செய்திகள்

ஈரானில் இன்று பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு

Published On 2017-04-05 08:21 GMT   |   Update On 2017-04-05 08:21 GMT
ஈரான் நாட்டின் இரண்டாவது முக்கிய பெருநகரமான மாஷாத் பகுதியில் இன்று 6.1 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
டெஹ்ரான்:

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரானின் தலைநகரான டெஹ்ரானுக்கு அடுத்தபடியாக மிக முக்கியமான பெருநகரமாக விளங்கிவரும் மாஷாத் நகரில் இன்று 6.1 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.



இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு பொருட்சேதம் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. ஈரானின் தென்கிழக்கு பகுதியில் கடந்த 2003-ம் ஆண்டு ஏற்பட்ட 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் சுமார் 26 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டது நினைவிருக்கலாம்.

Similar News