செய்திகள்
கிளாக்சோ பல்கலைக்கழக வளாகத்தில் மர்ம பார்சலால் பரபரப்பு
ஸ்காட்லாந்தில் உள்ள கிளாக்சோ பல்கலைக்கழக வளாகத்தில் கிடந்த மர்ம பார்சல் பரபரப்பை ஏற்படுத்தியது. #GlasgowUniversitypackage #Londonexplosives
லண்டன்:
ஸ்காட்லாந்தில் அமைந்துள்ளது கிளாஸ்கோ பல்கலைக்கழகம், இந்த பல்கலைக்கழகத்தின் ஓர் அறை வாயிலில் மர்ம பார்சல் கிடப்பதாக போலீசாருக்கு இன்று தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பல்கலைக்கழக வளாகத்தில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
அதில் சக்திவாய்ந்த வெடிபொருட்கள் இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கிருந்த அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் அந்த பார்சலை அதிகாரிகள் சோதனைக்கு எடுத்துச் சென்றனர்.
இந்த பார்சலை அனுப்பிய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். லண்டன் விமான நிலையத்தில் மர்ம பார்சல் அனுப்பியவர்களுக்கு இதில் தொடர்பு உள்ளதா எனவும் விசாரித்து வருகின்றனர்.
ஏற்கனவே, நேற்று இரவு ஹீத்ரு விமான நிலையம் உள்பட லண்டனில் உள்ள விமான நிலையங்களுக்கு பார்சல்கள் மூலம் வெடிபொருட்களை அனுப்பி மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.#GlasgowUniversitypackage #Londonexplosives
ஸ்காட்லாந்தில் அமைந்துள்ளது கிளாஸ்கோ பல்கலைக்கழகம், இந்த பல்கலைக்கழகத்தின் ஓர் அறை வாயிலில் மர்ம பார்சல் கிடப்பதாக போலீசாருக்கு இன்று தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பல்கலைக்கழக வளாகத்தில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
அதில் சக்திவாய்ந்த வெடிபொருட்கள் இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கிருந்த அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் அந்த பார்சலை அதிகாரிகள் சோதனைக்கு எடுத்துச் சென்றனர்.
ஏற்கனவே, நேற்று இரவு ஹீத்ரு விமான நிலையம் உள்பட லண்டனில் உள்ள விமான நிலையங்களுக்கு பார்சல்கள் மூலம் வெடிபொருட்களை அனுப்பி மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.#GlasgowUniversitypackage #Londonexplosives