உலகம்
கியூபா கட்டிட விபத்து

ஹவானா ஓட்டல் வெடி விபத்து - பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு

Published On 2022-05-09 22:11 GMT   |   Update On 2022-05-09 22:11 GMT
ஹவானா ஓட்டல் வெடிவிபத்து குறித்து தகவலறிந்த மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த பலரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஹவானா:

கியூபா நாட்டின் தலைநகர் ஹவானாவில் சரடோகா என்ற நட்சத்திர ஓட்டல் உள்ளது. 86 அறைகள் கொண்ட இந்த ஓட்டலில் புதுப்பிக்கும் பணி நடந்து வந்தது.

இந்த ஓட்டலில் கடந்த சில நாட்களுக்கு முன் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஓட்டல் கட்டிடம் சேதமடைந்து இடிந்து விழுந்தது. இயற்கை எரிவாயு செல்லும் குழாயில் கசிவு ஏற்பட்டு வெடித்துச் சிதறியது விசாரணையில் தெரியவந்தது. சக்திவாய்ந்த வெடிவிபத்தால் ஓட்டலைச் சுற்றியுள்ள கட்டிடங்களும் சேதமடைந்தன.

தகவலறிந்த மீட்புக்குழு அங்கு விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த பலரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்நிலையில், ஹவானா ஓட்டல் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. இதில் கர்ப்பிணி பெண், குழந்தைகளும் அடங்குவர்.

இதுகுறித்து அதிபர் மிகுவல் டயஸ் கேனல் கூறுகையில், இது குண்டு வெடிப்பு தாக்குதல் கிடையாது. இது ஒரு சோகமான விபத்து என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News