என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    காரசாரமான மொறு மொறுப்பான இத்துக்கடாவை தேனீருடன் உண்ண நாவிற்கு இனிமையாக இருக்கும். இன்று இந்த சுவையான கோதுமை துக்கடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கோதுமை மாவு - 400 கிராம்
    மிளகாய் தூள் - 3 ஸ்பூன்
    பெருங்காயத்தூள் - ½ ஸ்பூன்
    வெள்ளைப் பூண்டு - 5
    க‌ல் உப்பு - தேவையான அளவு
    தண்ணீர் - தேவையான அளவு
    எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு


     
    செய்முறை

    வெள்ளைப் பூண்டினைத் தோல் நீக்கி சுத்தம் செய்து தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.

    கல் உப்பில் தண்ணீர் சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதனுடன் மிளகாய் தூள், பெருங்காயத்தூள், மையாக அரைத்த வெள்ளைப் பூண்டு விழுது, உப்பு கலந்த தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை சிறிது எண்ணெய் தடவி அரை மணிநேரம் அப்படியே வைக்கவும்.
     
    பின் அதிலிருந்து எலுமிச்சை அளவு மாவினை எடுத்து சப்பாத்தி போல் திரட்டவும். சப்பாத்தியானது மிகவும் மெல்லியதாகவோ, கடினமானதாக இருக்கக் கூடாது. பின் சப்பாத்தியைக் கத்தியால் சதுரத் துண்டுகளாக வெட்டவும். இவ்வாறு எல்லா மாவினையும் சதுரத் துண்டுகளாக்கவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சதுர துண்டுகளாக்கிய மாவினை போடவும். அவ்வப்போது சதுரத்துண்டுகளை போட்டு கிளறி விடவும். சதுரத் துண்டுகள் வெந்து எண்ணெய் அடங்கியதும் எடுத்து விடவும்.

    சுவையான கோதுமை துக்கடா தயார்.

    இது ஆறியதும் காற்று புகாத டப்பாவில் போட்டு ஒரு மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மணிக்கட்டில் ஏற்படும் வீக்கம் எதனால் ஏற்படுகிறது? இது வெளிப்படுத்தும் விஷயம் என்ன? என்பது பற்றி இங்கு விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    உடலில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றமும் ஏதேனும் நேர்மறை, எதிர்மறை தாக்கத்தை தான் உண்டாக்குகிறது. அந்த வகையில் மணிக்கட்டில் ஏற்படும் வீக்கம் எதனால்? இது வெளிப்படுத்தும் விஷயம் என்ன? என்பது பற்றி இங்கு காணலாம்…

    சிலருக்கு மணிக்கட்டின் மேற்பகுதி அல்லது கீழ் பகுதியில் வீக்கம் இருக்கும். இதை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால், இது சில சமயங்களில் அபாயகரமான பிரச்சனையாக மாறலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    மணிக்கட்டின் மேற்பகுதியில் முண்டு போன்று வீக்கம் ஏற்படுவதை நரம்பணுத்திரள் வீக்கம் அல்லது நரம்பு முடிச்சு வீக்கம் என்கின்றனர். இது போன்ற வீக்கம் மணிக்கட்டின் மேல், கீழ் புறங்களில் அல்லது விரல் நடுவே கூட ஏற்படுகிறது. சிலர்க்கு பாதங்களில் கூட ஏற்படும்.

    ஆங்கில மருத்துவத்தில் இது ஏன் ஏற்படுகிறது என் குறிப்பட்ட தெளிவான காரணம் ஏதும் கண்டறியப்படவில்லை என கூறப்படுகிறது. பெரியளவில் காணப்பட்டால்… ஒருவேளை மணிக்கட்டில் ஏற்படும் இந்த வீக்கம் பெரியளவில் காணப்பட்டால் உடனே மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.



    இது, சிலருக்கு சிறியளவில் தான் வலியை ஏற்படுத்தும். சிலருக்கு இந்த வலி மணிக்கட்டுப் பகுதியில் மட்டும் இருக்கும், சிலருக்கு விரல்கள் வழியே வலி ஊடுருவவது போன்ற உணர்வை அளிக்கும்.

    ஆங்கில மருத்துவத்தில் இந்த வீக்கத்தில் இருக்கும் திரவ சுரப்பியை நீக்க, வீக்கத்தை குறைக்க அறுவை சிகிச்சையை தான் கையாள்கின்றனர். இதை Ganglionectomy என்கின்றனர். ஆனால், இந்த சிகிச்சைக்கு பிறகும் வீக்கம் மீண்டும் உண்டாக வாய்ப்புகள் இருக்கிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    ஹோமியோபதி மருத்துவத்தில் அறுவை சிகிச்சைக்கு பதிலாக குறிப்பிட்ட சில பிரத்தியோக மருந்துகள் மூலம் நிரந்தர தீர்வுக் காண முடியும் என கூறுகின்றனர். இதனால், வீக்கத்தை முழுமையாக குறைக்கலாம் என்றும் ஹோமியோபதி மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    இதற்கான மருந்துகள் மற்றும் சிகிச்சைகளை நீங்களாக மற்றவர் சொல்லி பின்பற்ற வேண்டாம். தகுந்த மருத்துவரிடம் பரிசோதனை செய்து. கவனமாக இருக்க
    வேண்டியது அவசியம்.
    வெயில் காலத்தில் பெண்கள் உண்ணும் உணவு போலவே உடுத்தும் ஆடை விஷயத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தினாலே பல பிரச்சனைகளிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ளலாம்.
    வெயில் காலத்தில் பெண்கள் உண்ணும் உணவு போலவே உடுத்தும் ஆடை விஷயத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தினாலே பல பிரச்சனைகளிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ளலாம்.

    கோடைக்காலத்தில்தான் பெரும்பாலான சரும நோய்கள் ஏற்படுகின்றன. இதற்கு, நம் அலட்சியமும் ஒரு காரணம். பெண்கள் தங்களின் வசதிக்காக ஜீன்ஸ், லெகிங்ஸ் அணிவது ஃபேஷன் ஆகிவிட்டது. இந்த வகையான ஆடைகளைக் கோடையில் தவிர்ப்பது அவசியம். இவை பல சருமப் பிரச்சனைக்குக் காரணியாக அமைகிறது. லெகிங்ஸ் பொதுவாக பனியன் மெட்டீரியலில் உருவாக்கப்படுகிறது.

    ஜீன்ஸ் துணியும் முரட்டுத்தன்மையுடன் இருக்கும் என்பதால், வியர்வையை உறிஞ்சாது. இதனால், சுரக்கும் வியர்வை உடலிலே தங்கி, பூஞ்சையை ஏற்படுத்தும். இதனால், அரிப்பு, படை, வியர்க்குரு, சிறிய கட்டிகள், தேமல் என ஆரம்பித்து, சின்னம்மை, மணல்வாரி அம்மை, அலர்ஜி, வயிற்றுப் பிரச்னை வரை செல்லும். தோலில் வியர்வைத் தங்குவதால், தோல் வறண்டு எரிச்சல் ஏற்படும். எனவே, காட்டன் ஆடைகளையே அணியுங்கள். நீங்கள் அணியும் ஆடையும் தளர்வாக இருக்க வேண்டும்.

    சிலர், குளிர்ச்சி இருப்பதற்காக ஈரமான ஆடைகளை அணிவது, குளித்ததும் உடலைச் சரியாகத் துவட்டாமல் ஆடை அணிந்துகொள்வது போன்ற பழக்கத்தை கடைப்பிடிப்பார்கள். இது, மிகவும் தவறான பழக்கங்கள். ஈரமான ஆடைகள், பல்வேறு நோய்த்தொற்றுக்குக் காரணமாக அமையும். இதைத் தவிர்க்கவும். சரியான வழிகாட்டலின்றி, வீட்டு வைத்தியம் செய்யவும் வேண்டாம். இது சிலருக்கு அலர்ஜி மற்றும் நோய்த்தொற்றை அதிகரிக்கச் செய்துவிடும். 
    உருளைக்கிழங்கு அதிக அளவு கால்சியத்தை கொண்டிருப்பதால் இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இனி சுவையான உருளைக்கிழங்கு புட்டு செய்முறை பற்றி பார்ப்போம்.
    தேவையான பொருட்கள் :

    உருளைக்கிழங்கு - கால் கிலோ
    உப்பு - தேவையான அளவு
    தேங்காய் - அரை மூடி
     
    தாளிக்க :

    கடுகு - 1 ஸ்பூன்
    கறிவேப்பிலை - ஒரு கொத்து
    உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
    சீரகம் - 1 ஸ்பூன்
    பச்சை மிளகாய் - 2
    சின்ன வெங்காயம் - 10
    நல்லெண்ணெய் - தாளிக்க தேவையான அளவு


     
    செய்முறை :

    முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்துக் கொள்ளவும்.

    தேங்காயை துருவிக்கொள்ளவும்.

    சின்ன வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தோலுரித்து வைத்துள்ள உருளைக்கிழங்குடன் தேவையான அளவு உப்பினைச் சேர்த்து நன்கு மசித்துக் கொள்ளவும்.

    வாணலியில் தேவையான அளவு நல்ல எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, சீரகம், உளுந்தம் பருப்பு, கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் சின்ன வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து கிளறவும்.

    அடுத்து அதில் உருளைக்கிழங்கினைச் சேர்த்து நன்கு ஒரு சேர கிளறவும்.

    இரண்டு நிமிடங்கள் கழித்து அதனுடன் தேங்காய் துருவலை சேர்த்துக் கிளறவும். பின் அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.

    சுவையான உருளைக்கிழங்கு புட்டு தயார்.

    இதனை சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நம் கண்களை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டே எளிமையான வழிமுறைகளை பின்பற்றலாம்.
    நம் கண்களை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டே எளிமையான வழிமுறைகளை பின்பற்றலாம். வீட்டிலிருந்தே கண்களைப் பாதுகாக்கும் எளிமையான இயற்கை வழிமுறைகளை பார்க்கலாம்.

    1. அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை, வெள்ளரிக்காய்தான் கண்களுக்கு பெஸ்ட் ட்ரீட்மென்ட். கண்களை மூடிக்கொண்டு,  நறுக்கிய வெள்ளரிக்காயை வைத்துக்கொள்ள வேண்டும். இதன்மூலம் கருவளையம் நீங்கி, கண்கள் புத்துணர்ச்சியாக இருக்கும்.

    2. வெள்ளரிக்காய் - 1/2, உருளைக்கிழங்கு - 1/2, மஞ்சள் தூள் - சிறிதளவு, எலுமிச்சை - 1. வெள்ளரிக்காயையும் உருளைக்கிழங்கையும் துருவிக்கொள்ளவும். அதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள், எலுமிச்சை சாற்றை கலந்துகொள்ளவும். பின்னர், கண்களின் மேல் ஒரு காட்டன் துணியை வைத்துக்கொண்டு அதன்மேல் இந்தக் கலவையை பூசிக்கொள்ளவும். 15 நிமிடங்கள் வைத்திருந்து கண்களைக் கழுவவும். (இவை, நேரடியாகக் கண்களின் மேல் படக்கூடாது). இவ்வாறு பயன்படுத்துவதால், கண்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.



    3. ஸ்டிராபெர்ரி பழத்தை மெல்லியதாக ஸ்லைஸ் செய்து, கண்களின் மேல் நேரடியாக வைத்துக்கொள்ளவும். இது, கருமையை நீக்கி, புத்துணர்ச்சியை அளிக்கும்.

    4. காட்டன் பந்துகளை எடுத்து, அவற்றைக் குளிர்ந்த பாலில் நனைத்து, கண்களைச் சுத்தப்படுத்த வேண்டும். இதன்மூலம் கண்களில் உள்ள அழுக்கை நீக்கலாம்.

    5. ரோஸ் வாட்டரை காட்டனில் நனைத்து கண்களை துடைத்து வந்தால், கண்களுக்குப் பொலிவு கிடைக்கும். புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

    6. ஒரு டீஸ்பூன் சோம்பை ஒரு கப் தண்ணீரில் நன்றாகக் கொதிக்க வைக்கவும். அந்தத் தண்ணீரால் முகத்தைக் கழுவி வந்தால், கண்களின் சோர்வு நீங்கும்.
    நீங்கள் குண்டாக இருந்தால் அதை நினைத்து வருந்தாதீர்கள். கேலி செய்பவர்களை பார்த்து அலட்சிய சிரிப்பை உதிர்த்துவிட்டு, அவர்களை பொருட்படுத்தாமல் முன்னேறிச் சென்றுவிடவேண்டும்.
    ‘பத்து நாட்களில் உடல் எடையை குறைப்பது எப்படி?’ என்பது, இப்போது பெண்கள் அடிக்கடி படிக்க விரும்பும் விஷயமாக இருக்கிறது. சற்று குண்டாக இருக்கும் பெண்கள் காலையில் எழுந்ததும் கண்ணாடி முன்னால் போய் நின்றுகொண்டு, ‘இன்னும் கொஞ்சம் உடல் எடையை குறைக்க சாப்பிடலாமா அல்லது பட்டினிகிடக்கலாமா?’ என்று தினமும் யோசிக்கிறார்கள். சமூகமும் குண்டானவர்களை சற்று கிண்டலாகத்தான் பார்க்கிறது. உண்மையில் சற்று குண்டாக இருப்பதால் குறை ஏதும் இல்லை.

    உடல் அளவைப் பொறுத்தவரையில் சினிமா நடிகைகளைப் போன்ற ‘ஜீரோ சைஸ்’ தோற்றத்தை எல்லா பெண்களுமே விரும்புகிறார்கள். ஆனால் பேஷன் ஷோக்களில் ‘பிளஸ் சைஸ்’ எனப்படும் பூசி மெழுகினாற் போன்ற உடல்வாகு கொண்ட பெண்களுக்கும் அதிக மவுசு இருக்கிறது.

    பெண்களின் உடல் எடை எவ்வளவு இருக்கவேண்டும் என்பதை கணக்கிடுவது எளிது. உயரத்தை சென்டிமீட்டரில் அளந்து அதில் 100-ஐ கழித்து விட்டால், சரியாக எவ்வளவு எடை இருக்கவேண்டும் என்பது தெரிந்துவிடும். 165 செ.மீ. உயரம் கொண்ட பெண்ணின் ஆரோக்கிய எடை 65 கிலோ என்று எடுத்துக்கொள்ளலாம். ‘பாடி மாஸ் இன்டக்ஸ்’ அடிப்படையில் பார்த்தால் 19-க்கும் 25-க்கும் இடையில் இருப்பவர்கள் சரியான எடையுடன் இருக்கிறார்கள் என்று அர்த்தம். 18.5-க்கு கீழ் இருப்பவர்கள் போதுமான உடல் எடை இல்லாத ஒல்லிப்பெண்கள். 25 முதல் 30 வரை இருப்பவர்களை பிளஸ் சைஸ் கொண்டவர்கள் என்றும், 30-க்கு மேல் இருப்பவர்களை குண்டானவர்கள் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

    குண்டாக இருப்பவர்களுக்கு சில நெருக்கடிகள் இருக்கத்தான் செய்கின்றன. உடன் இருப்பவர்களே கேலி, கிண்டல் செய்து தன்னம்பிக்கையை குறைப்பார்கள். கோபம் வரும்போது குடும்பத்தில் உள்ளவர்களே உடல் அமைப்பை சுட்டிக்காட்டி வெறுப்பேற்றுவார்கள். அதனால், குண்டானவர்கள் பொது இடங்களுக்கு செல்லாமல் தங்களை தனிமைப்படுத்தியபடி அறைக்குள்ளே முடங்கிக்கொள்வார்கள். அப்படி முடங்குவது அவர்களுக்கு மனஅழுத்தத்தை உருவாக்கி, எதிர்கால முன்னேற்றத்துக்கு தடையை உருவாக்கிவிடும்.

    நீங்கள் குண்டாக இருந்தால் அதை நினைத்து வருந்தாதீர்கள். வருந்தினால் உங்கள் உடலில் கார்டிசால் என்ற மனஅழுத்த ஹார்மோன் அதிகம் சுரந்து, கூடுதலாக உங்களை குண்டாக்கிவிடும். உங்கள் உடல் எடையை எப்போதுமே நீங்கள் மார்க்கெட்டில் உச்சத்தில் இருக்கும் நடிகைகளின் உடலோடு ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். ஏன்என்றால் சைஸ் ஜீரோ என்பது திறமைக்கான அடையாளம் அல்ல. திறமை வேறு, உடல் அமைப்பு வேறு உண்மையை உணர்ந்து எப்போதும் அதில் விழிப்பாக இருங்கள்.

    உடல் எடையை குறைக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றும்போதே பட்டினி கிடப்பது, உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்வது, உடற்பயிற்சி மேற்கொள்வது ஆகிய மூன்று விஷயங்களும் குண்டாக இருப்பவர்களின் நினைவுக்கு வரும். இதில் சரியான ஆலோசனையை பெற்று, முறையான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் உடல் நலம்கெட்டு, மன அழுத்தமும் உருவாகி விடும்.

    உடல் எடை அதிகமாக இருப்பதாக கருதும் பெண்கள் முதலில் தங்கள் வீட்டில், தனது முழு உருவத்தையும் பார்க்கும் விதத்தில் கண்ணாடி ஒன்றை வாங்கிவைக்கவேண்டும். தினமும் காலையில் அதை பார்த்தபடி, ‘நான் என் உடலை நேசிக்கிறேன். நான்தான் இந்த உலகிலே உற்சாகமானவள்’ என்று சொல்லவேண்டும். இது அவர்களது தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும். அதுபோல் உடல்வாகுவை சுட்டிக்காட்டி கேலி செய்பவர்களை புறக்கணிக்கும் அளவுக்கு மனதுணிச்சலையும் உருவாக்கிக்கொள்ளவேண்டும்.

    உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் பொதுவாகவே தங்களை மற்றவர்களுக்கு மத்தியில் மறைத்துக்கொள்ள விரும்புவார்கள். தூண்களுக்கு பின்பும், சுவர்களுக்கு பின்பும் தங்களை மறைக்க வழிதேடுவார்கள். அதுபோல் தங்கள் உடையை அவ்வப்போது சரிசெய்து கொள்ளவும் முனைப்புகாட்டுவார்கள். அதெல்லாம் சரியான வழிமுறை அல்ல. மற்றவர்கள் முன்னால் தைரியமாக நிமிர்ந்து நடக்கவேண்டும். அங்கும் இங்குமாக மறைய வழி இருக்கிறதா என்று பார்க்கக்கூடாது. அதுபோல் உடை விஷயத்திலும் தெளிவாக இருக்கவேண்டும்.

    தேவையில்லாமல் அவ்வப்போது உடைகளை இழுத்து சரிசெய்யக்கூடாது. இதற்கு தேவையான பக்குவத்தை பெறவேண்டும் என்றால், மற்றவர்கள் முன்பும், பொது இடங்களிலும் எந்த தயக்கமும் இன்றி முன்னேறிச் செல்லவேண்டும். அதுமட்டுமின்றி மற்றவர்கள் கேலி செய்துவிடுவார்களோ என்ற அச்சத்தோடு நடக்கக்கூடாது. கேலி செய்தாலும் ஒரு அலட்சிய சிரிப்பை உதிர்த்துவிட்டு, அவர்களை பொருட்படுத்தாமல் முன்னேறிச் சென்றுவிடவேண்டும். கேலி செய்பவர்களிடம் எல்லாம் சண்டையிடத் தொடங்கினால் தன்னம்பிக்கை குறைந்து விடும்.
    சிறுதானியங்களில் சத்தான சுவையான உணவுகளை செய்யலாம். இன்று சிறுதானிய மாவில் இடியாப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    சிறுதானிய இடியாப்ப மாவு தயார் செய்ய தேவையான பொருட்கள்

    சாமை - 1 கப்
    தினை - 1 கப்
    வரகு - 1 கப்
    குதிரைவாலி - 1 கப்
    கேழ்வரகு - 1 கப்
    கம்பு - 1 கப்
    சோளம் - 1 கப்
     
    சாமை, தினை, வரகு, குதிரைவாலி, கேழ்வரகு, கம்பு, சோளம் ஆகியவற்றை தனித்தனியே வெறும் வாணலியில் போட்டு நன்கு வாசனை வரும்வரை வறுக்கவும். பின் அதனை ஆறவைத்து மிசினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். இதனை நன்கு ஆற வைத்து காற்று புகாத டப்பாவில் அடைத்து வைத்து தேவைப்படும் நேரத்தில் எடுத்து உபயோகித்துக் கொள்ளலாம்.

    தேவையான பொருட்கள்

    சிறுதானிய இடியாப்ப மாவு - 1 கப்
    கல் உப்பு - தேவையான அளவு
    தண்ணீர் - 2 கப்



    செய்முறை :

    தேவையான அளவு கல் உப்பினை இரண்டு கப் தண்ணீரில் சேர்த்து சூடேற்றவும். தண்ணீர் கொதித்ததும் இறக்கி விடவும்.

    சிறுதானிய இடியாப்ப மாவில் உப்பு சேர்த்த சுடுதண்ணீரை சிறிது சிறிதாகச் சேர்த்துப் பிசையவும். மொத்த மாவினையும் சப்பாத்தி மாவு பதத்திற்குத் திரட்டவும்.

    இம்மாவினை தேவையான அளவு எடுத்து இடியாப்பக் குழலில் இட்டு இட்லித் தட்டில் இடியாப்பமாகப் பிழியவும்.

    பின்னர் இதனை ஆவியில் 8 முதல் 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

    சுவையான சிறுதானிய இடியாப்பம் தயார்.

    சத்துக்கள் நிறைந்த இதனை சிறுகுழந்தைகளுக்கும் கொடுக்கலாம். இந்த இடியாப்பத்துடன் தேங்காயப் பூ, தேங்காய் பால், குருமா, சாம்பார் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றினைச் சேர்த்து உண்ணலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்திய மாணவர்களும் ஆன்லைன் படிப்புகளை நாடத் தொடங்கி உள்ளனர். ஆன்லைன் படிப்புகளில் எண்ணற்ற நன்மைகள் இருக்கின்றன. அவற்றைப் பார்ப்போம்...
    இருந்த இடத்திலிருந்தே உலகின் எந்த மூலையிலும் உள்ள பல்கலைக்கழகத்திலும் பட்டம் பெறும் வாய்ப்பை வழங்குகின்றன ஆன்லைன் படிப்புகள். உலகின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் பல, ஏராளமான படிப்புகளை இணையதளம் வழியே வழங்குகின்றன. அமெரிக்க பல்கலைக்கழகங்களில் மட்டும் 3 மில்லியன் மாணவர்கள் முழுமையான ஆன்லைன் படிப்புகளையும், 6 மில்லியன் மாணவர்கள் தாங்கள் தேர்வு செய்துள்ள துறை சம்பந்தமான ஏதாவது ஒரு சான்றிதழ் படிப்பையும் ஆன்லைன் வழியே படிப்பதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். 2016 வரையான புள்ளிவிவரத்தின்படி 7.3 சதவீத மாணவர்கள் இணையப்படிப்பிற்கு திரும்பி உள்ளனர். இந்திய மாணவர்களும் ஆன்லைன் படிப்புகளை நாடத் தொடங்கி உள்ளனர். ஆன்லைன் படிப்புகளில் எண்ணற்ற நன்மைகள் இருக்கின்றன. அவற்றைப் பார்ப்போம்...

    1. ஏராளமான படிப்புகள் :

    ஆன்லைனில் ஏராளமான படிப்புகள் வழங்கப்படுகின்றன. நீண்ட காலம் படிக்க வேண்டிய படிப்புகளைக்கூட குறுகிய கால படிப்பாக வழங்குகின்றன இணையதள கல்வி. பல புதுமையான படிப்புகளும் இணையதளத்தில் அறிமுகம் செய்யப்படுகிறது. வெறும் ‘தியரி’ பாடங்களாக மட்டும் படிக்காமல், தொழில்நுட்பம் முதல் மருத்துவ சான்றிதழ் படிப்புகள் வரை பல படிப்புகளும் இணையதளத்தில் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இணைய கல்வி வழங்குவதில் பல்கலைக்கழகங்களுக்கும் பல சிரமங்கள் குறைவதால், அவைகளும் ஆன்லைன் படிப்புகளை ஊக்குவிக்கின்றன. எண்ணற்ற படிப்புகளை இணையம் வழியாக அறிமுகப்படுத்தி வருகின்றன. சில அமெரிக்க பல்கலைக்கழகங்கள் நர்சிங் முதல் நியூரோசயின்ஸ் வரை அனைத்து வகை பாடங்களையும் இணையதள கல்வியாக வழங்குகின்றன. இவற்றில் குறிப்பிட்ட ஒரு பிரிவை மட்டும் குறுகிய கால டிப்ளமோ படிப்பாக படிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    2. செலவு மிச்சம் :

    ஆன்லைன் படிப்புகள் மாணவர்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் பலவிதமான செலவுகளை கட்டுப்படுத்துவதாக விளங்குகின்றன. புகழ்பெற்ற கல்வி நிறுவனத்திற்காக இடமாறிச் சென்று வாடகைக்கு குடியேறுவது அல்லது அதிகம் செலவு செய்து சென்று திரும்புவது போன்ற பணவிரயத்தை தவிர்க்கிறது. பயணச் செலவு, எரிபொருள் செலவை மிச்சப்படுத்துகிறது. மேலும் பாடப்புத்தகங்கள் மற்றும் உபகரணங்களுக்கான செலவையும் தவிர்த்து விடுகிறது. இதனால்தான் கல்லூரிகள் இணையப் படிப்பை அறிமுகம் செய்வதை விரும்புகின்றன. மாணவர்களும் ஆர்வமுடன் இணையப் படிப்பை தேர்வு செய்கின்றனர்.

    3. தடைகள் இல்லை :

    விரும்பிய பாடத்தை விரும்பிய சூழலில் இருந்து கற்றுக்கொள்ளலாம். குறிப்பிட்ட உடையணிந்து கல்லூரிக்கு வர வேண்டும், குறிப்பிட்ட நேரத்தில் வகுப்பிற்கு ஆஜராக வேண்டும் என்ற கட்டாயம் இணையப் படிப்புகளில் இல்லை. இரவு உடையில் தூங்கி எழுந்த உடனேயே பாடத்தை படிக்கத் தொடங்கிவிடலாம். சொந்த வேலைகளை பகலில் முடித்துவிட்டு, இரவு தூங்கச் செல்லும் முன்பும் சிறிது நேரம் பாடம் படிக்கலாம். பாடங்களும், விளக்க உரைகளும் இணையத்தில் உங்களுக்காக பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும் என்பதால் ஒவ்வொரு பாடமாக படித்துவிட்டு அடுத்த பாடத்திற்கு நகர்ந்து செல்லலாம். காலையில் பரபரப்பாக எழுந்து கிளம்பி, போக்குவரத்து நெரிசலில் சிக்குவது போன்ற சிரமங்கள் இல்லை. முக்கியமான வேலைகளால் பாடவகுப்பை தவறவிடுவது, அல்லது பிரியமானவர்களுடன் நேரம் செலவிட முடியாமல் போவது போன்ற சூழல் இல்லை.

    4. வசதிகளும், நெகிழ்வு திறனும் :

    இணைய படிப்புகள் மாணவர்களின் வசதிக்கேற்றதாக வடிவமைத்துக் கொள்ளும் நெகிழ்வுத்தன்மை கொண்டது. எப்போது நேரம் கிடைக்குமோ அப்போது மட்டும் படிக்கலாம். பொருளாதார நெருக்கடியால் வேலை பார்த்துக் கொண்டே படிக்க வேண்டிய சூழல் கொண்டவர்களுக்கு, ஏற்றது இணைய கல்வி. அப்படி படித்தாலும் இடைவெளி விழுதல், இடைநிறுத்தம் (‘டிஸ்கண்டினியூ’ மற்றும் ‘கேப்’) போன்ற பிரச்சினை ஏற்படுவதில்லை. கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டிய வகுப்புகள் என்று எதுவும் கிடையாது. நூலகங்களுக்குச் சென்றும், நேரடி பயணம் மேற்கொண்டும் சேகரிக்க வேண்டிய தகவல்கள் எதுவுமில்லை. இதனால் தங்கள் தேவைகள் எதையும் ஒத்திவைத்துவிட்டு படிக்க வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. அன்றைய வேலை முடித்த பின்னர் ஓய்வு நேரத்தில் படிக்க முடியும். இத்தகைய நெகிழ்வுத்தன்மைகளால் இணைய படிப்பை மாணவர்களும் விரும்புகிறார்கள்.



    5. வகுப்பறை அச்சம் குறைகிறது :

    சிறந்த கல்வித்திறன் பெற்ற மாணவர்கள் மட்டுமே வகுப்பறையில் சுறுசுறுப்பாக இருப்பார்கள். பெரும்பாலான மாணவர்களுக்கு மற்றவர் மத்தியில் பேசுவதற்கும், கேள்வி கேட்பதற்கும் கூச்சம் இருக்கும். ஆசிரியரின் முகம் பார்த்து பதிலளிக்க சங்கடப்படும் அவஸ்தை, இணையதள படிப்பில் இல்லை. மற்ற மாணவர் முன்பு அவமானப்பட வேண்டிய சூழலும் ஏற்படுவதில்லை. சந்தேகங்கள், கேள்விகள் எதுவானாலும் எளிதான உரையாடல்கள் மூலம் முடிந்துவிடுவது மாணவர்களுக்கு திருப்தியைத் தரும்.

    6. இடைவெளியைத் தவிர்க்கும் :

    குடும்பச் சூழல், பொருளாதார சூழல், உடல் ஒத்துழைக்காமை போன்ற பல சூழல்களால் படிப்பை இடை நிறுத்த வேண்டிய அவசியம் இணைய கல்வியில் இல்லை. புயல்மழை, வெள்ளம், போராட்டம் போன்ற காரணங்களால் கல்லூரி செல்ல முடியாத சூழல் ஏற்பட்டாலும், நீண்ட விடுமுறை அளிக்கப்பட்டாலும் இணையதள கல்வி பாதிக்கப்படுவதில்லை. சில பாட வகுப்புகள், கலந்துரையாடல்களை எந்தச் சூழலிலும், எங்கு இருந்தாலும் எதிர்கொண்டுவிட முடியும்.

    7. தொழில்நுட்பத்திறனை வளர்க்கும் :

    இணையம் வழியே படிப்பது மாணவர்களின் பல்வேறு திறன்களை வளர்ப்பதாக அமையும். குறிப்பாக பாடங்கள் தொடர்பான கோப்புகளை தயாரிப்பது, அனுப்புவது, கலந்துரையாடுவது போன்ற பணிகளால் , கணினியின் அடிப்படை அறிவு முதல், நவீன தொழில்நுட்பத் திறனையும் வளர்க்க முடியும். மொழிபெயர்ப்பு திறன் மற்றும் பல வேலைவாய்ப்புத் திறன்களும் அதிகரிக்கும்.

    8. இருப்பிடம் பிரச்சினையில்லை :

    பணி இடமாற்றம் அல்லது குடியிருப்பு மாற்றம் இணையதள கல்வியை பாதிப்பதில்லை. தங்களுக்கோ, பெற்றோருக்கோ இடமாறுதல் பெறும் அவசியம் நேர்ந்தாலும் பாதிப்பின்றி கல்வி கற்க முடியும். கோடைப் பயணம் சென்றாலும், தற்காலிக பணிக்குச் சென்றாலும் இனிதே இணையப் படிப்பை தொடரலாம்!

    இத்தகையை சிறப்புகளால் இணையதள கல்வி ஆண்டுதோறும் வளர்ச்சி கண்டுவருகிறது. ஆன்லைன் படிப்புகளை படிக்கும் மாணவர் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. நீங்கள் வேலை பார்ப்பவராகவோ, உங்கள் படிப்பு தொடர்புடைய ஏதேனும் ஒரு சான்றிதழ் படிப்பு படிக்க ஆசைப்பட்டு நேரமின்மை மற்றும் வசதியின்மையால் அவதிப்பட்டாலோ, இணையதளம் மூலம் அந்த படிப்பை படித்து வெற்றி பெறலாம்! 
    உடல் எடையை குறைக்க உணவுக்கட்டுப்பாட்டுடன் தினமும் யோகப்பயிற்சிகளை செய்து வருவது பக்க விளைவுகள் இல்லாத ஒரு சிறந்த வழியாக உள்ளது.
    பொதுவாக உடல் எடையை குறைக்க உணவுக்கட்டுப்பாட்டுடன் தினமும் யோகப்பயிற்சிகளை செய்து வருவது பக்க விளைவுகள் இல்லாத, அதிகப் பணச் செலவு இல்லாத ஒரு சிறந்த வழியாக உள்ளது.

    உடல் எடையைக் குறைக்க ஆசனங்களுள் சூரிய நமஸ்காரம் சிறந்த பயிற்சி ஆகும். பிராணாயாமத்தில் சூரிய நாடியை நன்கு இயங்கச் செய்து (வலது நாசியில் மூச்சை அதிகமாக இயங்கச் செய்து) தேவையற்ற கொழுப்பைக் கரைத்து, உடலை லேசாக்கி சுறுசுறுப்புடன் செயல்படச் செய்கிறது.

    ஹைபோதாலமஸில் உள்ள உணவு மையம், திருப்தி மையம் கட்டுப்பாடுடன் செயல்பட சிரசாசனம், சர்வாங்காசனம் போன்ற ஆசனப்பயிற்சிகளும், நாடி சோதனா போன்ற பிராணாயாம பயிற்சிகளும் தியானமும் உதவுகிறது.

    தைராய்டு கோளாறினால் வரும் உடல் பருமனை குறைக்க சர்வாங்காசனம், ஹலாசனம், சிவலிங்காசனம் போன்ற ஆசனப்பயிற்சிகள் உதவுகிறது.
    மருந்து, மாத்திரைகளினால் உடலில் உண்டான கழிவுகளை அகற்ற பிராணாயாமமும், கிரியா பயிற்சிகளும் பயன்படுகிறது. உடல் பருமனைக் குறைப்பதற்கான யோகப் பயிற்சிகளை அடுத்த வாரம் பார்க்கலாம்.
    அதிக கொழுப்புச் சத்து நிறைந்த உணவு வகைகளை உண்பதினாலும், உணவு உண்டவுடன் படுத்துத் தூங்குவதாலும், உடலுக்கு எந்தவிதமான உழைப்பும் இல்லாமல் போவதினாலும் உடல் பருமனாகி விடுகிறது.
    நாம் உயிர் வாழ்வதற்குத் தேவையான சக்தியை உணவின் மூலம் பெறுகிறோம். நமது உடலின் இயக்கம், உழைப்புக்குத் தகுந்த அளவு உணவை உண்ணும்போது அது உடலுக்கு முழுமையான சக்தியாகிறது. ஆனால் உணவை அளவுக்கு மீறி உட்கொள்ளும் போது அவை கொழுப்பாக மாறி உடலில் தங்கி விடுகின்றது. இந்தக் கொழுப்பு சேமிப்புதான் உடல் எடையை அதிகரித்து உடலை பருமனாக்கி விடுகிறது.

    பெண்களுக்கு பிருக்ஷ்டபாகம் மற்றும் தொடைகளில் கொழுப்புச் சத்து அதிகமாக சேருகின்றது. ஆண்களுக்கு வயிற்றில் அதிகமாக சேருகின்றது. காலப் போக்கில் உடலெங்கும் வியாபித்து உடல் முழுவதையும் பருமனாக்கி விடுகிறது.

    அதிக கொழுப்புச் சத்து நிறைந்த உணவு வகைகளை உண்பதினாலும், ஒரு நாளில் பல வேளை உண்பதினாலும், உணவு உண்டவுடன் படுத்துத் தூங்குவதாலும், உடலுக்கு எந்தவிதமான உழைப்பும் இல்லாமல் போவதினாலும் உடல் பருமனாகி விடுகிறது.

    உணவை அதிகமாக உட்கொள்வதால் மட்டுமல்லாமல், உடலில் ஏற்படும் பல்வேறு கோளாறுகளினாலும் உடல் எடை அதிகரித்து விடுகின்றது. நமது மூளையில் உள்ள ஹைபோதாலமஸில் உணவு மையம், திருப்தி மையம் என இரு பிரிவுகள் உள்ளன.

    உணவு மைய பிரிவின் மூலம் நமக்குப் பசி உணர்வு தூண்டப்படுகிறது. தேவையான அளவு உணவை உட்கொண்ட பிறகு, திருப்தி மையத்தின் மூலம் போதும் என நினைக்கச் செய்கிறது. திருப்தி மையம் சரியாக செயல்படாமல் அதிகமாக தூண்டப்படும்போது, எவ்வளவு சாப்பிட்டாலும், இன்னும் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் மேலிட்டு அதிகமாக சாப்பிடச் செய்து விடுகிறது. இதனால் மேலும் மேலும் உடல் எடை கூடிக் கொண்டே போகும்.

    தைராய்டு சுரப்பி சுரக்கும் ஹார்மோன் குறைவதாலும், அட்ரீனல் சுரப்பி பாதிக்கப்படுவதாலும், பிட்யூட்டரி சுரப்பி வேறு பல நோயினால் தாக்கப்படும் போதும், சிலவகை மருந்து மாத்திரைகளால் உடலில் ஏற்படும் பக்க விளைவுகளினாலும் உடல் எடை அதிகரித்து விடுகின்றது.

    அதிக உடற்பருமனால் வரும் கேடுகள்:

    * பருமனாய் இருப்பவர்கள் சிறிது தூரம் நடப்பதற்குள் மூச்சு வாங்கத் தொடங்கும். கால்கள் தளர்ச்சியடைந்து வலியும் வேதனையும் ஏற்படும்.
    * அடிக்கடி அஜீரணக் கோளாறுகள் உண்டாகும்.
    * எந்த வேலையையும் சுறுசுறுப்புடன் செய்ய உடல் ஒத்துழைக்காது.
    * முழங்கால் மூட்டுகளில் வலியும், வீக்கமும் தோன்றும். ரத்த நாளங்களை சுருங்கச் செய்யும்.

    * இருதய நோய்களை உண்டாக்கும்.
    * ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும்.
    * சம்போக சக்தி குறைந்து விடும்.
    * பெண்களில் மலட்டுத் தன்மையை உண்டு பண்ணும்.



    * உடலில் நீரிழிவு நோய் தோன்றுவதற்கு முக்கிய காரணங்களுள் உடற்பருமனும் ஒன்று.
    * அமெரிக்காவில் நீரிழிவு நோயைப்பற்றி நடந்த ஆய்வில் இரண்டாயிரம் பேர் நீரிழிவு நோயாளிகள் என்றால் அவர்களில் 1700 பேர் அதிக உடற்பருமன் உள்ளவர்களாக இருப்பது கண்டறியப்பட்டது.
    * உடல் பருமன் காரணமாக முதுகெலும்பு பாதிக்கப்பட்டு முதுகில் நிரந்தரமான வலியை உண்டு பண்ணி விடுகிறது.

    * அதிக உடற்பருமனாய் இருப்பவர்களுக்கு நோய் தடுப்பாற்றல் குறைந்து விடுகிறது. இதனால் அவர்களுக்கு உண்டாகும் நோய்கள் எளிதில் குணமாவதில்லை.
    * நமது உடலில் அதிகரிக்கும் ஒவ்வொரு பவுண்டு அளவு கொழுப்பு சத்து சுமார் இரண்டிலிருந்து மூன்று மைல் அளவு ரத்த நாளத்தைப் பெறுகிறது. இந்த அதிகளவு தூரத்திற்கு ரத்தத்தை இருதயம் அனுப்பவேண்டி இருப்பதால் இருதயம் பலகீனம் அடைந்து, இருதய நோய்கள் தோன்றக் காரணமாகிறது.
    * குடல் இறக்க நோய்க்கும், பித்த நீர்ப்பையில் கற்கள் தோன்றுவதற்கும் பல காரணங்கள் இருந்தாலும், உடல் பருமன்தான் முக்கிய காரணம் என்று கண்டறிந்துள்ளனர்.

    * இடுப்புப் பகுதியில் உண்டாகும் வலி மற்றும் கோளாறுகளுக்கு அதிக உடல் எடைதான் முக்கிய காரணமாகும்.
    * பருமனானவர்களின் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் என்ற கொழுப்புச் சத்து அதிகமாக இருக்கும். இது இருதயத்திற்குச் செல்லும் ரத்தக் குழாய்களின் உட்புறம் படிவதால் ரத்தக் குழாய்களின் அளவு குறுகி விடுகிறது. இதனால் ரத்த ஓட்டம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. மாரடைப்பு ஏற்பட காரணமாகிறது.

    உடல் பருமனை குறைக்க உணவுக் கட்டுப்பாடு:

    அரிசி உணவை மிகவும் குறைக்க வேண்டும். கோதுமை மற்றும் ராகியினால் செய்த உணவு வகைகளை அதிகம் சாப்பிடலாம். கீரைகள், காய்கறிகளை உணவில் அதிகமாக சேர்க்க வேண்டும்.

    வெங்காயம், கேரட், வெள்ளரிக்காய், முள்ளங்கி, தக்காளி, வெண்டைக்காய் போன்றவற்றை பச்சையாக ஒருவேளை உணவாக சாப்பிடலாம். கறிவேப்பிலை மற்றும் பூண்டு கொலஸ்ட்ராலை குறைக்க உதவுவதால், உணவுடன் பூண்டையும், கறிவேப்பிலையை சட்னியாகவும் செய்து அதிகம் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது.

    விலக்க வேண்டியவை:

    கொழுப்புப் பண்டங்கள், எண்ணெயினால் செய்த பலகாரங்கள், இறைச்சி வகைகள் மற்றும் இனிப்பு வகைகளை மிகவும் குறைக்க வேண்டும். அல்லது விலக்கி விட வேண்டும். காபி, டீ, பால் குடிக்கக் கூடாது.

    வெண்ணெய், நெய், ஜாம் வகைகள், சாக்லேட், கேக்குகள் முட்டை போன்றவற்றை விலக்க வேண்டும். உணவில் உப்பை மிகவும் குறைக்க வேண்டும். அது உடலில் நீரைப் பெருக்கி உடலின் எடையை அதிகரிக்கச் செய்கிறது. மதுபானங்களை விலக்க வேண்டும்.



    உடல் பருமனை குறைக்க பயனுள்ள சாறுகள்:

    தினமும் காலையில் வெறும் வயிற்றில் யோகப்பயிற்சி செய்வதற்கு முன்பு கீழ்கண்டவைகளில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து குடிக்கவும் அல்லது ஒவ்வொன்றையும் ஒவ்வொரு நாளென மாற்றிக் குடித்து வரலாம். இதனால் விரைவில் உடல் பருமனை குறைக்க முடிகிறது.

    1. ஒரு தம்ளர் நீரில் 2 தேக்கரண்டி தேனும், அரை எலுமிச்சை பழசாற்றையும் கலந்து குடிக்க வேண்டும்.

    2. ஒரு தம்ளர் கேரட் சாறில் 10 மிளகை பொடி செய்து கலந்து குடிக்க வேண்டும். மாலையில் கொள்ளு என்ற தானியத்தினால் தயாரித்த சூப்பை ஒரு தம்ளர் குடிக்க வேண்டும்.

    3. கருணைக்கிழங்கை சிறு சிறு துண்டுகளாக கத்தரித்து உலர்த்தி, பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் காலையில் ஒரு தேக்கரண்டி கருணைக்கிழங்கு பொடியுடன் ஒரு தேக்கரண்டி தேனைக் கலந்து சாப்பிட வேண்டும்.

    உடல் பருமனை குறைக்கச் சில பயனுள்ள குறிப்புகள்:

    * எப்போதும் நமக்குத் தேவையான அளவை விட சிறிது குறைத்து சாப்பிட வேண்டும்.
    * தினமும் உணவை உட்கொள்வதற்கு 10 நிமிடம் முன்பாக இரண்டு தம்ளர் இளஞ்சூடான நீரைக் குடிப்பதால், குறைந்தளவு உணவை சாப்பிட துணை புரிகிறது.
    * பகலில் உறங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

    * இரவு உணவு உண்டு இரண்டு மணி நேரம் கழித்த பிறகே உறங்கச் செல்ல வேண்டும்.
    * ஒரு நாளைக்கு மூன்று வேளைக்கு அதிகமாக சாப்பிடக் கூடாது. இடை இடையே நொறுக்குத் தீனிகளை சாப்பிடக் கூடாது.
    * ஆகாரம் உட்கொண்டவுடன் அதிகமாக நீரை குடிக்கக் கூடாது. இதனால் தொந்தி வயிறு அதிகமாகும்.

    * உணவு உட்கொள்வதற்கு முன்பு வயிறு எந்த அளவுக்கு விரிந்து இருக்கிறதோ, அதே அளவு உணவு உட்கொண்ட பிறகும் இருக்க வேண்டும்.
    * வாழ்வதற்காக உண்கிறோம் உண்பதற்காக நாம் வாழவில்லை என்ற கோட்பாட்டை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
    யோகா பக்க விளைவுகள்

    இல்லாத ஒரு சிகிச்சை

    தற்காலத்தில் உடல் பருமனை குறைக்க உலகெங்கும் பல்வேறு சிகிச்சை முறைகள் கையாளப்படுகின்றன. உடலில் கொழுப்பு அதிகமாக சேர்ந்துள்ள இடங்களில் இருந்து அறுவை சிகிச்சை மூலம் அவற்றை அகற்றுதல், ஹைபோதாலமஸின் திருப்தி மைய கட்டுப்பாடு சிதறா வண்ணம் இருக்க சிலவகை மருந்து, மாத்திரைகள் சாப்பிடுவது, குடலை சுருங்கச் செய்து குறைந்தளவு உணவை சாப்பிடச் செய்தல், சுரப்பிகளை கட்டுப்படுத்துதல், பசி அதிகம் உண்டாகாமல் இருப்பதற்கான மருந்துகளை உட்கொள்ளுதல் போன்ற பலவிதமான சிகிச்சை முறைகள் உடல் பருமனை குறைக்க உள்ளன.

    உடல் பருமனே பல நோய்கள் உண்டாவதற்கு காரணம் என்பதை மக்கள் உணரத் தொடங்கிய நிலையில் - பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சிகளிலும் உடலை இளைக்கச் செய்வதற்கான விளம்பரங்களும் அதிகரித்து உள்ளன.

    ஒருவர் உடல் பருமனை குறைப்பதற்கான விளம்பரங்களை பார்த்து மருந்து, மாத்திரைகளை சாப்பிடுவது மிகவும் தவறான செயலாகும். உடல் எடை கூடுகிறதென்றால் அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். அவற்றை முறையாக ஒரு மருத்துவரின் மூலம் அறிந்து, அதற்கு ஏற்ப சரியான மருந்துகளை சாப்பிடுவது நல்லது.

    ரமலான் பண்டிகையின் போது இஸ்லாம் மக்கள் அதிகமாக ஹலீம் செய்வார்கள். இன்று சிக்கன் ஹலீம் செய்வது எவ்வளவு சுலபம் என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    எலும்பில்லாத சிக்கன் - 1 கிலோ
    கோதுமை - 2 கப்
    வெங்காயம்  - 3
    துவரம் பருப்பு - 1/2 கப்
    பட்டை - 2
    பிரியாணி இலை - 2
    இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
    தனியாதூள் - 2 டீஸ்பூன்
    மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
    கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
    மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
    சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
    கொத்தமல்லி தழை - 1/2 கப்
    புதினா - 1/2 கப்
    பச்சைமிளகாய் - 4
    எலுமிச்சை சாறு - 3 டீஸ்பூன்
    உப்பு - சுவைக்கேற்ப
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    துவரம் பருப்பை நன்றாக கழுவி வேக வைத்துகொள்ளவும்.

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

    வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முதலில் கடாயை அடுப்பில் வைத்து வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி வைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் ஊற வைத்திருக்கும் கோதுமையை போட்டு, அதில் 6 கப் தண்ணீர் விட்டு, 1/2 மணி நேரம் நன்கு கோதுமை மென்மையாக வேகும் வரை கொதிக்க விடவும்.

    பிறகு அதில் வேக வைத்திருக்கும் துவரம் பருப்பை சேர்த்து நன்றாக குழைய வேக வைக்கவும்.

    பின் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, பட்டை, பிரியாணி இலை சேர்த்து தாளித்து சிக்கனை போட்டு நன்றாக வதக்கவும்.

    அடுத்து அதில் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மல்லிதூள், மஞ்சள்தூள், கரம் மசாலா தூள், உப்பு, மிளகுதூள், சீரகப் பொடி மற்றும் 1/2 மணி நேரம் கிரேவி கெட்டியாகும் வரை நன்கு கொதிக்க வைக்கவும்.

    இந்த மசாலாவை கோதுமை கலவையில் போட்டு நன்றாக கலக்கவும். அனைத்து நன்றாக சேர்ந்து வந்ததும் அதனை இறக்கி அதன் மேல் நறுக்கிய கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய் தூவி விட்டு எலுமிச்சை சாற்றை அதில் பிழிந்து விட்டு ஒரு முறை கிளறி பொன்னிறமாக வதக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை தூவி பரிமாறவும்.

    சூப்பரான சிக்கன் ஹலீம் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உடல் காட்டும் அறிகுறிகளை உடனடியாக கவனித்தால் பல பெரிய பிரச்சினைகளை தவிர்த்து விடலாம். சில அறிகுறிகளை கீழே குறிப்பிடுகின்றோம். இந்த அறிகுறிகள் இருந்தால் அவசியம் மருத்துவ ஆலோசனைப் பெற வேண்டும்.
    பலருக்கும் ஒரு வழக்கம் இருக்கின்றது. ஏதாவது ஒரு உடல் பாதிப்பு அவர்களுக்கு இருந்து கொண்டே இருக்கும். ஆனால் அவர்கள் அதனை பொருட்டாகவே எடுத்துக் கொள்ள மாட்டார்கள். நான் எல்லாவற்றையும் சரியாச் செய்கிறேன். முறையாய் உண்கிறேன். சரியான நேரத்திற்குத் தூங்க சென்று எழுகின்றேன். எனக்கு எந்த பிரச்சினையும் வராது எனத் தீர்மானமாய் இருப்பார்கள். உடல் எடை கூடிக் கொண்டே இருக்கும் அறிகுறிகளை ஒதுக்கி விடுவார்கள். சில அறிகுறிகளைப் பற்றி கீழே குறிப்பிடுகின்றோம். இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் அவசியம் மருத்துவ ஆலோசனைப் பெற வேண்டும்.

    * வயிறு உப்பிசமாகவும் சற்று பெரியதாக தோன்றுவதாகவும் பல நேரங்களில் அநேகர் நினைக்கின்றனர். இது எடை குறைவு, வயிற்று பிரட்டல், வாந்தி என்று இருந்தால் அதனைப் பற்றி உடனே மருத்துவ அறிவுரை பெற வேண்டும். பொதுவில் சில சத்தான உணவுகள், முளைகட்டிய பயறுகள், (உம்:) பீன்ஸ், முட்டைகோஸ், காரட் போன்றவைகளும், லக்டோஸ் அதிகமுள்ள உணவுகள், சில பால் வகை, சர்க்கரை, அதிக நார் சத்து பழம், கூழ் இவையும் உப்பிச வயிறு பெருத்த உணர்வினை தோற்றுவிக்கும்.

    மேலும் அதிக மலச்சிக்கல், பயணம், வேலை பளு இவையும் இந்த பாதிப்பினை எற்படுத்தலாம். உடற்பயிற்சி இன்மையும் உப்பிச பாதிப்பினை ஏற்படுத்தலாம். வயிறு, குடல் சம்பந்தப்பட்ட பாதிப்புகளாலும் உப்பிசம் ஏற்படலாம். வெகு அரிதாக இது உணவுப் பாதை புற்று நோயின் காரணமாகவும் இருக்கலாம்.

    * உணவில் உப்பினை சற்று குறைத்துக் கொள்ளுதல்
    * உணவில் மஞ்சள் சேர்த்துக் கொள்ளுதல்
    * மோர், கொழுப்பில்லாத தயிர் சேர்த்துக் கொள்ளுதல்
    * யோகா பயிற்சி.
    * வாழைப்பழம் அன்றாடம் எடுத்துக் கொள்ளுதல்
    * எலுமிச்சையை தண்ணீரில் கலந்து அருந்துதல்
    போன்றவை உப்பிசத்திற்கு நிவாரணமாக அமையும்.

    குறட்டை - இது அருகில் இருப்பவரை தூங்க விடாது அதிக தொந்தரவு செய்து விடும். குறட்டையின் காரணமாக விவாகரத்து வரை சென்றவர்கள் கூட உண்டு. ஆனால் குறட்டை உடலில் ஏதோ ஒரு பாதிப்பினை உணர்த்துவதாக இருக்கலாம். ஆக இதனை கேலி, தமாஷ் என்று நினைக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.

    அதிக காற்று வெளியே போகுதல் - இது அஜீரணக் கோளாறின் வெளிப்பாடு. உணவு அலர்ஜி இருக்கலாம். குடல் பிரச்சினை இருக்கலாம். அதிக ஓட்டப் பயிற்சி செய்பவர்களுக்கு வயிறு அதிகம் குலுங்குவதுடன் அதிக காற்றினையும் இவர்கள் விழுங்கி விடுகின்றனர். உண்ணும் பொழுதும், நீர், காபி போன்றவை குடிக்கும் பொழுதும், அதிக மூச்சு வாங்கும் பொழுதும் அதிக காற்றினை விழுங்கி விடுகின்றனர். மேலும்



    * இருமல் தொல்லை ஏற்படும் பொழுது அதிக காற்றினை விழுங்கிவிடுவர்.
    * இருமல் மருந்தில் உள்ள செயற்கை இனிப்பு கட்டியினால் வயிற்றில் காற்று ஏற்படலாம்.
    * தூங்கும் நேரம் மாறுபடும் பொழுது குடலில் நீர் தங்கி காற்று உருவாகலாம்.

    * கிருமி தாக்குதல், சிறு நீரக கிருமி, சிறுநீர் குழாயில் கிருமி போன்றவையும் வயிற்றில் அசவுகரியத்தை உண்டாக்கலாம். மேலும் இதற்காகத் தரப்படும் ஆன்டி பயாடிக்குகளாலும் வயிற்றில் காற்று உண்டாகலாம். இதற்கு மருத்துவரே உதவுவார்.

    * சிலருக்கு அன்றாடம் ஆஸ்பிரின் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கும். இவர்களுக்கு சில நேரங்களில் மேல் வயிறு வலி. காற்று இவற்றில் பாதிப்பு இருக்கும். உங்கள் மருத்துவர் உங்களுக்கு தேவையான அளவு ஆஸ்பிரினை சிபாரிசு செய்வதுடன் அதனை உணவிற்குப் பிறகே எடுத்துக் கொள்ளச் சொல்வார். மேலும் மருந்துகளை விழுங்கும் பொழுது தேவையான அளவு நீரினை எடுத்துக் கொள்ளுங்கள். சிறிதளவு நீரில் விழுங்கும் பொழுது அது உணவுப்பாதை சுவரில் பாதிப்பினை ஏற்படுத்தும்

    * அதிக மன உளைச்சல் அஜீரண பாதிப்பினை ஏற்படுத்தும். இதனால் வயிற்றில் காற்று பாதிப்பு ஏற்படலாம். மேலும் படபடப்புடன் இருக்கும் நேரத்தில் நாம் அறியாமலே அதிக காற்றினை விழுங்கி விடுகின்றோம். இதனாலும் அதிக காற்று வெளிப்போக்கு ஏற்படலாம்.

    * மீந்துபோன உணவுகளை அதிகம் மறு சூடு செய்து உபயோகித்தால் வயிற்றில் காற்று சேரும்.

    ராஜ்மா, பீன்ஸ்,முட்டைகோஸ், காலிபிளவர், வெங்காயம், பழங்கள் இவற்றினை அதிக அளவில் உண்ணும் பொழுது வயிற்றில் காற்று சேரலாம்.
    எப்பொழுதும் சோர்வாகவே இருக்கின்றீர்களா? நான் நன்கு தூங்குகிறேன். இருந்தாலும் சோர்வாகவே இருக்கின்றேனே என்று சொல்கிறீர்களா? சோர்வு பல உடல் ஆரோக்கிய பாதிப்புகளின் வெளிப்பாடே.

    * ரத்தசோகை இருக்கலாம்.
    * தைராய்டு ஹார்மோன் பாதிப்பு இருக்கலாம்.
    * நீரிழிவு நோய் ஆரம்பகால அறிகுறியாக இருக்கலாம்.
    * மனச்சோர்வு, மன உளைச்சல் காரணமாக இருக்கலாம்.
    * உணவு ஒவ்வாமை இருக்கலாம்.
    * அட்ரினல் ஹார்மோன் பாதிப்பு இருக்கலாம்.

    • இருதய பாதிப்பு இருக்கலாம். ஆக மருத்துவ பரிசோதனையே இதற்கு எளிய தீர்வு. வாய் துர்நாற்றம்: வாய் துர்நாற்றம் பற்றி அநேகர் கண்டு கொள்வதேயில்லை. அருகில் இருப்பவர்களுக்கு இது பெரும் அவஸ்தை என்றாலும் பாதிப்புடையவருக்கு உடல்நல பிரச்சினைகள் இருக்கக்கூடும் என்பதால் இதற்கும் கவனம் கொடுக்க வேண்டும்.

    • வாய் சுகாதாரமின்மை முக்கிய காரணமாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம்.
    • தேவையான அளவு நீர் குடிக்க வேண்டியது அவசியம்.
    • வாயில் உணவுப் பொருள் தங்காமல் வாயின் சுத்தம் செய்ய வேண்டும்.
    • சாக்லேட் மற்ற இனிப்புகளை அடிக்கடி வாயில் போட்டு சுவைக்கக்கூடாது.

    • வாய் துர்நாற்றம் கல்லீரல், சிறுநீரக பாதிப்பின் அறிகுறிகளாக இருக்கலாம்.
    • தொண்டையில் சதை வீக்கம் காரணமாய் இருக்கலாம்.
    • வயிற்றில் புண் இருக்கலாம்.
    • உங்கள் எடை அதிகமாக இருக்கலாம்.



    • நீங்கள் கொழுப்பு குறைவான தயிர், மோர் குடிக்க வேண்டி இருக்கலாம்.
    • முறையாய் பல் துலக்க வேண்டிய அவசியம் இருக்கலாம்.

    அடிக்கடி தலைவலியால் அவதிபடுகின்றீர்களா?

    தலைவலி சில நேரங்களில் வருவது சாதாரண நிகழ்வு தான். ஆனால் அடிக்கடி தலைவலி வருவதும், தாங்க முடியாத அளவு ஏற்படுவதும் உடனடி கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. மற்றபடி சாதாரண தலைவலியினைத் தவிர்க்க

    • தேவையான அளவு நீர் குடியுங்கள்.
    • முறையான நேரத்தில் உண்ணுங்கள்.
    * அதிக வாசனை திரவியங்களைத் தவிருங்கள்.
    * ஒரே இடத்தில் அமர்ந்து இராமல் அடிக்கடி நடங்கள்.

    * 8 மணி நேரம் தூங்குங்கள்.
    * வாழ்க்கையை கம்ப்யூட்டர் முன்பும், செல்போன் முன்பும் செலவழிக்காதீர்கள்.
    * புகை, மது இரண்டினையும் நிறுத்துங்கள்.
    * அதிக எடை இருப்பின் குறையுங்கள்.

    * உங்கள் மருந்துகள் உங்களுக்கு ஒத்துக் கொள்கின்றதா என்று செக் செய்யுங்கள்.
    * அலர்ஜி தரும் பொருட்களை தவிர்த்து விடுங்கள்.
    * அளவான உப்பினை எடுத்துக் கொள்ளுங்கள்.

    * சிலருக்கு திடீரென நடக்கும் பொழுதும், எழுந்திருக்கும் பொழுதும் சதை பிடிப்பு ஏற்படும். இது உடலில் சில சத்து குறைபாடுகளை குறிக்கும். உடற்பயிற்சிக்குப் பிறகும் இவ்வாறு ஏற்படலாம். உடலில் நீர் குறைதல், கோணல் மாணலாக படுத்து உறங்குவதாலும் ஏற்படலாம். உடலில் சத்து குறைபாடுகள் இருக்கின்றதா என்று அறிந்து நீக்கி விட வேண்டும்.

    அலர்ஜி: எதனால் அலர்ஜி ஏற்பட்டாலும் அதனை முழுமையாய் மருத்துவ ஆய்வின் மூலம் அரிந்து அதனை முறையாய் பின்பற்ற வேண்டும். எடை குறைவோ, எடை கூடுதலோ உங்கள் முயற்சி இன்றி ஏற்பட்டால் அதனை உடனடி கவனிக்கவும்.

    ஆக உடல் காட்டும் அறிகுறிகளை உடனடியாக கவனித்தால் பல பெரிய பிரச்சினைகளை தவிர்த்து விடலாம் என்பதனை அறிந்து செயல்படுவோமாக.
    அக்னி நட்சத்திர தாக்குதல் காலம் முடிந்து விட்டாலும் வெயிலின் சுட்டெரிப்பு இன்னமும் தணியவில்லை. ஆகவே அனைவரும் அனைத்து வெயில் கால பாதுகாப்புகளையும் சிறிது காலம் தொடரவே வேண்டும்.
    ×