செய்திகள்
டக்ளஸ் தேவானந்தா

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் மகிழ்ச்சி: இலங்கை மந்திரி திமிர் பேச்சு

Published On 2020-10-28 16:16 GMT   |   Update On 2020-10-28 16:16 GMT
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கப்பற்படை தாக்குதல் நடத்தியதாக வந்த செய்தி மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என இலங்கை அமைச்சர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கையின் கடற்தொழில் அமைச்சராக இருந்து வருபவர் டக்ளஸ் தேவானந்தா. இவர் இந்திய மீனவர்கள் மீது  இலங்கை கப்பற்படை தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது கூறி உள்ளார்.

மேலும் இதுகுறித்து அவர் கூறி இருப்பதாவது:-

மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன் பிடிப்பதை இந்தியா கட்டுப்படுத்த வேண்டும். அவ்வாறு கட்டுப் படுத்தப்படவில்லை எனில் இந்திய - இலங்கை மீனவர்களிடையே மோதல் உருவாகும்.

மேலும் இந்திய மீனவர்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது குறித்து இலங்கை கப்பற்படையிடம் அறிக்கை கேட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

முன்னதாக 26-ம்தேதி ராமேஸ்வரத்தில் இருந்து 650 விசைப்படகில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் இந்திய இலங்கை எல்லைப்பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அன்று மாலை 5 அதிவேக படகில் ரோந்து வந்த இலங்கை கப்பற்படையினர் இந்திய மீனவர்களை விரட்டி அடித்தனர்.

தொடர்ந்து 60 விசைப்படகுகளை மடக்கி பிடித்த அவர்கள் மீனவர்கள் கடலில் வீசிய வலையை வெட்டி மூழ்கடித்தனர். இலங்கை படையினர் திரும்பி சென்றதும் மீனவர்கள் மூழ்கிய வலையை மீட்க சென்றனர்.  இதனை கண்காணித்த இலங்கை வீரர்கள் அடுத்த சில நிமிடங்களில் வந்து மீனவர்கள் மீது கற்களால் தாக்கினர். இதில் ராமேஸ்வரம் அருகே உள்ள தங்கச்சி மடத்தை சேர்ந்த பூண்டி என்பவரது படகில் இருந்த மீனவர் சுரேஷ் காயம் அடைந்தார்.
Tags:    

Similar News