என் மலர்tooltip icon

    டெல்லி

    • தென்கிழக்கு ஆசியாவில் உள்ள தீவு நாடான புரூனேவுடன் இந்தியா தூதரக உறவுகளை பேணி வருகிறது.
    • இந்திய பிரதமர் ஒருவர் புரூனேவுக்கு செல்வது இதுவே முதல் முறையாகும்.

    புதுடெல்லி:

    தென்கிழக்கு ஆசியாவில் உள்ள தீவு நாடான புரூனேவுடன் இந்தியா தூதரக உறவுகளை பேணி வருகிறது.

    குறிப்பாக இரு நாடுகளுக்கு இடையே தூதரக உறவுகள் ஏற்படுத்தப்பட்ட 40-வது ஆண்டு தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதையொட்டி பிரதமர் மோடி அரசு முறை பயணமாக புரூனே செல்கிறார். வருகிற 3 மற்றும் 4-ந்தேதிகளில் புரூனேயில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    இந்திய பிரதமர் ஒருவர் புரூனேவுக்கு செல்வது இதுவே முதல் முறையாகும்.

    புரூனே பயணத்தை முடித்து விட்டு 4-ந்தேதி பிரதமர் மோடி சிங்கப்பூருக்கும் செல்கிறார்.

    5-ந்தேதி வரை சிங்கப்பூரில் இருக்கும் பிரதமர் மோடி அந்த நாட்டு அதிபர் மற்றும் பிரதமரை சந்தித்து பல்வேறு துறை சார்ந்த உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

    • பதஞ்சலி பல்பொடியில் Sepia Officinalis எனும் கணவாய் மீன் சேர்க்கப்படுவதாக Ingredientsல் குறிப்பிடப்பட்டுள்ளது.
    • அசைவ பொருளை சைவ பொருள் என தவறாக விளம்பரப்படுத்திய பதஞ்சலி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சைவத்தை குறிக்கும் பச்சை நிற குறியீட்டுடன் விற்கப்படும் பதஞ்சலி நிறுவனத்தின் பல் பொடியில் அசைவ பொருள் சேர்க்கப்படுவதாக வழக்கறிஞர் யதின் சர்மா என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    அவரது மனுவில், "எனது குடும்பத்தினர் சைவ பொருட்களால் உருவாக்கப்பட்டது என நினைத்து பதஞ்சலி நிறுவனத்தின் பல் பொடியை நீண்ட நாட்களாக பயன்படுத்தி வந்தனர். ஆனால் அந்த பல்பொடியில் Sepia Officinalis எனும் கணவாய் மீன் சேர்க்கப்படுவதாக Ingredientsல் குறிப்பிட்டுள்ளதை எங்கள் குடும்பத்தினர் கண்டுபிடித்தனர்.

    எங்கள் பிராமண குடும்பத்தில் அசைவ உணவு உட்கொள்வது மத கோட்பாடுகளுக்கு எதிரானது. இது எங்களை மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளது. ஆகவே அசைவ பொருளை சைவ பொருள் என தவறாக விளம்பரப்படுத்திய பதஞ்சலி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் கோரியுள்ளார்.

    இந்த வழக்கு தொடர்பாக பதில் அளிக்க வேண்டும் என்று பதஞ்சலியின் திவ்யா பார்மசிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    • அரை மணி நேரமாகியும் ஆர்டர் வராததால் பொறுமையிழந்த ஹர்னீத் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
    • தனது மகனுடன் அங்கு வந்த கடை உரிமையாளர் ஊழியர்களுடன் சேர்ந்து ஹர்னீத்தை சரமாரியாகத் தாக்கியுள்ளார்.

    டெல்லியில் உள்ள உணவகம் ஒன்றில் ஆர்டர் செய்த உணவு ஏன் வரவில்லை என்று கேட்ட வாடிக்கையாளரை உணவக முதலாளி கபாப் செய்யும் கம்பியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் நேற்று முன்தினம் காலையில் தெருவோர தாபாவில் 29 வயதான ஹர்னீத் சிங் என்பவர் உணவு ஆர்டர் செய்துள்ளார்.

    அரை மணி நேரமாகியும் ஆர்டர் வராததால் பொறுமையிழந்த ஹர்னீத் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளார். தகவலறிந்து தனது மகனுடன் அங்கு வந்த கடை உரிமையாளர் ஊழியர்களுடன் சேர்ந்து ஹர்னீத்தை சரமாரியாகத் தாக்கியுள்ளார்.

    மேலும் கடையில் கபாப் செய்ய வைத்திருந்த கம்பியை எடுத்து கடை உரிமையாளர் ஹர்னீத்தை குத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த ஹர்னீத் மருத்துவமனை அழைத்துச் செல்லப்படும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்களை போலீசார் கைது செய்துள்ளனர். 

    • பாரா ஒலிம்பிக்கில் இந்திய அணி ஒரு தங்கம் உள்பட 4 பதக்கம் பெற்றுள்ளது.
    • பதக்கம் வென்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

    இன்று நடைபெற்ற போட்டிகளில் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் அவனி லெகரா தங்கமும், மணீஷ் நர்வால் வெள்ளியும், மோனா அகர்வால் வெண்கலமும் வென்றனர். தடகளத்தின் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவின் பிரீத்தி பால் வெண்கலம் வென்றார்.

    இதன்மூலம் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 4 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    இந்நிலையில், பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள செய்தியில், துப்பாக்கிச் சுடுதல் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கம் வென்ற அவனி லேகராவுக்கு வாழ்த்துகள். மேலும், பாரா ஒலிம்பிக்கில் 3 பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண் என்ற சாதனையும் படைத்துள்ளார். அவனி லேகராவின் அர்ப்பணிப்பு இந்தியாவை பெருமைப்படுத்துகிறது என பதிவிட்டுள்ளார்.

    பிரதமர் மோடி வெளியிட்ட மற்றொரு பதிவில், வெண்கலப் பதக்கம் வென்ற மோனா அகர்வாலுக்கு வாழ்த்துகள். மோனா அகர்வாலின் குறிப்பிடத்தக்க சாதனை அவரது அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. மோனாவால் இந்தியா பெருமை கொள்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

    இதேபோல், துப்பாக்கிச் சுடுதலில் வெள்ளி வென்ற மணீஷ் நர்வாலுக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எம்.எஸ்.டோனி பலருக்கு ரோல் மாடலாகத் திகழ்ந்து வருகிறார்.
    • நடுவர்கள் வழங்கும் தீர்ப்பை எதிர்த்து முறையீடு செய்வதிலும் டோனி வல்லவர்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக போற்றப்படுபவர் மகேந்திரசிங் டோனி. இவரது தலைமையிலான இந்திய அணி ஐசிசி டி20, 50 ஓவர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 உலகக் கோப்பைகளை வென்றுள்ளது. பல தொடர்களில் இந்திய அணிக்கு வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.

    விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் சாதனை படைத்துள்ள அவர் பலருக்கு ரோல் மாடலாகத் திகழ்ந்து வருகிறார்.

    விக்கெட் கீப்பிங், ஸ்டம்பிங், ரன் அவுட், கேட்ச் என அனைத்திலும் சிறப்பாக செயல்படும் திறமை கொண்டவர் டோனி. நடுவர்கள் வழங்கும் தீர்ப்பை எதிர்த்து முறையீடு (டி.ஆர்.எஸ்) செய்வதிலும் டோனி வல்லவர்.

    இந்நிலையில், டோனி எப்போதுமே துல்லியத்திற்கும் நெருக்கமான டி.ஆர்.எஸ். முடிவுகளை எடுப்பார் என இந்தியாவின் பிரபல நடுவர் அனில் சவுத்ரி பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, அனில் சவுத்ரி சமீபத்தில் அளித்த பேட்டியில், ரசிகர்கள் கூறுவது உண்மைதான். டோனி மிகவும் துல்லியமானவர். அவருடைய அழைப்புகள் (டி.ஆர்.எஸ்.) கிட்டத்தட்ட துல்லியத்திற்கு மிகவும் நெருக்கமாக இருக்கும். பேட்ஸ்மேன்களுக்கு பின்னால் இருப்பதால் விக்கெட் கீப்பர்களால் சில நேரங்களில் பவுலர்களின் பொசிஷனை சரியாகப் பார்க்கமுடியாது. அது வித்தியாசமானது. இருப்பினும் டோனி எடுக்கும் முடிவுகள் காரணம் மிகுந்ததாக இருக்கும் என தெரிவித்தார்.

    • LGBTQ சமூகத்தினர் கூட்டு வங்கிக்கணக்கு [JOINT ACCOUNT] தொடங்க எந்த தடையும் இல்லை என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது
    • இதுதொடர்பாக அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

    இந்தியாவில் LGBTQ சமூகத்தினர் கூட்டு வங்கிக்கணக்கு [JOINT ACCOUNT] தொடங்க எந்த தடையும் இல்லை என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தன்பாலின, இருபாலின மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களை உள்ளடக்கிய LGBTQ சமூகத்தைச் சேர்ந்தவர்கள், நாட்டில் உள்ள வங்கிகளில் கூட்டு வங்கிக் கணக்குகளைத் தொடங்கவோ, ஒருவர் தொடங்கிய வங்கிக் கணக்கில், Nominee-ஆக அச்சமூகத்தைச் சேர்ந்தவரை குறிப்பிடவோ எந்தத் தடையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தன்பாலின திருமணங்களை அங்கீகரிப்பது தொடர்பாகக் கடந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தில் நடந்த வழக்கில் கூறப்பட்ட கருத்துகளின்படி, LGBTQ சமூகத்தினர் பொது சேவைகளைப் பெறுவதில் பாகுபாடு காட்டப்படாது என்பதை மீண்டும் உறுதிப்படுத்த இந்த அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.  

    • விவசாயிகள் குறித்து சர்ச்சை கருத்து கூறியதால் கடும் விமர்சனம்.
    • பாஜக கூட இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்தது.

    பாலிவுட் நடிகையும், பத்மஸ்ரீ விருது வென்றவருமான கங்கனா ரனாவத் பாஜக கட்சியில் இணைந்து இமாச்சல பிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் தேர்தலில் போட்டியிட்டதில் இருந்து தற்போது வரை அவ்வப்போது அவர் பேசுவது சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.

    அந்த வகையில்தான் விவசாயிகள் போராட்டம் குறித்து பேசும்போது "விவசாயிகள் போராட்டத்தை தடுக்க மத்திய அரசு வலுவான நடவடிக்கையை எடுக்காமல் போயிருந்தால் வங்கதேசத்தில் நடந்த வன்முறை சம்பவங்கள் இந்தியாவிலும் நடந்திருக்கும்.

    விவசாயிகள் போராட்டத்தில் பாலியல் துன்புறுத்தலும், கொலைகளும் அரங்கேறின. படுகொலை செய்து தூக்கிலிட்ட சம்பவங்களும் நடந்தன. அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றிருக்காவிட்டால் அவர்கள் நாட்டில் எதையும் செய்திருக்கக் கூடும்" என தெரிவித்திருந்தார்.

    விவசாயிகள் போராட்டம் குறித்த கங்கனாவின் சர்ச்சை கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. ராகுல் காந்தி, கார்கே உள்ளிட்ட உயர் தலைவர்களும் கடுமையாக விமர்சித்திருந்தனர்.

    இந்த கருத்துக்கு பா.ஜ.க.-வும் கண்டனம் தெரிவித்திருந்தது. அதேவேளையில் கங்கனா ரனாவத் கருத்தில் இருந்து விலகியிருந்தது.

    தொடர்ந்து விமர்சனம் எழுந்ததால் பாஜக தேசிய தலைவர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதாக தகவல் வெளியனாது. இந்த நிலையில் நேற்று ஜே.பி. நட்டாவை நேரில் சந்தித்து கங்கனா ரனாவத் விளக்கம் அளித்துள்ளார். ஆனால் என்ன விளக்கம் அளித்தார் என்பது குறித்த எந்த தகவலையும் பாஜக வெளியிடவில்லை.

    இந்த வாரத்தில் இரண்டு முறை பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை கங்கனா ரனாவத் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஏற்கனவே, மத்திய பா.ஜ.க. அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது பா.ஜ.க. அரசுக்கு எதிராகப் போராடிய அனைத்து விவசாயிகளும் தனி நாடு கோரும் காலிஸ்தான் பயங்கரவாதிகள் என பா.ஜ.க. எம்.பி.யும், நடிகையுமான கங்கனா ரனாவத் பேசியிருந்தார். அவரது பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.

    சிரோன்மணி அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான சிம்ரன்ஜித் சிங் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "அவருக்கு கற்பழிப்பு அனுபவம் அதிகம். அதனால் அவர் நன்றாக அறிந்திருக்க வேண்டும். கற்பழிப்பு எப்படி நடக்கிறது என்பதை நீங்கள் அவரிடம் கேட்கலாம். மக்கள் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்வது போலவே, அவருக்கு இதேபோன்ற பலாத்கார அனுபவம் உண்டு" என காட்டமாக தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அண்ணாமலை லண்டன் சென்றுயுள்ளார்.
    • 6 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் சர்வதேச அரசியல் படிப்பிற்காக 3 மாதம் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை லண்டன் சென்றுள்ளார். அண்ணாமலை வெளிநாடு சென்றதால் இடைப்பட்ட காலத்தில் யார் கட்சி செயல்பாடுகளை கவனிப்பார்கள் என்று ஒரு கேள்வி எழுந்தது.

    அதற்கு ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டு அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டுள்ளார். எச்.ராஜா தலைமையில் 6 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த குழுவில் ஹெச். ராஜா தலைமையில் 6 பேர் உள்ளனர். மாநில துணைத் தலைவர் சக்ரவர்த்தி, பேராசிரியர் கனகசபாபதி, மாநில பொதுச் செயளாலர் எம்.முருகானந்தம், ராம சீனிவாசன், எஸ்.ஆர்.சேகர் ஆகியோர் இந்த குழுவில் இடம் பிடித்துள்ளனர்.

    • வயநாடு, ரேபரேலி இரண்டு தொகுதியிலும் ராகுல் வெற்றி.
    • 10 ஆண்டுகளுக்குப் பிறகு எதிா்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி.

    பாராளுமன்ற தேர்தலில் கேரளத்தின் வயநாடு, உத்தர பிரதேசத்தின் ரேபரேலி ஆகிய 2 தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்டார். இந்த இரு தொகுதிகளிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றாா்.

    விதிகளின்படி ஒரு தொகுதியின் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இதனால் ரேபரேலி தொகுதியை ராகுல் தக்கவைத்தாா். வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.

    வயநாடு தொகுதிக்கு நடைபெறும் இடைத்தோ்தலில் அவரது சகோதரியும் கட்சியின் பொதுச் செயலாருமான பிரியங்கா காந்தி போட்டியிடுவாா் என அறிவிக்கப்பட்டது.

    தேர்தலில் காங்கிரஸ் 99 இடங்களில் வென்றது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எதிா்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது. எதிா்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியை அக்கட்சி தோ்வு செய்தது.

    இந்நிலையில், தோ்தல் செலவுகளுக்காக ராகுல் காந்திக்கு வயநாடு, ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளுக்கு தலா ரூ.70 லட்சத்தை காங்கிரஸ் தலைமை கட்சி நிதியில் இருந்து வழங்கியது தெரிய வந்துள்ளது.

    கடந்த ஆட்சியில் மத்திய அமைச்சராக இருந்த ஸ்மிருதி இரானியைத் தோற்கடித்த கிஷோரி லால் சா்மா, கேரளத்தின் ஆழப்புழையில் போட்டியிட்ட கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், தமிழகத்தின் விருதுநகா் எம்.பி. மாணிக்கம் தாகூா் ஆகியோரும் தலா ரூ.70 லட்சம் பெற்றுள்ளனா்.

    இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளா் நடிகை கங்கனா ரணாவத்திடம் தோல்வியடைந்த காங்கிரஸ் வேட்பாளா் விக்ரமாதித்ய சிங்குக்கு மட்டுமே அதிகபட்சமாக ரூ.87 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

    தோ்தலில் தோல்வியைத் தழுவிய காங்கிரஸ் மூத்த தலைவா்களான ஆனந்த் சா்மா, திக்விஜய் சிங் ஆகிய இருவரும் முறையே ரூ.46 லட்சம் மற்றும் ரூ.50 லட்சம் பெற்றுள்ளனா்.

    வேட்பாளருக்கான தோ்தல் பிரசார செலவுக்கு உச்சவரம்பு இருந்தாலும், அரசியல் கட்சிகளுக்கு அத்தகைய வரம்பு இல்லை. வேட்பாளா்களுக்கான செலவு வரம்பை பாராளுமன்ற தோ்தலுக்கு ரூ.70 லட்சத்தில் இருந்து ரூ.95 லட்சமாகவும், சட்டமன்ற தோ்தலுக்கு ரூ.28 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாகவும் மத்திய அரசு கடந்த 2022-ல் உயா்த்தியது.

    • இந்திய வான் எல்லையில் உள்ளூர் விமானங்கள் புறப்பட்டதும் இண்டர்நெட் துண்டிக்கப்படும்.
    • வெளிநாடு விமானங்களில் இந்திய வான் எல்லையில் இண்டர்நெட் துண்டிக்கப்படும் என அறிவிப்படும்.

    கிராமத்தில் இருந்து வெகுதூரத்தில் எளிதில் தொடர்பு கொள்ள முடியாத இடத்தில் வசித்து வரும் மக்களை தலைநகரில் உள்ள மக்களுடன் இணைக்கும் மிகப்பெரிய முயற்சிகளை மேற்கொண்டு வரும் உலகளவாவிய செயற்கைக்கோள் தொடர்பு நிறுவமானக வியாசட் உள்ளது. இந்த நிறுவனம் இந்திய ஆயுதப்படைகளுக்கு நம்பத்தகுந்த வகையிலான இணையதள தொடர்பை வழங்கி வருகிறது.

    இந்திய வான் எல்லையில் பறக்கக்கூடிய விமானத்தில், இணையதள சேவைக்கு மத்திய அரசால் சில வருடங்களுக்கு முன் அனுமதி வழங்கப்பட்டது. அதுவும் லிமிடெ் இண்டர்நெட் இணைப்பு மட்டும்தான். இது விரைவில் மாறப்போகிறது. கலிபோர்னியாவை அடிப்படையாக கொண்ட தொலைத்தொடர்பு நிறுவனமான வியாசட் இந்திய வான் எல்லையில் இண்டர்நெட் இணைப்புகளை கொடுக்க இருக்கிறது.

    இஸ்ரோவின் ஒரு பகுதியாக உள்ள பெங்களூருவில் உள்ள யு.ஆர். ராவ் செயற்கைக்கோள் மையம் ஜிசாட்-20 (GSAT-20) என்ற நவீன செயற்கைக்கோளை உருவாக்கி வருகிறது. திட்டமிட்டபடி அனைத்து நடவடிக்கைகளும் இந்த வருட இறுதிக்குள் முடிவடைந்தால், இந்த இண்டர்நெட் இணைப்பு விரைவில் சாத்தியமாகும்.

    மற்ற செயற்கைக்கோள்களை விட இந்த செயற்கைக்கோளால் அதிக அளவிலான டேட்டாக்களை அனுப்ப முடியும். இது செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய இணைப்பை வழங்குவது மட்டுமின்றி, ஐந்தில் ஒரு பங்கு திறனில் விமானத்தில் இணையத்தை வழங்குவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    விமானத்தில் இண்டர்நெட் வசதி பெற முடியாத நிலையில் வியாசட் மற்றம் இஸ்ரோ அந்த கவலையை விரைவில் நிவர்த்தி செய்யும்.

    தற்போது உள்நாட்டு விமானங்களில், விமானங்கள் புறப்பட்டதும் இண்டர்நெட் கிடைக்காது. சர்வதேச விமானங்களில், இந்திய எல்லைக்குள் விமானம் நுழைந்ததும் இண்டர்நெட் இணைப்பு துண்டிக்கப்படும் என அறிவிக்கப்படும்.

    எட்டாததை அடைவதுதான் வியாசட்டின் மிகப்பெரிய உந்துதல். வியாசட் ஏற்கனவே இந்தயிாவில் பாதுகாப்புத் துறையில் நற்பெயரை பெற்றுள்ளது. தற்போது 1.4 பில்லியன் மக்களை இணைப்பது மிகப்பெரிய வாய்ப்பு என வியாசட் தலைவர் கே. குரு கவுரப்பன் தெரிவித்துள்ளார்.

    • மக்களிடம் எதிர்மறையான மற்றும் தவறான கதைகள் பரப்பப்படுகிறது.
    • முக்கியப் பிரச்சனைகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு 3-வது முறையாக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில் தனது அமைச்சரவையில் முதல் முறையாக சேர்க்கப்பட்ட மந்திரிகளை சந்தித்து பேசினார்.

    டெல்லியில் உள்ள சுஷ்மா ஸ்வராஜ் பவனில் நடந்த இந்த சந்திப்பு 5 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. அப்போது மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி சில அறிவுரைகளை வழங்கி உள்ளார்.

    மோடி பேசுகையில், `அனைத்து நிலைகளிலும் முடிவெடுப்பதை விரைவுப்படுத்த வேண்டும். அரசுக்கு எதிராக கூறப்படும் தவறான தகவல்களை முறியடிக்கும் வகையில், அரசாங்கம் எடுக்கும் முடிவுகள் குறித்து அனைத்து மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகளும் பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

    சாமானியர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கையை மாற்றுவதற்கு அரசாங்கம் பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.

    ஆனால் மக்களிடம் எதிர்மறையான மற்றும் தவறான கதைகள் பரப்பப்படுகிறது. இதை முறியடிக்க பொது மக்களுக்கு சரியான தகவல்களை அளிப்பதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

    மக்களுக்காக ஓய்வின்றி உழைக்க மந்திரிகள் தங்களை விரைவில் தயார் படுத்திக்கொள்ள வேண்டும். செயல், சீர்திருத்தம், மாற்றம், தகவல் என்ற 4 புதிய மந்திரங்களை மக்கள் சேவையின் போது அமைச்சரவை சகாக்கள் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறினார்.

    அரசின் செயல்பாடுகள், சாதனைகள், பிரசாரம் மற்றும் முக்கியப் பிரச்சனைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    மத்திய அரசு பொறுப்புடன் செயல்படுகிறது என்ற செய்தியை சமூக ஊடகங்கள் மூலம் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

    சமூக ஊடகங்களின் மக்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளார்.

    மேலும் 3-வது முறையாக பதவியேற்று 100 நாட்களை நிறைவு செய்யும் போது அந்தந்த அமைச்சகங்களின் 10 முக்கிய முடிவுகள் குறித்த தகவல்களை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். அவற்றை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் பிரசாரங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று மந்திரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

    அரசின் திட்டங்களை தடையின்றி செயல்படுத்த அதிகாரிகளை ஈடுபடுத்த வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.

    நாட்டில் சுகாதாரம், கல்வி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடு தொடர்பான விளக்க காட்சிகள் இந்த கூட்டத்தில் இடம்பெற்றன.

    ஒவ்வொரு துறையிலும், அமைச்சகத்திலும் மனித வளத்தை மறுசீரமைப்பதற்கான மதிப்பீட்டை மேற்கொள்வதற்கும், அனைத்து ஊழியர்களின் திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்துமாறும் உயர் அதிகாரிகளை பிரதமர் மோடி கேட்டு கொண்டார்.

    • நடனம் அல்லது நிகழ்ச்சியின் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவம் இந்தியாவில் அதிகரித்து வருகின்றன.
    • சகோதரரியின் திருமணத்தில் நடனமாடிக்கொண்டிருந்த 18 வயது இளம்பெண் ஒருவர் சுருண்டு விழுந்து இறந்தார்.

    டெல்லியில் பிரியாவிடை விழாவில் நடனமாடிக்கொண்டிருந்த இளம் போலீஸ் அதிகாரி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    டெல்லி காவல்துறையில் தலைமைக் காவலராக பணிபுரியும் ரவிக்குமார், நேற்று முன்தினம் நடைபெற்ற சக ஊழியரின் பிரியாவிடை விருந்தில் கலந்து கொண்டு மகிழ்ச்சியில் நடனம் ஆடிக்கொண்டிருந்தபோது, திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு கீழே விழுந்தார். இதையடுத்து ரவிக்குமார் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

    ரவிக்குமாரின் இறுதித் தருணங்கள் தொடர்பான வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில் அவரும் மற்றொரு நபரும் பாடல் ஒன்றுக்கு காலை அசைத்தபடி நடனம் ஆடுகின்றனர். சிறிது நேரம் கழித்து, ரவி சிரித்துக்கொண்டே ஒதுங்குவதைக் காணமுடிகிறது. இதையடுத்து அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

    உயிரிழந்த ரவிக்குமாருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர் 2010-ம் ஆண்டு முதல் டெல்லி போலீஸ் படையில் சேர்ந்து பணியாற்றி வருகிறார். 45 நாட்களுக்கு முன்புதான் அவருக்கு ஆஞ்சியோகிராபி செய்யப்பட்டது.

    நடனம் அல்லது நிகழ்ச்சியின் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவம் இந்தியாவில் அதிகரித்து வருகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் தனது சகோதரரியின் திருமணத்தில் நடனமாடிக்கொண்டிருந்த 18 வயது இளம்பெண் ஒருவர் சுருண்டு விழுந்து இறந்தார்.

    இந்தூரில் நடந்த ஒரு யோகா நிகழ்வில் தேசபக்தி பாடலில் உற்சாகமான நிகழ்ச்சியை வழங்கிக்கொண்டிருந்த போது, இந்தியக்கொடியைப் பிடித்தபடி ஓய்வுபெற்ற ராணுவ வீரர் மேடையில் சரிந்து விழுந்து உயிரிழந்தார்.

    கடந்த ஆண்டு அக்டோபரில், கடந்த 24 மணி நேரத்தில் குஜராத் முழுவதும் கர்பா நிகழ்வுகளில் குறைந்தது 10 மாரடைப்பு இறப்புகள் பதிவாகியுள்ளன. பாதிக்கப்பட்டவர்களில் இளையவர் 17 வயது மட்டுமே.

    ×