செய்திகள்

மெக்சிக்கோ: சிறை கலவரத்தில் இருவர் பலி - பலர் படுகாயம்

Published On 2017-03-29 08:18 GMT   |   Update On 2017-03-29 08:18 GMT
மெக்சிக்கோ நாட்டின் வடபகுதியில் உள்ள சிறையில் கைதிகளிடையே மூண்ட கலவரத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மெக்சிக்கோ சிட்டி:

மெக்சிக்கோ நாட்டின் வடக்கே இருக்கும் மான்ட்டர்ரே நகரில் கேடேரேட்டா கிளைச் சிறையில் நேற்று முன்தினத்தில் இருந்து கைதிகள் ரகளையிலும், கலவரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சிறையில் உள்ள மருந்தகத்தை நேற்று முற்றுகையிட்ட சுமார் 50 கைதிகள் அங்கிருந்த பொருட்களை அடித்து, உடைத்து சூறையாடினர். அவர்களை கட்டுப்படுத்த சிறை காவலர்கள் நடத்திய தாக்குதலில் இருவர் உயிரிழந்தனர். 13 கைதிகள் படுகாயமடைந்தனர்.



இதேபோல், அருகாமையில் உள்ள டமாலிப்பஸ் மாநிலத்தில் உள்ள இன்னொரு சிறையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கலவரத்தில் மூன்று கைதிகள் உயிரிழந்துள்ளனர். மேலும், டோப்போ சிக்கோ சிறையில் கைதிகளில் இரு பிரிவினரிடையே கடந்த ஆண்டு நடைபெற்ற மிகப் பெரிய கலவரம் மற்றும் கோஷ்டி மோதலில் 49 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News