிகள் படித்து வருகிறார்கள். அங்கு 10-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு தேர்வு நடைபெற்றது. அனைத்து தேர்வுகளும் நிறைவு பெற்ற தினத்தில் மகிழ்ச்சியில் வெளியே வந்த மாணவிகள் சிலர், தங்களது தோழிகளின் சட்டைகளில் பெயர் மற்றும் சில வாசகங்களை எழுதினர்.
இதைப்பார்த்த அந்த பள்ளியின் முதல்வர், அவர்களை அழைத்து கண்டித்தார். அத்துடன் அவர் மாணவிகளுக்கு கொடுத்த தண்டனைதான் கொடூரமானது. அதாவது சட்டையில் மாணவிகள் எழுதியதால், அவர்களின் சட்டைகளை களைந்துவிட்டு வீட்டுக்கு செல்லுமாறு கூறினார்.
இப்படி சுமார் 80 மாணவிகள் தங்களது மேல் சட்டைகள் இன்றி தங்களது வீடுகளுக்கு சென்றனர். மேல் சட்டை இல்லாமல் பிளேசர் மட்டுமே அவர்கள் அணிந்தவாறு அவர்கள் சென்றுள்ளனர்.
இதைப்பார்த்து ஆத்திரம் அடைந்த அந்த மாணவிகளின் பெற்றோர், பள்ளிக்கு திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பள்ளி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது, சம்பந்தப்பட்ட முதல்வர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தது.
ஆனாலும் பெற்றோர்கள் சமாதானம் அடையவில்லை. முதல்வர் மீது ஜோராபோகர் போலீசில் புகார் செய்தனர்.
இதுபற்றி தன்பாத் மாவட்ட கலெக்டர் மாதவி மிஸ்ரா கூறுகையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் துணைப்பிரிவு நீதிபதி, மாவட்ட கல்வி அதிகாரி, மாவட்ட சமூக நல அதிகாரி மற்றும் துணைப்பிரிவு போலீஸ் அதிகாரி ஆகியோர் உள்ளனர். விசாரணை குழுவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த ஜாரியா தொகுதி எம்.எல்.ஏ. ராகினி சிங், இது வெட்கக்கேடான சம்பவம் என்றார். இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






