செய்திகள்

சீனாவில் பயங்கர வெடிவிபத்து: 7 பேர் பலி-94 பேர் காயம்

Published On 2016-10-24 14:58 GMT   |   Update On 2016-10-24 14:58 GMT
சீனாவின் வடமேற்கு பகுதியில் இன்று நிகழ்ந்த பயங்கர வெடிவிபத்து சம்பவத்தில் 7 பேர் பலியாகினர்.
பீஜிங்:

சீனாவின் ஷான்ஜி மாகாணாம் ஜின்மின் நகரில் இன்று குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது போன்ற சத்தம் கேட்டது. இதில், ஒரு தற்காலிக வீடு முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. அதன் அருகில் உள்ள கட்டிடங்களும் கடுமையாக சேதம் அடைந்தன.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியை தொடங்கினர்.

மீட்புக்குழுவினர் 7 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், 94 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது வெடிவிபத்தா அல்லது குண்டுவெடிப்பா என உறுதிப்படுத்தப்படவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மீட்பு பணியும் தொடர்ந்து நடைபெறுகிறது.

Similar News