செய்திகள்
அமெரிக்காவின் குவாம் தீவில் நிலநடுக்கம்
அமெரிக்காவின் குவாம் தீவில் இன்று 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறினர்.
ஹகாட்னா:
மேற்கு பசிபிக் கடலில் அமைந்துள்ளது குவாம் தீவு. அமெரிக்காவின் ஆட்சிக்குப்பட்ட பிரதேசமான இங்கு இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி மாலை 6.49 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 5.5 ரிக்டராக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரோட்டாவுக்கு வடக்கே 11 மைல் தொலைவில் கடலுக்கடியில் 104.5 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பொதுமக்கள் அவசரம் அவசரமாக வீடுகளை விட்டு வெளியேறினர். மேலும், முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்ப்டட பாதிப்புகள் மற்றும் காயங்கள் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.
மேற்கு பசிபிக் கடலில் அமைந்துள்ளது குவாம் தீவு. அமெரிக்காவின் ஆட்சிக்குப்பட்ட பிரதேசமான இங்கு இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி மாலை 6.49 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 5.5 ரிக்டராக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரோட்டாவுக்கு வடக்கே 11 மைல் தொலைவில் கடலுக்கடியில் 104.5 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பொதுமக்கள் அவசரம் அவசரமாக வீடுகளை விட்டு வெளியேறினர். மேலும், முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்ப்டட பாதிப்புகள் மற்றும் காயங்கள் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.