செய்திகள்
நிலா

2024-ம் ஆண்டு நிலாவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப நாசா திட்டம்

Published On 2020-09-22 06:38 GMT   |   Update On 2020-09-22 06:38 GMT
2024-ம் ஆண்டு நிலவுக்கு மீண்டும் விண்வெளி வீரர்களை அனுப்ப நாசா திட்டமிட்டு இருக்கிறது. இதற்காக 3 வெவ்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது.
வாஷிங்டன்:

நிலவுக்கு அமெரிக்கா கடந்த 1969-ம் ஆண்டு மனிதனை அனுப்பியது.

நிலவில் முதன்முதலில் கால் வைத்த முதல் நபர் என்ற பெருமையை நீல் ஆம்ஸ்ட்ராங் பெற்றார்.

அப்பல்லோ விண்கலம் மூலம் சென்று நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் காலடி வைத்து 50-வது ஆண்டு நிறைவு விழாவை கடந்த ஆண்டு ஜூலை 10-ந்தேதி நாசா கொண்டாடியது.

இந்த நிலையில் நிலவுக்கு மீண்டும் விண்வெளி வீரர்களை அனுப்ப நாசா திட்டமிட்டு இருக்கிறது. இதற்காக 3 வெவ்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது. 2 விண்வெளி வீரர்களை அனுப்ப முடிவு செய்துள்ள நாசா அவர்களில் ஒரு பெண் விண்வெளி வீராங்கனையை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.

நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டத்துக்கு 28 பில்லியன் டாலர் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த தொகை 2021-25-ம் ஆண்டு வரவு-செலவு திட்டத்தில் உள்ளடக்கியதாக இருக்கும். வருகிற 2024-ம் ஆண்டு விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டு இருக்கிறது.
Tags:    

Similar News