செய்திகள்
தாய்லாந்தின் சுற்றுலா தீவு அருகே படகு கவிழ்ந்து விபத்து -20 பேர் மாயம்
தாய்லாந்தின் புக்கெட் தீவு அருகே 90 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் மாயமாகியுள்ளனர்.
பாங்காக்:
தாய்லாந்தின் சுற்றுலா தீவான புக்கெட் அருகே இன்று மாலை 90 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளனது. இதில், பலர் மீட்கப்பட்டுவிட்டாலும் 20 பேர் மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மீட்புப்பணி தொடர்ந்து நடந்து வருவதாக அந்நாட்டு பேரிடர் துறை அறிவித்துள்ளது.