செய்திகள்

நேபாளம் நாட்டில் கட்டிடம் இடிந்த விபத்தில் 3 இந்தியர்கள் உயிரிழப்பு

Published On 2019-06-15 15:21 GMT   |   Update On 2019-06-15 15:21 GMT
நேபாளம் நாட்டின் டாங் மாவட்டத்தில் இன்று கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் இந்தியாவை சேர்ந்த 3 கட்டுமான தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
காத்மாண்டு:

நேபாளம் நாட்டின் டாங் மாவட்டத்தில் பிரபல சிமெண்ட் தொழிற்சாலையில் ஆறாம் மாடி பகுதியை விரிவாக்கம் செய்து கட்டும் பணிகள நடைபெற்று வருகின்றன.

வழக்கம்போல் இன்று கட்டுமான பணிகள் நடைபெற்றபோது கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென்று இடிந்து விழுந்தது. தகவலறிந்து விரைந்துவந்த மீட்பு படையினர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மூன்று பிரேதங்களை வெளியே எடுத்தனர்.



அவர்கள் மூன்று பேரும் இந்தியாவை சேர்ந்த சாஹெப் போட்ரா, தயால் ஹரேன் மற்றும் மங்கல் காஷ்யாப் என தெரியவந்துள்ளது. இவ்விபத்தில் காயமடைந்த மேலும் மூன்று இந்திய தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News