செய்திகள்
சீனாவில் இன்று நிலநடுக்கத்துக்கு ஒருவர் பலி
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு ஒருவர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
பீஜிங்:
132 வீடுகள் தரைமட்டமாகின. 161 வீடுகள் முழுமையாக சேதமடைந்தன. 4800 வீடுகளின் சில பகுதிகள் சேதத்துக்குள்ளாகின என சீனா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாதிக்கப்பட்ட சுமார் 10 ஆயிரம் மக்களில் சுமார் 2500 பேர் மீட்கப்பட்டு வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் இன்றைய நிலநடுக்கத்துக்கு ஒருவர் உயிரிழந்ததாகவும் 63 பேர் காயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் (உள்ளூர் நேரப்படி) இன்று காலை 6.42 மணியளவில் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 63 நகரங்களில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தின் விளைவாக த்துக்கு ஒருவர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் இன்றைய நிலநடுக்கத்துக்கு ஒருவர் உயிரிழந்ததாகவும் 63 பேர் காயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.