செய்திகள்

நைஜீரியாவில் தற்கொலைப் படையினர் நடத்திய தாக்குதலில் 13 பேர் பலி

Published On 2017-10-23 00:18 GMT   |   Update On 2017-10-23 00:21 GMT
நைஜீரியா நாட்டில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
அபுஜா:

நைஜீரியா நாட்டில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

நைஜீரியா நாட்டில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் பொதுமக்களை குறி வைத்து தொடர்ச்சியாக பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதில் ஏராளமானோர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நைஜீரியா நாட்டின் மாய்துகுரி நகரில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் சிலர் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். மேலும், 5 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வடக்கு நைஜீரியாவின் மாய்துகுரி நகரில் மக்கள் நடமாட்டமுள்ள பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால், பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News