செய்திகள்

ரஷியாவில் ஹெலிகாப்டர் விபத்து 3 பேர் உயிரிழப்பு

Published On 2016-09-22 22:15 GMT   |   Update On 2016-09-22 22:15 GMT
ரஷியாவில் ஹெலிகாப்டர் விபத்துகுள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.
மாஸ்கோ:

ரஷிய நாட்டில் தலைநகர் மாஸ்கோ பகுதியில், ‘எம்.ஐ-8’ ரக ஹெலிகாப்டர் ஒன்று நேற்று முன்தினம் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது அந்த ஹெலிகாப்டர் சற்றும் எதிர்பாராத விதமாக விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

இதில் பயணம் செய்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும், மீட்பு படையினர் விரைந்து, மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர், ரஷிய அரசின் அவசர கால அமைச்சகத்துக்கு சொந்தமானது.

இந்த விபத்து தொடர்பாக ரஷிய அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

Similar News