செய்திகள்

பாகிஸ்தானில் ‘செல்பி’ எடுத்த சிறுமி ரெயிலில் அடிபட்டு பலி

Published On 2017-02-18 06:10 GMT   |   Update On 2017-02-18 06:10 GMT
பாகிஸ்தானில் ‘செல்பி’ எடுத்த சிறுமி ரெயிலில் அடிபட்டு பரிதாபமாக இறந்தார். இது குறித்த செய்தியை கீழே பார்க்கலாம்.
லாகூர்:

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணம் பரிதாபாத் கானோவால் பகுதியை சேர்ந்த சிறுமி ரெயிலுடன் சேர்ந்து செல்பி எடுக்க விரும்பினாள்.

கானெவால் ரெயில் நிலையத்தில் செல்பி எடுக்க செல்போனுடன் தண்ட வாளம் அருகே காத்திருந்தாள். அப்போது கராச்சியில் இருந்த ராவல்பிண்டி நோக்கி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது.

அதை அவள் கவனிக்கவில்லை. ‘செல்பி’ எடுப்பதிலேயே கவனமாக இருந்தாள். அப்போது அந்த ரெயில் சிறுமி மீது மோதியது. இதனால் அவள் தூக்கி வீசப்பட்டாள்.

இதனால் தலையில் பலத்த காயம் அடைந்த அவளை முல்தானில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தாள்.

Similar News