செய்திகள்
கேம்பிரிட்ஜ் தேர்வுகள்: உலக அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்று 26 இந்திய மாணவர்கள் சாதனை
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட தேர்வுகளின் முடிவுகள் வெளியான நிலையில் இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் உலக அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
புதுடெல்லி:
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் சார்பில் சென்ற கல்வியாண்டு நடத்தப்பட்ட தேர்வுகளின் முடிவுகள் வெளியாகின. அதில் பல இந்திய மாணவர்கள் அதிக அளவில் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இந்தியா முழுவதுமிலிருந்து 160 மாணவர்கள் கேம்பிரிட்ஜில் சிறப்பாக கல்வி பயின்றதாக விருதுகள் பெற்றுள்ளனர். 8 மாணவர்கள் நாட்டில் சிறந்த மதிப்பெண்கள் பெற்றதாக விருதுகள் பெற்றனர். பாடம் வாரியாக 51 மாணவர்கள் சிறப்பான மதிப்பெண்களை பெற்றுள்ளனர். 26 மாணவர்கள் உலக அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
உலக அளவில் மற்றும் தேசிய அளவில் சாதனை படைத்த மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு நடைபெறும் கேம்பிரிட்ஜ் விருது வழங்கும் விழாவில் பட்டம் அளித்து கவுரவுக்கப்படுவார்கள் எனக்கூறப்படுகிறது. ஆண்டு முழுவதும் 400 க்கும் மேற்பட்ட இந்திய பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் இந்த தேர்வை எழுதுகின்றனர்.
தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தெற்காசிய கேம்பிரிட்ஜ் இயக்குநர் ருச்சிரா கோஷ் பாராட்டுகள் தெரிவித்தார்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் சார்பில் சென்ற கல்வியாண்டு நடத்தப்பட்ட தேர்வுகளின் முடிவுகள் வெளியாகின. அதில் பல இந்திய மாணவர்கள் அதிக அளவில் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இந்தியா முழுவதுமிலிருந்து 160 மாணவர்கள் கேம்பிரிட்ஜில் சிறப்பாக கல்வி பயின்றதாக விருதுகள் பெற்றுள்ளனர். 8 மாணவர்கள் நாட்டில் சிறந்த மதிப்பெண்கள் பெற்றதாக விருதுகள் பெற்றனர். பாடம் வாரியாக 51 மாணவர்கள் சிறப்பான மதிப்பெண்களை பெற்றுள்ளனர். 26 மாணவர்கள் உலக அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
உலக அளவில் மற்றும் தேசிய அளவில் சாதனை படைத்த மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு நடைபெறும் கேம்பிரிட்ஜ் விருது வழங்கும் விழாவில் பட்டம் அளித்து கவுரவுக்கப்படுவார்கள் எனக்கூறப்படுகிறது. ஆண்டு முழுவதும் 400 க்கும் மேற்பட்ட இந்திய பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் இந்த தேர்வை எழுதுகின்றனர்.
தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தெற்காசிய கேம்பிரிட்ஜ் இயக்குநர் ருச்சிரா கோஷ் பாராட்டுகள் தெரிவித்தார்.