என் மலர்tooltip icon

    பீகார்

    • ஒரு அரசாங்கம் இவ்வளவு பெரிய அளவில் பீகாரிலோ அல்லது இந்தியாவில் வேறு எங்கும் பணத்தை விநியோகிப்பதை நான் இதற்கு முன் பார்த்ததில்லை.
    • பெயரறியாத சில கட்சிகள் கூட லட்சக்கணக்கான வாக்குகளைப் பெற்றதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

    நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன சூராஜ் கட்சி மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 238 தொகுதிகளில் போட்டியிட்டது.

    ஆனால், ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை. கட்சிக்குக் கிடைத்த மொத்த வாக்கு சதவீதம் வெறும் 2-3% மட்டுமே. அத்துடன் பெரும்பாலான வேட்பாளர்கள் தங்கள் டெபாசிட் தொகையையும் இழந்தனர்.

    இந்நிலையில் அங்கில தொலைக்காட்சி நேர்காணலில் பேசிய பிரசாந்த் கிஷோர், தேர்தல் முடிவுகளில் மிகப்பெரிய அளவில் மோசடி செய்யப்பட்டதுபோல் தோன்றுகிறது. எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தற்போது எந்தத் திடமான ஆதாரமும் இல்லை என்று தெரிவித்தார்.

    மாதக்கணக்கில் அவர் மேற்கொண்ட ஜன சூராஜ் யாத்திரையின்போது தனது குழு சேகரித்த கள ஆய்வுக் கருத்துகளுக்கும், உண்மையான வாக்குப் பதிவின் போக்குகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்த அவர், இதன் மூலம், தேர்தல் நடைமுறையில் ஏதோ தவறு நிகழ்ந்துள்ளது என்று சந்தேகம் தெரிவித்தார்.

    சில வெல்ல முடியாத சக்திகள் தேர்தல் முடிவுகளைப் பாதித்ததாகவும், பெயரறியாத சில கட்சிகள் கூட லட்சக்கணக்கான வாக்குகளைப் பெற்றதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கையாளுதல் குறித்து சந்தேகம் இருந்தபோதும் தற்போது இவை ஆதாரம் இல்லாத வெறும் குற்றச்சாட்டுகளாகவே உள்ளன என்று தெரிவித்தார்.

    மேலும் என்டிஏ அரசு சார்பில் தேர்தலுக்கு முன் ஒன்றரை கோடி பெண்கள் வங்கிக் கணக்குக்கு ரூ.10,000 விநியோகம் செய்யப்பட்டது குறித்து விமர்சித்த அவர், ஒரு அரசாங்கம் இவ்வளவு பெரிய அளவில் பீகாரிலோ அல்லது இந்தியாவில் வேறு எங்கும் பணத்தை விநியோகிப்பதை நான் இதற்கு முன் பார்த்ததில்லை என்று தெரிவித்தார்.

     

    • துணை முதல்வர்களாக பாஜகவின் சாம்ராட் சவுத்ரி, விஜய் சின்ஹா பொறுப்பெற்றனர்.'
    • பாஜக​வில் இருந்து 14 பேர், ஜேடியு விலிருந்து இருந்து 8 பேர் அமைசர்களாக பதவியேற்றனர்.

    பீகார் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 243 இல் 202 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக-ஜேடியு என்டிஏ கூட்டணி ஆட்சியை தக்கவைத்தது.

    கடந்த வியாழக்கிழமை பீகார் முதல்வராக ஜேடியு தலைவர் நிதிஷ் குமார் 10வது முறையாக பதவியேற்றார்.

    பாஜகவில் இருந்து 14 பேர், ஜேடியு விலிருந்து இருந்து 8 பேர், லோக் சக்தி (ராம்விலாஸ்) கட்சியில் இருந்து 2 பேர், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சாவில் இருந்து தலா ஒருவர் அமைச்சர்களாக பதவியேற்றனர். துணை முதல்வர்களாக பாஜகவின் சாம்ராட் சவுத்ரி, விஜய் சின்ஹா பொறுப்பெற்றனர்.'

    இந்நிலையில் வியாழக்கிழமை பதவியேற்ற 26 அமைச்சர்களில் 18 பேருக்கு மட்டுமே இன்று இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    அதன்படி, பாஜகவை சேர்ந்த துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரிக்கு முக்கியத்துவம் வாய்ந்த உள்துறை இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த துறையின்கீழ் காவல்துறை, உளவுத்துறை, பொது சட்டம் மற்றும் ஒழுங்கு போன்ற முக்கிய துறைகள் வருகின்றன.

    கடந்த ௨௦ ஆண்டுகளாக தம்மிடமே வைத்திருந்த உள்துறையை முதல்முறையாக கூட்டணி கட்சியான பாஜவுக்கு நிதீஷ் குமார் விட்டுக் கொடுத்துள்ளார்.

    முந்தைய ஆட்சியில் சாம்ராட் சவுத்ரி வகித்து வந்த நிதி மற்றும் வணிக வரி இலாகா, ஜே.டியுவின் பிரேந்திர பிரசாத் யாதவிடம் வழங்கப்பட்டுள்ளது.

    வருவாய் மற்றும் நில சீர்திருத்தங்கள், சுரங்கம் மற்றும் புவியியல் துறைக பாஜகவை சேர்ந்த மற்றொரு துணை முதல்வரான விஜய் சின்ஹாவுக்கு ஒதுக்கப்பட்டது. அதேபோல் விவசாயம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, பேரிடர் மேலாண்மை துறை, தொழில்துறை பாஜக அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.  

    • இன்று பீகார் முதல்வராக 10 வது முறையாக நிதிஷ் குமார் மீண்டும் பதவியேற்றார்.
    • சட்டமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக இருக்க குறைந்தது 10% தொகுதிகளைக் கைப்பற்றியிருக்க வேண்டும்.

    பீகார் தேர்தல் தோல்விக்குப் பிறகு முதல் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், 10வது முறையாக முதலமைச்சராக பதவியேற்ற ஜேடியு தலைவர் நிதீஷ் குமாருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

    நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 202 இடங்களை கைப்பற்றி பாஜக- ஜெடியு-வின் என்டிஏ கூட்டணி அபார வெற்றி பெற்றது. எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ்-ஆஜேடி-யின் மகாபந்தன் கூட்டணி 35 இடங்களோடு மட்டுப்பட்டது. இன்று பீகார் முதல்வராக 10 வது முறையாக நிதிஷ் குமார் மீண்டும் பதவியேற்றார்.

    இந்நிலையில் தேர்தலுக்கு பின் முதல் முறையாக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் பொதுவெளியில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,"பீகார் முதல்வராக பதவியேற்ற நிதிஷ் குமாருக்கும், அமைச்சரவை உறுப்பினர்களாக பதவியேற்ற பீகார் அரசின் அனைத்து அமைச்சர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    புதிய அரசாங்கம் தனது வாக்குறுதிகளையும் அறிவிப்புகளையும் பொறுப்புடன் நிறைவேற்றும் என்றும் மக்களின் நம்பிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்பட்டு பீகார் மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவரும் என்றும்  நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே பீகார் சட்டமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    சட்டமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக இருக்க குறைந்தது 10% தொகுதிகளைக் கைப்பற்றியிருக்க வேண்டும். நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் வெறும் 6 தொகுதியில் வெற்றிபெற்றிந்தபோதும் ஆர்ஜேடி 25 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த எண்ணிக்கை மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 10 சதவீததிற்கும் சிறிது அதிகம் ஆகும்.

    எனவே கடந்த ஆட்சிக்காலத்தை போலாவே தேஜஸ்வி யாதவ் எதிர்கட்சித் தலைவராக தொடர உள்ளார். இந்த தேர்தலில் தேஜஸ்வி யாதவ் ரஹோபூர் தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக மீண்டும் தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.  

    • புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா இன்று நடந்தது.
    • விழாவில் பிரதமா் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் பங்கேற்பு.

    பீகார் மாநில சட்டசபை தோ்தலில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 202 இடங்களைக் கைப்பற்றிய தேசிய ஜனநாயக கூட்டணி, அசைக்க முடியாத பெரும்பான்மையுடன் ஆட்சியைத் தக்கவைத்தது. பா.ஜ.க. 89 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

    ஐக்கிய ஜனதா தளம் 85, மத்திய அமைச்சா் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) 19, மத்திய அமைச்சா் ஜிதன் ராம் மாஞ்சியின் இந்துஸ் தானி அவாம் மோா்ச்சா 5, மாநிலங்களவை எம்.பி. உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்டீரிய லோக் மோா்ச்சா 4 இடங்களைக் கைப்பற்றின.

    ஐக்கிய ஜனதா தளத்தை விட பா.ஜ.க. அதிக தொகுதி களில் வென்றாலும் நிதிஷ் குமாா் முதல்-மந்திரியாகத் தொடா்வார் என்று கூட்டணிக் கட்சிகள் உறுதி செய்தன.

    இதைத்தொடர்ந்து ஐக்கிய ஜனதா தளம் புதிய எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் பாட்னாவில் நேற்று நடை பெற்றது. கட்சியின் சட்ட சபை குழு தலைவராக நிதிஷ் குமாா் ஒரு மனதாக தோ்வு செய்யப்பட்டாா்.

    பின்னா், தேசிய ஜன நாயக கூட்டணி புதிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடை பெற்றது. அதில், பீகார் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக நிதிஷ் குமார் தேர்ந்து எடுக்கப்பட்டார்.

    அதன் பிறகு கூட்டணிக் கட்சித் தலைவா்களுடன் சென்று கவர்னர் ஆரிப் முகமது கானை சந்தித்த நிதிஷ் குமாா், தனது ராஜினாமா கடிதத்தை சமா்ப்பித்தாா். தனது ஆதரவு எம்.எல்.ஏ.க் களின் கடிதங்களை வழங்கி, புதிய ஆட்சி அமைப்பதற்கான நடைமுறைகளைத் தொடங்குமாறு கேட்டுக் கொண்டாா்.

    அதன்படி, நடப்பு சட்டசபை கலைக்கப்பட்டு, மாநிலத்தில் ஆட்சியமைக்க நிதிஷ் குமாருக்கு கவர்னர் அழைப்பு விடுத்தாா்.

    இதைத்தொடர்ந்து பாட்னாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க காந்தி மைதானத்தில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா இன்று நடந்தது.

    முதலமைச்சராக 10-வது தடவையாக 74 வயது நிதிஷ்குமார் பதவி ஏற்றார். விழாவில் பிரதமா் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பா.ஜ.க. உள்பட தேசிய ஜனநாய கூட்டணியின் மூத்த தலைவா்கள் பங்கேற்றனர்.

    • நிதிஷ்குமார், மாநிலத்தின் வளர்ச்சிக்காக ஓய்வின்றி உழைக்குமாறு எம்.எல்.ஏ. மற்றும் எம்.எல்.சி.க்களை கேட்டுக்கொண்டார்.
    • பாட்னாவில் நடைபெறும் விழாவில் கவர்னர் ஆரிப் முகமது கான், நிதிஷ் குமாருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

    பாட்னா:

    243 உறுப்பினர்கள் கொண்ட பீகார் சட்டசபையில் 202 இடங்களைப்பெற்று ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அபார வெற்றி பெற்றது. இதில் முக்கியமாக, பா.ஜ.க. 89, ஐக்கிய ஜனதாதளம் 85 தொகுதிகளில் வெற்றி பெற்றன.

    இதைத்தொடர்ந்து மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையிலான புதிய அரசு பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

    இதன் ஒரு பகுதியாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐக்கிய ஜனதாதளம் எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நடந்தது. இதில் 22 எம்.எல்.சி.க்களும் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், சட்டசபை கட்சித்தலைவராக நிதிஷ்குமார் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பெயரை விஜய் சவுத்ரி மற்றும் உமேஷ் குஷ்வாகா ஆகியோர் முன் மொழிந்தனர். பிஜேந்திர யாதவ் உள்ளிட்டோர் வழிமொழிந்தனர்.

    பின்னர் பேசிய நிதிஷ்குமார், மாநிலத்தின் வளர்ச்சிக்காக ஓய்வின்றி உழைக்குமாறு எம்.எல்.ஏ. மற்றும் எம்.எல்.சி.க்களை கேட்டுக்கொண்டார்.

    ஐக்கிய ஜனதாதளத்தின் சட்டசபைக்குழு தலைவராக நிதிஷ்குமார் தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, தேசிய ஜனநாயக கூட்டணியின் சட்டசபைக்குழு தலைவராக (முதல்-மந்திரி) நிதிஷ் குமார் தேர்வு செய்யப்படுவார் என தெரிகிறது.

    மாநிலத்தின் முதல்-மந்திரியாக 10-வது முறையாக நிதிஷ் குமார் இன்று பதவியேற்கிறார். தலைநகர் பாட்னாவில் நடைபெறும் விழாவில் கவர்னர் ஆரிப் முகமது கான், நிதிஷ் குமாருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

    இதற்கிடையே பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் கூட்டமும் நேற்று நடந்தது.

    இதில் கட்சியின் சட்டமன்றக்குழு தலைவராக சாம்ராட் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டார். துணைத்தலைவராக விஜய் குமார் சின்கா தேர்வானார்.

    பா.ஜ.க. சட்டசபைக்குழு தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தலுக்கான மேலிட பார்வையாளராக உத்தரபிரதேச துணை முதல்-மந்திரி கேசவ் பிரசாத் மவுரியா நியமிக்கப்பட்டு இருந்தார்.

    மேலும் மத்திய மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால், முன்னாள் மத்திய மந்திரி சாத்வி நிரஞ்சன் ஜோதி ஆகியோர் இணை பார்வையாளர்களாக கலந்து கொண்டனர். மேலும் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ரவிசங்கர் பிரசாத்தும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.

    பா.ஜ.க. சட்டசபைக்குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட சாம்ராட் சவுத்ரி, முந்தைய ஆட்சியில் துணை முதல்-மந்திரியாக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்ற என்னுடைய முடிவு தவறாக கருதலாம்.
    • திருப்திகரமான முடிவுக்கு இன்னும அதிகப்படியாக பணியாற்ற வேண்டும்.

    பீகார் சட்டசபை தேர்தலில் அரசியல் வியூகம் வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் கட்சி ஜன் சுராஜ் போட்டியிட்டது. தனித்து போட்டியிட்ட அக்கட்சி 4 சதவீதத்திற்கு குறைவான வாக்குகளே பெற்றது.

    தேர்தலுக்கு முன்னதாக நிதிஷ் குமார் கட்சி 25 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறாது. அப்படி வெற்றி பெற்றால் அரசியலில் இருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் அந்த முடிவடை தவறாக கருதலாம் எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரசாந்த் கிஷோர் கூறியதாவது:-

    தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்ற என்னுடைய முடிவு தவறாக கருதலாம். திருப்திகரமான முடிவுக்கு இன்னும அதிகப்படியாக பணியாற்ற வேண்டும். எங்கள் கட்சி 4 சதவீதத்திற்கு கீழ் வாக்குகள் பெறும் என்று நினைத்துப் பார்க்கவில்லை. பீகாரில் வெற்றி பெறாமல் பின் வாங்க மாட்டேன். அதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்று எனக்குத் தெரியாது.

    இவ்வாறு பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.

    ஒவ்வொரு தொகுதிகளுக்கும் 60 பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் நிதிஷ் குமார் அரசு வழங்காமல் இருந்திருந்தால், ஐக்கிய ஜனதா தளம் 25 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றிருக்காது.

    • ஐக்கிய ஜனதா தளம் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட இருக்கிறார்.
    • அதன்பின் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏ.-க்களின் தலைவராக தேர்வு செய்யப்பட இருக்கிறார்.

    பீகார் மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 243 இடங்களில் 202 இடங்களை கைப்பற்றியது. பாஜக 89 இடங்களில் வெற்றி பெற்றது. ஐக்கிய ஜனதா தளம் 85 இடங்களில் வெற்றி பெற்றது.

    நாளை மறுதினம் நிதிஷ் குமார் 10-வது முறையாக முதல்வராக பதவி ஏற்க உள்ளார். அவருடன் அமைச்சர்களும் பதவி ஏற்க இருக்கிறார்கள். இலாகா பிரிப்பதில் பாஜக- நிதிஷ் குமார் கட்சி இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ.-க்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் ஐக்கிய ஜனதா தள சட்டமன்ற கட்சித் தலைவராக நிதிஷ் குமார் தேர்வு செய்யப்பட இருக்கிறார். அதன்பின் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏ.-க்கள் கூட்டம் கூடுகிறது. இந்த கூட்டதில் தலைவராக தேர்வு செய்யப்படுவார். பின்னர் ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரி, தனக்கு ஆதரவு அளித்த எம்.எல்.ஏ.-க்களின் கடிதத்தை வழங்குவார்.

    நிதிஷ் குமார் முதல்வராக பதவி ஏற்றும் விழாவில பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். பதவி ஏற்பு விழா நடைபெறும் காந்தி மைதானத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • நாங்கள் நேர்மையான முயற்சியை மேற்கொண்டோம். ஆனால் முற்றிலும் அது தோல்வியடைந்தது.
    • நான் பீகாரை விட்டு வெளியேறுவேன் என நினைப்பவர்களுக்கு, அது முற்றிலும் தவறு என்றார்.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. வரும் 20-ம் தேதி நிதிஷ்குமார் முதல் மந்திரியாக பதவி ஏற்கிறார்.

    இந்நிலையில், தேர்தலில் ஏற்படட் தோல்வி குறித்து ஜன் சுராஜ் கட்சி நிறுவனர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    நாங்கள் நேர்மையான முயற்சியை மேற்கொண்டோம். ஆனால் அது முற்றிலும் தோல்வியடைந்தது என்பதை ஒப்புக்கொள்வதில் எந்த தவறும் இல்லை.

    பீகாரின் அரசியலை மாற்றுவதில் நாங்கள் நிச்சயமாக சில பங்கைக் கொண்டிருந்தோம். பொதுமக்கள் எங்களை தேர்ந்தெடுக்க வில்லை என்பதை நாங்கள் விளக்கிய விதத்தில் ஏதோ தவறு இருந்திருக்க வேண்டும். பொதுமக்கள் எங்கள்மீது நம்பிக்கை காட்டவில்லை என்றால் அதற்கான பொறுப்பு முற்றிலும் என்னுடையது. நாங்கள் மீண்டும் அதே சக்தியுடன் நிற்போம்.

    நான் பீகாரை விட்டு வெளியேறுவேன் என நினைப்பவர்களுக்கு, அது முற்றிலும் தவறு. ஐக்கிய ஜனதா தளம் 25 இடத்தை வென்றால் என்ற எனது கருத்து பற்றி மக்கள் நிறைய பேசுகிறார்கள் - நான் இன்னும் அதை ஆதரிக்கிறேன். நிதிஷ்குமார் 1.5 கோடி பெண்களுக்கு தான் உறுதியளித்த ரூ.2 லட்சத்தை மாற்றி, வாக்குகளை வாங்கி வெற்றி பெறவில்லை என்பதை நிரூபித்தால் நான் எந்த ஒரு குறையும் இல்லாமல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன் என தெரிவித்தார்.

    • நிதிஷ் குமார் 20-ந்தேதி முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.
    • இலாகா தொடர்பாக பாஜக- ஐக்கிய ஜனதா தளம் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    பீகார் மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 243 இடங்களில் 202 இடங்களை கைப்பற்றியது. பாஜக 89 இடங்களிலும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 85 இடங்களிலும் வெற்றி பெற்றன.

    நிதிஷ் குமார்தான் முதலமைச்சர் என்பது ஏற்கனவே முடிவாகிவிட்டது. இதனால் 20-ந்தேதி அவர் முதல்வராக பதவி ஏற்க உள்ளார். பாஜக-வுக்கு துணை முதல்வர் பதவி வழங்க நிதிஷ் குமார் முடிவு செய்துள்ளார். அன்றைய தினம் அமைச்சராக தேர்வு செய்யக் கூடியவர்களும் பதவி ஏற்க உள்ளனர்.

    யார் யாருக்கு எந்த இலாகா என்பதை முடிவு செய்ய பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஏறக்குறைய இரு கட்சிகளுக்கும் இடையில் பெரும்பாலான இலாகாக்களை பிரிப்பதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஆனால், உள்துறை அமைச்சர் இலாகாவை பாஜக-வுக்கு வழங்க ஐக்கிய ஜனதா தளம் விரும்பவில்லை. அதேபோல், சபாநாயகர் பதவியை ஐக்கிய ஜனதா தளத்திற்கு வழங்க பாஜக விரும்பவில்லை எனத் தெரிகிறது.

    இரண்டு கட்சிகளும் தனிப்பெரும்பான்மை பெறவில்லை. மற்ற கட்சிகள் ஆதரவுடன்தான் செயல்பட வேண்டிய நிலை. ஒருவேளை மோதல் ஏற்பட்டால் ஆட்சி மற்றும் பெரும்பான்மையை தக்கவைக்க இரண்டு பதவிகளும்தான் முக்கியமானவை. இதனால் இந்த பதவிகளை தக்கவைக்க இரண்டு கட்சிகளும் தீவிரம் காட்டு வருகின்றனர்.

    • பீகாரில் ஜன்சுராஜ் கட்சி 238 தொகுதிகளில் மட்டும் போட்டியிட்டது.
    • போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் ஜன்சுராஜ் கட்சி வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர்.

    பீகார் தேர்தலுக்கு முன்பு வரை ஆளும்கட்சி, எதிர்க் கட்சிகளுக்கு மாற்றான அரசியல் சக்தியாகவும், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது யார்? என்பதை முடிவு செய்யும் கட்சியாகவும் பிரசாந்த் கிஷோரின் கட்சி இருக்கும் என்று கூறப்பட்டது.

    அதற்கு ஏற்ப பா.ஜ.க., ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட ஆளும் கூட்டணியையும், ராஷ்டீரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டணியையும் தேர்தல் பிரசாரத்தில் பிரசாந்த் கிஷோர் கடுமையாக விமர்சித்து வந்தார்.

    மொத்தம் உள்ள 243 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களம் இறக்கினார். ஆனால் அவர்களில் 5 வேட்பாளர்கள் போட்டியில் இருந்து விலகிவிட்டனர். இதனால் ஜன்சுராஜ் கட்சி 238 தொகுதிகளில் மட்டும் போட்டியிட்டது.

    போட்டியிட்ட 238 தொகுதிகளில் அனைத்திலும் ஜன்சுராஜ் கட்சி வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர். அதோடு 236 தொகுதிகளில் டெபாசிட்டும் பறி கொடுத்தனர்.

    இந்நிலையில், தேர்தல் தோல்வி குறித்து பேசிய பிரசாந்த் கிஷோர், "நாங்கள் மேற்கொண்ட நேர்மையான முயற்சி முற்றிலும் தோல்வியடைந்தது. இதை ஒப்புக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. எங்களால் இந்த சிஸ்டமை மாற்றமுடியவில்லை என்பதை விட அதிகாரத்தில் கூட எங்களால் மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை.

    ஆனால் பீகாரின் அரசியலை மாற்றுவதில் நாங்கள் நிச்சயமாக குறிப்பிட்ட பங்கைக் கொண்டிருந்தோம். மக்கள் எங்களைத் தேர்ந்தெடுக்கவில்லை என்பதில் இருந்தே நாங்கள் எங்கோ வறு இருந்திருக்கிறோம் என்பது புரிகிறது.

    மக்கள் எங்கள் மீது நம்பிக்கை காட்டவில்லை என்றால், அதற்கான பொறுப்பு முற்றிலும் என்னுடையது தான். பீகார் மக்களின் நம்பிக்கையை என்னால் வெல்ல முடியவில்லை என்பதற்கு நான் 100% பொறுப்பை நானே ஏற்றுக்கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.

    • சட்டமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக இருக்க குறைந்தது 10% தொகுதிகளைக் கைப்பற்றியிருக்க வேண்டும்.
    • ரஹோபூர் தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக மீண்டும் தேர்வாகி உள்ளார்.

    பீகார் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.-ஐக்கிய ஜனதாதளம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களை கைப்பற்றி இமாலய வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் தக்க வைத்துள்ளது.

    இந்த கூட்டணியை எதிர்த்து போட்டியிட்ட ராஷ்டீரிய ஜனதாதளம்-காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 35 இடங்களில் மட்டுமே வென்று படுதோல்வியை சந்தித்தது.

    பீகாா் சட்டசபையின் பதவிக் காலம் வருகிற 22-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது. எனவே நேற்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ் குமார் வரும் 20 ஆம் தேதி புதிய அமைச்சரவையுடன் மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில் பீகார் சட்டமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    சட்டமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக இருக்க குறைந்தது 10% தொகுதிகளைக் கைப்பற்றியிருக்க வேண்டும். நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் வெறும் 6 தொகுதியில் வெற்றிபெற்றிந்தபோதும் ஆர்ஜேடி 25 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த எண்ணிக்கை மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 10 சதவீததிற்கும் சிறிது அதிகம் ஆகும்.

    எனவே கடந்த ஆட்சிக்காலத்தை போலாவே தேஜஸ்வி யாதவ் எதிர்கட்சித் தலைவராக தொடர உள்ளார். இந்த தேர்தலில் தேஜஸ்வி யாதவ் ரஹோபூர் தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக மீண்டும் தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • புதிய அரசு அமைப்பதற்கான ஆலோசனைகள் இன்று தீவிரமடைந்தன.
    • ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட கவர்னர் புதிய ஆட்சி அமையும் வரை தற்காலிகமாக முதல்-மந்திரி பதவியை தொடருமாறு கேட்டுக்கொண்டார்.

    பீகார் சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 202 இடங்களைக் கைப்பற்றிய தேசிய ஜனநாயக கூட்டணி அசைக்க முடியாத பலத்துடன் ஆட்சியைக் தக்க வைத்துள்ளது.

    தோ்தலுக்கு முன்பு தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்-மந்திரி வேட்பாளராக நிதீஷ் குமாா் அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படவில்லை. அவரது தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி போட்டியிடுவதாக பா.ஜ.க. கூறியிருந்தது.

    இந்த நிலையில் சட்டசபைத் தோ்தலில் தொடா்ந்து 2-வது முறையாக ஐக்கிய ஜனதா தளத்தைவிட பா.ஜ.க. அதிக இடங்களில் வென்றுள்ளது. எனவே, முதல்-மந்திரி பதவியை பா.ஜ.க. விட்டுக் கொடுக்குமா? என்ற கேள்வி எழுந்தது.

    ஆனால் முதல்-மந்திரியாக நிதீஷ்குமாா் நீடிப்பாா் என்று கூட்டணிக் கட்சிகளான லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்), இந்துஸ்தானி அவாம் மோா்ச்சா ஆகியவை நம்பிக்கை தெரிவித்தன. இதைத் தொடர்ந்து பா.ஜ.க. தலைவர்களும், நிதிஷ்குமார் முதல்-மந்திரி பதவி ஏற்பார் என்று அறிவித்தனர்.

    தோ்தல் முடிவுகள் வெளியாகி 2 நாள்கள் ஆகியுள்ள நிலையில், புதிய அரசு அமைப்பதற்கான ஆலோசனைகள் இன்று தீவிரமடைந்தன.

    பாட்னாவில் முதல்-மந்திரி நிதீஷ் குமாரை கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்து பேசினார்கள். இதையடுத்து ஒருமித்த சுமூகமான முடிவுகள் எட்டப்பட்டன.

    இதன் தொடர்ச்சியாக பீகார் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் புதிய ஆட்சி அமைப்பதற்கு வசதியாக பதவிகளை ராஜினாமா செய்ய தீர்மானிக்கப்பட்டது.

    அதன்படி நிதிஷ்குமார் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அவர் மந்திரிகள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் கவர்னரை சந்தித்தார். தனது ராஜினாமா கடிதத்தை அவர் கவர்னரிடம் கொடுத்தார்.

    அந்த ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட கவர்னர் புதிய ஆட்சி அமையும் வரை தற்காலிகமாக முதல்-மந்திரி பதவியை தொடருமாறு கேட்டுக்கொண்டார்.

    பீகாா் சட்டசபையின் பதவிக் காலம் வருகிற 22-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது. எனவே அதற்குள் புதிய அரசு பதவியேற்க வேண்டும்.

    நாளை தேசிய ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடக்கிறது. அதில் நிதிஷ்குமார் புதிய முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்படுவார். இதைத் தொடர்ந்து புதிய அரசு அமைப்பதற்கான செயல் திட்டம் தயார் செய்யப்பட்டு வருகிறது.

    அதன்படி வருகிற 20-ந் தேதி நிதிஷ்குமார் மீண்டும் முதல்-மந்திரியாக பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி மற்றும் மந்திரிகள் பங்கேற்க உள்ளனர்.

    ×