செய்திகள்

பழி தீர்ப்பதற்காக 300 முதலைகளை கொன்று குவித்த கும்பல்

Published On 2018-07-16 13:47 GMT   |   Update On 2018-07-16 13:47 GMT
மாட்டுக்கு புல் அறுக்கச்சென்றவரை முதலை கடித்து கொன்றதற்கு பழி தீர்க்கும் விதமாக முதலை பண்ணைக்குள் புகுந்த ஒரு கும்பல் சுமார் 300 முதலைகளை கொன்று குவித்துள்ளனர்.
ஜகார்த்தா:

இந்தோனேசியாவின் பபுவா மாகாணத்தில் தனியார் முதலைப்பண்ணை ஒன்று உள்ளது. சமீபத்தில் 45 வயது நபர் தனது மாட்டுக்கு புல் அறுக்க முதலைப்பண்ணை அருகே சென்றுள்ளார். புல் அறுத்துக்கொண்டிருக்கும் போது உடைந்த வேலி வழியாக வெளியே வந்த முதலை ஒன்று அந்த நபரை அடித்துகொன்று உண்டது.

இதனை அடுத்து, பண்ணை உரிமையாளர் உரிய இழப்பீடு தர வேண்டும் என உயிரிழந்தவரின் உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் அரசிடம் முறையிட்டனர். உரிய பதில் கிடைக்காததால் ஆத்திரமடைந்த அவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் முதலைப்பண்ணைக்குள் புகுந்து 292 முதலைகளை கொன்று குவித்தனர்.

இது தொடர்பாக பண்ணை உரிமையாளர் போலீசாரிடம் புகார் அளித்துள்ள நிலையில், விசாரணை நடந்து வருகிறது. 
Tags:    

Similar News