செய்திகள்

2 ஆண்டுகளில் 20 முட்டைகள் இட்ட வினோத சிறுவன்

Published On 2018-02-23 12:19 GMT   |   Update On 2018-02-23 12:19 GMT
இந்தோனேசியாவில் ஒரு 14 வயது சிறுவன் இரண்டு ஆண்டுகளாக முட்டை இட்டு வரும் வினோத சம்பவம் நடந்துள்ளது. #Indonesia #TeenageboylaysEGG

ஜகார்த்தா:

கோழி முட்டை இடுவது வழக்கமானது. ஆனால், கோழியை போல் முட்டையிடும் சிறுவன் ஒருவர் உள்ளார். இந்தோனேசியாவில் சிறுவன் ஒருவர் இரண்டு ஆண்டுகளாக முட்டை இட்டு வரும் வினோத சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தோனேசியாவின் கோவா பகுதியை சேர்ந்தவர் அக்மல் (14). இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதாவது 2016-ம் ஆண்டு முதல் முட்டை இடுவதாக இவரது பெற்றோர் இவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
 
மருத்துவர்கள், இது நிச்சயம் சாத்தியம் அல்ல. மனிதனின் உடலில் முட்டை இருபதற்கான வாய்ப்புகள் இல்லை என கூறுகின்றனர். இருப்பினும் இந்த நிகழ்வு குறித்து தெளிவான புரிதல் இல்லாமல் சிறுவனுக்கு என்ன சிகிச்சை அளிப்பது என தெரியாமல் உள்ளனர். 
 


இது குறித்து சிறுவனது தந்தை கூறியதாவது, அக்ம்ல 2 ஆண்டுகளாக முட்டை இடுகிறான். இதுவரை 20 முட்டைகள் இட்டுள்ளான். அந்த முட்டையை உடைத்து பார்த்த போது உள்ளே மஞ்சள் நிறத்தில் இருந்தது. பல முறை நாங்கள் மருத்துமனையில் இதற்காக சிகிச்சைக்கு வந்தோம். ஆனால், எந்த பலனும் இல்லை, என தெரிவித்துள்ளார். இது தொடர்பான சிறுவனது எக்ஸ்ரே ஒன்றும் வெளியாகியுள்ளது. #Indonesia #TeenageboylaysEGG #tamilnews
Tags:    

Similar News